கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 15, 2025
பார்வையிட்டோர்: 240 
 
 

(1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தலைமை எறும்பு கூறியது: 

‘ஒழுங்காகச் செல்லுங்கள்… பரிசு உங்களுக்குக் காத்திருக்கிறது.’ 

ஓர் எறும்பு –

‘என்பாட்டில் நான் போவேன்…’ என்று வரிசையை உடைத்துக் கொண்டு தனிவழி போனது. 

கொஞ்ச நேரத்தில் – 

வரிசை குலையாமல் போன எறும்புகளெல்லாம் வாயில் அரிசியோடு திரும்பி வந்தன. 

ஒற்றை எறும்பின் முகம் ஒடுங்கியது. 

நிரை குழம்பாத எறும்புகளில் ஒன்று சொன்னது:- 

‘வரிசை பிளப்பான் 
பரிசை இழப்பான்’ 

– காசி ஆனந்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்கழி 1992, காந்தளகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *