நகை அணிந்தனர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,154 
 
 

இளஞ்சேட் சென்னி ஆற்றல் மிகுந்த அரசன். தென்பாதவரைத் தோற்கடித்தான். வட வடுகரைவாட்டி ஓட்டினான்.

பொருநன் போய் கிணயை இயக்கி அவன் புகழ் பாடினான். விலையுயர்ந்த அணிகளைக் குவித்தான் அம்மன்னன். அவ்வணிகளை சுமந்து வந்து சுற்றத்தார்க்கு அளித்தான் பொருநன் அவர்களோ அத்தகைய அணிகலன்களைப் பார்த்ததே இல்லை. எப்படி அணிவதென்று அறியாது திகைத்தனர். விரலில் அணியவேண்டியதை செவியில் அணிந்தார்கள். காதில் அணியவேண்டியதை கைவிரலில் அணிந்தார்கள். அரைக்குரியதை கழுத்திலும் கழுத்திற்குரியதை அரையிலுமாக அணிந்தனர். கண்டவரெல்லாம் கைகொட்டிச் சிரித்தனர். சீதை விட்டெறிந்த அணிகலன்களைக் கண்டெடுத்த குரங்குகள் அணிந்து அழகு பார்த்த காட்சி போல் இருந்தது.

பொருநன் முகத்தில் புன்னகை அரும்பியது. சுற்றத்தினர் வறுமைகுயர் அடியோடு தொலைந்தது.

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *