This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/05/19/.

பெரிய மீசை - அகிலா

கடந்துப்போன பல வருடங்களாக லட்சுமியை நான் மறந்திருக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கலாம். நானும் கூட மறந்திருப்பதாக எண்ணிக்கொண்டேன் அந்த கடிதம் வரும்வரை. பள்ளியில்லாத ஒரு சனிக்கிழமை. மதியம் கடந்த நேரம். கதவிடுக்கின் சிறுவெயில் கீற்றை கிழித்து சர்ரென்று வந்து விழுந்தது அந்த கடிதம். தபால்காரர் சண்முகம் எப்போதும் இப்படிதான். முன்கேட்டின் உள்தாழ்பாளை தனது மெலிந்த கை நுழைத்து திறந்து, நீண்ட நடைபாதையைக் கடந்து, இருபுறமும் திண்ணை பிரித்து கிடக்கும் பரந்த படிகளில் ஏறிவந்து, கதவின் கீழிடுக்கு வழியாய்

.


Read More


அருகருகே வெகு தொலைவில்… - நாங்குநேரி வாசஸ்ரீ

வேல எல்லாம் முடிச்சாச்சா. போகும் போது ஞானத்துக்கிட்ட சொல்லிட்டுப் போ. பக்கத்து வீட்டு மாமி பாக்கணும் னு சொல்லிச்சின்னு. உங்க ரெண்டு பேருக்கும் வேற பொளப்பில்ல போ. வருசக் கணக்குல இதே பாட்டு தான். வேலைக்காரி சலித்துக் கொண்டே சென்றாள். கோமளி மாமி ஈசிச் சேரில் சாய்ந்த படியே யோசிக்க ஆரம்பித்தாள். அவளுக்கும் ஞானத்துக்கும் தான் எத்தனை ஒற்றுமை. எண்பது வயதாகி விட்டது. இருபது வயதில் திருமணத்திற்கு பின் குடி வந்த சொந்த வீடு இது. பக்கத்து

.


Read More


தீக்குள் விரலை வை - இரா.சடகோபன்

சரவணன் கடுமையாக யோசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கிருந்த கவலையெல்லாம் அவனது தாத்தாவை என்ன செய்வது என்பதுதான். அவனது தாத்தா அவனது எல்லாச் சுதந்திரங்களிலும் தலையிட்டுக் கொண்டிருந்தார். அவன் இப்போதுதான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பதினைந்து வயது இளைஞன். மிகவும் துடிப்பான, சுறுசுறுப்புள்ள இளைஞன். படிப்பிலும் அக்கறை செலுத்துபவனாகவும் இருந்தான். இருந்தும் அவனது பொறுப்பில்லாத விளையாட்டுத்தனம் அவனது தாத்தா சிங்கராயருக்குப் பிடிப்பதில்லை. அவனது ஒன்பதாவது வயது வரை தாத்தா அவனுக்குப் பிடித்தவராகவும், மனதுக்கு இதந்தருபவராகவும்தான் இருந்தார். அப்போதெல்லாம் அவர்

.


Read More


அத்தை - அசோகமித்திரன்

செப்டம்பர் 1, 1939-ம் ஆண்டு, நாங்கள் சின்னக் கிராமம் போய்ச் சேர்ந்தோம். எனக்கு வயது எட்டு. அப்போது தான், இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியிருந்தது. 5-ம் தேதி, எங்கள் அத்தையின் கணவர் சுப்பைய்யருக்கு, சஷ்டியப்தபூர்த்தி. அத்தை, என் அப்பாவின் மூன்று அக்காக்களில் மூத்தவள். அவளுடைய இரண்டு தங்கைகளும் விதவைகள். `மெயின் லைன்’ எனச் சொல்லப்படும் ரயில் மார்க்கமாகச் சென்றால், மாயவரம் தாண்டி அடுத்த ரயில் நிலையம் மல்லியம். அங்கு இருந்து ஒரு கட்டைவண்டியைப் பிடித்து எட்டு மைல்

.


Read More


கடவுள் கண்லே தென்பட்டா… - ஜெ.சங்கரன்

மதுரைக்கு பக்கத்திலெ இருக்கும் சோழவந்தான் என்கிற சின்ன ஊரில் நான் பொறந்தேன். என் பேர் ராதாகிருஷ்ணன் என்று இருந்தாலும் என்னை ஏன் அம்மா அப்பா ‘ராதா’ ‘ராதா’ன்னு தான்னு கூப்பிட்டு கிட்டு வந்தாங்க.நான் பாக்க ரொம்ப, கலரா அழகா இருந்தேன். எனக்கு புத்தி தெரிஞ்ச வயசில் இருந்து எனக்கு பெண் பிள்ளைங்களோடு தான் ஆடி வர பிடிச்சு இருந்தது.நான் அவங்க கூட பாண்டி,ஸ்கிப்பிங்க்,கண்ணா மூச்சி,பல்லாங்குழி,நொண்டி ஆட்டம் இவைகளை தான் ஆடி வந்துக் கிட்டு இருந்தேன். என் வயசு

.


Read More


என்ர அம்மாளாச்சி! - ஜே.கே

“மெல்பேர்ன் சென்ரல் செல்லும் அடுத்த புகையிரதம் இன்னமும் ஐந்து நிமிடத்தில் புறப்படும்” எப்பிங் நிலையத்தில், பச்சை நிற பொத்தான் அழுத்தியபோது சொல்லியது. ஆஸ்திரேலிய வசந்தகாலம் காதில் கூசியது. ஜாக்கட்டின் ஜிப்பை இன்னும் மேலே இழுத்துவிட்டேன். ஐபாட் காதுக்குள் இளையராஜா “தென்றல் வந்து தீண்டி”னார். சற்று தூரத்தில் ஐந்து இளைஞர்கள், VB பியர் கானில் பெனால்டி கோல் போட்டுக்கொண்டு இருந்தனர். இருவர் ஆஸிக்காரராக இருக்கவேண்டும். மற்றவன் நெற்றியை பார்த்தால் கிழக்கு ஐரோப்பாவாக இருக்கலாம். மாசிடோனியனா? எனக்கு முன்னமேயே அகதியாக

.


Read More


பெரியம்மா சொத்து…! - காரை ஆடலரசன்

பெரியம்மா இவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டி விடுவாரென்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இவள் இறப்பு இத்தனை பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என்று கனவிலும் நினைக்கவில்லை. சொத்துக்கு எவ்வளவு போட்டி. .? எனக்குள் வியப்பு, திகைப்பு. அப்பா வீட்டுக் கொடுக்கலாம். எதிராளியும் தழைந்து போய் ஒருவருக்கொருவர் சமரசம் ஆகலாம். இருதரப்புமே நியாயம் ..! என்று என் மனசுக்குப் பட்டது. பெரியம்மா கோசலை. .. என் அம்மாவைவிட இரண்டு வயது மூத்தவள். என் அம்மாவைப் பெற்ற தாத்தாவிற்கு இரண்டு ஆண்

.


Read More


நினைவுகளில் என்றும் அவள் - ஸ்ரீ.தாமோதரன்

மழை வரும் போல் இருந்தது. கரு மேகங்கள் வானத்தில் நிறைந்து காணப்பட்ட்து. வெளியே கிளம்பலாமா? என நினைத்துக்கொண்ட தேவசகாயம், வானத்தை பார்த்து சிறிது தயங்கினார். பிறகு என்ன நினைத்தாரோ உள்ளே குரல் கொடுத்து லட்சுமி, லட்சுமி, என்று அழைத்தார். உள்ளறையிலிருந்து வெளியே வந்த லட்சுமி மழை வர்ற மாதிரி இருக்கு, குடை எடுத்துட்டு வாயேன். இந்த மழையில வெளியில போகணுமா? கேட்ட மனைவியை உற்று பார்த்து, நானும் அப்படித்தான் நினைச்சேன், ஆனா நானே போன் பண்ணி வர்றேன்னு

.


Read More


மாமனாரைப் பிடிக்கல… - பா.அய்யாசாமி

அருண்! நிறைய இடம் பார்த்தாச்சு, நீயும் அதை இதை சொல்லி தட்டி கழிச்சிக்கிட்டே இருக்கே, நாங்களும் உனக்கு பெண் தேடி அலுத்திட்டோம். இன்றைக்கு பார்க்கப் போகிற இடத்திலாவது உனக்கு ஏற்றவளா அமையனும்னு நான் வேண்டாத தெய்வமில்லை. நான் சொல்கிறதை கேளு, கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் அதெல்லாம் பெரிசா எடுத்துக்காம பேசி முடிச்சுடவேண்டியதுதான். என்னங்க! இவ்வளவு நாழியா கத்திக்கிட்டு இருக்கேனே என்ன ஏதுன்னு ஏதாவது கேட்கிறிங்களா? நமக்கென்னான்னு இருக்க வேண்டியது, ஏதாவது நடத்திடுச்சுன்னா நான்தான் அப்பவே சொன்னேனே,

.


Read More


இசக்கியின் அம்மா - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘பணக்கார இசக்கி’ கதையை படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) இசக்கி சேர்த்துவைத்த பணம் நான்கு தலைமுறைகளுக்குப் போதும். அதனால்தான் இசக்கி எல்லா வியாபாரத்தையும் ஒருநாள் நிறுத்தி விட்டான். சும்மா ‘லொங்கு லொங்கு’ன்னு ஓடி ஓடி துட்டு சம்பாரிச்சு என்ன செய்ய? பிள்ளைக் குட்டியும் கிடையாது. பிறகு என்னத்துக்கு நாய் மாதிரி ‘லொக்கொட்டம்’? இசக்கி இழுத்து மூடிட்டான் கடையை. உடனே ஊரெல்லாம், ‘இசக்கி அண்ணாச்சி மனசு வெறுத்துப்போய் சாமியாராகப் போறாகளாம், அதேன் கடையை மூடிட்டாரம்’ன்னு

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.