கானங் கிழான் குன்றம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,014 
 

பாரத மலைகள் எல்லாம் பார்த்து விட்டேன் சோலை, அருவி, சுனை நிறைந்து தினை விளையும் வளமான மலைகளைப் பார்த்திருக்கிறேன். உயர்ந்து ஓங்கிப் பகை நெருங்க முடியாத பெரிய வன்மை வாய்ந்த மலைகளுக்கும் போயிருக்கிறேன். வளம் இருக்கும் மலையில் வலிமை இருக்காது. வலிமை உடைய மலை வளங் கொண்டிராது.

ஆனால் கானங்கிழான் குன்றோ இதற்கு விதிவிலக்கு. அங்கு வளமும் உண்டு. வலிமையும் உண்டு. இரு பண்புகளையும் கொண்ட இணையிலாக் குன்றம் அது.
நாடிவரும் புலவர் எல்லாம் தமது தமது என்று பங்கு வைத்து உண்டு மிகுந்த உணவு நிறைந்து கிடக்கும். அத்துடன் பகை வேந்தரை வென்று திறைப் பொருளும் கொண்டு வரும்.

இவ்வாறு மோசிகீரனார் கானங்கிழான் மலையின் அழகைப் பாடிகிறார்.

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *