கடற் பஞ்சு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 1, 2025
பார்வையிட்டோர்: 518 
 
 

(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“சின்னப்பொடி இரண்டு விளப்பொடியெண்டாலும் தாவன், மனிசிக்குப் பத்தியம் வைக்க. கடல்லை போற போது தாறன்”. 

“அண்ணை கொண்டுவந்த கொஞ்ச மீனையும் காசுத் தேவையிலை ஓரடிக்கு முந்தியா குடுத்திட்டன். கடல் கொந்தளிப்பிலை மீன் ஒண்டும் படுகுதில்லை. ஒரே புயல் அடிக்குது. வள்ளத்தோடை நான் போனதிலை தப்பினன் இல்லாமே தோணியெண்டா கரையை அண்டவேயேலாது. பறியளும் பிஞ்சுபோச்சுது வைச்சண்டு உனக்கில்லை யெண்டு செல்லுவனா… வேணுமெண்டா பறியைப்பாரன் ஒரு புவாத்திருக்கை குட்டிதான் கறிக்கி வெச்சிருக்கேன். நீயும் புள்ளைத்தாச்சிக்கெண்டேக்கை …’ 

பறி காற்றில் ஆடுகிறது. தோணிகள் வெறுமனே தான் வந்திருந்தன. வேலாசியின் மனம் தாவுகிறது பொன்னி சொன்னதை நினைக்க வேலாசியின் உள்ளம் கிடந்து அடிக்கிறது. 

“என்னங்க கறியைக் கண்டு எத்தனை நாளாவுதுங்க. இண்டைக்கெண்டாலும்போய் இரண்டு மீன்பொடிவேண்டி யாங்களன்…”. 

கடல் தொழிலாளிதான் நான். என்ன இருந்தாலும் அவள் ஆசைப்படுகிறபோது வேண்டிக்கொடுக்க முடிய வில்லை. அதுவும் புள்ளைத்தாச்சி ஆசைப்பட்டா கட்டா யமா வேண்டிக்கொடுக்க வேணும். அப்பத்தான் சுகமான பிரசவம் நடக்கும். வயிறும் வாயுமா இருக்கேக்கை மனசிலை கசப்புக்கிசப்பு இல்லாமைப் பாத்துக்கொள்ளணும். அந்த ஒத்தப்பனைக்கு நேராகப் பாலத்தடியிலை வைச்ச பறியைப் பாத்திட்டெண்டாலும் வருவம்…

மண்டாவையும் மரக்கோலையும் சின்ன பீலிப்பட்டை யையும் தோணிக்குள் வைத்துவிட்டு, தோணியை மேட்டு மணற்பரப்பிலிருந்து கடலுக்குள் தள்ளி தோணியில் தொற் றிக்கொண்டான். தோணி தெப்பமாகி ஒவ்வொரு அலைக் கும் மிதந்து தாழ்கிறது. பாசிகள்; பச்சைத்தாளைகள் அலைகளின் ஆட்டத்துக்கு இசைய தாக்குப்பிடித்து அங்கு மிங்கும் தலையசைக்கிறது வேலாசியின் கையில் இருந்த மரக்கல் அடித்தளத்துக்குச் சென்று முட்டுகிறது. தனது நெஞ்சை மரக்கலின் நுனியில் பொறுக்க வைத்துக் கால் விரல்களில் தனது உடலைத் தூக்கி அழுத்தி உன்னித் தள்ளுகிறான். ஒவ்வொரு தாண்டலுக்கும் தோணி நீரைக் கிழித்துக்கொண்டு முன்னேறுகிறது. 

பெரியபாளம் கடற்பஞ்சு கடலில் மிதந்து வருகிறது. அதைக்கண்டதும் மகன் சின்னானின் நினைவு சுழியிடு கிறது. கண்மணிகளில் அவன் உருவம் வந்து நிற்கிறது. சீனாப் பச்சரிசி போன்ற பற்களைக் காட்டுகிறான். அரை யில் கட்டியிருக்கும் வெள்ளி அரைஞாண் பளிச்சிடுகிறது. ஐந்து வயதுகூட நிறைவுபெறாத சின்னான் பிறந்தமேனி யாக சின்னக் கைகளில் ஒரு அசைவை ஏற்படுத்தி ஆர வாரிக்கிறான். தலைமயிர் மாடு சூப்பிய பனங்காய்த்தும்பாகி சீப்பின் வருடலற்றுச் செம்படை தட்டிக் கிடக்கிறது. சின்ன முகத்துக்கு அதுகூட அழகாகத் தெரிகிறது. ஒரு கையால் ஒதுக்கிக்கொண்டு…. 

“அப்பா நீ எனக்குக் கடல் பஞ்சு கொண்டாந்து தரல்லா. தாறன் தாறன் எண்டு வேக்கிறா. சொக்கனுக்கு அவண்டை அப்பா கொண்டாந்து குடுத்திக்கார் நான் தொட அடிச்சவன் ” 

விக்கல் எடுத்துச் சின்னான் அழுதான் கண்களி லிருந்து பனிமுத்துக்கள் சிதறி விழுகின்றன. 

“அழாதையடா சின்னான், நான் கடலை போனா உனக்குக் கடற்பஞ்சு கொண்டாந்து தாறன்…” 

“ஒண்டு வேணாம் ஐஞ்சுதான் வேணும் அஞ்சு…”

“சரி நீ சொக்கனிட்டைப் போகாதை. போனாப் பிறகும் அடிப்பான். நீ வீட்டிலே இருந்துக்கோ…” 

“நீ எனக்கு கொண்டுவந்தின்னா நான் விளயாண்டிச்சு இஞ்சே இருக்கேன்… இன்ன.” 

சொன்னது ஞாபகம் வருகிறது… திரும்பிப் பார்க் கிறான். பஞ்சு பத்துப் பன்னிரண்டு யார் கடந்துவிட் டிருந்தது. உடனே மரக்கலை எடுத்து மாறிப்போட்டு வலித்தான்… கடற்பஞ்சு நீரில் ஊறி மதமதத்த வாழை இலை யாகி மதாளித்து இருந்தது. அதை எடுத்துப் பிழி கிறான். உப்பு நீர் சிறீர் சீறீர் எனச் சீறிக் கண்களில் படுகிறது… கண்ணில் கரிப்பு… கடற்பஞ்சுப் பாளத்தை தோணிக்குள் போட்டுக் கையால் கண்ணைக் கசக்கிவிட்டுக் கொள்கிறான் -வேலாசி 

பாலத்தடியை நோக்கி… அவன் தாண்டுகிறான்… ஊகம் தவறவில்லை. மண்டாவில் கொழுவிப் பறியைத் தூக்கி எடுத்துத் தோணிக்குள் கொட்டுகிறான். பறியி னின்றும் விழுந்த மீன்கள் தோணித் தளத்தில் பட்டதும் துடித்து வில்லாக வளைந்து மேலெழுந்து விழுந்து அடங்கி விடுகின்றன. 


கரையில் மீன் வாங்க வந்த வேலணை மக்கள் மீன் தோணி ஒன்றையும் காணவில்லையே என எண்ணி கரை யில் நின்று கால் உளைந்ததினால் குத்தகைக்காரன் இருக் கும் கொட்டில் பக்கம் போய் பச்சைப் புல் தரையில் கால்களை முடக்கி சப்பாணி கோலிக்கொண்டனர். 

“என்ன குத்தகைக்காரன் எனி மீன் வருமா?” 

“எல்லாத் தோணிகளும் வந்திட்டுது. தூண்டிலுக் குப் போனவங்களும் வந்து போயாச்சு. பறி எடுக்கப் போன வேலாசி மட்டுந்தான் வரவேணும்” சொல்லிக் கொண்டே கடலை நோட்ட மிட்டார். அவரது கண்ணுக்கு வேலாசி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. 

“அந்தா சுடலை அடி கண்ணாவுக்கு நேராக வந்து கொண்டிருக்கான் வேலாசி” 

வேலாசிக்கு மகிழ்ச்சி; க ரை யில் நிற்கும் சனத்திர ளைப் பார்த்ததும், சொன்ன விலைப்படியே வித்துத் தீர்க்க தீர்மானம் பண்ணிக்கொண்டான். இன்று இருபது ரூபாய் வரை தேறும். கூப்பனும் வேண்ட வேணும், அவள் பொன்னியை ஆஸ்பத்திரிக்கு ஒருக்கா காட்டிக் கொண் டும் வந்துவிடலாம் என்ற துடிப்பில் தாண்டல் வேகமா கிறது. அலையும் சேர்ந்து கரையை அடைய உதவுகிறது. 

குத்தகைக் காறனுக்குக் கொடுக்க வேண்டிய மீனை தென்னோலை மீது வீசியெறிந்தான். விழுந்தடித்துக் க் கொண்டு கோர்வை ஈக்கிலை பிடித்துக்கொண்டு எனக்கு உனக்கென்று சொல்லி அடிபடத் தொடங்கினார்கள். குத்தகைக்காரன் “எனக்குக் கறிக்கு வேணும் என அதை ஒரு பக்கத்தில் எடுத்து வைத்தான். 

வேலாசி கோர்வை இருந்தா எனக்குத் தா… பல குரல்கள்… சமுத்திரத்தில் கல்லாகிப் பொத்து பொத்தென்று விழுகிறது. 

“கோர்வை ஒண்டு. ஒண்டரை ரூவா கொடுத்துப் போடுங்க இல்லாட்டி வைச்சிட்டுப் போங்க மறுகதை பேசவேண்டாம்.” உசாராகவே வேலாசி சொன்னான். எவரும் மறு பேச்சுப் பேசவில்லை. காசைக் கொடுத்து விட்டுப் போய் விட்டார்கள். 

பறியைத் தூக்கி மண்டாவில் கொழுவிக் கொண்டு அதற்குமேல் மரக்கலையும் தோளில் போட்டு ஒரு கையால் பிடித்துக் கொண்டு மறு கையால் கடற் பஞ்சு பாளத்தை தூக்கிக் கொண்டு மணல் மேடுகள் ஊடாக வீட்டை நோக்கி நடந்தான். 

நடக்கும் போது மணல் சொரு சொருவென்று விட் டுக் கொடுக்கின்றன. அவனது விறைத்து வெண்மை யாக இருந்த குதிக் கால்களில் மணற் பருக்கைகள் ஒட் டிக் கொண்டன. 

அந்த மணற் பரப்பைத் தாண்டித்தான் அவனது குடிசை அதன் பின்புறத்தில் தென்னை மரங்கள் சோலை யாக வளர்ந்தும் கிழக்கே பரந்து விரிந்து கிடக்கும் உவர் நிலம்; அவற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்ணா, தாளை, நொச்சி, ஈச்சம் பற்றைகள் அதை யடுத்து கடல்கரையில் உமிரி, கொட்டணை மரங்கள் பரந்து அடர்ந்து காட்சியளிக்கிறது. எங்கு பார்த்தாலும் ஒரே பச்சை. இவை எல்லாம் இயற்கை அழகை குடி சைக்கு தனிமதிப்பைக் கொடுக்கின்றது. 

பறியைக் கழட்டி நிலத்தில் வைத்துவிட்டு மண்டா வையும் மரக்கலையும் குடிசையில் சாத்திவிட்டு வேலாசி நிமிர்ந்தான். அவன் முகத்தில் குதூகலம் படர்ந்து காணப்பட்டது. 

“டியேய் பொன்னி பறியில் இருக்கிற மீனை எடுத் துக் காச்சு மவன் சின்னான் எங்கே காணோம்.,, 

வேறு எங்கே போயிருப்பான் அவன் சொக்கன் வீட்டுக்குத் தான் போயிருப்பான்.” 


“இஞ்சேர் சொக்கன் அதை ஒருக்கா தரமாட்டாய் நான் பிக்கலை… வாயில் வீணீர் ஆசையால் வடிகிறது. எனக்கு அப்பா கொண்டாந்தா உனக்குத் தருவன்” என்று கெஞ்சினான் சின்னான். 

ஆனால் சொக்கன் மனசு இழகவில்லை. ‘சீ …, சீ … நான் தரமாட்டேன். உனக்கா நீ பகிடி பண்ணின னியோசூத்தைப் பல்லன் எண்டு உனக்கு நான் தரமாட் டேன் போ.’ வென்று கடுமையாகவே சொன்னான். 

“சின்னான் … டேய் … சின்னான்…” வேலாசி உரக்கக் கூவினான். 

அது சின்னானின் செவிகளில் விழுந்திருக்க வேண்டும். சின்னான் விழுந்தடித்துக் கொண்டு ஓடிவந்தான். 

அவன் மனதில் ஒரே கலவரம்…. 

அப்பா வெல்லே போகவேணா மெண்டு சொன்னவர் நான் போனதுக்கு அடிக்கிறாரோ என்னவோ என்ற பயம் மனதில் இருள் ஆட்டம் இருக்கிறது. 

பதுங்கி பதுங்கி மணல் தரையில் அடிக்குமேல் அடி யெடுத்து வைத்துக்கொண்டு வேலாசிக்கு கிட்ட வந்து ஒதுங்கி ஒடுங்கி நின்றுகொண்டு, ‘அப்பா கூப்பிட்டி யாப்பா” 

“ஆமா இந்தா… இந்தா … உனக்குக் கடற் பஞ்சு”

அப்பொழுதுதான் நிமிர்ந்து பார்த்தான் சின்னான். அவனுக்கு எவ்வளவு ஆசை, தவிப்பு ஓடிப்போய் கையில் இருந்த கடற்பஞ்சுப் பாளத்தை ஆவல் மீகுதியால் தொங்கிப் பறித்துக்கொண்டான். 

‘அப்பா இண்டைக்குத் தான் நல்லம்’ என்று சொல்லி ஆனந்தத்தில் கடற்காற்றுப் பட்டு உப்பிச் சுருங்கிப்போய் இருந்த வேலாசியின் கன்னத்தில் தனது தம்பளப் பூச்சியன்ன மிருதுவான அதரங்களை சந்தோச மிகுதியால் பதித்தான். ஒருமுறையல்ல பலமுறை ஒட்டியும் ஒட்டாமலும் பிரிந்தன 

அவனது பூப்போன்ற இதழ்கள் பட்டதும் வேலாசி யின் உடல் உணர்ச்சியால் குவிந்தது. உரோமம் புல்லரித்தது. உள்ளம்பூரித்தது. சின்னானை ஆசைதீரக் கட்டி அணைக்க வேண்டும் என்ற ஆசை முளைத்தது. கைகளால் அவனை வாரி எடுத்து நெஞ்சுடன் அணைத்து உடல் இரண்டும் ஒன்றாகும்படி இறுக்கித் தழுவினான். குழந்தை யின் மென்மையை மறந்து தன்னைப்போல் வயிரமானது அவன் உடல் என்ற நினைவில் தனது முழுப்பலத்தையும் கூட்டிக் கைகளால் நெருடி அவன் முகத்தில் முத்தங்கள் விதைத்தான். அவன் நெருடியது அன்புப் பசியில் இருந்த வேகம்தான். ஆனால் சின்னானுக்கு தேகத்தில் நொந்திருக்க வேண்டும். அந்தக் கணத்தில் கைப்பிடியில் தப்பி ஓடிவிடவேண்டும் என்று கால்களை கைகளை வலுவாக துடுக்குத்தனமாக இடறி அடித்தான்.

‘ஐயோ என்னை விடப்பாவிடு’ என்று சிணுங்கினான். 

வேலாசி விட்டு விட்டான். 

‘நான் உனோடை கோபம் போ. நீ கூடாது போ.’ என்று சொல்லிக்கொண்டு போய் வீட்டு எதிரில் இருந்த மணற்கும்பியில் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்துவிட்டான். அவனது முகத்தில் இப்பொழுது சூரியனின் கொடூரமான கதிர்கள் விழுந்தன. அந்த நேரத்தில் அவனுக்குச் சுடவில்லை … 

வேலாசி இமை கொட்டாமல் மணற் பரப்பில் சின் னான் இருக்கும் அழகை பார்த்தான்…அடிமனதில்; இத யத்தின் ஆழத்தில்.. தான் தொட்டது சின்னானா கடற் பஞ்சா என்றது சந்தேகம்.. 

கடற் பஞ்சு நீரில் ஊறியிருக்கும் போது எவ்வளவு பசுமையாக இருக்கின்றது. அதை கடல் நீரில் இருந்து பிரித்துத் தரையில் போட்டால் அது எவ்வளவு சுருங்கி விடுகிறது. ஆனால் மென்மை மாறுவதில்லை. அது போல்தான் சின்னான் அன்பு எனும் ஈரம் ஊறி இருக்கும் போது காணப்படும் குழுமை ஒளி அவனுக்குப் பிடிக் காத காரியம், செய்யும் பொழுது கோபம் வரும்போது வாடிய புகையிலை குருத்துப்போல் – தொட்டாற் சுருங்கி போல் முகம் மாறிவிடுகிறது. உதடுகள் கோணி விடு கிறது. ஆனால் மென்மை…! 

உண்மையில் வேலாசிக்கு தான் தொட்டது சின்னான கடற்பஞ்சா என்பது சந்தேகம். விடை காணமுடியாத கேள்விக் குறியாக மனதில் அக்கணம் தொங்கும் சபலம் தான்…! 

– தேசியமுரசு, மாசி 1963.

– தாலி சிரித்தது (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மார்கழி 1965, தேனருவி பிரசுராலயா, வெள்ளவத்தை, இலங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *