ஆழ்கடல்




(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தொட்டியில் கிடந்த கடைக்குட்டி ‘ஆவ்’ என்று கொட்டாவி விடுகிறது.
தாய் தொட்டிலை ஆட்டுகிறாள்.

பிள்ளை கண்களைச் சிறிது மூடியவாறு புரண்டு படுக்கிறது.
“ம் இன்னுமா தூங்கவில்லை”
தாய் அதட்டியதைச் செவிமடுத்ததும் மூடியவிழி களை மெல்லத் திறந்து தாயைப் பார்த்துவிட்டு மீண்டும் மூடிக்கொள்கிறது.
அன்பரசி மெத்தையில் படுத்திருக்கும் தன் கண வனைப் பார்க்கிறாள். அவன் வேலை செய்துவிட்டு வந்த களைப்பால் நன்கு அயர்ந்து தூங்குகிறான். உலகத்தை மறந்து உறங்கினாலும் அவன் முகம் முல்லைமலர் மொட் டவிழ்ந்தாற்போல் இருக்கிறது விளக்கு வெளிச்சத்தில் அன்பழகனின் சிரித்த முகத்தை அன்பரசி பார்க்கிறாள். கள்ளங் கபடமற்ற அவன் முகத்தைப் பார்க்கும்போது அவள் உதடுகள் மெல்ல நெளிகின்றன. பூவை புன்ன கைக்கிறாள்.
அவன் தன் கன்னங்களைக் கிள்ளியது நினைவுக்கு வரு கிறது. மெல்ல நாணிக்கொள்கிறாள். வலக்கை தொட் டிலைப் பிடித்து ஆட்டியபடி இருக்கிறது. இடக்கை அன்பரசன் கிள்ளிவிட்டு முத்தமிடும் கன்னத்தை இத மாகத்தடவுகிறது. உள்ளம் பூரித்து இன்புறுகிறாள்.
இருந்தாற்போல் அவளுக்கு அந்த நடக்கக்கூடாத பழைய நினைவும் நினைவுக்கு வந்து விடுகிறது. அதை நினைத்ததும் அவள் முகம் தொட்டாற் சுருங்கியைப் போல் சுருங்கி வாடுகிறது. உடம்பு குப்பென்று வியர்த்து விடுகிறது. தொண்டை வறண்டு விடுவது போன்ற நிலை. மனத்தில் இனம்புரியாத அச்சம் ஆட்கொள்கிறது.
உள்ளத்தின் அடித்தளத்திலுள்ள அந்தச் சுமை யைத் தன் கணவனிடம் சொன்னால் சுமை குறையும். எப்படிச் சொல்வது? சொன்னால் என்னென்ன நடக் குமோ என்று நினைத்துப் பார்க்கிறாள். இவ்வளவு நாளும் மனத்திற்குள் போட்டுப் பூட்டிவைத்திருந்த அந்த உண் மையை மூன்று பிள்ளைகளுக்குத் தாயாகிய பிறகு சொல் வதா? சொல்லக்கூடாது. சொல்லவே கூடாது. இருந் தாலும் மனம் வருந்துகிறதே! சொன்னால் என்னை வெறுத்து ஒதுக்கிவிடுவாரே ! கணவனிடம் உண்மையை மறைக்கிறாயே என்று உள்மனம் அச்சுறுத்துகிறதே ம்… ஒரு நீண்ட பெருமூச்சு விடுகிறாள். கண்களில் கண்ணீர் பெருகுகிறது அவள் மனம் பேதலிக்கிறது.
கொட்டாவிவிட்டபடி தொட்டிலைப் பார்க்கிறாள கைக் குழந்தை அயர்ந்து தூங்குகிறது.
தொட்டிலை ஆட்டிய கைகள் சோர்ந்து விடுகின்றன. மனம் வேறு சரியில்லை. பகலெல்லாம் பிள்ளைகளுடன் போராடிய களைப்புவேறு. படுக்கையை நோக்கி நடக்கி றாள்.
தன்கணவனுக்கு அருகில்போய்ப் படுக்கிறாள். அவன் அருகில் படுப்பதற்குக்கூட அவள் மனம் சற்று கூசுகிறது. இப்படி எத்தனையோ ஆயிரம்முறை. ஏறக்குறைய இயந்திரத்தைப் போல் இயங்கிய அவள்மனம் எதை யெதையோ எண்ணுகிறது. இருந்தாலும் தன் கணவன் என்று எண்ணி அவன் கையைப் பற்றி கன்னத்தில் ஒற்றிக்கொள்கிறாள். சுமை குறைந்தது போன்ற உணர்வு அவளுக்கு ஏற்படுகிறது நீட்டி நிமிர்ந்து படுக்கிறாள். போர்வை உடலை மறைத்துக்கொள்கிறது. கருமணி விழி களை இமைகள் மூடுகின் றன. அசதியில் அயர்ந்து தூங்கு கிறாள். ஆனால்…
ஒரு நாள் மாலை. அன்பரசி குளித்து முழுகிவிட்டு உடுத்திக்கொள்கிறாள். நிலைக்கண்ணாடி முன் நின்று சுருண்டிருந்த கார்குழலைச் சீவி முடிக்க அரைமணி நேரம் ஆகிறது. தன் கயல் விழிகளுக்கு வருகிறாள். செவ்வரி யோடிய விழிகளில் மைபடாமல் இமைகட்கு மைதீட்டிக் கொள்கிறாள். நெற்றியில் செஞ்சாந்து பொட்டு மிளிர் கிறது. முன்னும் பின்னும் தன் அழகை நிலைக்கண்ணாடி யில் பார்த்து புன்னகைக்கிறாள். சிரிப்பு, வெடித்துநிற்கும் தென்னம் பாளையை நினைவுகூர்கிறது. விரலை கடித்துக் கொள்கிறாள். அதில் அவளுக்கு ஓர் இன்பம். மெல்ல அன்னநடை பயில்கிறாள். அந்நடையில் தன் உள்ளமே சொக்கிவிட்டது போன்ற உணர்வு.
அவள் சித்திரைத் தேர்போல் வெளியில் செல்லும் போது காற்கொலுசின் ‘கல கல’ இனிய ஒலியும், கை வளையல்களின் ‘கணீர்’ ஒலியும் சேர்ந்து இசைக்கிறது.
மான் வெருண்டு ஓடுவதைப்போல் ஓட்டமும் நடை யுமாகச் செல்கிறாள். அவள் அந்தச் சிறுசிறு சந்துகளைக் கடந்து செல்லும்போது அவள் விழிகள் நாலா பக்கங் களிலும் சுழல்கின்றன. திருடனைப்போல் திருதிரு வென்று விழித்தபடி நெஞ்சம் பதற குறிப்பிட்ட இடத்தை நோக்கி விரைகிறாள். யாரும் பார்த்துவிட் டால்? திரும்பிப் பார்த்துக்கொள்கிறாள்.
குறிப்பிட்ட இடத்தைக் குறுகுறுத்த உள்ளத்தோடு அடைகிறாள்.
அன்பரசியின் வரவிற்காகக் காத்திருந்த மாணிக்கம் அவளைப் பார்க்கிறான். பார்த்ததும், “வந்துவிட்டாயா அன்பரசி” என்று சொல்லியபடி அவளிடம் செல்கிறான். இருவரும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். நான்கு விழி களும் காதல் மொழிகளைக் கொட்டிக் குவிக்கின்றன. அருகில் சென்றதும் மாணிக்கத்தின் கைகள் அன்பரசி யின் இடுப்பைப் பற்றுகின்றன.
அவள், “உஸ் யாரும் பார்த்துவிட்டால்” சுட்டு விரலை மேல் உதட்டிலும் கீழ் உதட்டிலும் படும்படி வைத்து நல்ல பாம்பு சீறுவதைப்போல் சீறுகிறாள்.
“பார்த்தால் என்ன? என்றிருந்தாலும் நாம் ஒரு நாளைக்குக் கணவன் மனைவியாகப் போகிறவர்கள் தானே?”
“இருந்தாலும் முறையோடு தாலி கட்டுவதற்கு முன் இப்படியெல்லாம் சந்திக்கவே கூடாது தெரியுமா?”
“கூடாதுதான்” என்று சொல்லியபடி கன்னத்தில் கிள்ளுகிறான். அவள் உடம்பெல்லாம் மின்சாரம் பாய் வதுபோன்ற உணர்வு ஏற்பட்டு மேனி புல்லரித்துவிடுகி றது. அதை உணர்ந்த மாணிக்கம், ‘ கழுத்தில் தாலி ஏறு வதற்கு முன் இங்கு வந்திருக்கிறாயே வரலாமா? வந்து என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதுமில்லாமல் இப் படிச் சந்திப்பதே தப்பு என்று சொல்லி என்னை ஏமாற் றவா பார்க்கிறாய்! கள்ளி!” என்று சொல்லியபடி செல்லமாகக் கன்னத்தில் தட்டுகிறான். அவள் கன்னம் குங்குமமாக மாறுகிறது.
அவள் “போங்கத்தான்” என்று சொல்லியபடி அவன் மூக்கைப்பிடித்து முன்னுக்கு இழுக்கிறாள்.
பிறகு இருவரும் அங்கு போடப்பட்டிருந்த திண்டில் அமர்கின்றனர். மாணிக்கத்தின் கை அன்பரசியின் இடுப்பை மீண்டும் பற்றுகிறது. அன்பரசி மாணிக்கத் தின் மற்றொரு கையைப்பற்றி மலர் நுகர்வதைப்போல் நுகர்ந்தபடி, “அத்தான்” என்கிறாள். அத்தான் என்ற அந்தச் சத்தான சொல்லில் அவன் தேனுண்ட வண் டைப்போல் மயங்குகிறான். அன்பரசியின் மாம்பழக் கன் னத்தில் மாறிமாறி முத்தமழை பொழிகிறான். அன்பரசி அவன் அரவணைப்பில் அல்லித்தண்டைப் போல் துவண்டு விடுகிறாள். கட்டுப்பாட்டை மீறக்கூடாது என்ற உணர்வு தலை தூக்குகிறது.
“அன்பரசி உன் பட்டு முகத்தைத் தொட்டுவிட்டால் இன்பம் பெருகுகிறதே ஏன்?”
“ஊகூம் தெரியவில்லை”
“தெரியவில்லையா?”
அவளை நெஞ்சோடு அணைத்துக்கொள்கிறான். அன்பரசி அவன் நெஞ்சில் முகம் புதைக்கிறாள். மாணிக்கத்தின் நெஞ்சில் உள்ள சூடு கதகதப்பாக இருக்கிறது அவளுக்கு. அந்தக் கதகதப்பில் கட்டுப்பாட்டை மீறக்கூடாது என்ற உணர்வு புளுங்கிவிடுகிறது. “அத்தான்” என்கிறாள். அது உப்பங்காற்றில் கலந்து அவன் காதுகளில் தேனாகப் பாய்கிறது.
“அன்பரசி” மாணிக்கந்தான் உள்ளம் நெகிழ அழைக்கிறாள்.
“ம்…” அன்பரசியின் குயில் குரல் இது.
மாணிக்கம் அவள் விழிகளைப் பார்க்கிறான். மயங்கிய விழிகள் அவனுக்கு போதையையூட்டுகின்றன. அவள் முகத்தை இரு கைகளாலும் நீரில் உள்ள அல்லிமலரை ஏந்தி அள்ளுவதுபோல் அள்ளி எடுத்து கூர்ந்து நோக்கு கிறான் அவள் முகம் இளமைப் பொலிவை உமிழ்ந்து அவனுக்கு மயக்கத்தைமூட்டுகிறது. செவ்விதழ்களில் தேன்சுவை பருகுகிறான். கள்ளுண்ட வெறி ஏற்படுகிறது மங்கிய நிலவொளி உப்பங்காற்று வேறு குளுகுளுவென்று இதமாக வீசுகிறது. ஆசையை அடக்க முடியவில்லை. கட் டுப்பாட்டை கட்டுக்குள் நிறுத்த முடியாமல் தவிக்கின் றனர். “அத்தான்”, “அரசி”.
சற்று நேரத்திற்குள் நிலவொளியில் தெரிந்த இரு வர் உருவங்களும் ஓர் உருவமாக மாறிவிடுகிறது. கை கால் பின்னிப் பிணைந்து கொள்கின்றன. இளமை இன் பம் காட்டாற்று வெள்ளத்தைப் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அரை மணி நேரம் ஓடியதுகூட அவளுக்குத் தெரி யாத நிலை.
“அத்தான் நாம்”
“எங்கிருக்கிறோம்”
”அது இல்லையத்தான்”
“பிறகென்ன?’
“கட்டுப்பாட்டை…”
“ஆம் அன்பரசி அவசரப்பட்டுவிட்டோம்”
“எனக்கென்னவோ பயமாக இருக்கிறது அத்தான்”
“பயப்படாதே அன்பரசி” என்று சொல்லியபடி அவள் நெஞ்சில் தட்டுகிறான். அன்பரசி பேசாமல் நிற்கிறாள்.
“அன்பரசி நீ வந்து நேரமாச்சு வீட்டில் தேடுவாங்க பயப்படாமல் போ. நாளைக்கு இதே நேரத்தில்…”
புள்ளிமானைப் போல் துள்ளிக் குதித்தோடிவந்த அன்பரசி நடைமெலிந்து மெல்ல வீட்டை நோக்கி நடக்கிறாள்.
வீட்டை நெருங்கியதும் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறாள்.
வாசலில் காலெடுத்து வைத்தாளோ இல்லையோ “ஏண்டி இந்நேரம் எங்கேடி போயிருந்தே?” என்று யானை பிளிர்வதைப்போல் அவள் தாய் கேட்கிறாள்.
தாய் இப்படிக் கேட்பாள் என்று அன்பரசி சற்றும் எதிர்பார்க்கவில்லை. தாய் இப்படிக் கேட்டதும் அச்சத் தோடு வந்த அன்பரசிக்கு மேலும் அச்சம் ஏற்படுகிறது.
என்ன சொல்லலாம்? விழிக்கிறாள் ! கைகால்கள் நடுங்கு கின்றன நரம்பு நாளங்கள் எல்லாம் சுண்டி இழுப்பது போன்ற நிலை. சற்று திகைக்கிறாள்.
சிறிது நேரத்தில் அதைச் சரிப்படுத்திக்கொண்டு “அருளம்மை வீட்டுக்கம்மா” என்கிறாள்.
“அருளம்மை வீட்டுக்கா? ஏண்டி அருளம்மை வீட் டுக்கா போயிருந்தே உள்ளதைச் சொல்லுடி அவள் இந் நேரம் இங்கே இருந்துட்டு இப்பத்தானே போறா”
அன்பரசி எதுவுமே சொல்ல முடியாமல் விழிக்கிறாள்.
“ஏண்டி உனக்கு எவ்வளவு துணிச்சலடி. இல்லேனா அந்தப் பயல்கூட ஊர்சுத்தப் போயிட்டு பொய் சொல் வாயாடி?” என்று சொல்லியபடி முன்றானையை இடுப்பில் செருகிக்கொண்டு அன்பரசியை நெருங்குகிறாள், அவள் தாய்.
“நான் யார்கூடவும் ஊர்சுத்தப் போகலேம்மா” என்று சொல்லியபடி தாயைச் சற்று வெறித்துப் பார்க்கிறாள்.
“அடி கள்ளி இப்படி பெற்ற தாயிடமே பொய் சொல்கிறாயே?” என்று கேட்டுவிட்டு பற்களை நறநற வென்று கடித்தபடி அவள் கன்னத்தில் ஓங்கியறைகிறாள்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அன்பரசியின் தங்கை தேவிக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை. அவளுக்கு என்னவோ பிறர் துன்பத்தில் இன்பம். அவள் போட்ட மூட்டந்தான் புகையைக் கக்கிவிட்டு இப்போது கொழுந்து விட்டெரிகிறது என்பதை அவள் சிரிப்புக் காட்டுகிறது.
அன்பரசி அடியையும் வாங்கிக்கொண்டு, “எங்கே போனாங்களாம். இல்லாதது பொல்லாததையெல்லாம் சொல்லி அடிக்கிறீங்களே” என்று சொல்கிறாள்.
“அடி இப்படி முழுப்பூசணிக்காயை சோற்றில் போட்டு மறைக்கிறதுமில்லாமல் எதுத்தாடி பேசுறே! சரிசரி போய் உன்பெட்டிக்கு அடியில் துணிபோட்டு சுத்தி ஒளித்து வைத்திருக்கிறாயே அதை எடுத்துக்கிட்டு வாடி” என்கிறாள் கண்கள் கனல் கக்க.
அன்பரசியால் எதுவுமே பேசமுடியவில்லை. குட்டு வெளிப்பட்டு விட்டதே என்று கூனிக்குறுகிப் போய் நிற்கிறாள் உடம்பு மரத்துவிடுகிறது.
“நான் போய் எடுத்துக்கிட்டு வருறேம்மா” இது அன்பரசியின் தங்கை தேவி இருக்கிறாளே அவள் குரல்.
“எடுத்தாடி… இவளை…” பற்களை நறநற வென்று கடிக்கிறாள் அன்பரசியின் தாய்.
தேவிக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. ஓடுகிறாள். பெட்டியைத் திறந்து துணியில் பத்திரமாகச் சுற்றிப் பாதுகாப்பாக இருந்த பொட்டலத்தை எடுத்துக் கொண்டு வந்து தன் தாயிடம் நீட்டுகிறாள்.
அவள் அதை வாங்கி, “இந்தாப்பாருடி” என்று அரசியிடம் பிரித்துக்காண்பிக்கிறாள். அவளும் மாணிக் கமும் ஒன்றாக இருந்து எடுத்த அந்தப் படம் அவளைப் பார்த்தே சிரிக்கிறது. கட்டுக்கட்டாக எழுதிய காதல் கடிதங்களும் காற்றில் பறந்து அவள் காலடியில் விழு கின்றன. அன்பரசி அவற்றைப் பார்த்து விம்மி விம்மி அழுகிறாள்.
“சரி போடி நாயே! உன்னை இனிமேல் இப்படி விட் டால் ஊரையும் பேரையும் கெடுத்துடுவே. உன் அப்பா வரட்டும்.” என்று சொல்லியபடி அன்பரசியின் தலையில் ஒரு குட்டு ஓங்கிக் குட்டி விட்டு பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறாள்.
அன்பரசி ஐந்தாறு அடி ஓடி நின்று மெல்ல அடிமேல் அடியெடுத்து அழுதபடி அறைக்குள் செல்கிறாள்.
காலையில் வியாபாரத்திற்குச் சென்ற அன்பரசியின் தந்தை களைத்துப் போய் வீட்டிற்கு வருகிறார். வந்ததும் கடலைத் தட்டை இறக்கிவைத்துவிட்டு சந்துபொந் தெல்லாம் அலைந்து வந்த களைப்புத் தீர “அப்பாடா” என்று சொல்லியபடி அமர்கிறார்.
அமர்ந்ததும் எப்போதும்போல் காபியோ மோரோ அன்பரசி கொண்டுவரவில்லை. மாறாக, “உங்க மக செஞ்ச வேலையைப் பார்த்தீங்களா ஊரே உங்களையும் உங்க மகளையும் பார்த்துச் சிரிக்கிறது” என்று சொல்லியபடி அன்பரசி தாய் அங்கு வருகிறாள்.
“என்னடி அப்படி ஊர் சிரிக்கிற அளவுக்குச் செய்யாத குற்றத்தைச் செஞ்சிட்டா?”
“என்னடியா இந்தாங்க இந்தப் படத்தைப் பாருங்க. உங்க அருமை மகளையும், அந்த மாணிக்கம் பயலையும்” என்று அவர் கையில் அடித்து வைக்கிறாள்.
அன்பரசியின் தந்தை தன் கண்களையே நம்பவில்லை. “என் மகளா? கச்சான் வித்து படிக்க வைச்சேனே அதற்குக் கிடைத்த பலன் இதுவா? இவ்வளவு தூரத்திற்கா வந்திடுச்சு. அதுவும் அந்த உதவாக்கரைப் பயலையா விரும்பி இருக்கிறாள். அவனால் பல பெண்கள் பரிதவிக்கிறாங்களே அட கடவுளே” என்று சொல்லியபடி ஆற்றா மையால் கண்ணீர் வடிக்கிறார். சோர்வும் சேர்ந்து கொண்டதால் அவர் கண்களில் வடிந்த கண்ணீர் முட்டை அவிந்துவிடும் அளவிற்குச் சுடுகிறது. கன்னங் களில் விழுந்து சுட்ட கண்ணீரைத் தன் சட்டையில் துடைத்துக்கொள்கிறார்.
பிறகு என்ன நினைத்தாரோ எழுந்து சென்று, “முளைத்து மூனெலைப் பறிவதுக்குள்ளே உனக்கு ஏன் இந்தப் புத்தி வந்துச்சு” என்று சினத்தோடு சொல்லிய படி அன்பரசியின் கன்னத்தில் தன் பலங்கொண்ட மட் டும் ஓங்கி அறைகிறார்! வயதானவர்கை என்றாலும் அடி வசமாக விழுகிறது.
அடி விழுந்ததும் அன்பரசி ஒரு சுற்றுச்சுற்றி கீழே விழுகிறாள். அவள் கை தன் கன்னத்தைத் தடவுகிறது. கண்கள் தந்தையை இரக்கத்தோடு பார்க்கின்றன. கண்களில் பெருக்கெடுத்த கண்ணீர் அந்தப் பார்வையை யும் மறைக்கிறது.
அன்பரசியின் தந்தைக்குச் சினம் தணியவில்லை தன் அரைக்கால் சட்டைப் பையில் கையைவிட்டு பீடி பற்ற வைக்க வைத்திருக்கும் தீப்பெட்டியை எடுக்கிறார் தீப் பெட்டியை எடுத்து அதில் ஒரு தீக்குச்சியை எடுத்துக் கொளுத்துகிறார். அது பற்றி எரிகிறது. அதில் அன்பரசி யும் மாணிக்கமும் சேர்ந்து பிடித்த படத்தைப் பிடிக்கி றார். படத்தில் தீ பரவுகிறது. அதைப் பார்த்து அவர் மனம் சற்று ஆறுதல் அடைகிறது. அன்பரசியின் உள்ளம் துடிதுடிக்கிறது.
“இனிமேல் அந்தப் பயலைப் பார்க்கவே கூடாது. மீறிப்போய் அவனைப் பார்த்தே உன்னை அந்த இடத்தி லேயே குழிதோண்டிப் புதைத்துவிடுவேன். அவன் அயோக்கியப் பயல். வேலைவெட்டியில்லாமே ஊர் சுத் தித் திரியும் அந்த ஊதாரிப் பயலை மறந்துவிடு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போகிறார். படமும் சாம்பலாகி விடுகிறது.
நாட்கள் உருள்கின்றன. அன்பரசியின் மனம் தன் காதலன் மாணிக்கத்தைப் பார்க்கத் துடிக்கிறது. மறு பக்கம் தன் தாய் தந்தையரின் பேச்சுக்கு மதிப்புக் கொடுக்கவேண்டும். அவர்கள் சொல்லுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று உள்மனம் உணர்த்துகிறது. “கடவுளே என்னைக் காப்பாற்று” என்று வாய் முணுமுணுக்கிறது. மனங்குழம்பிய நிலையில் இருக்கிறாள்.
ஏன்? இப்படிச் செய்தால் என்ன யாருக்கும் தெரி யாமல் அவர் சொல்லியபடி எங்காகிலும் ஓடிவிட்டால்! இன்பமாக வாழலாம்தான்! ஆனால், அவர் என்னைக் கண் கலங்காமல் வைத்திருப்பாரா? அப்பா அவரைப்பற்றி ஏதேதோ சொல்லுகிறாரே! இப்படியும் அவள் பேதை உள்ளம் பேதலிக்கிறது. இறுதியில் பெற்றோர் சொல்வதே சரியென்று முடிவுசெய்கிறாள்.
நாட்கள் விரைகின்றன.
அன்பரசியை இனியும் வைத்திருக்கக் கூடாது! வயது வந்துவிட்டது. காலாகாலத்தில் திருமணம் செய்து வைத்துவிட வேண்டியதுதான்’ என்று பெற்றோர்கள் முடிவுசெய்து மாப்பிள்ளையும் பார்த்து விடுகின்றனர்.
செய்தி அன்பரசியின் காதுகளில் விழுகிறது. இளமைத் துடிப்பில் அறிந்தோ அறியாமலோ மாணிக்கத்தைக் காதலித்த அன்பரசியின் மனம் அவன் உருவத்தையே சுற்றிச்சுற்றி வட்டமிடுகிறது. விரும்பியவரை மணக்க முடியவில்லையே என வருந்துகிறாள். அறைக்குள் தன்னந்தனியாக இருந்து கண்ணீர்விட்டுத் தேம்பித் தேம்பி அழுகிறாள்.
“ம்… எல்லாம் விதியின் திருவிளையாடல்” என்று விதியை நொந்து கொள்கிறாள்.
திருமண நாளும் வந்துவிடுகிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை அன்பழகனுக் குக் கழுத்தை நீட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. திருமணம் வேண்டாம்; இப்பத் திருமணம் செய்ய வேண்டாம்” நாக்கை நறுக்கென்று கடித்துக்கொள்கி றாள். வலி மூளைக்கு எட்டுகிறது. கைப்பிள்ளை அழும்குரல் செவிகளில் சிறுகச் சிறுகப் பாய்ந்து அதுவும் மூளையை அடைகிறது.
“அன்பரசி” அன்பழகன் குரல் அவள் செவிப்பறையைத் தாக்குகிறது உணர்வுபெற்று படக்கென்று கண் விழிக்கிறாள். மங்கிய விளக்கொளியில் தன் கணவன் அன்பழகனைப் பார்க்கிறாள். தூங்கி விழித்த அன்பழகனின் கண்கள் கொவ்வைப் பழம்போல் சிவந்திருக்கிறது. முகம் வீங்கி இருக்கிறது.
அன்பரசி வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்திருக்கிறாள். நாக்கில் குருதி கசிந்த உப்புச்சுவையை உணர்கிறாள். நெஞ்சம் படபட என்று அடித்துக் கொள்கிறது. குருதியோட்டம் தடைபட்டு விட்டதுபோன்ற உணர்வு. மனம் ஒரு நிலையில் இல்லை.
எழுந்ததும் அழுது கொண்டிருக்கும் கைப் பிள்ளை யைத் தூக்குகிறாள். பிள்ளை பாலுக்கு வாயைவாயைப் பிளக்கிறது. தன் இரவிக்கையை வலக்கையால் நீக்கு கிறாள். பிள்ளை இடப்பக்க மார்பில் பாலை சவைந்து சவைந்து சுவைத்துக் குடிக்கிறது.
பிள்ளையைப் பால்பருக விட்டுவிட்டு மீண்டும் தன் கணவனைச் சிறிது தலைநிமிர்ந்து பார்க்கிறாள். அவன் முகம் முன்பைப் போலவே இருக்கிறது.
“வேலைசெய்த களைப்புத்தீர தூங்கக்கூட விடமாட் டாய் போலிருக்கே. பிள்ளை வீரிட்டு அழுவதுகூடவா தெரியவில்லை. அப்படி என்ன தூக்கம்?’
அன்பரசி தன்மேல் குற்றம் இருக்கிறது என்று எண்ணி பேசாமல் இருக்கிறாள்.
அவன் அவளையே சற்று நேரம் பார்த்துக் கொண்டி ருக்கிறான்.
பிறகு, “ம்… தூக்கத்தில் திருமணம் வேண்டாம் திருமணம் வேண்டாம் என்று உளறினாயே என்ன கனவா கண்டே?”
“ஆமா…” என்று திடுக்கிட்ட அவள் குரல் தழு தழுக்கிறது.
“என்ன கனவு?”
“அதுவா…” சொல்லமுடியாமல் திணறுகிறாள். உள்ளத்தின் ஒரு பகுதி “உளறிக் கொட்டிவிட்டேனோ. அட கடவுளே இவ்வளவு நாளா கமுக்கமாக இருந்தது கட்டவிழ்ந்துவிட்டதே” என்று நினைக்கிறது.
“சும்மா சொல்”
அச்சம் அவளைக் கொல்லாமல் கொல்கிறது. சொல் லக்கூடாது என்று நினைக்கிறாள். உடனே தன் மனநிலையை மாற்றி “அவ்வளவு நல்ல கனவு இல்லை” என்கிறாள். அவள் செயல் கடல் ஆழத்தைக் கண்டாலும் கணிகை யர் மன ஆழத்தைக் காணமுடியாது என்பதை நினைவு கூர்கிறது.
“நீ எதையோ என்னிடம் சொல்ல மறைக்கிறாய்”
நல்ல மனம்படைத்த அவரிடம் சொல்லிவிட்டால் ஏதாகிலும்… ஊகூம் கூடாது தெளிந்த அவர் உள்ளத் தில் இந்தச் சேறுபடிந்த செய்தியைச் சொல்லவே கூடாது. அதை அடிமனத்தில் போட்டுப் புதைத்துவிட வேண்டியதுதான். சொன்னால் என்னைப்பற்றி.. அவள் உள்மனம் உரைக்கிறது.
கிரங்கிய விழிகளால் இரக்கத்தோடு அன்பழகனைப் பார்க்கிறாள். அவன் விட்டவனாகத் தெரியவில்லை. பூவை யின் வாடிய முகத்தைப் பார்க்கிறான்.
அவள் தன்னுணர்வு அற்றவளாய்ப் பிள்ளையைத் தூக்கி பக்கம் மாற்றி பால்குடிக்க வைக்கிறாள். இது பழக் கத்தில் இயற்கையாகவே நிகழ்கிறது.
“ம்… சொல்லமாட்டாய் போலிருக்கு! பெண்கள் தொண்டையில் முடிச்சில்லை; எதையும் எளிதில் மனம் விட்டுச் சொல்லிடுவாங்க என்பதெல்லாம் பொய்தான் போலிருக்கு உண்மையை எத்தனை நாளைக்குத்தான் மறைக்க முடியும்” என்று சொல்லியபடி படுக்கையை விட்டு எழுந்திருக்கிறான்.
“உண்மையை எத்தனை நாளைக்குத்தான் மறைக்க முடியும்” இது அவள் காதுகளில் பலமுறை ஒலிக்கிறது.
கனவில் உளறிவிட்டேனோ. அதைத் தெரிந்து கொண்டுதான் இப்படிச் சொல்லுகிறாரோ! அழாக்குறை யாக நினைக்கிறாள். இரக்கம் இழைந்து நிற்கிறது.
‘கொக்கரக்கோ”
சேவல் கூவுகிறது.
கிழக்கு வெளுக்கிறது.
அன்பழகன் கண்களைக் கசக்கிக்கொண்டு, “நீ கண்ட கனவு எனக்குத் தெரியாதென்றா நினைக்கிறாய். எல்லாம் எனக்குத் தெரியும்” என்கிறான்.
அன்பரசியின் நெஞ்சம் வெடித்து விடுவது போல் இருக்கிறது. உடம்பு குப்பென்று வியர்த்துப் புல்லரித்து விடுகிறது. உடம்பிலுள்ள முடிகள் அனைத்தும் நட்டுக் கொண்டு நிற்கின்றன. உதடுகள் படபடக்கத் துடிக்கின் றன. தன் உள்ளவலிமையை ஒன்று திரட்டி அதைக் கட்டுப்படுத்துகிறாள்.
அவள் நிலையை அவ்வளவாகக் கவனிக்காத அன்பழகன், “என்ன பேசாமல் இருக்கிறாய். உன் தங்கை தேவிக்கு இப்போ திருமணம்செய்ய ஏற்பாடு செய்வது போலவும், அது உன் மனத்திற்குப் பிடிக்காததால் நீ வேண்டாம் என்று சொல்வது போலவுந்தானே கனவு கண்டே” என்கிறான்.
அன்பரசிக்கு போன உயிர் திரும்புகிறது. தன்னைச் சமாளித்துக்கொண்டு “முக்காலும் மூன்றுவீசம் சரியத் தான்” என்று சொல்கிறாள். குளு குளுவென்றிருக்கும் தன் நெஞ்சில் கையை வைத்தபடி மூச்சை உள்ளிழுக்கிறாள். நெஞ்சு விம்மி மேலுயர்ந்து தணிகிறது. முகம் நொடிப்பொழுதில் செண்பகப் பூப்போல் மலர்ந்துவிடுகிறது. பிள்ளை பால் குடிப்பதை நிறுத்திவிட்டு தன் தாயை நோக்கி எலிப்பல்லைக் காட்டுகிறது.
– குங்குமக் கன்னத்தில் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.