கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,427 
 

தெரு வழியே நடந்து சென்ற பக்குடுக்கை நன் கணியார் புதுப்பது அனுபவங்கள் அடைந்தார். என்னே வாழ்க்கை . என்னே உலகம்.

ஒரு வீட்டிலே சாப்பறை கேட்கிறது! மற்றொரு வீட்டிலே முழவு முழங்குகிறது.

ஒரு வீட்டில் திருமணம்! அடுத்த வீட்டிலே பிணம்! மணமாகிய பெண்டிர் மகிழ்கின்றனர்; பிணமாகிய கணவனைப் பிரிந்த பெண்டிர் அழுகின்றனர்!

இவ்வுலகின் தன்மையோ மிகுந்த துன்பம் செறிந்தது. இவற்றை உணர்ந்தோர் அழ வேண்டுமா?

உலகின் உண்மை இயல்பை உணர்ந்தவர், துன்பத்தை நீக்கிவிட்டு இன்பத்தை மட்டுமே கண்டு நன்னெறிக்கண் ஈடுபட்டு மகிழ வேண்டும்.

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *