வியாசர் விருந்து – அகஸ்தியர்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: September 11, 2021
பார்வையிட்டோர்: 22,424 
 

பாண்டவர்கள் அருச்சுனனத் தவம் செய்ய அனுப்பிவிட்ட பிறகு ஒரு நாள் லோமசர் என்கிற பிரம்மா அவர்களைக் காண வந்தார். இந்திரப் பிரஸ்தத்தில் புதிஷ்டிரனைப் பூஜித்து வந்த பிராமணர்களின் கூட்டம் வனவாசத்திலும், கூடவே இருந்து கொண்டு வந்தது. இது ஒருவிதத்தில் கஷ்டமாகவே இருந்தது. “லகு பரிவாரமானால் தான் இஷ்டப்படி பிரயாணம் செய்ய முடியும். இந்தப் பரிகாரத்தைக் குறைத்துக் கொண்டு தீர்த்த யாத்திரை செய்யுங்கள்” என்று லோமச முனிவர் சொன்ளதை ஒப்புக்கொண்டு யுதிஷ்டிரன் அனைவருக்கும் தெரியப்படுத்தி விட்டான்: “ஆயாசம் தாங்க மாட்டாதவர்களும், கல்ல போஜனம் விரும்பிச் சமையற்காரனன அண்டி விற்பவர்களும் ராஜ பக்தியை மட்டும் முன்னிட்டு வந்திருப்பவர்களும் எல்லாரும் திருதராஷ்டி, மகாராஜாயைப் போய் அடையலாம். அவர் ஆதரிக்காவிட்டால் பாஞ்சால ராகன் துருபதனிடம் போகலாம்” என்று சமாதானப்படுத்தித் தன் பரிவாரத்தைச் சுருக்கிக் கொண்டான்,

பிறகு பாண்டவர்கள் புண்ணிய சேஷத்திரங்களுக்கு யாத்திரை போனார்கள். அங்கங்கே அவர்கள் கண்ட இடங்களின் பூர்வ கதைககக் கேட்டுக் கொண்டே சென்றார்கள். இவ்வாறு சொல்லப்பட்ட கதைகளில் அகஸ்தியர் கதை ஒன்று.

***

அகஸ்தியர் ஒரு சமயத்தில் சில பித்ருக்கள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு துன்ப நிலையில் இருப்பதைக் கண்டார். “நீங்கள் யார்? ஏன் இந்தக் கடுமையான தவம் புரிகிறீர்கள்?” என்று அவர் கேட்டதற்கு அந்த ஜீவன்கள், “மகனே நாங்கள் உன்னுடைய முன்னோர்களாவோம். நீ விவாகமில்லாம் விருப்பதால் உனக்குப் பின் எங்களுக்குப் பிண்டம் தருபவர்கள் இல்லாமல் போனார்கள். அதற்காக இந்தத் தவம் செய்கிறோம். புத்திர சந்தானம் பெறுவதற்கு வழி தேடிகுயானால் நாம் இந்த கரகத்திலிருந்து தப்புவோம்” என்றார்கள்.

இதைக் கேட்ட அகஸ்தியர் விவாகம் செய்து கொள்ளத் தீர்மானித்தார்.

***

விதர்ப்பதேசத்து அரசன் தனக்குக் குழந்தை உண்டாகவில்லையென்று துயரப்பட்டுக் கொன்டிருந்தான், அதற்காக அவன் அகஸ்தியரை வனங்கி முனிவரூடைய ஆசியைக் கேட்டான். அவரும் “உனக்கு ஒரு மகள் உண்டாவாள். அவளை எனக்கு மனைவியாகத் தருவாயாக” என்று சொல்லி அரசனுக்கு வரம் தந்தார். உலகத்திலுள்ள ஸ்திரீ லஷ்ணங்கள யெல்லாம் சேர்த்து மிக்க சௌந்தரிய ரூபத்தை மனதில் நிருமாணித்துக் கொண்டு அரசனுக்கு அகஸ்தியர் , இந்த வரம் தந்தார். அரசனுடைய பாரியையும் கருப்பம் தரித்துப் பெண் குழந்தையைப் பெற்றாள். குழந்தையின் பெயர் லோபாமுத்திரை, லோபாமுத்திரை அகஸ்தியர் மனத்தில் கற்பனை செய்து கொண்ட லஷ்ணங்களுடன் நிகரற்ற அழகு வாய்த்தவளாக வளர்ந்து விவாகத்துக்குத் தகுந்த பருவம் அடைந்தாள். அவளுடைய ரூப லாவண்ணியம் க்ஷத்திரீய உலகத்தில் பிரசித்தியா யிருந்தாலும் அகஸ்தியருக்குப் பயந்து எந்த ராஜகுமாரனும் அவளை வரிக்க வரவில்லை.

***

பிறகு ஒரு நான் அகஸ்தியர் முனிவர் விதர்ப்ப தேசம் வந்து அரசனைக்கண்டு. “என்னுடைய பித்ருக்களுக்குத் திருப்தி செய்யப் புத்திரனை விரும்புகிறேன். வாக்குத் தந்தப்படி உன் மகளை எனக்குத் தருவாயாக” என்று கேட்டார்,

நூற்றுக் கணக்கான கன்னிகைகளால் சூழப்பட்டுத் தாதிமார்களின் பணிவிடையைப் பெத்து வளர்ந்த தன் அருமை மகளை வனவாசம் செய்யும் முனிவருக்குக் கொடுத்துவிட அரசனுக்கு மனம் வரவில்லை. ஆனால் முன் செய்த வாக்குத்தத்தத்தை நினைத்து ரிஷியின் கோபத்துக்குப் பயந்தான்.

ராஜாவும் தாயாரும் துயரத்தில் முழுகி வருந்துவதை லோபாமுத்திரை பார்த்தாள். “ஏன் வருந்துகிறீர்கள்? என் நிமித்தம் நீங்கள் சாபம் அடையலாகாது, என்னை முனிவருக்க கொடுத்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள். துயரம் வேண்டாம். இதுவே என் பிரியமும்” என்றாள்.

லோபாமுத்திரையின் சொல்லைக் கேட்டு அரசன் சமாதானம் அடைந்தான். முறைப்படி அவளை அகஸ்தியருக்குக் கொடுத்து விவாகம் முடிந்தது.

***

முனிவருடன் போக ராஜகுமாரி புலப்பட்டாள். “இந்த உயர்ந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் கழற்றி விடு” என்றார் அகஸ்தியர்.

உடனே லோபாமுத்திரை தன் அழகிய ஆபரணங்களையும் வஸ்திரங்ககளையும் கழற்றி அவற்றைத் தன் தாதிகளுக்கும் கன்னிகளுக்கும் கொடுத்து வீட்டு மரவுரியும் தோலும் கட்டிக் கொண்டு முனிவருடன் வனம் சென்றாள்.

***

கங்காத் துவாரத்தில் லோபாமுத்திரை அகஸ்தியருடன் அநேக நாள் விரதங்காத்துப் பணியிடை செய்து முனிவருடைய அன்பைப் பூரணமாகச் சம்பாதித்தாள்.

ஒரு நாள் பிரியம் மேவிட்டு முனிவர் மனைவியைக் கருப்பம் வசிக்க அழைத்தார். லோபாமுத்திரை ஸ்திரீகளுக்கு இயற்கையான வெட்கம் மேலிட்டுத் தலை வணங்கிக் கைகூப்பி, “சுவாமி! நான் கடமைப் பட்டிருக்கிறேன், ஆயினும் என்னுடைய பிரீதியை நீங்கள் செய்ய வேண்டும்” என்றாள். அவளுடைய ரூபசௌந்தரியத்தினாலும் சீலத்தினாலும் முற்றிலும் மனம் கவரப்பட்ட முனிவர், “அப்படியே!” என்றார்.

“பிதாவினுடைய வீட்டில் இருந்த காலத்தில் நான் படுத்த படுக்கையையும் அளித்த வஸ்திராபரணங்களையும் போன்று இவ்விடத்திலும் உம்மால் நான் அடைந்து, நீங்களும் திவ்வியாலங் காரங்களை அணிந்து சந்தோஷமாக என்னைச் சேர வேண்டுமென்பதே என் விருப்பம்” என்றாள்.

“நீ சொல்லியபடி செய்ய எனக்கு செல்வம் எது, சௌகரியமேது, நீயும் நானும் வனத்தில் வசிக்கும் தரித்திரர் கள் அன்றோ?” என்றார் அகஸ்தியர்.

“சுவாமி! நீர் தவப் பெருமையினால் எல்லாம் படைத்தவராவீர் ஒரு நிமிஷத்தில் உலகத்திலுள்ள செல்வம் அனைத்தும் நீர் சம்பாதிக்க முடியும்” என்றாள் லோபாமுத்திரை.

“நீ சொல்லுவது உண்மை. ஆனால் அவ்வாறு தவத்தின் வலிமையால் நான் தனம் சம்பாதித்தால் அது தவத்தில் பயனை அழித்துவிடுமே! இது உனக்கு விருப்பமா” என்றார்.

“அதை நான் விரும்பவில்லை. தவத்தைப் பயன்படுத்தாமல் போதிய தனம் எங்கேயாவது சம்பாதித்துக் கொண்டு வர வேண்டும் என்கிறேன்” என்றாள்.

“பாக்கியவதியே! அப்படியே செய்கிறேன்” என்று அகஸ்தியர் மனைவிக்கு சொல்லிவிட்டு, சாதாரண பிராமணனைப்போல் அரசர்களை யாசிக்கப் புறப்பட்டார்.

***

மிக்க செல்வம் படைத்தவன் என் பிரசித்தி பெற்ற அரசனிடம் அகஸ்தியர் சென்றார்.

“தனம் வேண்டி வந்தேன். பிறருக்குச் குறைவாவது துன்பமாவது ஏற்படாமல் எனக்குத் தரவேண்டும்” என்றார்.

அந்த அரசன் தன் ஆட்சியன் வரவையும் செலவையும் ஒன்றும் மறைக்காமல் முனிவரிடம், “பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கணக்கை ஒப்பு வித்தான். ராஜ்யத்தின் வரவு செலவு கணக்கைப் பார்த்ததில் மிச்சம் ஒன்றும் இருக்கவில்லை. அரசாங்கங்களில் வரவுக்குச் சரியாககே செலவும் எப்போதும் ஏற்பட்டு விடுகிறது. முன்னாட்களிலும் இப்போதைப் போலவேதான்!

இதைக்கண்டு, “வேறே எங்கேயாவது பார்க்கிறேன்” என்று அகஸ்தியர் புறப்பட்டார். அந்த அரசன், “நானும் கூட வருகிறேன்” என்று அவனும் முனிவருடன் கூடச் சேர்ந்து இருவரும் மற்றொரு ராஜாவிடம் போய்க் கேட்டார்கள். அவ்விடத்திலும் அதே நிலைமையாக இருந்தது. நியாயமான செலவுக்கு எவ்வளவு வேண்டுமோ அந்த அளவுக்குத்தான் அரசன் பிரஜைகளிடமிருந்து வரி வசூல் செய்ய வேண்டும் என்கிற தத்துவத்தை வியாசர் இதன் மூலம் எடுத்துக் காட்டுகிறார். நியாயமான வரிகள் பெற்றுக் கடமைகளைப் பூரணமாகச் செய்து தரும் சாஸ்திரப்படி நடந்து வரும் எந்த அரசவிடத்திலாவது தானம் பெற்றால் அவனுடைய பிரஜைகளுக்கு அந்த அளவில் கஷ்டமும் துன்பமும் உண்டாகும் என்று அகஸ்தியர் உணர்ந்தார். அதன் மேல் எல்லாருமாகச் சேர்ந்து இல்வலன் என்கிற ஒரு கொடிய அசுரனிடம் போய் அவனைக் கேட்பது உசிதம் என்று தீர்மானித்தார்கள்.

***

இல்வலன் என்ற அசுரனும் அவன் தம்பி வாதாபியும் பிராமணர்கள் மேல் துவேஷம் கொண்டவர்கள். பிராமணர்களை விருந்துக்கு இல்வலன் அழைப்பான். மாயையால் தம்பி மாதாபியை ஆடாக்கும்படி செய்து அந்த ஆட்டை வெட்டிப் பக்குவம் செய்து வந்த பிராமணர்களை உண்ணச் செய்வான். அந்தக் காலத்தில் பிராமணர்கள் மாமிசம் உண்பார்கள், விருந்து முடிந்தவுடன் இல்வலன், ”வாதாபி வா” என்று கூவுவான். தான் கொன்றவர்களை யமலோகத்திலிருந்து திரும்பி வரவழைக்கும் வரத்தை இல்வலன் பெற்றிருந்தான். வெட்டுப்பட்டு இறந்த வாதாபி மறுபடி உயிர் கொண்டு பிராமணர்களுடைய வயிற்றைப் பிளந்து விட்டு அசரச் சிரிப்புச் சிரித்துக் கொண்டு வெளியே வருவான். இவ்வாறு பல பிராமணர்கள் வாதாபியின் செயலால் வயிறு கிழிக்கப்பட்டு மாண்டார்கள். தருமத்தையே ஏமாற்றி இவ்வாறு பிராமணர்களை கொன்று தங்கள் எண்ணத்தை நிறைவேற்றி வருவதாக அசுரர்களுடைய கருத்து.

அகஸ்தியர் வந்ததாகத் தெரிந்ததும் இல்வலன் மிக்க மகிழ்ச்சி யடைந்து அவரை வரவேற்று வழக்கப்படி விருந்து வைத்தான். வாதாபியை ஆடாகச் சமைத்துப் பரிமாறி, “இந்த முனிவர் இறந்தார்” என்று மனதில் எண்ணிக் கொண்டு அகஸ்தியரை உண்ண செய்தான். விருந்து முடிந்த பின் இல்வலன், “வாதாப் சீக்கிரம் வெளியே வா! தாமதித்தாயானால் முனிவர் உன்னை மீறுவார்” என்று சொன்னான்.

முனிவர், “ஓ வாதாபியே! உலக சாந்திக்காக நீ ஜீரணம் செய்யப்பட்டாய்” என்று சொல்லித் தம் வயிற்றைத் தடவிக் கொடுத்தார், இல்வலன், “வாதாபி! வா! வாதாபிவா!” என்று பன்முறை பயத்து கத்தினான். பயனில்லை! முனிவர்,”வாதாபி ஜீரணமாய் விட்டான். என் வீணாக அழைக்கிறாய்?” என்றார்.

அசுரன் கை கூப்பி அகஸ்தியரை வணங்கி அவர் கோரிய தனங்களைக் கொடுத்து அனுப்பினான். லோபாமுத்திரையை அகஸ்தியர் திருப்தி செய்தார்.

“உனக்குப் பத்து நல்ல மக்கள் வேண்டுமா, அல்லது பத்துப் பேரை வெல்லக்கூடிய ஒரு மகன் வேண்டுமா” என்று அகஸ்தியர் மனைவியைக் கேட்டதாகவும், “பகவானே, புகழ் கொண்ட வித்வானும் தருமத்தில் நிலை கொண்டவனுமான ஒரு மகனையே விரும்புகிறேன்” என்று லோபாமுத்திரை சொல்ல, அவ்வாறே அவள் பெற்றதாகவும் கதை.

***

ஒரு சமயம் விந்திய மலையானது மேரு மகாயின் மேல் பொறாமை கொண்டு, தானும் மேருவைப் போல் வளர்ந்து சூரிய சக்திராதிகளை தடுத்து விடப் பார்த்ததாம். இந்தச் சங்கடத்தைத் தீர்த்துக்கொள்ள முடியாமல் தேவர்கள் அகஸ்தியரை வேண்டினார்கள். அவர் விந்திய மலையன்டை சென்று, “பருவதோத்தமனே! எனக்கு வழி விடக் கடவாய்! ஒரு காரியத்துக்காக நான் தெற்கே செல்ல வேண்டியதாக இருக்கிறது. நான் திரும்பிய பின் இஷ்டப்படி வளரலாம். நான் வரும் வரையில் பொறுத்திருப்பாயாக!” என்று சொன்னார்.

அகஸ்தியரிடம் விந்திய பர்வதம் வைத்திருந்த கௌரவத்தினால், “அப்படியே!” என்று மலையும் ஒப்புக் கொண்டதாகவும், இந்த ஒப்பந்தப்படி அகஸ்தியர் தெற்கே போனவர் திரும்ப வரவேயில்லை என்றும், விந்திய மலையும் வளராமல் இதுவரையில் படுத்துக் கிடக்கிறது என்றும், அதிலிருந்து அகஸ்தியர் தென்னாட்டிலேயே இருந்து வீட்டார் என்றும் பாரதக் கதை.

– 24-09-1944

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *