தெரிந்து செயல்வகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 1,294 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருக்குறள் கதைகள்

காரியங்களை ஆராய்ந்துசெய்யும் திறமை

முடிக்கும் உபாயங்களை ஆராயாது தம்மன ஊக் கத்தால் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்பவன் தன் படையுடன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனோடு போர் செய்ய வந்தான். இப்போரில் செழியன் இரும் பொறையைப் பிடித்துத் தன் சிறையில் அடைத் தான். இரும்பொறையின் வீரர்கள் பலர் இருந்து முயன்றும் அவனைக் காக்க முடியவில்லை. அவன் குற்றம் செய்தவர் அடையும் சிறைவாசத் துன்பத் தையும் அடைந்தான்.

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று
போற்றினும் பொத்துப் படும்.

ஆற்றின் = முடியும் உபாயத்தால்
வருந்தா = (கருமத்தை ) முயலாத
வருத்தம் = முயற்சியானது
பலர்நின்று = (துணைவர்) பலர்நின்று
போற்றினும் = (கெடுதியுண்டாகாதபடி) பாதுகாத்தாலும்
பொத்துப்படும் = குற்றப்படும்.

கருத்து: முடியும் உபாயத்தால் முயலாத முயற்சி பலர் பாதுகாத்தாலும் குற்றமுடையதாகும்.

கேள்வி: பலர்நின்று போற்றினும் பொத்துப்படுவது எது?

– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *