தலைச்சன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 3, 2025
பார்வையிட்டோர்: 603 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘பகல் நேரக் காப்பக’த் திலிருந்து அப்பாவை அழைத்து வீட்டிற்கு வந்து சேர்ந்த போது இருள் கவியவாரம்பித்திருந்தது. கால் சட்டையைக் கழற்றச் சொன்ன போது அடம்பிடித்தார். பேண்டின் பக்கிளை அவிழ்த்தும் கழற்ற விடாமல் காலை மடித்துக் கொண்டு டபக்கென்று படுக்கையின் மீது உட்கார்ந்து விட்டார். கைலியைக் கட்டிக் கொண்டால் வெளியே போகக் கூடாது என்பது அவரது எண்ணம். அது அவராகவே தனக்குள் ஏற்படுத்திக் கொண்ட நியமம்.

பேண்ட்டை மாற்றிக் கைலியைக் கட்டி விட்டாலே பெரும்பாலும் வீட்டை விட்டுக் கிளம்ப மாட்டார். என்றாலும் அப்பாவை முழுமையாக நம்ப விடவும் முடியாது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் திடீரென்று ஒருநாள் வெளி “கேட்’ பூட்டாமல் இருக்கவே கைலி கட்டியிருந்த அப்பா அப்பா மேல் சட்டையைப் போடாமலேயே வீட்டை விட்டுக் கிளம்பிச் செருப்பணியாத தன் கால் போன போக்கில் போய் விட்டார். தன் பெயர், முகவரி போன்ற விவரங்கள் அவருக்கு மறந்து விட்டிருந்த நேரம். பகுக்கும் அறிவு மழுங்கி குடும்பத்தினரையும் அடையாளம் தெரியாதிருந்தது அவருக்கு. சமீப கால நினைவுகள் மறைந்து அவரின் மாணவப் பருவத்தில் நடந்தவற்றைப் பற்றியெல்லாம் சம்பந்தமேயில்லாமல் பேசினார். குளித்து முடித்து கூடத்திற்கு வந்த நான் அப்பாவைக் காணாமல், வீட்டு கேட்டும் திறந்து கிடப்பதைப் பார்த்துவிட்டு திடுக்கிட்டு ஓடோடி, அடுக்கு மாடியிலிருந்து கீழேயிறங்கி எந்தத் திக்கில் போயிருப்பார் என்று யூகிக்க முடியாது நாலாப் புறமும் கண்களை ஓட்டிக் கொண்டே ஓடியோடித் தேடினேன்.

சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த திடலில் சிறுவர்கள் கூட்டம். “பைத்தியம், பைத்தியம்”, என்று பல இனப்போக்கிரிப் பிள்ளைகள் சிலர் கத்திக் கொண்டும் மற்ற சிறார்கள் சுற்றி வேடிக்கை பார்த்தும் கொண்டிருந்தனர். கூட்டத்தை விலக்கி அப்பாவைக் கூட்டிக் கொண்டு வருவதற்குள் பெரும்பாடாகி விட்டது. வர மாட்டேன் என்று ஒரே பிடிவாதம். நான் பெற்ற பிள்ளையைப் பார்த்துக் கொள்வதைப் போல என்னைப் பெற்றவரைப் பார்த்துக் கொள்ளும் நிர்பந்தம். நான் சிறுவனாய் இருந்த போது அப்பாவிற்கு என்னை அதட்டும் உரிமையாவது இருந்திருக்கும். அதட்டிச் சொன்னாலும் அவருக்குப் புரியவும் புரியாத நிலை ஆயிற்றே. அவரைச் சமாளிக்கப் பட்ட பாடுகள், அப்பப்பா,.

‘நா உங்கள இன்னிக்கி ‘பிஷான் பார்க்’குக்குக் கூட்டிட்டுப் போறேம்பா, இப்ப நீங்க லுங்கியக் கட்டிப்பீங்களாம், என்ன, என்று நைச்சியமாக ஏதேதோ பேசி கட்டி விட்டுக் கையைப் பிடித்துக் கூடத்திற்கு அழைத்து வந்தேன். சோபாவில் உட்காராமல் என் கையை உதறி விட்டுத் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்தார். அவர் எப்போதும் பார்க்கும் சூரியத் தொலைக் காட்சியையும் உயிர்ப்பித்ததும், கையிலிருந்து ரிமோட்டைச் சடாரென்று பிடுங்கி இரண்டு முறை அழுத்தி கார்ட்டூன் சானலைப் போட்டுக் கொண்டு, தலையைத் திருப்பி ஒரு வெற்றிப் பார்வையை என்பக்கம் வீசினார். சின்னச் சின்ன மாற்றங்கள் அவரிடம் ஏற்பட்டு வருவது குறித்து எண்ணிய படி அவரைப் பார்த்துச் சிரித்தேன். சமையலறைக்குள் புகுந்து தேநீரைத் தயாரித்து எடுத்துக் கொண்டு மீண்டும் கூடத்தை அடைந்த போது அப்பா எலியைத் துரத்தித் துரத்திப் பூனையடித்த லூட்டியில் தன்னையே மறந்து ஆழ்ந்திருந்தார்.

எண்பத்தியிரண்டு வயதில் இரண்டு வயதுக் குழந்தையின் குதூகலத்துடன் அமர்ந்திருந்தவரிடம் அவரின் பழைய கம்பீரத்தை தேட வேண்டியிருந்தது. வெள்ளையுடையில் மருத்துவமனையில் ‘ஆண் நர்ஸ் மேகமாய் மட்டுமே மனதில் இருந்தது. தன்னை விடப் ஐம்பத்தெட்டு வயது வரை கண்ணைப் பறிக்கும் வேலை செய்த அப்பாவின் நினைவு, கலைந்த பன்னிரண்டு வயது இளையவரான அம்மாவைத் தன் நாற்பத்திமூன்றாவது வயதில் தாமதமாகத் திருமணம் செய்து ஒன்பது வருடங்களுக்குப் பின்னர் ஒரேமகனான என்னைப்பெற்றிருந்தார்.

வாழ்க்கையை முழுமையாய் வாழ்ந்த பெருமிதம் அவரின் நடையுடை பாவனைகள் மட்டுமின்றி பேச்சிலும் தெரியும். தனக்கு வயதாகி விட்டதாய் நம்ப மறுத்து, சுத்தம், சுறுசுறுப்பு, செய் நேர்த்தியின் கலவையாக விளங்கிய அப்பா ஓய்வு பெற்ற பின் ஒரே வாரம் தான் வீட்டில் இருந்தார். அதற்குள் குட்டிபோட்ட பூனையைப் போல வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தார். சும்மா இருக்க முடியாமல் அவர் பட்ட அவஸ்தை அலாதியாய்த் தானிருந்தது. மிடுக்காக அடர் நீலச் சீருடையணிந்து தேடாமலே கிடைத்த தன் பேரங்காடியின் ‘காவல்காரர்’ பணிக்குக் கிளம்பிய நாட்கள் தான் அவரின் தன்னம்பிக்கை முழுமையாக வெளியான நாட்கள். சோம்பியிருப்பதை வெறுத்த அவர் தன் ‘ஸெக்யூரிட்டி’ வேலையை மிகவும் நேசித்தார். ஆயுளின் இறுதி மூச்சின் போது அளிக்கப் பட்ட ‘போனஸ்’ ஆண்டுகளாகவே தன் வேலையை அவர் நினைத்தார்.

வீட்டு வாயிலில் நிழலாடியது. சாரு தான் வேலை முடிந்து வீடு திரும்பியிருந்தாள். “ஏங்க, என்னங்க இது ‘கேட்’ டைப் பூட்டாம?”, என்ற படியே நிறை மாத வயிறு முன்னே வர உள்ளே நுழைந்து சோபாவில் அமர்ந்தவளிடம், ” “அடடா, மறந்தே போயிட்டேம்மா”, குற்றுவுணர்வுடன் கூறி விட்டு, அவளுக்கும் ஒரு கோப்பையில் தேநீரை எடுத்து வந்து கொடுத்தேன். சாருவின் முகம் வழக்கத்தை விட அதிகம் சோர்ந்து காணப் பட்டது.

பல முறை சாருவிற்குத் தரித்த கரு தங்காமல், பத்து வருடங்களுக்கு மேல் ஏராளமாகச் செலவு செய்து விட்டிருந்தோம். இம்முறை கருத்தங்கவென்று ப்ரத்யேக முறைகளைக் கையாண்டார் மருத்துவர். முதல் இரண்டு மாதங்கள் கால் மாட்டில் கட்டிலின் கால்கள் அதிக உயர்வாக இருக்கும் படி ஏற்பாடுகள். அதன் பிறகு இரண்டு மாதங்களுக்குக் கர்பப்பை வாயை தைத்து விட்டிருந்தார். அதிருஷ்டவசமாக பலன் அவர் நினைத்த படியே அமைந்தது. நான்கு மாதங்களுக்கும் விடுப்பெடுத்து ஓய்வில் இருந்ததாலேயே பிரசவ சமயம் வரை வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் வந்து விட்டிருந்தது.

“ஒரு வாரமாவே மாமா கார்ட்டூன் மட்டும் தான் பாக்கறார் கவனிச்சீங்களா,..ம்?”, சிரித்துக் கொண்டே சாரு என்னிடம் சொன்னதுமே, ‘மாமா’ என்ற பதத்தைக் கேட்டதும் திரும்பிப் பார்க்கும் வழக்கமான இயல்புடன் அப்பா தலையைத் திருப்பிப் பார்த்தார். முன் பின் தெரியாத யாரையோ பார்ப்பதைப் போலத் தன் மருமகளைப் பார்த்து விட்டு சட்டென்று தொலைக் காட்சிக்குத் திரும்பி விட்டார்.

அப்பாவென்று நான் அழைத்தால் யாரோ யாரையோ கூப்பிடுவதைப் போலச் சலனமற்றிருந்தார் சமீபகாலம் வரை. அந்த அளவிற்குச் சில மாதங்களுக்கு முன்னர் வரை சாரு தான் அப்பாவைக் கவனித்துக் கொள்ளும் முழுப்பொறுப்பையும் ஏற்றிருந்தாள். புரிந்தாலும் புரியாவிட்டாலும் சூரிய தொலைக் காட்சியையே கண்ணிமைக்காமல் பார்க்கும் அப்பாவிற்கு திடீரென்று ஏற்பட்டிருந்த ‘கேலிச் சித்திர’ ஈடுபாடு என்னைப் போலவே சாருவுக்கும் விநோதமாய்த் தான் தோன்றியிருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு சாரு தனது மருத்துவச் சோதனை முடித்து வீட்டிற்கு வந்து என்னிடம் விவரங்கள் சொல்லிக் கொண்டிருந்தாள். ‘ஸ்கான்’ செய்ததில் பிறக்கப் போவது மகன் என்ற பெருமை அவள் முகத்தில் தெரிந்தது. டக்கென்று திரும்பி என்னைப் பார்த்த அப்பாவின் கண்களில் புதிதாய் ஒரு மின்னல்! ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு எப்போதோ மிகுந்த மகிழ்ச்சியில் என்னைப் பார்த்த அதே பார்வையைப் போலத்தான் இருந்தது. உறுதியாகவும் சொல்ல முடியவில்லை. ஆனால், கண நேரமேயானாலும் எனக்கு அது மறக்க முடியாததானது. மறுநாள் காலையில் ஸ்கான் படங்களைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்ததைத் தான் பார்த்ததாக சாரு சொன்னாள்.

அன்று பகல் நேரக் காப்பகத்தின் அடுத்த கட்டடத்திலிருந்த குழந்தைக் காப்பகத்தில் வேலை செய்த தாதியிடம் அடம் பிடித்துக் கேட்டு ஒரு கிலுகிலுப்பையை வீட்டிற்குக் கொண்டு வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தன் ஒரே வயதுக் குழந்தை முதல் முறையாக ‘அம்மா’ என்றழைக்கும் போது ஒரு தாய் அடையும் பெருமிதம் என்னுள் வந்தது. பத்திரமாக இருந்தது கிலுகிலுப்பை அவருடைய மற்ற பொருட்களுடன்.

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நாளிதழ்களைப் படித்து அவரைக் கேட்கச் சொல்லும் போது மாட்டென்று அடம் பிடித்தவர், சாருவின் விடாமுயற்சியால் படிப்பதைக் கேட்க ஆரம்பித்திருந்தார்.

எப்போதாவது பிடிவாதம் தலை தூக்கவே செய்யும். சில வேளைகளில் படித்ததிலிருந்து அப்பாவைக் கேள்வி கேட்டும் பார்ப்பாள் அவள். “மாமா, இது என்ன?”, என்று ‘மெர்லைன்’ படத்தைக் காட்டிக் கேட்டால் சில வேளைகளில் சரியாகவும் வேறு சில வேளைகளில் புலி, டைனசோர் என்று வாயில் வந்ததையும் சொல்வார். சொல்லி விட்டு ‘சரியா என்று சாருவின் முகத்தை வேறு குழந்தையைப் போலப் பார்த்துக் கொள்வார். சாருவைக் கண்டதுமே, குடுகுடுவென்றோடி தமிழ் முரசையோ ஆங்கில நாளிதழையோ எடுத்து வரும் அளவிற்கு முன்னேறினார். சாருவின் கர்பம் வளரவளர அந்தப் பழக்கத்தை விட்டிருந்ததும் கொஞ்சம் வித்தியாசமாய்த் தானிருந்தது.

ஆரம்ப காலத்தில் அப்பாவைச் சமாளிக்க அம்மாவுக்கும் எனக்கும் பொறுமையே இல்லாதிருந்தது. அதனாலேயே, சாரு அதிக சிரமப்பட வேண்டியதாகி விட்டது. காப்பகத்திற்கு அழைத்துச் செல்லும் போதும், உணவூட்டும் போதும் தன்னிலையில்லாமல் கோபத்தில் சாருவை அடித்தும், கடித்தும், கிள்ளியும் துன்புறுத்தியிருக்கிறார். அவளுக்குத் தலைப் பிள்ளையாகவே ஆகியிருந்தார் அப்பா. மிகவும் குறும்பும் பிடிவாதமும் நிறைந்த பிள்ளை. குழந்தை வளர்ப்பில் முன்னனுபவமே பெற்று விட்டிருந்தாள் சாரு அப்பாவின் மூலம். அப்பாவோடு அவளுக்கிருந்த அனுபவங்கள் அப்படி.

தேநீரைக் குடித்து முடித்து, “கேட்டை பூட்டலன்னா பிரச்சனையாயிடும் சத்யா. விழுந்தா மாமாக்கு அப்பளம் மாதிரி எலும்பு நொறுங்கிடும்னுவேற சொல்லியிருக்காரு டாக்டர். அதுசரி, மாமா ‘மைலோ’ குடிச்சாரா?”, என்றவளை ஆமோதித்து தலையசைத்தேன். கண் மூடி சோபாவில் சாய்ந்த சாருவின் நெற்றி சுருங்கிச் சுருங்கி விரிந்தாற்போலிருந்தது. அவளை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு நானே சமைத்து விட நினைத்து காய்கறிகளை அரிய ஆரம்பித்தேன்.

எதிர்பாத்துக் காத்திருந்ததாலேயே ஓய்வை அப்பாவால் அவரின் முதுமையைப் போலவே இயற்கையாய் இருகரம் நீட்டி ஏற்றுக் கொள்ள முடிந்தது. கொள்ள முடிந்தது. ஆனால், சற்றும் எதிர்பாராமல் ஆறு வருடங்களுக்கு முன்னர் பொருளியல் நெருக்கடியின் போது நஷ்டப்பட்ட பேரங்காடி இழுத்து மூடப் பட்ட போது முன்னறிவிப்பே இல்லாமல் தன் வேலை போனதைத் தான் அவரால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. செய்தி திடீரென்று ஒருநாள் பெரிய இடியாக வந்து இறங்கியிருந்தது அவர்மேல். ஊன்று கோலைச் சடேரென்று பிடுங்கியது தொபேரென்று வீழும் குடுகுடுக் கிழவனைப் போல திடீரென்று வாழ்வின் மீதிருந்த ஒரே பற்றையும் விட்டவரானார்.

வீட்டிற்கு வந்தவர் ஒருவரிடமும் ஒன்றுமே பேசாமல் உட்கார்ந்து விட்டார். உடன் வேலை பார்த்தவரிடம் “இனிமே என்ன இருக்கு?”, என்று விரக்தியின் உச்சியில் பலமுறை சொன்னார் என்று பிறகு தான் தெரியவந்தது. அடுத்த நாள் முதல் அவரின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிந்தது. பிடிப்பேயில்லாமல் இருக்கவாரம்பித்தார்.

அடுத்து வந்த நாட்கள் மிகப் பெரும் சவால்களைக் கொணர்ந்தன. எப்போதும் அம்மாவையே சண்டைக்கு இழுத்தார். கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டு கொன்று விடுவேன், குத்தி விடுவேன் என்றெல்லாம் மிரட்டினார். அப்போதெல்லாம் அது வரை பார்த்திராத வேறு யாரையோ பார்ப்பதைப் போன்ற உணர்வே என்னுள் மேலிட்டது. உட்காரச் சொன்னால் நின்றார். படுக்கச் சொன்னால் நடக்கப் போகிறேன் என்று பிடிவாதம். சொல்லப் பட்ட பதிலில் மனம் கொஞ்சம் கூடப் பதியாததால், கேட்ட கேள்வியையே கிளிப் பிள்ளை போல நூறு முறை அலுக்காமல் கேட்டார்.

ஒரு வாய் சாப்பிட வைப்பதற்குள் எனக்குப் பொறுமையே போய் விடும். அவரைச் சாப்பிட வைக்க சாருவால் தான் முடிந்தது. எதிர்பாராமல் ஒரு நாள் வீட்டில் நான்கு பேருக்குச் சமைத்து வைத்த உணவை அவர் ஒருவரே யாரும் கவனிக்காத நேரத்தில் மூச்சு முட்டச் சாப்பிட்டு முடித்திருந்தார். அடுக்கு மாடிக் கட்டடத்தின் ஜன்னல் வழியாக ஒரு வயதுக் குழந்தையைப் போல கையில் கிடைத்ததையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு எட்டிப் பார்த்தார். இன்றும் ஜன்னல்களை அடைத்தே வைத்திருக்கிறோம்.

திடீர் திடீரென்று குளிக்க மாட்டேனென்று அடம். அவருக்குத் தோன்றிய போது குளித்தார். ஒருநாள், குளித்து விட்டு இடுப்பில் துண்டைக் கட்டாமல் பிறந்த மேனியோடு குளியலறையிலிருந்து வெளியே வந்து விட்டார். சாரு பார்த்ததும் பதறி ஓடி என்னைக் கூப்பிட்டு, நான் பாய்ந்து சென்று அப்பாவின் இடுப்பில் துண்டைச் சுற்றினேன்.

அன்று தான் மருத்துவரின் உதவி மருத்துவரின் உதவி தேவையென்றே எங்களுக்கு தேவையென்றே எங்களுக்கு உறைத்தது. மருத்துவரிடம் போனதுமே எங்களுக்கு எதுவும் சொல்லப் படவில்லை. ஆறு மாதங்களுக்கு அவரின் நடவடிக்கைகளைக் குறித்து வைத்துக் கொண்டு போய் வாரவாரம் மருத்துவரைக் கண்டோம். பிறகு தான், அவருக்கிருந்த நோய் கண்டு பிடிக்கப் பட்டது.

‘அல்சைமர் நோயினால் மூளைக்குச் செல்ல வேண்டிய செய்திகள் செல்லவில்லை. அப்பாவுக்கு ‘டெமென்ஷியா என்று கூறப் பட்டது. மருத்துவர் விவரிக்க விவரிக்க அப்பாவின் அப்போதைய யோசனை, நினைவாற்றல் குறைந்திருந்ததற்கான காரணம் புரிந்தது. நர்ஸிங்க் ஹோமில் சேர்த்து விட மருத்துவர் சொன்ன யோசனையை ஏற்க ஏனோ எனக்கு மனமேயில்லை. சிறு வயதில் எனக்குச் செய்ததை திருப்பிச் செய்யும் வாய்ப்பாகக் கருதி வீட்டிலேயே அவரை வைத்துக் கொள்ள சாருவும் நானும் முடிவு செய்தோம்.

சாரு தான் அப்பாவைச் சமாளிக்கவென்று மனோதத்துவ வகுப்பொன்றுக்குப் போய் வந்தாள். தொடர்ந்து அப்பாவை பிஸியோதெரபி மற்றும் மருத்துவ மனைக்குக் கூட்டிப் போவது உலாவப் போவது என்று சாரு மட்டுமில்லா திருந்திருந்தால், ஒரு வேளை மனதைக் கல்லாக்கிக் கொண்டு அப்பாவை மருத்துவமனையில் சேர்த்திருப்பேனோ என்னவோ.

திடீரென்று கூடத்திலிருந்து தீனமான குரல் கேட்டாற் போலிருந்தது. கூர்ந்து கேட்டேன். கேலிச் சித்திரத்தில் ஏதோ அழுகையொலி. தொடந்து அப்பளம் பொரிக்க சட்டியில் எண்ணையை ஏற்றினேன்.

அம்மா வேலையிலிருந்து திரும்பவும் எப்படியும் இரவாகிவிடுகிறது. செய்து வந்த தையல் வேலையை விடச் சொன்னாலும் முத்லில் கேட்கவேயில்லை. தொடர்ந்து நச்சரித்ததில் விட்டு விடலாமென்று நினைத்தார். ஆனால், அப்பாவிற்கு திடீரென்று ஏற்பட்ட சித்தஸ்வாதீனமில்லாமல் போனது தான் அவர் மனதை மாற்றி விட்டது.

தன் சம்பளத்தை வீட்டுச் செலவுக்குக் கொடுப்பதில் அவரது மனதிற்குத் திருப்தி ஏற்பட்டதென்று அம்மா சொல்லவே அதை ஏன் மறுக்க வேண்டுமென்று நானும் பிறகு சொல்வதையே விட்டு விட்டேன். ஆரம்பத்தில்,” ஏன் நமக்கு மட்டும் இப்பிடி ஆகணும்? ஏன்?”, என்று அப்பாவை நினைத்து மாய்ந்து மாய்ந்து போன அம்மா, அப்பாவிடம் பட்ட பாட்டில் சீக்கிரமே அவரிடமிருந்து விலகி, பிறகு மெள்ள மனதளவில் ஏற்கவும் பழகி, அப்பா கண்ணில் மட்டும் படாமலிருக்க ஆரம்பித்து விட்டார்.

சாருவின் வலியில் தோய்த்த குரல் உரக்கவே கேட்டது. குக்கரின் வாயை மூடியதும் தான் என் சந்தேகம் சரி தானென்று உறுதியானது. உடனே பாய்ச்சலாய் ஓடிச் சென்று பார்த்தவனுக்கு அதிர்ச்சி. வியர்வையில் குளித்திருந்த முகத்தில் வலியின் முடிச்சுகள். “சாரும்மா,. என்னாச்சு?ம்?”, என்றபடி அவள் நெற்றியில் விழுந்திருந்த கேசத்தை ஒதுக்கி விட்டு அவளின் கையைப் பிடித்துக் கொண்டேன். பதட்டத்தில் செய்வதறியாது அவளின் முகத்தையே பார்த்த படியிருந்தேன்.

திரும்பி என்னைப் பார்த்த அப்பா டீவியை டப்பென்று அணைத்து விட்டு என்னருகே வந்து நின்று என் முகத்தையும் ஒரேயொரு வினாடி சாருவின் முகத்தையும் பார்த்தார். மறுபடியும் கண்களில் அதே மின்னலைப் பார்த்ததைப் போல இருந்தது. உடனே போல இருந்தது. உடனே எதையோ மறந்தவரைப் போல அறைக்குள் விடுவிடுவென்று நுழைந்தார்.

கையில் கிலுகிலுப்பையை எடுத்துக் கொண்டு வந்து என்னையே பார்த்துக் கொண்டு நின்றார். திடீரென்று அதைத் தன் இடுப்பில் கைலியின் மடிப்பில் செருகிக் கொண்டே, “டாக்ஸி கூப்பிடு”, என்று முணுமுணுப்பாகச் சொன்னதுமே அவரிடபட்டிருந்த மாற்றத்தைக் கவனிக்கக் கூடத் தோன்றாமல், தொலைபேசியை நோக்கி ஓடினேன். பேசிக் கொண்டிருக்கும் போது தான் அப்பாவின் மாற்றம் மெதுவாக என் மனதில் பதிய, திரும்பினால்,..

வலியில் துடித்துக் கொண்டிருந்த சாருவை எழுப்ப முயன்று விட்டு இரண்டு கைகளாலும் தூக்க முயற்சிப்பதைப் பார்த்து அப்படியே செயலிழந்து உறைந்தேன். “வா, சீக்கிரம்,.. ஹெல்ப் பண்ணு, காலப் பிடி,.. தூக்கி கிட்டுப் போயிடலாம் டாக்ஸிக்கு”, விளையாட்டுத் தோழனிடம் சொல்லும் குழந்தைக் குழறலில் சொன்னார். ‘அன்று புதிதாய்ப் பிறந்தவரைப் பார்ப்பதைப் போல விழிகள் விரிய ஆவென்று பார்த்தேன். பார்வையை அவர்மீதிருந்து விலக்காமலே, அருகில் சென்று அவர் கைகளை அனிச்சையாக விலக்கி விட்டு மெதுவாக அவளை நானே தூக்கினேன்.

– பின் சீட் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, நிலா புக்ஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *