![]() |
சிறுகதைகள் செய்திமடல் ஏப்ரல் 2014 / மடல் #6 |
||
| இந்த வாரம்: |
சிறுகதைகள் - இது உங்களுக்கான தளம். சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம். சிறுகதைகள் செய்தி மடல் ஒவ்வொரு மாதமும் உங்களை தேடி வரும். மறக்காமல் உங்கள் நண்பர்/நண்பிகளுக்கு தெரிவியுங்கள். |
||
|
இந்த மாதம் ஆசிரியர் பகுதியில், திரு.கலைவேந்தன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கலைவேந்தன் என்னும் பெயரில் கதைகள் கவிதைகள் எழுதி வரும் என் இயற்பெயர் எஸ் ராமஸ்வாமி. நான் புதுதில்லியில் ஆங்கில ஆசிரியனாக கடந்த 24 வருடங்களாகப் பணியாற்றி வருகிறேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப்பட்டமும் கல்வியியல் இளங்கலைப்பட்டமும் பெற்றுள்ள நான் எழுதிய சில கதைகள் விகடனிலும் விகடன் பவளவிழா சிறப்புக் கவிதைப்போட்டியில் 7000 ரூபாய்கள் பரிசுபெற்று முதலிடத்தில் வந்த எனது கவிதையும் எனது சிறு சாதனைகளாகக் குறிப்பிடலாம். மேலும் படிக்க.. |
|||
|
மார்ச் 2014 சிறப்பு கதைகள் பகுதியில்:
மூக்கப்பிள்ளை வீட்டு விருந்து கதையாசிரியர்: வல்லிக்கண்ணன் கதைத்தொகுப்பு: சமுகநீதி கதைப்பதிவு: May 22, 2013 பார்வையிட்டோர்: 2,034 மூக்கப்பிள்ளையின் மனசாட்சி திடீரென்று உறுத்தல் கொடுக்க ஆரம்பித்தது. அது அப்படி விழிப்புற்று அரிப்புத்தருவதற்குப் பத்திரிகைகளில் வந்த சில செய்திகள் தான் காரணமாகும். சுகமாய் சவாசனம் பயின்று கொண்டிருக்கிறமனசாட்சி சிலபேருக்கு என்றைக்காவது திடும்விழிப்புப் பெற்று. குடை குடை என்று குடைந்து. முன் எப்பவோ பண்ணிய பாபத்துக்கு – அல்லது தவறுக்கு – பரிகாரமாக இப்போது செயல் புரியும்படி தூண்டித் துளைப்பது ஏனோ தெரியவில்லை, மனித மனம் மனசாட்சி என்பதெல்லாம் விசித்திரமான தத்துவம் என்றோ எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத புதிர் என்றோதான் எண்ண வேண்டி இருக்கிறது, மூக்கப்பிள்ளை அப்படித்தான் நினைத்தார். எழுத்துகலைபற்றி இவர்கள்...எம்.டி.வாசுதேவன் நாயர் 1.நமக்கு எழுத வேண்டும் என, உள்ளூர ஒரு உணர்வு எழவேண்டும். அதுதான் கலை இலக்கியம் படைப்பதற்கான தொடக்கப்புள்ளி ஆகும். நமக்கு மட்டும் கேட்கக்கூடிய ஒரு விசித்திர சப்தம். வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை வாக்கியங்களாகக் கோர்த்து எடுத்து, ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்லுவதற்கான ஒரு முயற்சி. 2. 'நான் சொல்லுவதைக் கேள்' என உள்ளூர நம்மை ஒரு சக்தி உந்தித் தள்ளும். ஆக, இவ்வாறு நாம் எழுத ஆரம்பிக்கும்போது, நாம் எங்கெங்கெல்லாமோ இழுத்துச் செல்லப் படுவோம். அப்போது நமக்கு நம்பிக்கை ஏற்படும். தொடக்கத்தில் எழுதத் துவங்கும்போது மழை வெள்ளம் இழுத்துச் செல்லும் காகித ஓடம் போல் சில முன்னோக்கிப் போகும். பல மூழ்கும். நம்மால் எழுத முடியும் என்று நம்பிக்கை ஏற்பட்ட பிறகு நாம் எழுதப் போகும் விஷயத்தைப்பற்றி சிந்திக்க வேண்டும்.உங்களுக்கு மேலும் கேள்விகள் இருந்தால், எங்களை தொடர்ப்பு கொள்ளுங்கள்.
தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி. |
நிச்சயம் பாரட்டப்பட வேண்டிய தளம். தமிழின் மீது ஆர்வம் கொண்டவர்களின் திறமைகளை உலகம் அறிய செய்கிறீர்கள். தொடர்ந்து செய்யுங்கள். இது ஒரு அருமையான முயற்சி.இணையம் இல்லாது இனி எதுவுமில்லை என்ற கால கட்டத்தில் இந்த சிறுகதைகள் தளம் இணையத்தில் புலங்குபவர்களுக்கு ஒரு பொக்கிசம். வளரும் இளம் படைப்பாளிகளை ஊக்குவிப்பது பாராட்டப்பட வேண்டிய விசயம். வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும். - மன்னை முத்துக்குமார்
சில குறிப்புகள்: மார்ச் மாதம் பார்வையிட்டோர்:27,027 மொத்தம் பார்வையிட்டோர்: மார்ச் மாதம் படிக்கப்பட்ட கதைகள்:112,754 |
||
| பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். | |||
| Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2014]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content | |||
|
To unsubscribe click here, to edit your profile click here. |
|||