சிறுகதைகள் (Short Stories in Tamil)
www.sirukathaigal.com
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

கொலை

லேசாகக் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது சோமையா தாத்தாவுக்கு வயிறு மட்டும் உறுமிய வண்ணம் இருந்திராவிட்டால், சுகமாகத் தூக்கம் வந்திருக்கும். உச்சிவெயிலானாலும் உக்கிரம் இல்லை. முன்யோசனையாக என்றோ வீட்டின் நடு முற்றத்தில் நட்டிருந்த வேப்பம் செடி இன்று நெகுநெகுவென்று கிளை பரப்பி…

வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்

குனிந்து கொதித்துக்கொண்டிருந்த நொய்க் கஞ்சியைக் கிளறக்கூட முடியாதபடி ஈர விறகின் புகை அவள் முகத்தைத் தாக்கியது. நன்றாய் எரியாத அடுப்பை மூச்சைப் பிடித்துக் கொண்டு ஊதி நிமிர்ந்தபோது புகையின் காரணமாய் அவள் கண்கள் எரிந்தன. வயிறும் மனசும் காய்ந்து எரிந்த வெப்பம்…

வழித்துணை

ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு வெளியே நோக்கினார் சரபசாஸ்திரிகள். திருநீற்றைப் பூசிக் கொண்டு புறப்படும் உதய காலம். பார்வை சென்று முடியுமிடத்தில் தெரு இரண்டாகப் பிரிந்தது. கறுப்பும் வெள்ளையுமாக இரண்டு கார்கள் ஒன்றையொன்று கடந்தன. பேப்பர் விற்கும் பையன்கள், பால் புட்டிகள் உராயும்…

திரிலோகாதிபத்திய ரகசியம்

பூமி அதிர்ந்தது; விந்தியமலை கண்காண நடுங்கியது. மரங்கள் நிலை தடுமாறி மடமடவென்று சரிந்தன. வனவிலங்குகள் உயிருக்குப் பயந்து ஒண்டிப்பதுங்கின. வான வீதியில் பறந்து கொண்டிருந்த பறவைகள் செயலிழந்து சிதறி விழந்தன. மேகக் கூட்டங்கள் கலைந்து பஞ்சாகிக் கரைந்தன. லங்கேசன் ராவணனது குரலொலி…

தேள்

சுந்தாப்பாட்டி கோபித்துக் கொண்டாள்; “ராத்திரி இவ்வளவு நாழி கழிச்சு வந்தால் சேணியத் தெருவழியா வராதேடா ராஜா. மேலத் தெருவழியா வா” என்றாள். “ஏன் பாட்டி?” என்றேன். “ஏன்னு கேட்டால், என்னன்னு சொல்றது. ராத்திரி, அஸ்தமிச்சப்புறம் அந்தப் பக்கமா, தனியா வரப்படாது!” என்றாள்…

புவனம்

மத்தியானம் மணி மூணை நெருங்கிக்கொண்டிருந்தது. நண்பன் வீட்டை இவன் விசாரித்துக் கண்டுபிடித்துப் போய்க் கதவைச் சொட்டும்போது வந்து திறந்தது எதிர்பாராத, அந்தப் பெண்பிள்ளை. வீடு மாறிவிட்டதோ என்று திகைத்தபோது, “வாங்க” என்று மலர்ச்சியுடன் விரியத் திறந்தாள் கதவை. அவளுக்குப் பின்புறம் கண்களால்…

மீனாட்சி நிமிர்ந்து பார்க்கிறாள்

வசந்தா, மீனாட்சியை அடித்தபோது, அடியோசையும் அடித்தவளின் உறுமலுந்தான் கேட்டதே தவிர, அடிபட்டவள் அலட்டிக்கொள்ளவே இல்லை. மீனாட்சி, இரு முழங்கால்களையும் செங்குத்தாக வைத்துக்கொண்டு அவற்றிற்குள் நெருப்புக்கோழி மாதிரி தலையைப் புதைத்துக் கொண்டு இருந்ததால், வசந்தாவிற்கு அவளை அடிப்பது எளிதாக இருந்தது. உள்ளே சாப்பிட்டுக்…

உச்சவழு

ஆனைமலை என்று பெயர் இருந்தாலும் அது சமநிலத்தில்தான் இருந்தது. அதிகாலையில் அந்த ஊரில் கார் நின்றபோது அவன் வினோதமான ஒரு பறவைக்குரலை முதலில் கேட்டு, அது என்ன என்ற உணர்வுடன் விழித்துக் கொண்டு, அதை நின்றுகொண்டிருந்த காருக்கு வெளியே ஒரு பால்காரரின்…

உயிர் காத்த கோவூர்கிழார்

திருக்கோவலூர் என்று ஒர் ஊர் திருவண்ணுமலேக்குப் போகிற வழியில் இருக்கிறது. பழைய காலத்தில் அது ஒரு சிறிய காட்டுக்குத் தலைநகராக இருந்தது. காரி என்ற வள்ளல் அந்த நாட்டுக்குத் தலைவனாக விளங்கினான். அந்த நாட்டுக்கு மலையமான் காடு என்று பெயர். மலையமான்…

கிருஷ்ண லீலா

குழலோசையைக் கேட்டுக் குதூகலம் கொண்டு, குதித்தோடி வந்த கோமதியைத் தழுவிக்கொண்டு, அருகே வந்து நின்ற அழகு மீனாவின் முகத்தைத் துடைத்து முத்த மிட்டுக் கமலத்தின் கண்களின் அழகைப் புகழ்ந்துரைத்து, அம்புஜம் வரக் காணோமே என்று ஆயாசப்பட்டுக் கோமளத்துக்கு நேற்று இருந்த கோபம்…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதை என்றால் என்ன? – க. நா. சுப்ரமண்யம்

 உருவத்தால் சிறியதாக இருக்கவேண்டும் என்றும், கதையாக இருக்கவேண்டும் என்றும் சட்டென்று பதில் கூறிவிடலாம். ஓரளவு திருப்தி தருகிற பதில் மாதிரித்தான் இருக்கிறது. ஆனால் யோசித்துப் பார்க்கும்போது தோன்றுகிறது – உருவத்தில் சிறியது என்றால் எவ்வளவு சிறியது என்றும், கதை என்றால் என்ன…

சில குறிப்புகள்:

சென்ற மாதம் பார்வையிட்டோர்:36,067
மொத்தம் பார்வையிட்டோர்:2,993,265
சென்ற மாதம் படிக்கப்பட்ட கதைகள்:100,481
மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:11,034,598

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.