பொங்கல் இனாம்! – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 14,204 
 

“என்ன! பொங்கல் இனாமா? பொங்கல் இனாமும் இல்லே, மண்ணாங்கட்டியும் இல்லே… போ! வேற வேலையே கிடையாதுபோல இருக்கு உங்களுக்கெல்லாம்! ஒரு தம்பிடி கூடக் கொடுக்க மாட்டேன்! ஆமா! ஏன் நிற்கிறே இன்னம்? போக மாட்டே?” என்று நடேசய்யர் தம் பற்களை நறநறவென்று கடித் தார். பொங்கல் இனாம் கேட்ட தபால்காரர் விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்.

இயற்கையில் தாராள சிந்தை உடைய நடேசய்யர் தபால்காரரி டம் அவ்வளவு நிர்தாட்சண்ய மாக நடந்துகொண்டது எனக்கு ஆச்சரியத்தையே அளித்தது. “ஏன் ஸார், பொங்கல் இனாம் கேட்டதற்காகத் தபால்காரரை அப்படிக் கோபித்துக்கொண்டீர் கள்?” என்று விசாரித்தேன்.

“பொங்கல் இனாம் கொடுக்கிற பழக்கத்தையே அடியோடு எடுத் துடணும், ஸார்! முக்கியமாகத் தபால்காரர்களுக்குப் பொங்கல் இனாமே கொடுக்கப்படாது! அதனாலே எவ்வளவோ ஆபத்து நேரிடுகிறது! என் சொந்தக் கதை யையே சொல்றேன் கேளுங்க” என்று சொல்லத் தொடங்கினார் நடேசய்யர்.

“நான் ஒரு கம்பெனியிலே முன்னே வேலை பார்த்துண்டிருந் தேன். சம்பளம் 50 ரூபாய். பொங் கல் சமயத்திலே முதலாளிக்கு ஒரு லெட்டர் எழுதினேன், அப்போ அவர் பம்பாய் போயிருந் தார். ‘பத்து வருஷம் வேலை பார்த்தும் 50 ரூபாய்க்கு மேலே சம்பளம் உயர மாட்டேங்கிறதே! இந்தப் பணத்தை வச்சிண்டு நான் எப்படி என் பெரிய குடும் பத்தைக் காப்பாற்ற முடியும்? என் உண்மையான உழைப்பிலே உங்களுக்கு மதிப்பு இருந்ததுன்னா என் சம்பளத்தை நூறு ரூபாயா பண்ணிப்பிடணும்! இல்லேன்னா வேலையை ராஜினாமா செய்யத் தயாரா இருக்கேன்’ அப்படீன்னு எழுதிப் போட்டேன்.”

“அடடே! அப்புறம்..?”

“இரண்டு நாள் ஆகியும் பதில் வரலே. உடனே, ‘உங்ககிட்டே வேலை செய்யறதைவிட ஒரு கழுதைகிட்ட வேலை செய்யலாம்’ அப்படின்னு கடுமையா ஒரு லெட்டர் எழுதிப் போட்டுட்டு, கூடவே என் ராஜினாமாவையும் அனுப்பிச்சுட்டேன்…”

“ஐயோ! அப்புறம்..?”

“மூணு நாள் கழிச்சுத் தபால்காரன் ஒரு கடுதாசியைக் கொண்டு வந்து கொடுத்தான். பிரிச்சுப் பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டுது. ‘உன் உழைப்பை மெச்சி உனக்கு இனிமே மாசம் நூறு ரூபாய் சம்பளம் போட்டுத் தரப் போகிறேன்’ அப்படீன்னு முதலாளி எழுதியிருந்தார்…”

“ராஜினாமாவைப் பார்த்து பயந்துட்டாரா?”

“அதான் இல்லே! நான் முதல்லே எழுதினேன் பாருங்கோ ஒரு லெட்டர், அதுக்கான பதில் தான் இது. ஆனா, தபால்காரன் என்கிட்டே உடனே கொண்டு வந்து கொடுக்கலே! அது கிடைச் சிருந்தா நான் ராஜினாமா லெட் டரை எழுதியிருக்கவே மாட் டேன்… எனக்கு உத்தியோகமும் போயிருக்காது!”

“லெட்டரை ஏன் உடனே கொண்டு வந்து கொடுக்கலியாம் தபால்காரன்?”

“என்னை வந்து வீட்டிலே தேடியிருக்கான். நான் இல்லே. வீட்டிலே கொடுத்துட்டுப் போயி ருக்கப்படாதோ? கொடுக்கலே! என்கிட்டே நேரிலே கொடுக்க ணும்னு வச்சிண்டிருந்திருக்கான். நேரிலே என்கிட்ட லெட்டரைக் கொடுத்துட்டு, அப்படியே பொங்கல் இனாம் வாங்கிண்டு போகணும்னு எண்ணம் அவனுக்கு! கடைசியிலே என்ன ஆச்சு..?”

“உங்க உத்தியோகம் போச்சு!”

– ஆனந்த விகடனில் 40, 50 -களில் பல ஒரு பக்கக் கதைகளை எழுதியவர் ‘சசி’. (இயற்பெயர்: எஸ்.ஆர்.வெங்கடராமன்). ‘ரமணி’ என்ற பெயரிலும் ‘திண்ணைப் பேச்சு’ கட்டுரைகளை எழுதினார். 14 வருடங்கள் விகடனில் உதவி ஆசிரியராய்ப் பணி புரிந்த ‘சசி’ 25 ஏப்ரல் 1956 இல் காலமானார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *