ர.சு.நல்லபெருமாள் (ரவணசமுத்திரம் சுப்பையா பிள்ளை நல்லபெருமாள்) (நவம்பர் 1930 – ஏப்ரல் 20, 2011) தமிழ் நாவலாசிரியர். திருநெல்வேலியில் வாழ்ந்தவர். காந்தியக் கொள்கைகளையும் சைவசித்தாந்த நோக்கையும் கொண்டு எழுதியவர். மார்க்ஸியத்துக்கு எதிரான வலதுசாரி பொருளியல் சிந்தனைகளும் ஃப்ராய்டிய உளவியல் ஆய்வுமுறைமையும் கொண்டவர். வழக்கறிஞராகப் பணியாற்றினார். சிந்தனைகளை நேரடியாக வெளிப்படுத்தும் பொதுவாசிப்புக்குரிய நூல்களை எழுதியவர்.
1945-ல் தன் 15 வயதில் எழுதிய வீண்வேதனை அவருடைய முதல் படைப்பு. கல்கி இதழில் இரு நண்பர்கள் என்னும் சிறுகதையை எழுதினார். கல்கி வெள்ளிவிழாச் சிறுகதைப்போட்டியில் அவருடைய ‘கல்லுக்குள் ஈரம்’ என்னும் நாவல் பரிசுபெற்றது. ராஜாஜி அப்பரிசை வழங்கினார். அந்நாவலுக்கு தமிழக அரசின் விருதும் கிடைத்தது.
நாவல்கள்
- கல்லுக்குள் ஈரம் (1966)
- கேட்டதெல்லாம் போதும் (1971)
- குருஷேத்திரம் (போராட்டங்கள்) (1972 )
- எண்ணங்கள் மாறலாம் (1976)
- மாயமான்கள் (திருடர்கள்) (1976)
- நம்பிக்கைகள் (1981)
- தூங்கும் எரிமலைகள் (1985)
- மருக்கொழுந்து மங்கை (1985)
- உணர்வுகள் உறங்குவதில்லை (1986)
- மயக்கங்கள்(1990)
சிறுகதைகள்
- சங்கராபரணம் – சிறுகதைத் தொகுதி (1962)
- இதயம் ஆயிரம் விதம் – சிறுகதைத் தொகுதி (1970)
விருதுகள்
- கல்கி வெள்ளிவிழா – 2-ம் பரிசு – கல்லுக்குள் ஈரம் – 7500 பரிசும்
- தமிழக அரசின் பரிசு – 1972- சிந்தனை வகுத்த வழி.
- தமிழக அரசின் பரிசு – 1982 – பிரும்ம ரகசியம்.
- ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது – 1990 – உணர்வுகள் உறங்குவதில்லை
- கோவை கஸ்தூரி சீனிவாசன் இலக்கிய அறக்கட்டளையின் பரிசு – நம்பிக்கைகள்