குடிசெயல்வகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 3,759 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருக்குறள் கதைகள்

குலத்தை உயரச் செய்தலின் திறம்

ஸ்ரீ கந்தப்பு தேசிகர் 14வது தலைவராகத் தரும புரத்தை ஆட்சி செய்யுங்காலத்தில் தெக்ஷிணயாத் திரையாகத் திருநெல்வேலி சென்றார்கள். அப் போது அங்கு வாழும் மக்கள் மழை பெய்யாமையால் நிலம் விளைவு இல்லை, வரிவாங்கவந்த கலெக்டரிடம் ”மழை யின்மையால் விளைவில்லை, எவ்விதம் வரி செலுத்துவோம்” என்று முறையிட்டபோது துரை யவர்கள்; ”உங்கள் ஆச்சாரியரிடத்தில் தெரிவித் தால் மழை பெய்கிறது” என்று பரிகாசமாகச் சொன்னார்; எங்களுக்கு அந்நிந்தை பொறுக்கவில்லை என்று தேசிகரிடம் கூறினர். இதைச் செவிமடுத்த அடியார்கள் இரவு பூசையில் தவம் செய்வோம்’ என்றார்கள். சுவாமிகள் இரவு என்ன? ”குலத்தைப் பாதுகாக்கும் மக்களுக்குக் காலம் வேண்டியதில்லை” என்று அப்போதே தியானத்திலிருந்து பின் வரும் பாடலைப் பாடினர்.

சைவ சமயம் சமயம் எனில் அச்சமயத்
தெய்வம் பிறைசூடும் தெய்வமெனில் — ஐவரை வென்று
ஆனந்த வெள்ளத்து அழுந்துவதே, முத்தி எனில்
வானங்காள் பெய்க மழை.

இப்பாடல் பாடிய உடனே மேகங்கூடி மழைபெய் தன. அம்மழை எல்லா இடங்களிலும் நீரைநிரப்பின. துரையும் இதை அறிந்து “தான் பரிகசித்தமைக்கு வருந்தி 100. வராகன் பொன்னைப் பாத காணிக்கை யாகவைத்துத் தம் குற்றத்தை நீக்கி அருள் புரிய வேண்டும்” என்று வேண்டினார். காலம் பார்த்துச் செய்யாமல் உடனே அருள் புரிந்ததால் அடியவர் குலம் புகழப்பட்டது. இக்கருத்தை உடையது இக் குறள் –

குடிசெய்வார்க் கில்லை பருவம்; மடிசெய்து
மானங் கருதக் கெடும். (76)

மடி செய்து = (குலம் உயரச் செய்தலை) நோக்காது காலத்தை (நோக்கி) சோம்பல் செய்து கொண்டு
மானம் = மானத்தையும்
கருத = நினைப்பாராகில்
கெடும் = (குலம்) அழியும். (ஆதலால்)
குடிசெய்வார்க்கு = குடியை உயாச் செய்வார்க்கு
பருவம் = கால நியதி
இல்லை = கிடையாது.

கருத்து: தன் குலத்தை உயரச் செய்பவர்க்குக் கால நியதி இல்லை .

கேள்வி: கால நியதி எவர்க்கு இல்லை?

– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *