சரசா சூரி

SaraSuri
 

இயற் பெயர் சரஸ்வதி சூரியநாராயண்.தற்போது கோயமுத்தூர் வாசியாகிய நான் ‘ சரசா சூரி’ எனும் பெயரில் நான்கு வருடங்களுக்கு மேலாக சிறுகதைகள் எழுதி வருகிறேன்…

நுண்ணுயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்று, சில காலம் சிறப்புத் தேவை வேண்டும் குழந்தைகளுடன் பணியாற்றியதை , வாழ்வில் எனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறேன்..
பெரிய குடும்பத்தில் பிறந்ததால் உறவுகளின் பெருமை அறிந்தவள்.சிறுவயதிலேயே நான்கு சகோதரிகள் இணைந்து’ ஜாங்கிரி’ எனும் கையெழுத்துப் பிரதியை நடத்தியது மகிழ்ச்சியான அனுபவம்..
என்னுடைய கதைகளில் வரும் கதாபாத்திரங்களைக்கூட இழிவு படுத்தும் வகையிலோ , புண்படுத்தும் வகையிலோ சித்தரிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவள்…
என்னுடைய ஆறு சிறுகதை தொகுப்புகள் அமேசான் கிண்டிலில் வெளியாகி உள்ளது..

  1. அழகர்சாமி..பாலாமணி..மற்றும் சிலர்….
  2. பொன்னியின் செல்வி….
  3. கொலுசுதான் பேசுமா….???
  4. சதுரத்துக்குள் வட்டம்..
  5.  கங்கையின் புனிதம்….
  6. தணல்..

நான் ‘ மனமெனும் மாயவலை’ எனும் அறிவியல் தொடரையும் எழுதி வருகிறேன்.. ‘ மனமெனும் மாயவலை…முதலிரண்டு பகுதிகளில் அமேசான் கிண்டிலில் வெளியாகி உள்ளன.

இணையத்தில் ‘ சரசா சூரி’ என்ற பெயரில் என்னைப் பற்றி மேலும் தகவல்களை அறிந்து கொள்ளலாம்..

1 thought on “சரசா சூரி

  1. Very nicely portraid. Made an impact. You have brought each character in front of the reader alive. Looking forward to more.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *