அவரவர் பங்கு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,078 
 
 

சேரமான் இரும்பொறையைக் கண்டு பாட இளங்கீரனார் சென்றார். அவன் புலவர் முகத்தைப் பார்த்தான். ஏனோ அவனுக்குக் கபிலர் நினைவு வந்து விட்டது:

தமிழ்ப்புலம் உழுத கபிலன் இன்று இருப்பின் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று தன் ஆற்றாமையை வெளியிட்டான்.

இளங்கீரனார் கூறினார்: அரசே! சிறப்புற்ற பெரியோர் பிறந்த உலகில், சிறப்பற்றோர் வாழோம் என்று சொல்வரோ? சொல்லார் ! கபிலர் போன்றார் பாடியபின், என் போன்றார் பாடோம் என்று சொல்வரோ? சொல்லார் !

உலகியற்கை அது அன்று! ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமுடையவர் ! உன் முன்னோர் வெற்றி கண்ட பின்னரும் நீ ஓய்ந்திருக்க வில்லை! நீயும் போர் செய்து, உன் பங்கிற்கு வெற்றியை புனைகின்றாய்! நீ எய்திய வெற்றியை என் பங்கிற்கு நானும் பாடுவேன், கேள் என்றார்.

இளங்கீரனார் பாடினார். அப்பாடலில், யானைப் படைகளும் குதிரைப் படைகளும் செல்லும் மிடுக்கைக் கண்டான் இரும் பொறை!

அரசன் – புலவர் யாருக்கு யார் தாழ்ந்தவர்?

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *