கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 15, 2025
பார்வையிட்டோர்: 122 
 
 

(1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவின் பிடியில் அழுந்திக் கண்ணீர்விட்டது வானம். 

கண்ணீர் பனித்துளிகளாய் விழுந்தபோது – வானத்தின் துன்பத்தை எண்ணி வருந்திய பசும்புல் கண்ணீர்த் துளிகளைத் தாங்கிக் கொண்டே வந்தது. 

ஒவ்வொரு நாளும் புல் ஓங்கி வளர்ந்தது. 

பரவி உயர்ந்து எங்கணும் பச்சைக் காடாய் நிறைந்தது பசும்புல். 

காலைக் குருவி பாடியது:- 

‘ஏங்குவான் கண்ணீரைத் 
தாங்குவான் உயர்வான்’ 

– காசி ஆனந்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்கழி 1992, காந்தளகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *