மூர்க்க நண்பன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 4, 2022
பார்வையிட்டோர்: 1,762 
 

(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சேயூர் என்னும் ஊரிலே இரண்டு சிறுவர்கள் நண்புடையவர்களாக விளங்கினார்கள். அவர்களில் ஒருவன் பெயர் செல்லையா. மற்றவன் பெயர் மாணிக்கவேல். செல்லையா முன் சினமும் மூர்க்கத்தன்மையும் உடையவன். சிலர் மாணிக்க வேலைப்பார்த்து, “நீ செல்லையாவுடன் நட்புக்கொள்ளாதே. அவன் மிகவுந் தீயவன். திடீரென்று ஏதாவது தீமை செய்துவிடு வான்” என்று கூறினார்கள். ஆனால், மாணிக்கவேல் அவர்கள் கூறிய அறிவுரையை ஒரு பொருட்படுத்த வில்லை. “செல்லையா யாருடன் எவ்வாறு நடந்து என்ன செய்தபோதிலும், என்னிடத்தில் தன்னுடைய கெட்ட குணங்களைக் காட்டமாட்டான். என்னிடம் ஒழுங்காக நடந்து கொள்வான்,” என்று தனக்கு அறிவு கூறியவர்களுக்குப் பதிலுரைத்துக்கொண்டிருந்தான்.

அறிவு கூறியவர்கள், “இப்பொழுது நாம் கூறி யதைக் கேட்கமாட்டான். ‘பட்டால் தெரியும் பறையனுக்குச், சுட்டால் தெரியும். நண்டுக்கு’ என்கிறபடி வருகிறதை நுகரட்டும்,” என்று சொல்லிவிட்டுப் பேசாமல் இருந்து விட்டார்கள். செல்லையா மூர்க்கத் தன்மையைத்தான் மிகுதியாகப் பெற்றிருந்தானேயல்லாமல் கல்வியறி வைப் பெற்றிருக்கவில்லை. வலிவும் நன்கு அமையப் பெற்றவன்.

ஒருநாள் ஏதோ ஒரு சிறு செய்தியை முன்னிட்டுச் செல்லையாவுக்கும், மாணிக்கவேலுக்கும் பேச்சுக்கள் தடித்தன. “பையலே ! என்னிடமா வாலை ஆட்டு கிறாய்? என் செய்தி உனக்கு இவ்வளவு நாளாகப் பழகிக்கொண்டு வந்தும் தெரியவில்லையா?” என்று செல்லையா மாணிக்கவேலைப் பார்த்துக் கூறியதுடன், தன் மடியில் வைத்திருந்த பேனாக்கத்தியை எடுத்து மாணிக்கவேலினுடைய வயிற்றிலே ஓர் அங்குல ஆழம் பாயும்படியாகக் குத்திவிட்டான்.

குத்துப்பட்ட மாணிக்கவேல் மிகுந்த துன்பப் பட்டான். “அந்தோ இந்தக் கொடியவனுடன் சேரக் கூடாது என்று பலபேர் கூறிய அறிவுரைகளையும் கேட்காதிருந்தோமே! அதனுடைய பலன் இது தான்,” என்று கூறி மிகுந்த துன்பப்பட்டான்.

தீயவர்கள் நல்லவர்களைப்போன்று விளங்கினா லும் நல்லவர்களாகிவிடமாட்டார்கள். எந்தச் சமயத் திலேனுந் திடீரென்று தீமையைச் செய்துவிடுவார்கள். ஆகையால் தீயவர்களுடன் நட்புக்கொள்ளுதல் கூடாது.

“மூர்க்கரோ டிணங்கேல்” (இ – ள்.) மூர்க்கரோடு – மூர்க்கத்தன்மை யுள்ளவர்களு டனே, இணங்கேல் – நட்புச் செய்யாதே.

– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *