எண்ணங்களை பூட்ட வேண்டாம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 11, 2019
பார்வையிட்டோர்: 8,768 
 

முல்லா ஒரு புதிய சுவர் கடிகாரம் வாங்கி வந்தார்.

அதை சுவரில் மாட்ட ஆணி அடிக்க அவரிடம் சுத்தியல் இல்லை!

பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்க வேண்டும்.நேரம் இரவாகிவிட்டது.இந்நேரம் போய் கேட்பது சரியல்ல, மறுநாள் காலையில் கேட்க்கலாம் என் நினைத்து தூங்க சென்றார்.

மறுநாள் காலை எழுந்ததும் கடிகாரம் நினைவுக்கு வந்தது.

பக்கத்து வீட்டுக்காரரிடம் சுத்தியல் கேட்க எண்ணியபோது, அன்று வெள்ளிக்கிழமை என்பது நினைவுக்கு வந்தது!

இன்று போய் கேட்டால் ஏதாவது நினைத்துக்கொள்வாரோ? என எண்ணி அன்றும் சுத்தியல் வாங்கவில்லை!.

மறுநாள் போய் கேட்க முடிவு செய்து, பக்கத்து வீட்டை நெருங்கினார்.

பக்கத்து வீட்டில் நிறைய விருந்தினர்கள் வந்திருப்பதை பார்த்து கேட்காமலே திரும்பினார்.

இப்படி பல காரணங்களினால் ஒரு வாரமாகியும் முல்லாவால் கடிகாரத்தை மாட்ட முடியவில்லை!

அன்று வாங்கி வந்த கடிகாரம் அவரை பார்த்து சிரிப்பது போல இருந்தது.

உடனே விடுவிடு என பக்கத்து வீட்டுக்கு சென்றார்.

பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து, ”உன் சுத்தியலை நீயே வைத்துக்கொள்! எனக்கு தேவையில்லை. பொல்லாத சுத்தியல்! நீ மட்டும் தான் சுத்தியல் வைத்திருக்கின்றாயா?” என கோபமாக பேசினார்.

பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை!

பரிதாபமாக முல்லாவை பார்த்தார்.

நம்மில் பலரும் இப்படித்தான் மனதில் உள்ளதை தெளிவாக பேசாமல், மனதில் ஒன்றை வைத்து பேசி பிரச்சினைகளுக்கு காரணமாகின்றோம் என்பதே இக்கதையின் நீதி!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *