தலையில் சுழன்ற சக்கரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 4, 2024
பார்வையிட்டோர்: 1,193 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் ஊரில் நான்கு பேர் இருந்தார்கள். அந்த நான்கு பேரும் வறுமையினால் வாடினார்கள். தங்கள் வறுமையைத் தீர்த்துக் கொள்வதற்காக ஒரு யோகியை நாடிச் சென்றார்கள். அவர்கள் குறை யைக் கேட்ட அந்த யோகி தமது சித்தியினால் அவர்களுக்குப் பொருள் கிடைக்கும் வழி ஒன்றைச் சொன்னார். அவர்கள் ஒவ்வொருவர் தலை மீதும் ஒவ்வொரு திரிச் சீலையை வைத்துக் கீழ்க் கண்ட வாறு சொன்னார். 

‘உங்கள் தலையில் உள்ள இந்தத் திரிச் சீலை களோடு இமயமலை நோக்கிச் செல்லுங்கள். போகும் வழியில் யாருடைய தலையிலுள்ள திரிச்சீலை எந்த இடத்தில் விழுகிறதோ அந்த இடத்தில் அவனுக்குக் கிடைக்க வேண்டிய பொருள் கிடைக்கும். 

யோகியின் சொற்படியே அவர்கள் இமயம் நோக்கிப் புறப்பட்டார்கள். போகும் வழியில் முதலில் ஒருவனுடைய தலையிலிருந்த திரிச்சீலை நழுவிக் கீழே விழுந்தது. அவன் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது பூமியின் கீழே ஏராளமான தாமிரம் கிடைத்தது. அவன் அதை மற்ற மூவருக்கும் காட்டி, ‘வாருங்கள் எல்லோரும் பங்கு வைத்துக் கொள்வோம்‘ என்றான். அதற்கு அவர்கள் வேண்டாம், வெறுந் தாமிரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? எல்லாவற்றையும் நியே எடுத்துக்கொள்’ என்று சொன்னார்கள். ஆண்டவன் கொடுத்தது இதுவே போதும்’ என்று அவன் தாமிரத்தை எடுத்துக் கொண்டு ஊர் திரும்பி விட்டான். 

மற்ற மூவரும் தங்கள் பயணத்தைத் தொடர்ந் தார்கள். ஓர் இடத்தில் மற்றொருவனுடைய தலை யிலிருந்த திரிச்சீலை விழுந்தது. அந்த இடத்தில் வெள்ளி இருக்கக் கண்டார்கள். அதிக ஆசைபிடித்த மற்ற இருவரும் தங்களுக்கு இதன் மேலும் நல்ல பொருள் கிடைக்கு மென்று நினைத்து, அவனை நோக்கி “எல்லா வெள்ளியையும் நீயே எடுத்துக் கொள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். 

மற்ற இருவரும் போகும் வழியில் ஒருவனுடைய திரிச்சீலை கீழே விழுத்தது. அந்த இடத்தில் நிறை யத் தங்கம் கிடைத்தது. “இதை நீயே வைத்துக் கொள்” என்று சொல்லிவிட்டு நான்காமவன் மேலும் நடந்தான். தங்கத்திற்கு உரியவன் அவனைப் பார்த்து, “நீ திரும்பிவரும் வரை நான் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் வந்துவிடு” என்று சொன்னான். அவன் சரி என்று சொல்லி விட்டுப் போனான். 

அவன் போகும் வழியில் ஒரு மனிதனைக் கண் டான். அந்த மனிதனுடைய தலையில் சாயாமல் ஒரு சக்கரம் சுழன்று கொண்டிருப்பதைக் கண்டான். அவனைப் பார்த்து “நீ யார்? உன் தலையில் ஏன் சக்கரம் சுழல்கிறது?” என்று கேட்டான். அவன் கேட்டு முடித்தவுடனே அந்தச் சக்கரம் கேட்டவன் தலையிலேயே வந்து இருந்து கொண்டு சுழலத் தொடங்கிவிட்டது. 

“என்ன இது? கிணறு வெட்டப் பூதம் புறப்பட் டது போல் இருக்கிறதே?” என்று அவன் பயந்து, அந்த மனிதனைப் பார்த்துக் கேட்டான். அதற்கு அந்த மனிதன் முன்பு குபேரனால் எனக்கு ஒரு சாபம் ஏற்பட்டது. அதனால் இந்தக் கூர்மையான சக்கரம் என் தலையில் சுழன்று கொண்டிருந்தது. உன்னைக் கண்டால் என் சாபம் தீருமென்று சொல்லியிருந் தான். அதன்படி இன்று நடந்தது” என்றான், 

பிள்ளையார் பிடிக்கப்போய்க் குரங்காய்முடிந்தது போல் ஆயிற்றே என் நிலை என்று வருந்திய அவன். அந்தப் பழைய சக்கரத் தலையனைப் பார்த்து, ”நீ எவ்வளவு காலகாக இங்கிருக்கிறாய்?’ என்று கேட்டான் . 

‘எவ்வளவு காலமாக என்று தெரியாது. ஆனால், நான் இங்கு வந்த சேர்ந்தபோது சீதாராமன் அரசாண்டு கொண்டிருத்தான்’ என்றான். 

”உனக்குத் தண்ணீரும் சோறும் யார் கொண்டு வந்து தருவார்கள்?’ என்று மேலும் கேட்டான் திரிச் சீலைக்காரன். 

இந்த இடத்தில் இருப்பவர்களுக்குத் தாகம் பசியெல்லாம் ஏற்படாது. ஏனென்றால், இந்தச் சக்கரம்,குபேரனுடைய நிதியைத் திருட வருகிறவர் களை அச்சுறுத்துவதற்காகவே இந்த இடத்தில் சுழன்று கொண்டிருக்கிறது?’ என்று சொன்னான். 

இதற்கு முன்னால் தங்கத்தை யடைந்து காத்துக் கொண்டிருந்தவன், மேலே சென்ற தன் நண்பன் தெடுநேரமாகியும் திரும்பி வராததைக் கண்டு தேடிக்கொண்டு வந்துவிட்டான். அவன் தன் நண்பனைப் பார்த்து, அவன் தலையில் சுழலும் சக்கரத்தைக்கண்டு, ‘இது என்ன’என்று கேட்டான். 

‘நண்பா! என் பேராசைக்குக் கிடைத்த பரிசு இந்தத் துன்பம்’ என்று சொல்லியழுதான் நான்கா மவன். 

தங்கம் அடைந்தவன் தன் நண்பனுக்குப் பல ஆறுதலான சொற்கள் சொல்லித் தேற்றி விட்டு விதியை யாரும் வெல்ல முடியாது என்று உப தேசித்துத் தன் ஊருக்குத் திரும்பிச் சென்று நலமாக வாழ்ந்தான்.

– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி 5 – ஆராயாத செயல் தவிர்த்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

நாரா.நாச்சியப்பன் நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *