அரைகுறைக் கதைகள்-1

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: January 19, 2023
பார்வையிட்டோர்: 3,318 
 

(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிநேகிதன் பலராமன் : அரை குறைக் கதைகளா? யாருக்கு என்ன உபயோகம் ?

கொனஷ்டை : இப்பொழுது அரைகுறையாய் இல்லை. புராணங்களில் சரியாய் விவரிக்காமலும் முடிக்காமலும் விட்டுவிட்டார்கள். அவைகளை –

பலராமன் : அவைகளை நீ புராணத்திற்குச் சமா னமாகப் பூர்த்தி செய்துவிட்டாய் போலும்!

கொனஷ்டை : போயும் போயும் புராணத்திற் குச் சமானமாய்த்தானா இருக்கவேண்டும்? அதற்கு மேலாகவே-

பலராமன் : என்ன விநயம்!

கொனஷ்டை: நவீனத்திற்கே சமானமாக இருக் கும். வாசித்துப் பார்த்தால் தெரிகிறது.

தேவயானி

அசுரர்களின் குரு சுக்கிராசார்யர். அவருடைய மகள் தேவயானி. சில விஷயங்களில் தகப் பனைக் கொண்டவள். முதலில் அழகிலே. அவருக்கு வயசு காலத்தில், ஏதோ ஓர் ஆபத்தினால் ஒரு கண் பொட்டையாக நேரிட்டதேயொழியப் பிறவியில் ஒப் பற்ற அழகு வாய்ந்தவர். அக்காலத்திலேயே அவர் ஒரு நக்ஷத்திரமாகக் கொண்டாடப்பட்டவர். அவருடைய நிகரற்ற சோபையை நாம் வான மண்டலத் தில் தினம் காண்கிறோம். லாவண்யத்தில் அவருக்கு ஏற்ற பெண் தேவயானி. சுக்கிராசார்யருக்கு எப்பொழுதாவது கோபாவேசம் வந்து விடும். வந்துவிட் டால் கோபத்தை அடக்குகிற எண்ணத்தையே அவர் அறியார். “பிடி சாபத்தை!” என்று தான் வீரிடுவார். இவ்விஷயத்திலும் பெண் தகப்பனாரைக் கொண்டவள்.

தேவயானிக்கு, ‘தினம் ஒரு சினம்’ என்றே சம்பிரதாயமாயிருந்தது. சில சமயம், தகப்பனார் மாதிரி சபிக்கவும் சபிப்பாள்.

இளம் பருவத்தில் அவருடைய சிஷ்யனான கசனிடத்தில் காதல் கொண்டாள். தன்னுடைய சௌந்தர்யத்தில் பூர்ண நம்பிக்கை உள்ளவளாத லால், தன்னை விவாகம் செய்துகொள்ளும்படி அவ னைக் கேட்க மனம் துணிந்தாள். அவனோ, “நீ என்னுடைய குருவின் புத்திரியாகையால் என் சகோதரிக் குச் சமானம். உன்னை நான் மணக்க மாட்டேன்” என்று மறுத்துவிட்டான். இவ்விதம் தன் வேண்டுகோளைத் தட்டித் தன்னை அவமதித்ததற்காக, தேவயானி அவனை உடனே சபித்தாள். அவனும் சுக்கிர வீக்ஷண்யமுள்ளவனாதலால், பதிலுக்கு அவளைச் சபித்தான். ‘நீ ஒரு பிராமணப் பெண்ணாயிருந்தும் இவ்வளவு அகங்காரம் பாராட்டுகிறபடியால், ஒரு க்ஷத்திரியனையே புருஷனாக அடைவாய்” என்று சபித்தான்.

அன்று முதல், தேவயானிக்குக் கோவிலில் பூஜைமாதிரி, தினம் மூன்று தடவை கோபத்தீ கிளம்புவது வழக்கமாயிருந்தது.

அசுரர்களுக்குக் குருவல்லவா சுக்கிராசார்யர்?. அவர்களுக்கு அரசன் ஒருவன் உண்டே, அவனுடைய பெயர் வ்ருஷபர்வன். அவனுடைய மகள் சர்மிஷ்டை. அவள் தேவயானியின் வயசு உடையவள். அழகிலும் கோபத்திலும் மேற்படி மேற்படியே. பார்வைக்கு இவ்விருவரும் சிநேகிதிகளாயிருந்தார்கள்.

தேவர்கள் எந்தச் சமயத்திலும் எங்கேயும் போகக்கூடுமல்லவா? வாயு பகவான் ஒரு நாள் இவ் விருவரும் ஸ்நானம் செய்து கொண்டிருக்கையில், நதிக்கரைக்குச் சென்று, அவர்கள் தனித்தனியே கழற்றி வைத்திருந்த ஆடைகளைச் சிதறச்செய்து, சிலவற்றை இடம் மாற்றி வைத்துவிட்டார். கேவலம் ஒரு மனிதன் இம்மாதிரிக் காரியம் செய்தால், அதற் குச் சரியானபடி பழி சாட்டப்பட்டு, அதற்குத் தக்க பலனும் அவனுக்குக் கிடைக்கும். ஒரு தேவர் செய் தாலோ,-ஆனால் அதை ஏன் நான் சொல்லவேண் டும்? நாளைக்கு என் தலைமேல் ‘தற்செயலாய்’ ஒரு தென்னைமரத்தை விழச் செய்யும் சக்தியுள்ளவர் வாயு பகவான். ஏதோ, அவருடைய ‘கிரீடை’, விளையாட்டு, இம்மாதிரி நடந்தது என்று மாத்திரம் வணக்கமாய்ச் சொல்லுகிறேன்.

இவ்விளையாட்டின் பலன் என்னவென்றால், கரை ஏறினவுடன், சர்மிஷ்டை தவறுதலாகத் தேவயானியின் ஆடையைத் தனதென்று எண்ணி அணிய எடுத்தாள். உடனே தேவயானியின் கோபாக்கினி கிளம்பிவிட்டது. சர்மிஷ்டையைக் கடிந்து பேசினாள். சர்மிஷ்டை பதிலுக்குக் கடிந் தாள். ஒருவருக்கொருவர் வரம்பு கடந்து பேசினார் கள். அநேக விஷயங்களில் சர்மிஷ்டை தேவயா னிக்கு ஒப்பானவள் என்றாலும் ஒருவிதத்தில் உயர்ந்தவள். தேகவன்மை அதிகம். தேவயானிக் குப் பால்யத்திலேயே சுக்கிராசார்யர் செய்திருக்க வேண்டிய கடமையை அன்று சர்மிஷ்டை செலுத்தினாள். கன்னத்தில் ஓங்கி அறை வைத் தாள். அதோடு நிறுத்தவில்லை. அங்கே இருந்த ஒரு கிணற்றில் அவளைக் குண்டுக்கட்டாகக் கட்டித் தள்ளிவிட்டாள்.

நல்ல வேளையாக, கிணற்றில் இடுப்பு மட்டு ஆழமே தண்ணீர் இருந்தது. கிணற்றுக்குள்ளே இருந்து தேவயானி கூக்குரலிட்டாள். அதற்குத் துணையாகச் சர்மிஷ்டை வெளியே நின்றபடி அவய மிட்டாள். “ஹே தாத, ஹே தாத!” (அப்பர் அப்பா ) என்று தேவயானி கத்தினாள். ரே ரே பாந்த’ ( ஓ வழிப்போக்கரே) என்று சர்மிஷ்டை வீரிட்டாள். இருவரில் சர்மிஷ்டைதான் உரக்கக் கத்தினாள். அது தான் பலன் பெற்றது.

சந்திரவம்சத்து அரசர்களில் ஐந்தாம் மன்ன னான யயாதி மகாராஜா, விதிவசமாக அருகில் வேட்டையாடிக்கொண்டிருந்தவர், இவ்வரவத்தைக் கேட்டு ஓடிவந்தார். க்ஷணத்தில் விஷயத்தை அறிந்துகொண்டார். நல்ல யௌவனம், பலவான். கிணற்றிற்குள் கையை நீட்டித் தேவயானியைத் தூக்கி வெளியேற்றினார்.

இக்காலத்து ‘ நக்ஷத்திர’ மாயிருந்தால் தேவ யானி அவர்மேல் சாய்ந்து விழுந்து மூர்ச்சை அடைக் திருப்பாள். நாடக மேடையின் ராணியாயிருந்தால், அவள் மூர்ச்சை யடையாமல் பக்கத்தில் நிற்கும் தோழியிடம், “இவர் யாரோ, எந்த ஊரோ, என்ன பேரோ?” என்று பதம் பாடிக் கேட்டிருப்பாள். தேவயானி இரண்டும் செய்யவில்லை. யயாதியை நோக்கி, ”நான் ஓர் அன்னிய ஸ்திரீ. நீ எவ்வாறு மனம் துணிந்து என்னைத் தொட்டு இழுத்தாய்?” என்று சீறினாள். அந்த அற்புதக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல், கையைப் பிசைந்து கொண்டும் ‘ பேந்தப் பேந்த’ விழித்துக்கொண்டும் யயாதி நின்றார்.

சிறிது நோத்திற்குள் கூட்டம் கூடிவிட்டது. சுக்கிராசார்யர், வ்ருஷபர்வன், மந்திரிமார்கள் எல் லோரும் சேர்ந்தார்கள். நியாயம் பேசித் தீர்மானித் தார்கள். தேவயானியைச் சமாதானம் செய்தார் கள். அவளை யயாதியே விவாகம் செய்து ெட்வது என்று நிச்சயித்தார்கள். இவ்விதம் கசன் அளித்த சாபம் நிறைவேறியது. சர்மிஷ்டை செய்த குற்றத் திற்குத் தண்டனையாக, அவள் சிறிது காலம் தேவ யானியின் அடிமையாக வேலை செய்யவேண்டியது என்றும் விதித்தார்கள். யயாதி தம்முடைய குதிரை யின்மேல் தேவயானியைத் தூக்கிவைத்துச் சுக்கி ராசார்யரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டு தம்முடைய நாட்டுக்குச் சென்றார். மற்றொரு குதிரை யின்மேல் சர்மிஷ்டை பின் சென்றாள்.

சுக்கிராசார்யர் தம்முடைய ஆசிரமத்திற்குத் திரும்பினார். ‘ தேவயானி இல்லாமல் ஆசிரமம் முழுதும் எவ்வளவு சூன்யமாயிருக்கிறது!’ என்று அவருடைய மனத்தின் ஒரு பாகத்தில் தோன்றும் போதே, ‘ இப்பொழுதுதான் ஒரு புயற்காற்று அடித்து ஓய்ந்தபிறகு இருக்கிற மாதிரி அமைதியா யிருக்கிறது’ என்று மனத்தில் மற்றொரு பாகத்தில் எண்ணம் உண்டாகும். இவ்விதமான சச்சரவை உள்ளத்தினின்று விரட்டுவதற்காகவே, கடுந்தவம் செய்ய உட்கார்ந்தார்.

தேவயானி யயாதியின் பட்டமகிஷியாய் விளங் கினாள். ராஜ்யத்தில் (அரசன் உட்பட) யாவருக் குமே, அவளிடத்தில் கொஞ்சம் பீதி. இனி, கிணற் றில் விழுந்தவர்களை ஆட்களை விட்டு எடுக்கச் செய் வதே ஒழிய, தாம் நேரில் காப்பாற்றுவதில்லை என்று பயாதி தினம் ஒரு தடவையாவது மனத்திற்குள் சபதம் செய்துகொள்வார்.

பெரியோர்களின் தீர்ப்புப் பிரகாரம், குறிப் பிட்ட காலத்திற்குச் சர்மிஷ்டை அடிமை வேலை செய்துவந்தாள். அழகில் அவள் தேவயானிக்கு ஒப்பானவள் என்று முன்பே நாம் சொல்லியிருக் கிறோமல்லவா? இவ்வுண்மையை யயாதியும் ஒரு நாள் உணர்ந்தார். அவளுடைய தண்டனையின் காலம் கழியவே, சர்மிஷ்டையை ரகசியமாய் மணம் புரிந்து, வெகு தூரத்தில் தாம் வேட்டையாடப் போகும் ஒரு காட்டின் மத்தியில், நந்தவனத்தை ஏற்படுத்தி, அதிலுள்ள ஒரு லதாகிருகத்தில் அவளை வசிக்கச் செய்தார்.

நாளடைவில் தேவயானிக்கு இரண்டு குழந்தை களும், சர்மிஷ்டைக்கு ‘மூன்று குழந்தைகளும் பிறந்தன. ஐந்தும் ஆண் பிள்ளைகள்.

பல நாள் கள்ளன் ஒரு நாள் அகப்பட்டுக் கொள்ளுவான் என்பது பொய்யாகுமா? ஒரு தடவை வேட்டைக்குப் போன அரசனைத் தேவ யானி பின் தொடர்ந்து சென்றாள். மிருகங்கள் கொல்லப்படும் வேடிக்கையைக் கவனிக்காமல், பிடிவாதமாய் அந்த நந்தவனத்தில் பூப் பறிக்க வேண்டுமென்று சென்றாள். சர்மிஷ்டையின் மூன்று பிள்ளைகளையும் கண்டாள். முகத்தோற்றத் திலிருந்தே சந்தேகம் தோன்றிவிட்டது. ” நீங்கள் யார்?” என்று வினவினாள். ”நாங்கள் யயாதி மகா ராஜாவின் இரண்டாவது பார்யையாகிய சர் மிஷ்டையின் பிள்ளைகள். பட்டமகிஷியாகிய தேவயானி என்பவள் மிகவும் பொல்லாதவளாம். ஆகை போல் எங்களுடைய க்ஷேமத்திற்காக இங்கே தனி யாக வைக்கப்பட்டிருக்கிறோம்” என்று சொல்லி அவளுடைய சந்தேகத்தைத் தெளிவாக்கினார்கள்.

தேவயானியின் மனத்தில் உண்டான கலக் கத்தை நாமே ஊகித்துக்கொள்ளலாம். தகப்பனாரைத் தேடி ஓடினாள். அவள் ஓட, இந்த விஷ யத்தை அறிந்த அரசன். அவளைத் தொடர்ந்து ஓட, இருவரும் ஏக காலத்தில் சுக்கிராசார்யரின் ஆசிரமத்தை அடைந்தார்கள்.

தன் பர்த்தாவின் நடத்தை, சர்மிஷ்டையின் பொல்லாத்தனம், தன்னுடைய துக்கம், இவற்றைத் தேவயானி தன் தகப்பனாரிடம் சாங்கோபாங்க மாய்த் தெரிவித்தாள். சுக்கிராசார்யர் தயக்க முற்றார்.

ஓர் அரசன் இரண்டு மூன்று பத்தினிகளை மணந்துகொள்வது உலகத்தில் சர்வ சாதாரணம். அவ்விதம் யயாதி செய்ததை எங்ஙனம் குற்றமாகப் பாராட்டுவது? தவிர, ‘சர்மிஷ்டையைச் சில காலம் அடிமையாய்ப் போகும்படி தாங்கள் முன்பே விதிக் தது அதிகக் கடூரமான தண்டனையல்லவா?’ என்று மகரிஷியின் மனச்சாக்ஷி சில சமயம் அவரைத் துன்பப்படுத்தியதுண்டு. அவள் இந்தமட்டும் யயாதி யால் கௌரவப்படுத்தப்பட்டுச் சௌக்கியம் அடைந் தாள் என்று கேட்பதில் அவருடைய மனத்திற்குச் சற்று ஆறுதல் ஏற்பட்டதே ஒழியக் கோபம் உண்டாகவில்லை. ‘சர்மிஷ்டையின் மேல் கோபிப் பதில் என்ன நியாயம்? அக்கட்டழகியைத் தாங்கள் தாமே அரசனிடத்திற்கு அனுப்பியது!’ இவ்வித மெல்லாம் எண்ணினார். ஆனால் தம் புதல்வியின் சுபாவத்தை நன்குணர்ந்தவராகையால், இந்தத் தர்மங்களையெல்லாம் அவள் ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்பது அவருக்கு நிச்சயம். அவளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று அறியாமல் தம் தாடியை உருவிக்கொண்டே நிற்கையில், அவள் புதி யதாய் எடுத்துச் சொன்ன ஒரு வாதம் அவருடைய காதில் விழுந்தது. இதைப் பௌராணிகர் குறிப் பிட்டு எழுதியிருக்கிறார். ஏனென்றால், அது முதல் தரவாதம், ரிஷிகள் ஒப்புக்கொள்ளக்கூடியது.

“அவருடைய பக்ஷபாதத்தைப் பார். அப்பா! எனக்கு மாத்திரம் இரண்டே பிள்ளைகள். சர்மிஷ்டைக்கு மூன்று பிள்ளைகள்!”

‘ஹா! பக்ஷபாதமா! மனைவிகளின் மத்தியில் புருஷன் வித்தியாசம் பாராட்டலாமா? என்ன துர் நடத்தை! இந்த யயாதியின் மூதாதையான சந் திரன் தன்னுடைய இருபத்தேழு பத்தினிகளின் மத்தியில் ரோகிணியிடத்தில் பக்ஷபாதம் காண் பித்து அவனுடைய மாமனாரால் சபிக்கப்பட்டா னல்லவா? அவர் என்ன சாபம் இட்டார்? “நாளுக்கு நாள், நீ க்ஷயரோகத்தால் பீடிக்கப்படுவாய்” என்றல்லவா? அது முதல் தானே தினம் பூர்ண சந்திர னாயிருந்தவனுக்குத் தேய்பிறை தொடங்கியது? இந் தப் பக்ஷபாதமாகிற துர்நடத்தை இந்த வம்சத்திலேயே ஒரு சகஜ குணம்போல் இருக்கிறது. இதை பதவருடன் நீக்கவேண்டும்’- இவ்விதம் எல்லாம் எண்ணி முனிபுங்கவர் உடனே தீர்மானித்தார். “யயாதி!” என்றார். “பிடி சாபத்தை! கொழுப்பினா லல்லவா இவ்விதம் செய்யத் துணிந்தாய்? இன்னும் அறுபது நாழிகைக்குள், உன் வயசு இரட்டித்து நீ ஒரு தொண்டு கிழமாய்ப் போவாயாக!” என்று சபித்தார்.

சொந்தப் பெண்ணின் பர்த்தாவை ஒரு தொண்டு கிழமாக மாற்றுவதில் யாருக்கு என்ன லாபமென்று எனக்குப் புரியவில்லை. மத்ஸ்ய புரா ணக்காரரும் இதைத் தெளிவாக்கவில்லை. அது எப் படியிருந்தால் என்ன? சாபம் பலிக்கப் போவது நிச்சயம் என்று அறிந்த யயாதி மாமனாருடைய காலில் விழுந்தார். மன்னிக்கவேண்டுமென்று கெஞ்சினார். தவிர, இம்மாதிரியான சாபத்தின் பேதைமையைக் குறித்து நமக்குத் தோன்றுகிற சந்தேகம் ஒருகால் அச்சமயம் அந்த மாமனாருக்கும் தோன்றியதோ என்னவோ, அவருடைய மனம் இளகிற்று. “என் வாக்குப் பொய்யாகாது. ஆனால் அதற்கு விமோசனமாக ஒரு வரம் அளிக்கிறேன். வேறு யாராவது தன்னுடைய யௌவனத்தை உனக்குக் கொடுக்கச் சம்மதித்தால், நீ உன்னுடைய கிழத்தனத்தை அவருக்குக் கொடுத்து அவருடைய யௌவனத்தை நீ அடையலாம். இது சம்மதமா என்று உன்னுடைய பிள்ளைகளையே கேட்டுப் பார்” என்று சொல்லிவிட்டு, தேவயானி பேன் வார்த்தை பேசுவதற்கு முன் ஆசிரமத்தினுள் பிரவேசித்துக் கதவைப் படீர் என்று சாத்திக கொண்டார்.

யயாதியும் தேவயானியும் அரண்மனையைத் திரும்பி அடைந்தார்கள். ரகசியம் வெளிப்பட்ட பிறகும் தோட்டத்தில் வசிப்பானேன் என்று சர் மிஷ்டையும் இங்கு வந்து சேர்ந்தாள்.

யயாதி தம்முடைய ஐந்து புதல்வர்களையும் வரு வித்து, தம்மைப் பீடிக்கப்போகும் கிழத்தனத் தையும் அவர்களுடைய யௌவனத்தையும் ஈடு செய்துகொள்ளும்படி அவர்களை ஒவ்வொருவரா கக் கேட்டார். முதல் நான்கு பிள்ளைகளும் தலைக்கு ஒரு விதமாய்ப் பதில் சொல்லி மறுத்தார்கள்.

“என்னைக் காட்டிலும் மற்றவர்கள் தாமே உனக்குச் செல்வப் பிள்ளைகள்? அவர்களைக் கேட்டுக்கொள்” என்றான் ஒருவன். ‘கிழவனாய்விட்டால் பிறகு உலகத்தில் என்ன சுகம் உண்டு? அதை நீயே சொல்லு” என்றான் மற்றொருவன். “முதலில், குதிரை ஏற வேண்டுமென்றால் ஏற முடியுமா?” என்று கேட்டான் மூன்றாவது பிள்ளை. “ஆகாரங் தான் வேண்டியிருக்குமா?” என்றான் நான்காம் பையன்.

இவ்விதம் மறுத்துப் பேசினதுமல்லாமல், தகப்பனாருடைய விபரீத வாஞ்சையைத் தங்களுடைய தாய்மாரிடம் தெரிவிக்கப் போய்விட்டார் (திள். கெடு வைக்கப்பட்ட அறுபது நாழிகை தீரும் சிமயமாய் விட்டது. ஏக்கமடைந்த யயாதி தம் முடைய ஐந்தாம் குமாரன் (சர்மிஷ்டையின் மூன்றாம் புதல்வன்) ஆகிய புருவை அங்கலாய்ப்புடன் பிரார்த்தித்தார். அவன், “அப்பாவின் இஷ்டப் படி மாற்றிக்கொள்ள எனக்குச் சம்மதம்” என் றான். இவ்விதம் சொல்லி வாய் மூடியவுடன் அவன் தொண்ணூற்றெட்டு வயது நிரம்பி, முதுகு கூனி, கண் பஞ்சடைந்து, வாய் குழறிய ஒரு கிழவனாகக் காணப்பட்டான். சுக்கிர சாபம் அவனைப் பிடித்தது. யயாதியோ, தம்முடைய சரியான நாற்பத் தொன்பது வயதை இழந்து பதினெட்டு வயதுள்ள யுவனாகச் சோபித்தார்; அதுதான் புருவின் வயது.

இதற்கு மேல் நடந்த விஷயத்தை மத்ஸ்யபுரா ணக்காரர் வெகு சுருக்கமாய்ச் சொல்லிவிடுகிறார். “இதன் பிறகு யயாதி ஆயிரம் வருஷகாலம் யௌவனத்தை அநுபவித்து, ஒரு க்ஷணம் போல் கழித்துவிட்டு, மறுபடியும் பரிவர்த்தனை செய்து கொண்டு கிழத்தனத்தை வகித்து, புருவுக்கே பட் டம் கட்டிக்கொடுத்து, தாம் வனவாசம் செய்யப் போனார்” என்று முடித்துவிடுகிறார்.

ஆயிர வருஷகாலமாவது! யௌவனமாவது! இதற்கு யார் வரம் கொடுத்தார் ? பரிவர்த்தனை ஒன்றுக்குத்தானே வரம்? ஆயிர வருஷம் ஜீவித் திருக்க, யயாதிக்காவது புருவுக்காவது வரம் ஏது?

அது போகட்டும். இரண்டாம் தடவை யுவனாகப் போன யயாதிக்கும், எல்லோருக்கும் உள்ளாக! நாளுக்கு நாள் வயசு வர்த்தித்துச் சுபாவமான கிழத்தனம் வராதபடி தடுத்தது யார்?

இக்கேள்விகளுக்கு விடை தேடியவர்களில் ஒரு வராகிய, ஓஹையோ சர்வகலாசாலையில் ஸம்ஸ்க் ருத பண்டிதர் அலோயா என். பிம்பிள் என்பவ ருடைய அபிப்பிராயத்தில், மத்ஸ்ய புராண சுலோ கத்தின் தாத்பர்யம், “யயாதி யௌவனத்தை அடைந்து ஆயிர வருஷகாலத்தை ஒரு க்ஷணம் போல் கழித்தார் ” என்பதல்ல ; ” யௌவனத்தை அடைந்த யயாதிக்கு ஒரு க்ஷணத்தைக் கழிப்பது ஓர் ஆயிர வருஷம் போலிருந்தது” என்பதே. யயாதி அவ்வளவு சங்கடப்பட்டார் என்பது தான் கருத்து.

இதென்ன விபரீதம்! நவயௌவனம், ஒரு ராஜ்யம், இரண்டு களத்திரம், ஐந்து பிள்ளைகள் இவற்றைப் படைத்த பாக்கியவானுக்கு, ஆயுட் காலத்தை உல்லாசமாய்ப் போக்குவதில் தடை என்ன? இதன் மர்மத்தை அறியவேண்டுமானால், விசித்திர தீபிகை என்கிற கிரந்தத்தின் இருபத் தேழாம் அத்தியாயத்தை வாசித்துப் பாருங்கள் என்று ஓஹையோ வித்துவான் சொல்லுகிறார். அதைப் படிக்க இரண்டே நிமிஷம் வேண்டியிருக் கும். ஆனால் கிரந்தம் கிடைப்பது வெகு பிரயாசை யாகையால், அந்த அத்தியாயத்தைக் கீழே எடுத்து எழுதியிருக்கிறேன். ஓர் எச்சரிக்கை. அதில் பாத் திரங்களின் பெயர்கள் வேண்டுமென்று மாற்றிச் சொல்லப்பட்டிருக்கின்றன. அதாவது, யயாதிக்குப் பதிலாக யவனேந்திரனென்றும், தேவயானிக்குத் தைவமணி என்றும், இவ்விதமே மற்றவர்க்குரிய அடையாளங்களையும் அது மறைத்திருக்கிறது. இதற்குக் காரணம் சரியான பெயர்களை வெளியிட் டால், அக்காலத்தில் ஆண்டுவந்த சந்திரவம்சத்தரச னுக்குக் கோபம் நேர்ந்து கிரந்தகர்த்தா தன் காது, மூக்கு இவைகளை இழக்க நேரும் என்கிற பயமா யிருக்கவேண்டும். நமக்கு இக்காலத்தில் அவ்வித மான பயம் இல்லையாகையால் நான் அந்தப் பொய்ப் பெயர்களை உடைத்துச் சரியான நாமங்களையே எழுதியிருக்கிறேன். இனித் தயை செய்து வாசியுங்கள்:

விசித்திர தீபிகை

இருபத்தேழாம் அத்தியாயம்

யயாதிர் யுவா பவதி (யயாதி யுவனாகிறார்)

[காட்சி: யயாதியின் அரண்மனையில் பூஜைக் கூடம். தேவயானியும் சர்மிஷ்டையும் ஓடி வருகிறார்கள். யயாதியையும் புருவையும் கண்டு பிரமிக்கிறார்கள்].

தேவயானி: (கர்வமான குரலில்) உங்களை யார் – இங்கே வரவிட்டார்கள்? மகாராஜா எங்கே?

யயாதி: நான் தான் இதோ இருக்கிறேனே?

தேவயானி: (கர்வம் மேலிட) நீ எங்கே இருக்கிறாய் என்று நான் கவலைப்படவில்லை. மகாராஜ எங்கே?

யயாதி : நான் தான் யயாதி. நான் சொல்வதைக் கேள்–

சர்மிஷ்டை : இவனைப் பார்த்தால் என் பிள்ளை புருவின் சாயலாயிருக்கிறது. ஆனால் புரு அல்ல.

தேவயானி : (வெடுக்கென்று) யாரோ ஒரு பைத்தியக்கார வாலிபன் நான் தான் மகாராஜா என்கிறான். அவனைப் பார்த்தால் உன் பிள்ளை சாயலாய் இருக்கிறதா? ஒருவேளை எல்லாப் பைத்தியக்காரர்களும் உன் பிள்ளைகளின் சாயலாகத்தான் இருப்பார்களோ!

யயாதி : இதோ பார், தேவயானி–

தேவயானி : என்ன? தைர்யம் மீறிப் போக றதோ? என்னுடைய பெயரைச் சொல்லி அழைக்கிறாயா?

புரு: (சர்மிஷ்டையை நோக்கி) அம்மா, நான் தான் உன்னுடைய பிள்ளை புரு. இவர்தாம்

சர்மிஷ்டை : நூறு வயசில் எனக்குப் பிள்ளை இல்லை. இது என்ன ஆச்சர்யம்! துணை சேர்ந்து இரண்டு பைத்தியக்காரர்கள் வந்துவிட்டார்களே

யயாதி : (தேவயானியை நோக்கி) நீ என்னை நம்பவில்லையா? நம் இருவருக்கு மாத்திரம் தெரிந்த புரதசியம் ஒன்றை உன் காதில் சொல்லுகிறேன். பப்பொழுதாவது நான் யயாதி என்று நம்புவாயா? (அவளுடைய அருகில் செல்லுகிறான்.)

தேவயானி : அதிகப் பிரசங்கி! கிட்டே வராதே!

புரு: (சர்மிஷ்டையை நோக்கி) அம்மா, நான் எல்லாம் தெளிவாய்ச் சொல்லுகிறேன். (படபடப் பாய் அவளிடம் போக எத்தனிக்கிறான். விருத்தாப் பியத்தினால் கால் தடுமாறிக் கீழே விழுகிறான்.)

[இச்சமயம் நாரதர் பிரவேசிக்கிறார்.]

தேவயானியும் சர்மிஷ்டையும்: (ஏககாலத்தில்) வாருங்கள் மகரிஷியே. (ஒருவரை ஒருவர் நோக்கி) இரண்டு விநாடி வாயைப் பொத்திக்கொண்டு இரேன். (நாரதரை நோக்கி, ஏககாலத்தில்) இந்த (இரண்டு பைத்தியக்காரர்களையும் பாருங்கள்.

நாரதர்: பைத்தியக்காரர்களாவது? இவன் யயாதி, இவன் புரு.

தேவயானியும் சர்மிஷ்டையும்: (ஏககாலத்தில்) என்ன சொல்லுகிறீர்கள்!

நாரதர் : (தேவயானியை நோக்கி) உனக்குக் கூடத் தெரியாதா? நீதான் கூடவே இருந்தாயே? முதலில் நீ முறையிட்டதன் மேல், உன் தகப்பனார் யயாதியை இரட்டித்த வயதுள்ள கிழவனாகப் போகும்படி சபித்தாரே.

சர்மிஷ்டை : அப்பாவிடம் போய்க் கோள் சொன்னாளா? கேட்பானேன்? குடும்பத்திற்கு அனர்த்தம் வருவிக்க வேண்டுமென்றால், அப்பாவைக் கூப்பிட்டுச் சபிக்கச் சொல்வதற்கு அ பொழுதும் தயார்!

தேவயானி: எல்லாம் கிடக்க, நீ என்ன சொல்லுகிறது, என் புருஷனைத் திருடிவிட்டு?

யயாதி: ஐயோ, போனது போகட்டும்; சண்டை போடாதேயுங்களேன்!

சர்மிஷ்டை: நான் ஒரு புருஷனையும் திருட வில்லை. எதற்காகத் திருடவேண்டும் ? உன் மாதி ரியா ? மற்றவர்களுடைய ஆக்கினைக்குப் பயந்து எவனாவது கல்யாணம் செய்துகொண்டால் தான் உண்டு என்று இருந்தேனா? அவராக என்னை வலுவில் தேடிவந்தார். உண்டோ, இல்லையோ, கேட்டுப் பாரேன்!

யயாதி: ஐயோ, சண்டை பிடிக்கா –

நாரதர்: (தேவயானியை நோக்கி) பிறகு உன் தகப்பனார் சாபவிமோசனம் கொடுத்தார் –

தேவயானி: அப்படியானால் இவர் தம்முடைய சொந்த வயசை அடையாமல் இப்படி ஒரு பையனாகப் போவானேன்?

நாரதர்: என்ன செய்யலாம் ? அவசரத்தில் சுக் கிராசார்யர் கொடுத்த வரம், மற்றொருவனோடு வயசைப் பரிவர்த்தனை செய்துகொள்வதற்குத் தான். அதற்குப் புரு மாத்திரமே சம்மதித்தான். அவனுடைய பதினெட்டு வயசு இவருக்கு வந்து விட்டது! இவருடைய சாப வயசான தொண் தூற்றெட்டு அவனுக்குப் போய்விட்டது!

சர்மிஷ்டை: சபிக்கிறதற்கு அவளுடைய அப்பா; சாபத்தை அனுபவிப்பதற்கு என்னுடைய பிள்ளை! ஐயோ! என் புருவுக்கு இனிமேல் யார் பெண் கொடுப்பார்கள்?

தேவயானி : இனிமேல் மகாராஜாவுடன் பட்ட மகிஷியாகிய நான் ஊர்வலம் போனால், எல் லோரும் பார்க்க, அவருக்குப் பதினெட்டு வயசும் எனக்கு முப்பத்தெட்டு வயசுமாகவா இருக்கும்? அவரை எனக்குத் தம்பி என்று எல்லோரும் சொல்லுவார்களே!

சர்மிஷ்டை: தம்பி என்று சொல்லுவானேன்? பிள்ளை என்றே சொல்லுவார்கள். அவரை மடியில் வைத்துக்கொண்டு ஊர்வலம் போய் வாயேன்!

யயாதி : ஐயோ! சண்டை பிடிக்காதேயுங்களேன்!

தேவயானி : அவள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்! என் பிள்ளைக்குத் தொண்ணூற் றெட்டு வயசு ஆகிவிடவில்லையே! நான் அவ்வளவு கிழவி அல்லவே!

சர்மிஷ்டை: அவள் சொல்லுவதைக் கேளுங் கள்! இந்த ஆச்சர்யத்தை! இப்பொழுதுதான் தனக்கு முப்பத்தெட்டு வயசாம்! போன ஆடிக்குச் சரியாய் நாற்பத்துமூன்று வயசு நிறைந்துவிட்டது. ஆடிக்குத் தை, எனக்கு ஆறு மாதம் மூத்தவள் : எனக்குத் தெரியாதோ?

தேவயானி : இந்தாடீ! நீ இனிமேல் என் பேச்சை எடுத்தாயானால் தெரியுமா?

யயாதி : ஐயோ! சண்டை பிடிக்கா –

சர்மிஷ்டை : என்ன தெரியும்? கசனைச் சபித்தாற் போல் என்னையும் சபித்துவிடுவாயோ?

யயாதி : ஐயோ! சண்டை –

சர்மிஷ்டை: கசனை எதற்காக இவள் சபித்தாள் என்று உங்களுடைய பட்ட மகிஷியைச் சற்றுக் கேளுங்களேன். (யயாதியும் நாரதரும் தனியே பேசிக் கொள்ளுகிறார்கள்.) என்னைக் கல்யாணம் செய்துகொள் என்று யாரையாவது நான் கெஞ்சி) னேனா? மாட்டேனென்று யாராவது என்னைத் தள்ளினார்களா?

தேவயானி : உன்னை ஒருவர் தள்ளுவானேன்? நீதான் மற்றவர்களைக் கிணற்றில் தள்ளுவதில் கெட்டிக்காரியாச்சுதே!

(சர்மிஷ்டையும் தேவயானியும் ஒருவரை ஒருவர் நோக்கிப் பல்லை நெறித்துக்கொள்ளுகிறார்கள்.)

யயாதி : ( புருவை நோக்கி) புரு, இங்கே வா. நாம் மறுபடியும் வயசை மாற்றிக்கொள்ளுவோம்.

புரு : அப்படியே.

(புரு முன் போல யுவனாகிறான். யயாதி. தொண்ணூற்றெட்டு வயசுள்ள கிழவனாகிறான்.)

யயாதி : போதும், இந்தச் சொற்ப காலம் யுவ 45 இருந்த எனக்கு ஒவ்வொரு க்ஷணமும் ஓர் ஆயிரம் வருஷம் போல் இருந்தது. எனக்கு ராஜ் யமும் வேண்டாம், யௌவனமும் வேண்டாம். ஒரு களத்திரம் உள்ளவனுக்கு யௌவனம் வேண்டும். இரண்டு களத்திரம் படைத்தவனுக்கு வெறும் வனமே நல்லது. நாரத ரிஷியே, நீங்கள் இருந்து புருவுக்கே பட்டம் சூட்டிவைக்க வேண்டும். நான் வனவாசம் செய்யப் போகிறேன். யாராவது எனக்கு ஒரு கைத்தடி கொடுங்கள்.

தேவயானியும் சர்மிஷ்டையும்: (ஒருவரை யொருவர் நோக்கி, ஏககாலத்தில்) எல்லாம் உன்னாலே தான்.

(எல்லோரும் கலைகிறார்கள்.)

இருபத்தேழாம் அத்தியாயம் முற்றிற்று.

இதைப் படித்த பிறகு, புராண சுலோகத்திற்கு ஓஹையோ நிபுணர் கூறும் அன்வயமே சரி என்று எனக்குத் தோன்றுகிறது. உங்களுடைய அபிப்பிராயம் எப்படியோ?

– கொனஷ்டையின் கதைகள், முதற் பதிப்பு: மே 1946, புத்தக நிலையம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *