சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

iew this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/07/04/

இரண்டு வளையல்கள்

 ஒவ்வொரு முறை அதைக் கழட்டி வாங்கும்போதும் அவனுக்குத் துக்கமாகவே இருந்தது. பெரும்பாலும் அவன் கேட்பது கூட இவ்லை. அவளே வளையல்களைக் கழட்டிக் கொடுத்து விடுவாள். முன்பாவது சமையல் அறையில் போய் கழட்டி எடுத்து வருவாள். இப்போது அதுவுமில்லை. முகத்துக்கு எதிராகவே கைகளை…

அவன் செய்த குற்றம்

 பச்சை ஜிப்பா நீலவானம் பொழிந்து கொண்டிருந்த சூரிய ஒளியிலே தனித்து இனம் கண்டு கொள்ளும்படியாகத் தகதகவெனப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அத்தக பெருங்கூட்டத்திலும், அந்தப் பச்சை ஜிப்பாவினால் மட்டும் யாருடைய கவனத்திலிருந்தும் தப்ப முடியாது. சொக்காயும் தலைப்பாகையும் அணிந்த நாட்டுப்புறத்தார்கள், கோட்டும் தொப்பியும்…

நான் தொலைத்த மனிதர்கள்

 அதுவே எனது முதல் நீண்ட நெடுந்தூர பயணம். சென்னையிலிருந்து பஞ்சாப் (மோகா) நோக்கி தில்லி வழியாக பயணிக்க எனது அலுவலகத்தில் திட்டமிட்டிருந்தார்கள். ஏறக்குறைய 3 நாள் பயணம் அது. அன்று மாலை 6:50 க்கு சென்ட்ரலில் இருந்து தில்லி கிளம்ப ஆயத்தமாகிக்…

அப்பா, நான் உள்ளே வரலாமா…

 அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 “அப்பா அவர் என்னேப் பாத்து ‘சாம்பு,இந்த சின்ன வயசிலே,உனக்கு இருக்கும் ஆசையை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.உன் வயசிலே இருக்கும் எல்லா பையன்களுக்கும் ஒரு ‘குருக்கள்’ ஆகணும் என்கிற ஆசை வறாது.தீவிர சுவாமி பக்தி இருந்தாத்…

அப்பாவின் கோபம்

 இந்த பேப்பரை யார் இங்கே வச்சிரிக்கறது? கோபமான கேள்வி அந்த வீட்டில் ஒலிக்கவும் வீடே நிசப்தமாகியது. மீண்டும் அந்த கேள்வி ராமச்சந்திரனால் அங்கு நின்று கொண்டிருந்த மகன், மகள் மனைவியை நோக்கி வீசப்பட்டதும், நானில்லை..என்று தயக்கமாய் மகனிடமிருந்தும், மகளிடமிருந்தும் வந்தது. நீங்க…

கொடுப்பவரெல்லாம் மேலாவார்…?

 இன்னும் சரியாக ஒரு மணி நேரத்தில் மணிமாறனைப் பார்க்கப் போகிறேன்..!!!! என்னுடைய பர்சனல் செக்ரட்டரி கனிகாவைக் கூப்பிட்டு எல்லா அப்பாயின்ட்மென்ட்டையும் கேன்ஸல் பண்ணிவிட்டேன்…. நான் ஒரு சாதாரண ஆளில்லை என்று இந்நேரம் யூகித்திருப்பீர்கள். ஆமாம்..இந்தியாவிலேயே பேர் சொல்லும் பத்து கம்பெனிகளில் ஒன்றான…

எல்லோருக்குமான துயரம்

 ஹோட்டலை விட்டு வெளியே வந்ததும் வாகனங்களின் இரைச்சல் ஒருமித்து அவனைத் தாக் குவது போலிருந்தது. ஹோட்டலின் உள்ளிருந்த மெலிதான இருட்டும். சப்தமின்மையும் மனதில் வந்தது. ஆனால் உள்ளே சுந்தரியுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவன் மனது இப்படித்தான் இரைச்சல் போட்டுக் கொண்டிருந்த ஞாபகம்…

நித்தியாவுக்குக் கோபம்..!

 அலுவலகம் விட்டு வீட்டிற்குள் நுழைந்ததும் நித்தியாவைப் பார்த்து…. “ஹாய்….!!….” உற்சாகமாய்க் கை ஆட்டினான் சேகர். அவள் உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு வெடுக்கென்று திரும்பிக்கொண்டாள். சட்டையைக் கழற்றக்கூடத் தோன்றாமல்… மனம் ‘பக் ‘கென்றது இவனுக்கு. வினாடி நேரம் செய்வதறியாது திகைத்தவன் அவள் அருகில்…

விதியோ விதி!

 மதிய சாப்பாட்டிற்கு பின் வெற்றிலை பாக்கை வாயில் மென்றவாறு வாசலில் வந்தமர்ந்த சுந்தரேசன், வீதியின் இருபுறமும் நோட்டமிட்டார். பின்பு வீட்டிற்குள் இருந்த சுவர் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தார். அருகில் வந்து நின்ற மனைவி திலகவதியிடம் “என்ன இன்னும் நம்ம ஜோசியரை காணலியே?”…

தாரை

 மாணிக்கம் ஒரு ஏழை விவசாயி. தினமும் காலையில் எழுந்து தனக்குச் சொந்தமான வயற்காட்டுக்குச் சென்று கீரை வகைகளைப் பறித்து, அதைச் சந்தைக்கு கொண்டு சென்று விற்று, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு தன் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தான். அவன் தினமும்…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று ம.நவீன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

ம.நவீன்

 மலேசியாவில் கெடா மாநிலத்தில் உள்ள லூனாஸ் எனும் சிற்றூரில் பிறந்தேன். ஆரம்பப் பள்ளி வெல்லஸ்லி லுனாஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி. இடைநிலைப்பள்ளியும் லுனாஸில்தான். அப்பா மனோகரன். அம்மா பேச்சாய். இருவருமே வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள். அப்பாவின் வாசிப்பு தத்துவம் சார்ந்தது. அம்மா இலக்கியம்.…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

சிறுகதை என்பது – அ. முத்துலிங்கத்துடன் நேர்காணல்

 உங்கள் சிறுகதை எப்படி உருவாகிறது? ஒற்றை வார்த்தையிலா, படிமத்திலா, கருத்திலா, நிகழ்வு நோக்கிலா? சிறுகதைகளின் ஆதாரத்தூண்டல் எப்படி நிகழ்ந்திருக்கிறது? உண்மையில் அநேகமாக ஒரு வார்த்தையில் அல்லது ஒரு வசனத்தில் ஏற்பட்ட அகத் தூண்டுதலில்தான் என் படைப்புகள் ஆரம்பமாயிருக்கின்றன. அபூர்வமாக சில சம்பவங்களும்…

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.