கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 13, 2019
பார்வையிட்டோர்: 6,446 
 

வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது.உப்பளத்தில் விளைந்த உப்பைப் போல எங்கும் வெண்பஞ்சுப் பனிப்படுக்கை நிலத்தை மூடியிருந்தது.வீதியில் சளக்குப் புளக்கென ஒரே சகதித் தோற்றம்.”ஒ!, “இந்த பனிப் புயலில் வாகனங்கள் நகர முடியாது.எங்கே உப்பு போட்டிருக்கப் போறார்கள்? பிறகென்ன, …சலிப்படைந்தான், வாகனத்தை சறுக்கிக் கொண்டு தான் ஓட்ட வேண்டும். தன் ஒரு வயசு மகளை தூக்கிய போது மனதில் மாற்றம் நிகழ்ந்தது. ‘ பனியை மனம் அழகாக கூட ரசிக்கிறது .

“பேபி,பார் எவ்வளவு பனி! “என்று காட்டினான்.

பேபி,நீ பார்க்கிற முதல் பனிப் புயல்”என்று காட்ட அது சிரிக்கிறது. என்ர செல்லம்,இத்தாலியில் பிறந்திருந்தாலும் சிரிக்கும் தான்..ஆனால், வேலைத்தளத்தில் வேலை பார்க்கிற அந்த ஈழத் தமிழன்ர பேர்?, அது என்ன?..அவனுக்கு எப்பவுமே ஞாபகம் வருவதில்லை. டிங்கரோ.., கங்கரோ..? என்னவோ, அவன், அளப்பானே ‘அட , சிறிலங்காவில் பாதி நிலமேஅவர்களிட நாடாம்! வடக்கு, கிழக்கு எனக் கிடக்கிற பெரிய மாகாணங்களை தமிழ் மன்னர்கள் ஆண்டவர்களாம்.தமிழ் நாடாகத் தான் இருந்ததாம். பேபி, அங்கே பிறந்திருந்தால்… சிரிக்காது தான். அது வெப்பநாடு, கலாச்சாரம் ஜீன் எல்லாமே வேற, வேற! ஒரினம், இன்னொரு இனத்தை அடிமை கொள்ள முயல்கிற நாடு அது!எப்படி இருந்தாலும் … ஆசியரின் உருவ வளர்ச்சியும் சிறிது குறைவு தான். இங்கே ஒரு வயசிலே செய்யிறதெல்லாம் அங்கே இரண்டு வயசிலே தான் செய்கிறது.

முதலில் பாதுகாப்பான வாழ்க்கை, பிறகு உருப்படியான வேலை என்பதற்காக ஈழப் பெடியள்களைப் போலவே பல இத்தாலியப் பெடியள்களும் அள்ளுப் பட்டு வந்து இங்கே காலூன்றினார்கள். ஆனால், இவர்களிட புலம் பெயர்தலுக்கு வேறு பல காரணங்களும் இருந்தன. இவர்களுடைய நாடு இவர்களுடையதே தான். அதை யாரும் கவரவும் முடியாது கவரவும் விட‌ மாட்டார்கள் ;தாரை வார்த்தும் கூட குடுக்கவும் மாட்டார்கள். அவர்களிற்குத் தெரியும்,இடத்தைக் குடுத்தால் மடத்தைப் பிடுங்குற முட்டாள்கள் தான் உலகமெங்கும் இருக்கிறார்கள்.அவர்களிற்கு முன்மாதிரியாக பிரித்தானியர்,பிரான்சியர்…காலனிவாதியர்கள் இருக்கிறார்கள்.இன்று,பல நாடுகளாக‌ சுதந்திரம் அடைந்த பிறகும் கூட தலை மறைவாக இருந்து இயங்குற ஊக்கிகள் அவர்கள் தாம்.

யாருமே இவர்களுடைய பிரஜா உரிமையை அங்கே ‘இல்லை’என சொல்ல முடியாது.சொல்லுறவர்களை சிறையிலே போடுவார்கள்.இவர்களும் சரி, இவர்களிட வாரிசுகளும் எந்த நேரமும் .. போய்; வருவார்கள். வாரிசுகளுக்கும், அவர்களுடைய தொடர்ச்சிகளுக்கும் ..அங்ககைய ‌ பிரஜா உரிமைகள் நீளமாக‌வே இருக்கின்றன. குறும்தேசியம் பேசி யாருமே பிழைக்க முடியாது. சிங்களவர்களால் தமிழர்கள் படாதபாடு படுகிறது வருத்தத்தையே தருகிறது. அண்ட வந்தவர்கள் முழுநாட்டையுமே …நாடாக்க முயல்கிறார்கள்.அவனுக்கும் கோபம் வருகிறது.

பெண்கள் தான் ‘குழந்தையை கிணற்றங் கட்டிலே விட்டுட்டு வந்தது போல பரபரப்புவார்கள்’என்றால்,இவர்கள் எதிர் மாறாக சிந்தனையை எங்கேயோ …விட்டுட்டு…பிள்ளையை வைத்திருப்பார்கள்.”பிள்ளையை பெத்தவனுக்கு அரசியல் வேண்டியதில்லை” என்று சொன்னாலும் புரியிறதில்லை. அவளையை பயம் பற்றிக் கொண்டது. “பார்த்தப்பா, பிள்ளை பிள்ளை,”என்று மனைவி பிள்ளையை அவசரமாக‌வாங்கிக் கொள்கிறாள். அவனுள் அப்பனும் இருக்கிறான் என்று அவளுக்குத் தெரியும் தான்.ஆனால் தாய் அல்லவா !

மூத்த இரண்டு பெடியளுக்குப் பிறகு,மேரியின் அருளால் பிறந்த செல்லக்குட்டி இது! அதனால்,ஆஞ்சலோ ஏக சந்தோசத்தில் இருந்தான்.”பேபி,அப்பா வேலைக்கு போய்யிட்டு வாரன்”என அதன் பிஞ்சுக் கையைப் பிடித்து விளையாடினான்.”உங்கட வேலைத்தளத்திற்குப் போற கடைசி ஆள் நீங்களாத் தான் இருப்பீர்கள்.போங்கள்’போய்யிட்டு வேளைக்கு வாருங்கள்”என்று மனைவி , சிரித்துக் கொண்டு அவனை பிடித்து தள்ளினாள்

.”பனிப்புயலாகக் கிடக்கிறதப்பா.”என்று பஞ்சிப் பட்டான்.”வேலையாட்களை இன்றைக்கு வர வேண்டாம்’என்று சொல்லி இருக்க வேண்டும்.வேலை செய்து கொண்டிருப்பார்கள். அதுவுமில்லாமல் பள்ளிக்கூடம் இல்லை என்று நின்ற பிள்ளைகளை பிடித்து பீற்றரோடு அனுப்பி விட்டு, கதைக்கிற கதையைப் பாரு,பனிப்புயலாம், பனிப்புயலாம் ! பனிப்புயல் இந்த நாடு காணாததா..என்ன? கதையை விட்டுட்டு, ,பெடியள்களையும் பார்க்க ,போங்கப்பா, இரண்டோ,மூன்று வருசம் கழித்து அடிக்கிறது.வேடிக்கையை விட்டுட்டு, வெள்ளி பார்க்கிறதை விட்டிட்டு போங்கப்பா “என விரட்டினாள்இந்த பனியிலே வெள்ளியாவது தெரிவதாவது?.

டிவி சனலைப் பார்க்கிற போது போற இடமெல்லாம் ஓரேயடியாய் வழுக்கப் போகிறது, என்று பயமுறுத்தியது .இன்றைக்கு ஒரே தேரோட்டம் தான்! என திரும்பப் திரும்ப‌ சலிப்பாக இருந்தது.நேற்று ஏன் காலநிலையை டிவி சனலில் சரியாய் பார்க்கவில்லை?என நினைத்த போது.சிவ்வியா பிறந்த பிறகு, எதை யும் அவன் சரியாய் பார்க்கிறதில்லை என்று தெரிந்தது, தன்னையே நொந்து கொண்டான்.

போய்ச் சேர பத்து மணியாகி விட்டது.அதிக லேட்! ஆஞ்சலோ,ஒபிசில் வின்ரர் கோர்டையும், தொப்பியையும்,மப்ளரையும் கழற்றி கொளுவியில் தாறுமாறாக மாட்டினான் .குழந்தை எப்படி இருக்கிறாள்?”என்று சிரிப்புடன் ஒபிசிற்கு பொறுப்பாக இருக்கிற மரியா கேட்டாள்.ஜன்னலினூடாக பெய்யிற பனியைக் காட்டி”இதைப் பார்த்து துள்ளுறாள்,சிரிக்கிறாள்”என்றான்.அவன் விருப்பமில்லாமல் வந்ததை ஏற்கனவே புரிந்திருந்தவள் அவள் சிரித்தாள்.

அவளுக்கு வார பில்லுகள்,அனுப்ப வேண்டிய பில்லுகள், வேலையாட்களுக்கான‌ ‘பே’செக்குகள் தயாரிக்கிறது, கொடுப்பனவுகள். .போன்றவற்றை பார்க்கிற வேலைகள் மலை போல இருக்கின்றன‌.

பீற்றர் சேல்ஸ் மனேஜர். அவருடைய வலது கை, அவனுக்குரிய கணனி, மேசையில் திரையில் ‘மைக்கிரோ சொவ்ட் ‘எழுத்துகள் ஓடக் கிடந்தது.கோப்பி ஒன்றையும் எடுத்துக் கொண்டு வேலைத்தளத்திற்குள் , அவனுடைய ராஜ்ஜிய‌த்திற்குள் நுழைந்தான்.

அவனுடைய இத்தாலியைக் கூட யார்,யாரோவெல்லாம் கவர்ந்து ஆண்டார்கள் என்று தான் வரலாறு.நெப்போலியன் படையெடுத்து இத்தாலியின் சிறு பகுதியைக் கைப்பற்றி ஆண்ட போதே “இத்தாலி உங்கட நாடு”என்ற தேசியத்தை, தீப்பொறியைப் பத்த வைத்தான். பிரான்ஸ் நாடு, என்றுமே அடிமையாக வாழ விருப்புறதில்லை.விடுதலைக்காக போராடுற நாடுகளிற்கெல்லாம் கை கொடுக்கிற நாடு அது ! பிரித்தானியாவன் பிடியில் குற்றுயிராய்க் கிடந்து திவித்துக் கொண்டிருந்ததை அமெரிக்காயாகவே…. எழ வைத்ததிருக்கிறது. இன்று ,அமெரிக்காவில் இருக்குற‌ பேராசைப் பிடித்த வியாபாரிகள் அந்த‌சுதந்திர கபளீகரம் செய்து விட்டார்கள், தற்போது அந்த‌ அமெரிக்காவிற்கு விடுதலைக் கொள்கைகள் கிடையாது,அது அவர்களின் நாசத்தின் தொடக்கம்.

இன்று , பிரான்ஸ் சிறிது மாறிப்போய்யிருந்தாலும் கூட‌, என்றோ ஒரு காலத்தில் தமிழருக்கும் கைக் கொடுக்கும். நெப்போலியனுக்குப்.பிறகே, இத்தாலிய விடுதலை வீரர்கள் கிளர்ந்தெழுந்து எழுந்து இன்றைய அழகுமிக்க இத்தாலியை உருவாக்கியிருக்கிறார்கள்.

அந்த விடுதலை வீரர்கள் தோல்வியை தழுவியிருந்தால்.., இத்தாலியும் நினைத்துப் பார்க்க முடியவில்லை , ஈழத்தைப் போலவே சீரழிந்து போய்யிருக்கும். ஆனால், கடவுள் எல்லாரையுமே தோல்வி அடைய வைப்பதில்லை.பகுதிகள் பறிபோய்,மீள வந்ததால்..ஆயுதக் கலாச்சாரம்,போதைப் பொருள் வர்த்தகம்..என வளர்த்து விட்ட‌ மஃபியாக் குழுக்களின் ராட்சியத்தையும் இன்றும் கூட கிள்ளி எறிய முடியாமல் தவிக்கிறது ..ஒருவித பதற்ற நிலை கிடப்பதாலே.. இத்தாலியர்களும் கூட‌ வெளிய துப்பப் படுகிறார்கள்; பட்டிருக்கிறார்கள் . ஆனாலும், அந்த மண்ணிலே நின்று சுதந்திரமான, சுத்தமானக் காற்றை சுவாசிக்க விரும்புற போதெல்லாம் போகிறார்கள் . மூச் சு வாங்குதில்லையா. இரண்டு,மூன்று வருசத்திற்கு ஒருமுறை அவன் குடும்பம் கட்டாயமாக‌; போய், மண்ணின் மணத்தையும், காற்றையும் நுகர்ந்து விட்டே வருகிறது. தொப்புள்கொடி உறவு அழிக்க முடியாத,வலிமை மிக்கது.

ஈழப்பெடியன்,”எங்கட பகுதிளில் எல்லாம் ராணுவம், எல்லாப் பகுதிகளையும் காடாக வளர விட்டு பாதுகாப்புப் வேலிகளைப் போட்டு வைத்து, அவர்களுடைய பிரதேசம் என‌….சிங்களவர்களை குடியேற்றி வருகிறது” என்று குமுற போதெல்லாம் ஆஞ்சலோட மனமு‌ம் கூட உடைந்து ‌ போகிறது.அவன்ர பேர், இப்பக் கூட.. ஞாபகம் வருகுதில்லை,ஆனால் ‘ஈழம்’என்ற வார்த்தையை அடிக்கடி அவன் சொல்வதால் அது மாத்திரம் நினைவில் இருக்கிறது.

பிள்ளைகளை விட்டு அவனைத் தான் கண்கள் முதலில் தேடின‌ .அவன் பெரிய மோட்டர் ஒன்றின் உட்பகுதி செப்பு வயரைக் கணக்கிட்டு,அதற்குரிய அச்சில் வைத்து சுத்திக் கொண்டிருந்தான்.அவனுடைய 15 வயசு பொடி ‌ ஜோன்,செப்பு வயர் உருளை ஒன்றை இரண்டு சில்லு உருட்டியில் வைத்து உருட்டிக் கொண்டு வந்து அவனுக்குப் பக்கத்தில் வைத்தான்.எட்டி எட்டி வேறு பார்க்க,அவனுக்கு “ஜோன், நீ இப்படி சுற்ற வேண்டும்”எனச் சொல்லிக் காட்டி கொண்டிருந்தான்.அது அந்த‌ குட்டி மூளையில் எங்கே ஏறப் போகிறது?

இங்கே பிறந்துகளை வாரிசுகளாகவே எதிர் பார்க்க‌ முடிவதில்லை.அவர்களுக்கு எது இலகுவாக இருக்கிறதோ அதை எடுத்து படித்துக் கொண்டு போய் விடுகிறார்கள்.பெட்டைகள் தான் கொஞ்சம் அப்பரின் ஆசைகளை நிறைவேற்ற விரும்புகிற‌வர்கள்.ஆனால்,மின்சார மோட்டர் திருத்துற வேலைகளில் எல்லாம் பெண்களை …ஈடுபடுத்த தான் முடியுமா?யானைப்பாரம் உடைய மோட்டார்களைத் தூக்கவும் முடியாது.இவர்களுக்கே தூக்க கண் பிதுங்குகிறது‌,மெத்தக் கவனம் வேண்டிக் கிடக்கின்றன. அவர்களால் முடியக் கூடியதாக இருந்தாலும்.. ‌ பெற்றோர்களால் அவர்களை விட முடிவதில்லை பெண்பிள்ளைகள் தானே பெற்றோருக்கு தேவதைகளாகத் தெரிகிறவர்கள். குடும்பத்தில் நிலவுற மகிழ்ச்சிக்கு அத்திவாரங்களும் அவர்கள் தானே ! கல்யாணம் கட்டி வெளியேறுகிறவர்களிற்கு இரண்டென்றால்….,சமூகத்தில் ஆணாதிக்கத்தைக் குறைக்கிற சமாச்சாரமும் அவ்வாறே தானே தொடங்கிகின்றன‌.

ஆனால், அவர்கள் தம் ஆற்றல்களை,.. சரிவர புரிந்து கொள்ளாமல் வளர்கிறார்கள். பெண்ணையும், ஆணையும் தைரியமான விளையாட்டுகளில் ஈடுபடுத்தி வளர்க்கப் பட வேண்டும் என்பதை அறியாமலும் சமூகங்களும் ‌ கிடக்கின்றன அதனால், (மனத் )தைரியத்தில் ஆண்களை விட தாழ்வாக இருப்பதாக மறுகிறார்கள்..தம் உடலமைப்பாலும், அதில் எழும் விசித்திரமான வலிகளாலும் ,நகரத்தில் நிலவுற அசம்பாவிதங்களாலும் நிறையவே பயப்படுகிறார்கள். அவளை உற்சாகப்படுத்தி … சிறுவயதிலிருந்தே விளையாட்டுத்துறைகளில் பெற்றோர்களாவது ஈடுபடுத்தி வந்தால் அல்லவா இயல்பாக வலிமை பெறுவாள்; தைரியத்தையும் பெறுவாள்.இல்லா விட்டால் என்ன, என்ர செல்லத்திற்கு கட்டாயமாக‌ கராட்டியை பழக்கி விடவே போகிறேன் . பிறந்து தவழக் கூடவில்லை,என்னென்வோ மனக் கோட்டைகள் கட்டுகிறான்.அப்பன் ஒரு பையித்தியக்காரன் என்பது சரியாய்த் தான் இருக்கிறது.

மற்றவனை தேடினான்.பத்து வயசுப் பெடியன், மாரோ பீற்றரின் கையை பிடித்து வந்து கொண்டிருந்தான்.

“அப்பா”என்று அவனை நோக்கி ஓடி வர.. கோப்பிக் கப்பை அருகிலிருந்த பெட்டியில் வைத்து விட்டு “டேய் உன்னை எல்லாம் தூக்க முடியாதடா”என்று அவனை தூக்கி மூச்சிறைக்கத் தட்டாமாலை(கிடையாக‌ ஒரு வட்டம்) சுற்றி விட்டு கீழே விட்டான்.

பீற்றர் சிரித்தான்.” ஆஞ்சலோ நீ செல்லம் கூட குடுக்கிறாய்.ஒருத்தனையாவது இந்த தொழிலில் கழுத்தைப் பிடித்து தள்ளி விட வேண்டும்.ஞாபகத்தில் வைத்திரு”என்றான்.

பீற்றர் அவனிடம் விட்டு விட்டு ஒபிசிற்குப் போனான். ஆஞ்சலோ ஜோனை இழுத்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்த ஈழப்பெடியனிடம் . வந்தான் .இப்பவும் அவன்ர சனியன் பிடித்தப் பெயர் ஞாபகம் வரவில்லை.கையை நீட்டி ‘இந்தா’என கூப்பிடுறதுக்குப் பதிலாக வீட்டிலே சில்வியாவைக் கூப்பிடுறதே வாய்யில் வர‌ “பேபி “எனக் கூப்பிட்டு விட்டான்.சங்கர் ஆஞ்சலோட குரலைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தான்.அவனுக்கருகில் சான்ட் பிளாஸ்ட் செய்வதற்காக பிளாஸ்டிக் கூடையில் எடுத்துப் போட்டுக் கொண்டிருந்த ராமும்,பொஸ், சங்கரை’பேபி ‘எனக் கூப்பிடுறதைக் கவனித்தான்.

முந்திரிக் கொட்டையாக‌ “பேபி,இவ்வளவு தானா,இன்னம் இருக்கிறதா?”என்று சங்கரைப் பார்த்துக் கேட்டான்.அவனுக்குக் கூட சங்கரின் பெயர் தடுமாறிக் கொண்டே இருந்தது.ராம்,இந்திய ஜீன்!கயனீஸ்,அவனுக்கு சுத்தமான ‘ராமச்சந்திரன்’என்ற தமிழ்ப் பெயர் . அவனுடைய ‘அம்மம்மா,தமிழ்,மளையாளம் எல்லாம் ஒரளவிற்குப் பேசுவாள்,அவனுக்குத் தான் தமிழில் சுத்தமாக‌ ஒரு சொல் கூட வராது, விளங்காது. அவன் பெற்றோர் வெளியில் பேசுவார்களோ தெரியாது.வீட்டிலே பேசியதைப்…. பார்க்கவில்லை.அவன் மூன்றாவது சந்ததி.ஏன், அதிகம் சொல்வானேன்,,ஈழத் தமிழருக்கும் இந்த நிலை தானே !

சங்கர் வியப்படைந்தான். ஆஞ்சலோக்கும் தான் தவறுதலாக ‘பேபி’ என்று கூப்பிட்டது புரிந்தது.அட அவனுடைய டிங்கரோ..என்னவோ,அந்தப் பெயரை விட’பேபி’என்று இனி கூப்பிடலாமே என்ற யோசனை ராம் கூப்பிட்ட போது ஏற்பட்டு விட்டது.சிரித்துக் கொண்டு “உன்னை ‘பேபி’என்று கூப்பிடுறது இலகுவாக இருக்கிறது.கூப்பிடுறேன்,கோவிக்க மாட்டேயே”என்று சங்கரைக் கேட்டான்.சங்கருக்கு அவன் டிங்கர்,கங்கர்,இந்தாப்பா..என ஒவ்வொரு தடவையும் ஓவ்வொரு பெயரில் கூப்பிடுற போது,என்னை தானா கூப்பிடுறான்’எனத் திண்டாடிப் போறவன்..எப்படியும் ஒரு பெயரிலே கூப்பிட்டு தானே ஆக வேண்டும் தொலையட்டும் என்று ” ஒ.கே! “என்றான்.

அன்றிருந்து சங்கரின் பெயர்,வேலைத்தளத்தில் எல்லாருக்கும் ‘பேபி’என்றாகி விட்டது. ஆஞ்சலோக்கு ‘பேபி’மூத்தப் பையன் போல் சமயத்தில் தோன்று கிறான.பரவாய்யில்லை,என்ர பிள்ளைகள் வாரிசாக்காட்டிலும் இவன் வந்தாலும் சரி தான்!என்று நினைத்தான்.அவன் நல்லவன்.

பீற்றர், பெடியள்களின் மாறுபட்ட குணங்களை எச்சரித்த போதிலும் அவன் அலட்டிக் கொள்ளவில்லை

நாடு ஒரு தடையில்லை முற்பிறப்பில் கூட தொடர்புகள் இருக்கலாம் தானே!எனவே தான் போலும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவன் ஈழப்பிரச்சனையை கவனத்தில் எடுத்து கூட்டிப் பார்த்துக் கணக்குப் போட்டு,ஒரு தீர்வு யோசனையை கூட பேபியிடம் கூறினானே பேபி, அதைக் கேட்டு அசந்தே போய்.விட்டான். “ஈழத் தமிழர்களைக் கொண்டிருக்கிற வடக்கு,கிழக்கு என இருக்கிற மாகாணங்களை இணைந்த ஒரு மாகாணமாக்கி ‌ தென் இந்தியாவிலிருக்கிற தமிழகத்தின் உப மாகாணமாகிக் கொள்வதே பாதுகாப்பானதும் வளர்ச்சிக்கும் உகந்தது.சிறிலங்காவில் ‘ஒற்றை மாகாணங்களாக’ இருந்த பால் திரைந்து போய் விட்டது.அகன்று விடுவதே சிறந்தது. நீங்கள் ஒரே அமைப்பாக எழுந்து உரத்துக் குரல் எழுப்பிக் கொண்டு வந்தால் ,ஒரு காலத்தில் இந்தியா செவியில் விழும் “என்றான்.”இனப்படுகொலைகளை நிகழ்த்தியவர்களை இன்னும் நம்பி வாரது நீண்ட நோக்கில் உங்களிற்கு நல்லதில்லை “என்றான். கழுகு போன்ற குறுக்கால் இழுக்கிற இயக்கங்களும் அங்கே இருக்கின்றனவே,காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

“வி. எ .ஆர்”என்ற சிறிய,பெரிய‌ மோட்டர்களின் பகுதிகளை மீள்கட்டமைக்கிறதும்,திருத்து றதுமான அந்தக் கம்பனி இரண்டு அறைகளைக் கொண்டிருந்த அந்த‌ பெரிய கட்டிடத்தில் இருந்தது ஒரு பகுதியில் காரின் ஸ்டாடர் மோட்டர்,ஒல்டினெட்டரின் பகுதிகளை தயாரிப்பதிலிருந்து அனைத்து சிறிய மோட்டர்களின் பகுதிகளுமான வேலைகள் நடைபடுகின்றன.இதற்கு ‘ஜோ ‘பொறுப்பாகவிருக்கிறான் .

அதிலே, கையால் செப்பு வயர்களை சுத்துறதுக்கு மாத்திரம் நாலு பெண்கள்,ஒவ்வொரு மெசினிலும் வைத்து தனித்தனிய சுத்துற நாலு பெடியள்கள்,சான்ட் பிளாஸ்ட் செய்கிற ராம்,ஜேக்கப்,இவர்களோடு ஆஞ்சலோ ,இங்கேயும் சில சமயம், அங்கேயும் சில சமயமாக வேலை செய்கிறான். மற்றைய அறையில் பெரிய ரக மோட்டர்களை திருத்துகிறது.பேபி, ரொனால்டோ . இருவரும் சில வயர்களைச் சுற்ற மற்றைய அறையிலிருக்கிற மெசின்களையும் பயன்படுத்த வருவார்கள். எந்த நேரமும் ரொனால்டின் வாய்யில் சிகரெட் புகைந்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.அதைப் பார்த்து இப்பவெல்லாம் இவனோட இருந்து வேலை செய்கிற பேபியிட வாய்யிலும் …புகைகிறது.”அதிகமாக புகையாதே பேபி,அது … உடம்பிற்கு நல்லதில்லை”என்கிற ஆஞ்சலோ அதிசயமாக புகைக்கிறதேயில்லை.

பேபி,வேலை கேட்டு வந்த போது, ஆஞ்சலோவுக்கு ‘ தான் அந்த காலத்தில் இவனைப் போல திரிந்து ,மொழியும் சரிவரத் தெரியாது.. திண்டாடித் திரிந்தது,அலைந்தது ஏமாற்றங்களுக்கானது எல்லாம் ஞாபகத்திற்கு வர, அவன்ர முகத்தில் தவழ்ந்த ஒரு அப்பாவித் தனமும் பிடித்துக் கொள்ள‌,, முன்பின் தெரியாத சிலரைப் பார்க்கிற போது நமக்கும் கூட சடும்மென‌ ஒரு ஈர்ப்பும் ஏற்படுகிறதல்லவா, அவனுக்கும் ஏற்பட‌ உடனே யே வேலையில் சேர்த்துக் கொண்டான்.

பேபி, சிறிலங்காவிலேயே, கொழும்பிலே இருக்கிற போது மோட்டர் திருத்துறதைப் படித்திருந்தான்.இங்கிலாந்து அரசு,எல்லா நாடுகளிலுமே வெளிநாட்டுத் தரத்திற்குகமைய தனியார் கல்வி நிறுவனங்களைத் திறந்து பரீட்சைக‌ள் வைப்பது இருந்தன. அந்த ‘லண்டன் பரீட்சையையும் எடுத்து தேறியிருந்தான். அவனுடைய கல்விப் பத்திரங்களை இனித் தான் இங்கத்தைய தரத்தோடு அர‌சில் மதிப்பீடு செய்யப்பட‌ வேண்டும். இங்கே இருந்த பல தனியார் கம்பனிகள் முக்கியமாக‌ இங்கத்தைய வேலை அனுபவத்தையே அதிகமாகக் கேட்டார்கள்.!

சிறிலங்கா, எங்கே, தொழில் சாலைகள் , முன்னேற்றம் அடைவதற்கு முன்னோக்கிய பார்வையில் இருந்தன !. ,அவ்அரசு கழுகளவு கூட சுயமாக சிந்தித்து சாதித்ததாக இருக்கவில்லை , கழுகைச் சேர்ந்தவர்கள், இவர்களைப் போல‌ அரசியலில் குழப்பமானவர்களாக இருந்தாலும், படகுகள்,விமானம்கள் தயாரித்ததை ஒரு மைல் கல் என்றே கூறலாம்.. ஒப்புக் கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது ? இனத்துவேசக் கரங்களை காட்டிக் கொண்டு கிடப்பவர்கள் பொருளாதார முன்னேற்றங்களை அடைய முடியாது . எவருமே கூட்டுக் கைக ளின் பலத்தை அறியாதது பெரும் பலவீனமே ! புரிதலும் , செயற்படுதலும் அவசியமானவையாயிற்றே. கழுகிலும் புரிதலில் பிரச்சனைகள் இருந்தன‌.

இலங்கை இயற்கை வளம் பொறுந்திய ஒரு நாடு, முழுக்க , முழுக்க மனிதத் தவறுகளாலேயே சீரழிந்து போய்க் கிடக்கிறது..

அடிப்படையாக‌ அரசியல் அமைப்பில் ஏற்படுத்தி விட்ட தவறுகளை,கல்வித் தரப்படுத்தல்,தனிநாடு கேட்கும் உரிமை இல்லை என சர்வாதிகாரமாக சுயநிர்ணய உரிமையை தவற விட்டவையை முன்னோக்கிய பாய்ச்சலுக்கு திருத்த வேண்டிக் கிடக்கிறது , 13ம் திருத்தச் சட்டத்தை உறை நிலையில் வைத்திருப்பது,களையப்பட வேண்டியவையை எல்லாம் செயல்பாட்டில் வைத்திருப்பது…மாற்றப்பட வேண்டும்.

‘சிங்களம்’ சிங்களவர்க்குத் தான் அவசிய மொழி,தமிழர்க்கில்லை…என்ற புரிதல் முக்கியமாக‌ கவனத்தில் எடுக்கப் பட வேண்டியது. இனிமேலாவது புதிதாய் பிறந்து புதிய நடை போட மாட்டார்களா ? நடை போடப் பழக‌ வேண்டும் . இப்படியே நெடுக எவ்வளவு நாள் தான் இருப்பது.?இருந்தால் உலகம் விடிந்த மாதிரி தான் !

பொறாமையும்,குறுக்கமும்,தமிழர்களின் பொருளாதாரத்தை எரிக்கிறதையும்,திற‌மைசாலிகளான தமிழர்களையும் அழிக்கிறதைனமாக செய்வது படு முட்டாள் தனம் .

அதனாலே ஆத்மபலமும் பூஜ்யமாக இருக்கிறது.வெளிநாடுகள் தமது அரசியலைச் செய்து அரபு நாடுகளைப் போல நமது இலங்கையையும் ஒரு இழிந்த நாடாக்கி விட்டிருக்கிறது. ம‌ந்தித்த நிலை எனவே அவனுக்கு கொழும்பிலும் வேலை அனுபவம் (பிரக்டிக்கல்)போதியளவு கிடைக்கவில்லை.. பேபியின் சிந்தனை சிலவேளை இப்படி ஓடும்

அழகான தீவில் , மோசமாக பாதிப்புக்குள்ளாகி ‘ பாவப்பட்ட ஜென்மங்களாக வந்து நிற்கிறவர்கள் தமிழர்கள் தாம்” ,.. என்ற புரிதல் ஆஞ்சலோக்கு ‌ இருந்தது.

சினிமாவிலே நடிக்க சந்தர்ப்பம் கேட்டு சோர்ந்து போய் இருக்கிற தமிழக நடிகர்களைப் போல, பேபியும் அகதியாக‌ நம்பிக்கை அற்றிருந்தான். ஆஞ்சலோக்கு அவனை பார்த்த மாத்திரத்திலேயே அவன்ர நிலமை தெள்ளெனத் தெரிந்தது.கஸ்டப்பட்டு தொழிலில் கால் பதித்தவர்களுக்கு இம்மாதிரியானவர்களை கைகொடுத்து தூக்கி விடுகிற நல்ல குணங்கள் இருந்தன.அவனை துணிந்து வேலைக்கு எடுத்து வேலைகளையும் சரிவர கற்றுக் கொடுத்தும் வந்தான்.தகுதியானவனாக்கி விட வேண்டும் என்ற இலக்கும் இருந்தது.அவன் எங்கேயோ கீதையைப் படித்திருக்க வேண்டும். படித்திருப்பான் . இத்தாலிய மொழியில் ஒருவேளை கீதையையும் மொழி பெயர்த்திருக்கலாம். சிங்களத்தில் மொழியில் மொழி பெயர்க்கப்படாத நூல்கள் எல்லாம் வேற,வேற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன.‌.இந்தியாவிலுள்ள தமிழகத்தின் வீச்செல்லை சிங்களத்தை விட மற்றவற்றில் அதிகம். சிங்களமும் நடைபெற விரும்ப வேண்டுமே !.

புத்தரின் பல கருத்துக்களை,புத்தருக்கு முன்பிருந்த பல அறிஞர்களும் ஏற்கனவேயும் கூறியிருக்கிறார்கள் தாம்.கிணற்றுத் தவளையாக இருப்பதால்…சிங்களவர்களிற்கு தெரியவில்லை, எல்லாத்திலுமே குழப்பம்.அவர்களிற்கு ஜனநாயக வெளிகளும் அதன் பலாபலன்களும் புரிய வில்லை என்றே படுகிறது. இன்னமும் உண்மையான சுதந்திரம் அடையவில்லை என்பது தான்…கசப்பான உண்மை.

தொடக்கத்தில் கட்டிடத்தின் இரண்டு அறைகளையும் தொழில்ச்சாலை வாங்கியிருக்கவில்லை.ஒரு அறையில். பாதியில், ஜோ பார்வையில் மற்ற வேலைகள் நடக்க,.மிச்ச பாதியில், ஆஞ்சலோம் பேபியும் ரொனால்டோவும் பெரிய மோட்டர்களை கழற்றிக் கொட்டிக் கொண்டிருந்தார்கள்..

அ ந்தக் காலங்களில் தான், ஆஞ்சலோ அவனோடு பலதையும் கதைத்தான். குறிப்பாக ரொனால்டோ வராத நாட்களிலே இந்த அலம்பல்கள் சற்று அதிகமாக வே ‌ இருந்தன .அந்தக் கம்பனி தப்பி பிழைத்த கோர்ட் வரலாற்றையும் அப்பவே கூறினான்.

இந்த கம்பனியின் ‘வி’எழுத்துக்குரியவனான‌ விக்கியும், ஆஞ்சலோவும் இத்தாலிய உணவகத்தில் ஆரம்ப நாட்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள்.ஜரீஸ்காரனான விக்கிக்கு ஆங்கிலம் நல்லாய் பேசத் தெரியும்.மேற்பார்வையாளனாக சுழன்று ,சுழன்று வேலை செய்கிற உப மனேஜர்களில் அவனும் ஒருத்தன். உணவகத்தில்,மூன்று நாள் அவன் முடிப்பு வேலைகளை செய்பவன்.மிச்ச நாலு நாளும் ஈழத்தைச் சேர்ந்த கதிர் முடிப்பவன்.கதிர் தொழிலாளர்களுடன் இழைந்து பழகிறது குறைவு.கூடாதவன் என்றில்லை,விக்கி அளவிற்கு பழகிறதில்லை.

ஆஞ்சலோவுக்கு ஆங்கிலம் பேச அவ்வளவாக வராது. அதில்,மற்றவர்கள் சொல்ற மாதிரி வெட்கமான‌ ஒன்றில்லை. தாய் மொழி,பிறகு திணிக்கப்பட்டதாக இன்னொன்று வந்து விழுகிறது.சிலருக்கு வருகிறது,சிலருக்கு வராமலே கூட போகலாம்.சிறு வயதிலிருந்ததே சிறிதளவு சமத் தன்மையுடன் மொழிகள் கற்று வந்தாலே…இலகுவாக புரிந்திருக்கும்.ஆனால்,அப்படி எந்த மொழி யைக் கற்பது?

ஜேர்மனிய மொழியா? கிட்லர் விரும்பியதும் அதைத் தான் பிரஞ்சா?சிங்களமா?ஆங்கிலமா..? எதையுமே திணிக்க முடியாது.ஆங்கிலம் இப்ப நடை போடுகிறது.ஒரு காலத்தில் பாளி நடை போட்டதாலே ,எங்கேயோ ஒரு மூலையிலிருந்த இலங்கையில் ஒரு பகுதியினர் சிங்கள மொழியை இன்று பேசுகிறார்கள்.இந்த மண்ணிலிருந்து துளிர் விட்டது போல பலவந்தத் திணிப்புக்க்கள்.

ஆங்கிலேயர் ஆட்சி அதிகாரத்தை அவர்கள் கையில் கொடுத்ததாலே “சிங்களத்தைக் கட்டாயம் பேச வேண்டும் “என அவர்கள் போடும் கூத்துக்கள்,அளப்பறைகள் கொஞ்ச நஞ்சமில்லை என தொடர்கின்றது .அது, தமிழர்களிற்கு சிங்கள இலக்கியங்களை இயல்பாக ‌ அறிய ,தெறிய வேண்டும் என எழுகிற ஆர்வத்தைக் கூட அழித்து விட்டிருக்கிறது.

மொழியை எவருமே திணிக்க முடியாது.ஒவ்வொரு மொழியிலும் உள்ள அழகியலை முழுமையாக வெளிப்படுத்த , புரிந்து கொள்ளத் தான் மற்றவர்களின் உதவிகளை நாட வேண்டும்.அது சுய மொழியில் உள்ளக் காதலால் எற்படுவது.இலங்கையி லும்,இந்தியாவிலும் சட்ட ங்களால் போட்டு திரை, திரை என்று திரைக்கிறார்களே ! இப்பவும் கூடத் தான். ஆஞ்சலோவுக்கு ஆங்கிலம் பேச அவ்வளவாக வராது ஆனால் சமாளிக்கத் தெரிகிறது.

வேலை, முடிக்கிற போது கோப்பை அடிக்கிற ஆஞ்சலோவுக்கு கோப்பைகளை பாஸ்கற்றில் அடுக்கி தண்ணி அடிக்க விக்கி உதவிக்கு வருவான்.. ஓரளவுக்கு அந்த கனத்தைக் குறைத்தால் தான் வேலையை நேரத்திற்கு முடிக்க முடியும் ! கணக்கு வழக்கு முடிந்தாலும் கூட வேலைகள் முடிந்தால் தான் உணவகத்தை மூடி வெளியேற முடியும்.இவர்கள் போக,சிறிது நேரத்திற்குப் பிறகு துப்பரவு செய்யும் குழு வந்து விடும்.இரவு ஒரு மணிக்கு முதல் எப்படியும் முடித்து விட வேண்டும்.பன்னிரண்டு மணி போல முடித்து விட்டால்…என்ன சுகம்,என்ன சுதந்திரம். வீட்ட போற சந்தோசம் வளர்ந்தால் மட்டும் தீர்ந்து விடுமா,என்ன? ஆஞ்சலோ அடிக்கடி மணிக்கூட்டைப் பார்த்துக் கொண்டிருப்பான்.விக்கி சிரிப்பான். சிலவேளை நக்கலும் அடிப்பான்.”ஆஞ்சலோ,நீ கல்யாணாமே கட்டவில்லை,என்ன அவசரம்.எனக்குத் தான் மகள் கிரிஸ்டீன் இருக்கிறாள்?”

.கதிர், பாணி வேறு அந்த வேலை எல்லாம் செய்ய முயல மாட்டான். கிச்சினிலே ஒழித்துக் கிழித்துக் கொண்டிருக்கிறவனில் ஒருத்தனை இழுத்து இங்கே போட்டு விடுவான். ஒரே விரட்டல் தான்.அதனாலே ஆஞ்சலோற்கு விக்கி ரொம்ப‌ப் பிடித்தவன்.விக்கிக்கு அவன் மேல் அனுதாபம் ,பிரியம் எல்லாம் ‌ இருந்தன.பாவியாகவும் தெரிந்தான்.எனவே எப்பவும் அன்புடன் எதையாவது பேசிக் கொண்டிருந்தான்.

“நீ என்ன இத்தாலியில் வேலை செய்தனீ?”என்று ஒரு நாள் கேட்டான்.

“சிறிய,பெரிய மோட்டர்களை திருத்துற வேலைத்தளத்தில் வேலை பார்த்தனான்”என்றான்.

“நீ எந்த மோட்டரையும் திருத்துவாயா?”என்று ஆச்சரியமாகக் கேட்டான்.

“ஓம் திருத்துவேன்.ஆனால் என்னிடம் கல்லூரியில் படித்த பத்திரங்கள் எல்லாம் இல்லை “என்றான் வருத்தத்துடன்.

“அப்ப எப்படி பழகினாய்?”கேட்டான்.

”7,8 வருசமாக அங்கே வேலைப் பார்த்திருக்கிறேன்.அங்கே இருந்த பியர் தான் என் குரு எனக்கு எல்லாத்தையும் கற்றுத் தந்தான்.எப்பவும் குறிப்புக்களை எழுதி வைத்திருக்கும்படி வற்புறுத்தினான்.அப்படியே.. பழகி விட்டது.”என்றான்.

“அந்த மாதிரியான தொழிற்சாலைக்குப் போய் உன்ர வேலையில் ஏன் சேரவில்லை.”கேட்டான்.

“இங்கே, ஆங்கிலம் பிரச்சனை, இங்கத்தைய வேலை அனுபவம் இருக்கிறதா?என்று வேறு கேட்கிறார்கள்.என்னால் சரிவர பேச முடியவில்லை.” என்ற போது குரல் உடைந்து போய்யிருந்தது.

“உன்னைப் போல வேலை ….,திருத்தத் தெரிந்தவர்கள் யாரும் இங்கே உனக்கு தெரிய இருக்கிறார்களா?”என்று கேட்டான். ரொனால்டோ இருக்கிறான்.அவன் இங்கத்தைய பரீட்சை களை எல்லாம் எடுத்து தேறி ‘லைசென்ஸ்’ கூட எடுத்து வைத்திருக்கிறான். இப்ப ஏதோ ஒரு தொழிற்சாலையில் மின்சார பராமரிப்பாளர்களில் ஒருத்தனாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்”என்றான்.

விக்கி, சிமார்ட்டானவன்.உடனேயே சிந்தையிலே திட்டம் போட்டு விட்டான்.

“இங்கே பார் அஞ்சலோ, ரொனால்டோவை, நானும் நீயும் போய் சந்திப்போம்.மூன்று பேருமாக சேர்ந்து ஒரு சிறிய கட்டிட அறையை வாடகைக்கு எடுத்து,விளம்பரம் கொடுத்து சனி,ஞாயிறுகளில் மட்டும் இங்கே வேலைக்கு வராமல் இருந்து மோட்டர்களைத் திருத்திப் பார்ப்போம்.நகரசபையில் அனுமதியை நான் பெற்று வருகிறேன்.என்ன,முயன்று ஒரு கை பார்ப்போமா ??”என்று கேட்டான்.

ஆஞ்சலோவுக்கு கண்ணில் நீர் வந்து விட்டது.”பயப்படாதே,நான் விளம்பரம் செய்தல், ஓடர்களை பெற்று வாரது தொட்டு வெளி வேலைகள் எல்லாவற்றையும்,ஒபீஸ் வேலைகளையும் பார்க்கிறேன்.நீங்கள் இருவரும் மோட்டர்களை கழற்றிக் கொட்டி திருத்துறதைச் செய்யலாம்”என்றான்.”நீ பொய் சொல்லவில்லை என்று எனக்கு புரிகிறது.வேலை தெரிந்தவர்கள்,மற்ற விசயங்கள் தெரிந்தவர்களோடு சேர்ந்து தொடங்கிறது தான் வியாபாரம்.இப்படித் தான் இங்கே சிறிய பல‌ கம்பனிகள் தோன்றியிருகின்ற‌ன” என்றான்.

“நம்மில் ஒருத்தனுக்கு லைசென்ஸ் இருக்கிறது நல்லம். ரொனால்டோக்கு இருக்கிறது என்கிறாய். போய்க் கதைத்துப் பார்ப்போம்”என்றான்.

” ரொனால்டோடு தான் நான் சமரியாய் இருக்கிறேன். ஞாயிற்றுக் கிழமை வீட்டிலே நிற்கிறவன்.வா!ஞாயிற்று வேலையை நீ தான் வேற நாளுக்கு மாற்ற வேண்டும்.”என்று ஆஞ்சலோ கேட்டான்.

“அதைப் பற்றிக் கவலைப் படாதே, எல்லாம் வெல்லலாம் “என்று அவன் உற்சாகமாக ஆஞ்சலோவின் தோளை தட்டினான்.சமரியாக இருந்ததால் ஆஞ்சலோவும் கொஞ்சப் பணத்தைச் சேர்த்து வைத்திருந்தான்.ஈழத்தமிழர்களைப் போல முழுப்பணத்தையும் ஊருக்கு அனுப்பிற பிரச்சனை அவனுக்கு என்றுமே இருந்ததில்லை.

ரொனால்டோடை விக்கி..சந்தித்தான்.”இப்ப பார்க்கிற வேலையை விட முடியாது.சனி,ஞாயிறுகளில் என்றால் ஒ.கே!”என்று அவனும் சம்மதித்தான்.லைசென்ஸ் இருப்பதால் தனக்கு கூட பங்கு வேண்டும் என அவன் கதைக்கவில்லை.மூவருக்கும் சம பங்கு என முடிவாகியது. அப்படி சிறு கட்டிடத்தில் தொடங்கியது, விக்கி கணணியில் பிடித்து வார ஓடர்களால் மெல்ல மெல்ல வளர்ந்தது. மற்ற வேலைக்குப் போறதையும் குறைத்துக் கொண்டு வந்தார்கள்.ஒரு நாள் மூன்று பேருமே மற்றய வேலையை முழுதாய் விட்டு விட்டார்கள். எல்லாம் ஒரே சீராகவே இயங்கின.

வி.எ.ஆர் கம்பனி நாட்டில் வியாபார மந்தம் ஏற்பட்ட காலத்தில் தனக்னென‌ ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டது.

ஆஞ்சலோவின் சிறு மோட்டர்கள் திருத்துற திறமையைப் பார்த்து “காரின் ஒல்டிநேற்றர்,ஸ்டாட்டர் மோட்டார்,மற்றும் மோட்டார் பகுதிகளின் மீள்கட்டமைக்கிற வேலைகளையும் பெற்று வரவா?”என்று விக்கி கேட்டான்.ஆஞ்சலோவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அப்படித் தொடங்கியது தான் சிறு மோட்டார்ப் பகுதி. ஸ்பானிஸ் மொழியும் தெரிந்த இத்தாலியனான ‘ஜோ’ வலது கரமாக‌ வந்து சேர்ந்தான் . ஜோவும்,ஆஞ்சலோவும் வங்குரோத்தாகும் மோட்டார் தொழிற்சாலைகளிற்கு எல்லாம் சென்று ஏலத்தில் விடப்படும் பாவிக்கக் கூடிய மெசின்களை பார்த்து பார்த்து வாங்கி வந்து சேர்த்தார்கள்.ஜோ அவற்றை ஓட வைப்பதில் திறமைசாலியாக இருந்தான். அவற்றில் சில பிழைத்தாலும்..கூட அதற்குரிய பகுதிகளை.. எங்கையாவது வாங்கி,பொறுத்தி எப்படியாவது ஓட வைத்து விடுவான்.

ஆஞ்சலோவின் நல்ல மனதிற்கு எல்லாமே நல்லபடியாய் இயங்கின.ஜோ,ஸ்பானிஸ் பேசுற சில பெடியள்களை கொண்டு வந்து சேர்த்தான். மேலும் சிலரையும் வேலைக்கு எடுத்தில் சேர்ந்தவர்களே இப்பவிருக்கிற ஆண்களும் ,பெண்களும் .விக்கி, அமெரிக்காவிலிருந்து பெரும் ஓடர்களை எடுத்து வர ‌அந்த சிறுபகுதி மேலும் விரிவடைந்தது.நகரத்திலும், நகரத்திற்கு அண்மையிலும் இருந்த பத்து,பதினைந்து தொழிற்சாலைகளில் பிழைக்கிற பெரும் மோட்டர்கள் அவர்களுக்கு வாடிக்கையாக வந்து கொண்டிருந்தன.

இடம் போதாததால் கட்டிடத்தோடு சேர்ந்திருந்த மற்ற பெரிய கட்டிட‌ அறையையும் வாடகைக்கு எடுத்துக் கொண்டார்கள். பிறகு, அக் கட்டிட தொகுதியையே விலைக்கே வாங்கி விட்டார்கள்.

“என்ன பொஸ்’கோர்ட் கேஸ்’என்று என்னவோ எல்லாம் சொன்னீங்களே..?”என்று பேபி கு றுக்கிட்டான்

அவன்.”உனக்கும் ரொனால்ட் போல எல்லாத்திலும் அவசரம்” என்று சிரித்தான். “விக்கி யார்? என உனக்குத் தெரியாது, நீயும் யார் எனக் கேட்கவில்லை? ரொனால்டோவைத் தெரியும்.வேலை செய்கிறான்.ஆனால் இவன் தான் இந்தக் கூட்டையே உடைத்தவன்”என்றான் துயரத்துடன்.

இவனும் கம்பனியை விட்டு விலகியவன் தானப்பா,இப்ப புதிய ஒப்பந்த்தில் வந்து சேர்ந்திருக்கிறான்” என்றான் பெருமூச்சுடன்.

“விக்கி,வெளியில் சதா திரிகிறவனில்லையா?…பெண் நண்பி ஒருத்தி ஏற்பட்டு விட்டாள்.இங்கத்தைய பெண்கள் எவருமே ராஜ குடும்பத்தினரைப் போல வாழ பிரியப்படுறவர்கள்.விக்கிக்கு,அவள் அழைத்துச் செல்கிற உணவகத்திற்கு எல்லாம் செல்ல வேண்டியிருந்தது.’பில்லுகளும் ‘அந்த மாதிரி ஏறி வந்தன.அவனுடைய வெளிச் செலவுகள் எல்லாவற்றையும் கம்பனியே ஏற்றுக் கொண்டிருந்தது.”அது மிக அதிகம்?”என ரொனால்டோ பேசத் தொடங்கினான்.”அவனாலே தானே இந்த‌ கம்பனியே ஏற்பட்டது,அவனிடம் சொல்லிப் பார்ப்போம்”என்று ஆஞ்சலோ.. பரிய,ரொனால்டோ சிரியஸாக்கி விட்டான்.விக்கியோட முந்திக் கொண்டு நேரடியாகக் கதைத்து விட்டான்.

விக்கி, டேக்கிற் ஈசி டைப் !

அவனால் நண்பியை விட்டு விலக முடியவில்லை.”ஆஞ்சலோ,சொத்தை மூன்றாகப் பிரித்து என்ர பங்கை எடுத்துக் கொள்கிறேன். நீங்கரிருவரும் சேர்ந்து வெற்றிகரமாக‌ நடத்துங்கள்”என்று தெரிவித்தான்.

அந்த நேரம் கெட்டகாலம் ரொனால்டோவுக்கும் ஒரு பிரச்சனை வந்ததது.இத்தாலியிலிருந்த மூதாதையர் வீட்டை ஈட்டுக்கு வைத்தே …அவன் இங்கே வந்திருந்தான்.அது ‘கை’விட்டு விடும் போல நெருக்கடி ஏற்பட்டிருந்தது.அவனுக்கும் அவசரமாக பணம் தேவைப்பட்டது”நானும் பிரிகிறேன் என்ரப் பங்கைத் தா”என்று கேட்டான். “விக்கி,ரொனால்டோ நாம் கோர்ட்டுகுப் போய் பிரிய வேண்டாம்.கம்பனியை மதிப்பீடு செய்து நான் வாங்கிக் கொள்கிறப் பணத்தையே நீயும் வாங்கிக் கொள்,உன்னுடைய லைசென்சுக்கு என்று வேறயாக எல்லாம் பணத்தைக் கேட்காதே? என்றான்,அவனும் ஒப்புக் கொண்டான்”

“அப்ப, விக்கி, நீ ஏன் பிரிகிறாய்? என்னோடு நில்லன்.உன்ர செலவை கம்பனி ஏற்கும்”என்று ஆஞ்சலோ தடுத்துப் பார்த்தான்.விக்கி சிரித்தான்.

” அது பிசாசுச் செலவு!.கொஞ்ச நாளுக்கு இந்தப் பணத்தில் ஜாலியாக இருந்து பார்க்கிறேன்.பிறகு அவள் நோர்மலுக்கு வந்து விடுவாள் என்று நினைக்கிறேன்.ஆஞ்சலோ,நீ கவலைப் படாதே,என்ர நண்பன் ‘பீற்றரை’க் கூட்டி வாரன்.அவன் பங்குதாரனாக எல்லாம் வர மாட்டான்.நீ சம்பளமும்,கமிசனும் கொடுத்து சேல்ஸ் மனேஜராக வைத்திரு.அவன் உன்னை எந்த காலத்திலும் கை விட மாட்டான்.”என்று சொன்னான்.

பீற்றர், அவனைப் போல‌ ஜாலி டைப் இல்லை.குடும்ப சந்தோசம் என இருப்பவ‌ன்.கம்பனிக்கு நல்லதென விக்கியே கோர்ட்டுக்குச் செல்லாமல் தெரிந்த வழக்கறிஞர் ஒருவரை அழைத்து வந்து பங்கை பிரித்தான். அதேயளவுப் பணம் ரொனால்டாவிற்கும் கொடுக்கப் பட்டது. நாங்கள் என்னென்னவோ எல்லாம் கனவுகள் காண்போம்.வாழ்க்கைச் சுழல் வேற விதமாக ….கவிழ்த்து விடும்.ஒரு ‘கப் விஸ்கி அடிக்கிறவர்களை இரண்டு கப் அடிக்க வைத்து விடும். ஒரே நாளிலே வேதாந்தியாக மாறி விடுவோம்.நண்பனே என்ற‌ சொல் கூட “மை சன்…”என குழறிக் கொண்டு வருகிற தில்லாங்கடிகளை எல்லாம் பார்க்கலாம்.தீவிரவாதியாக திரிந்த அரவிந்தர் ,அரவிந்த பரமஹம்சராகி விட வில்லையா?பிறகு,பிரித்தானியர் அவரை கது செய்வதா,விடுவதா?என தலையை பிய்த்துக் கொண்டிருந்தார்கள்? இவன் வாழ்விலும் இப்படி ஒரு சங்கடம். ஒரு சடுதியான திருப்பம்.கொஞ்ச நாளைக்குப் பிறகு அவனே எதிர்பாராது நண்பியும் …பிரிந்து சென்று விட்டாள். அவனுக்கு எல்லாமே அலுத்துப் போய் விட்டன.

“என்ர ஊர் பிர்ஸ்பேர்க்கிற்கே போகிறேன்” என்று ஓரேயடியாய்ப் போய் விட்டான்.இங்கால பக்கம் வந்தால் எங்க வீட்டுக்கு கட்டாயம் வருவான்.” என்றான்.ஆஞ்சலோவின் பேச்சில் அவன் மேல் இருக்கிற ஆழ்ந்த நன்றியைக் காண்கிறான்.

பீற்றர், ‘எப்படியும் ஜோனை தன்ர இடத்திற்கு… வேலைக்கு பார்க்க பழக்கி விடுவான் என்றே பேபிக்குப் பட்டது’.

ஆஞ்சலோ ,“பாரேன், நானே கிழவனாய் போய்க் கொண்டிருக்கிறேன்.விக்கிக்கு என்னை விட ஆறு,ஏழு வயசு கூட.என்னை விட கிழவன்!” என்று கிழச் சிரிப்பு சிரித்தான்.

‘ ஜோ’ வந்து .. ஏதோ சிக்கலான பிரச்சனையைத் தீர்ப்பதற்காக‌ ஆஞ்சலோவை இழுத்துக் கொண்டு போனான். இப்ப அவனுக்கு காதிலே கத்தித் தான் சொல்ல வேண்டும்.ஜோ கத்திச் சொல்ல பேபி தன் காதை பொத்திக் கொண்டான்..உனக்கும் ஒரு நாள் என் நிலமை வரும்” என சிரித்து விட்டுப் போனான்.

ஆஞ்சலோ பெரும் பாலும் இவர்களுடன் இருந்தாலும் அப்பப்ப மற்றப் பகுதியிலும் போய் வேலை செய்பவன் தானே. சில வேளை திரும்பி வருவான்.பேபிக்கு கொடுத்த வேலையைத் தான் பார்ப்பான். முடித்து விட்டால்..சொல்லி விட்டு போய் விடலாம்.ஆஞ்சலோ,அவனுடைய கார்ட்டை எடுத்து முழு நேரத்தையும் குறித்து இனிசலைப் (கையெழுத்து)போட்டு விடுவான்.ஒரு ஸ்கிள் தொழிலாளி என்பதால் அந்த சலுகையை செய்தான். அவனே ‌ கூட ஒரு ஸ்கிள் தொழிலாளியாகத் தானே இருக்கிறான்.

எனவே, தன்னோட ஒத்தவர்கள் சமம் .பேபிக்கு அவன் முதல்லேயிருந்து நெறிப்படுத்தியவன். இருக்கலாம்., ஆனால், இப்ப , அவன் ஆஞ்சலோவிற்கே கற்றுக் கொடுக்கக் கூடியவன்.எனவே,மரியாதை வேறு காட்டினான் ஒருத்தருக்கு செய்யிற உதவியை நன்றியை எதிர்ப்பார்த்து எப்பவும் செய்யக் கூடாது என இத்தாலிக் கீதையிலே சொல்லி இருக்கிறது.

இத்தாலியிலே கூட ‘கர்ணன் மாதிரிக்கதை’ ஒன்று இருக்கிறது.சிறிலங்காவில் இருக்கிற சிங்கக் கதைத் தோரணையில் அங்கேயும் தோரணம் எல்லாம் கட்டப்பட்ட புராணக் கதை.,நகரத்தில், அதில் இடம் பெறுகிற‌ “ஒநாய்யிடம் பால் குடிக்கிற இரு குழந்தைகளின் சிலைகள்” வைக்கப்பட்டிருக்கின்றன‌.

மகாபாரதத்தில்,பாண்டு,திருதராட்டினன்…என இரு சகோதரர்கள்.கதையில் அண்ணனுக்கு நெஞ்சில் வன்மம்.இங்கேயும் அதே மாதிரி இரு சகோதரர்கள் கதை.

செவ்வாய்க்கிரகத்து மகனும் ட்ராய் நகர இளவரசனுமான ஏனியஸ்….நகரம் அழிய ரோம்முக்கு வருகிறான்.இந்த பழைய நகரங்கள் எல்லாம் இத்தாலியிலே இருக்கின்றன.அங்கே சூரிய,இந்திர,வாயு….என பலரின் புத்திரராக பாண்டுவின் பிள்ளைகளாக பிறந்த பாண்டவர்கள். இத்தாலியக் கதையில் ஏனியஸ் சந்ததியில் ..வந்த நுபிடர்,அமுனியஸ் சகோதரர்களிக்கிடையில் பாண்டு,திருடராட்டினன்..போல குழப்பங்கள்.இங்கே அமிலியஸ் நுபிடரைத் துரத்தி விடுகிறான்.அவன் மகள் சிவ்வியாவை தனிமைச் சிறையில் வேறு அடைத்து வைக்கிறான்.அவள் வாரிசு,அரசிருக்கைக்கு உரிமை கோறுவான்… என விலக்கல்.

இவை எல்லாம் கிரிஸ்துக்கு 600 ஆண்டுகளிற்கு முதல் நடக்கின்றன.நீண்ட பழைய காலம்.விதி வழி வரலாறு தொடர்கிறது. சிவ்வியாவிற்கும் செவ்வாய்க்கிரக அதிபதியின் அனுக்கிரக்கத்தால் இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றனர்.ஜேசு பிறந்ததும்…இப்படி ஒரு தெய்வ அனுக்கிரக்கதினால் தான்.கர்ணன்,பாண்டவர்கள் பிறக்கிறதும் இப்படியே தெய்வ அனுக்கிரக்கதினால் தான்.இங்கேயும் இப்படியே.சகோதரன் பேரனைகளைக் கொல்லச் சொல்லி அமுலியஸ் தனது பணியாள் பாலஸ்டுலஸிடம் குழந்தைகளை கொடுக்கிறான்.அவன் சிறிது இரக்குமுற்று கர்ணனை வைத்து நீரில் விட்டது போல, இவர்களையும் சிறிய மிதவையில் பைபர் நதியில் விட்டு “கொன்று விட்டேன்”என பொய் சொல்கிறான் . அரசனுக்கு உண்மை தெரிந்தால் தலை உருளும்.குழந்தைகளைக் கொல்ல எவருக்கு மனம் வரும்.எல்லாரும் என்ன சிறிலங்கா,இனவாதச் சிங்களவர்களா?அவர்களுடைய சிங்கக் கதை கூட மதங்கள் அற்ற பழையக் காலத்தில் நிலவிய கர்ணபரம்பரைக் கதைகளில் ஒன்றாக இருக்கலாம்.நம்ப முடியாத புராணக் கதைகளிற்கெல்லாம் ஊற்றுகள் அவை தானே.புத்தர் சிலைகளை வைப்பவர்கள் நாளைச் சிங்கச் சிலைகளையும் முட்டாள்தனமான வைத்துக் கொண்டு திரியப் போறார்கள்.அவற்றை நாளை,பிரித்தானியர், அவர்களுடைய ராஜப் பகுதிகள் என வளைத்துப் போட்டாலும் சிரிப்பதற்கு இல்லை.

குழந்தைகள் கரை யில் ஒதுங்க ஒநாய் ஒன்று தாய்மையால் உந்தப்பட்டு அவர்களை ஏற்று(எடுத்து) வளர்க்கின்றது. அந்த‌ ஒநாய்யிட‌ம் பால் குடிக்கிற சிலையை ….இத்தாலியில் நகர மத்தியில் அழகாக வைத்திருக்கிறார்கள்.அதன் கதை ….பாம்பு வால் கணக்கில் மேலும் நீள்கிறது.அதில் ரோமுலஸ் என்ற குழந்தையே ..பிறகு ரோமாபுரி என்ற …நகரத்தை ஸ்தாபித்ததாகச் சொல்கிறது. மற்றக் குழந்தைக்கு என்ன நேர்ந்தது? அதீத சகோரப்பாசம்,கொன்று விடுகிறது.

ஒரே பாரம்பரியக் கதைகளை தாம் எங்கும் !

எல்லாரும் தம், தம் சமூகக் கதைகளாக்கி இஸ்டப்படி சேர்த்து ,கோர்த்து…. மத, கதைகளாக்கி விடுகிறார்கள் போலவே இருக்கின்றன‌.உண்மைகளை எரிப்பதற்காகத் தான் காலாகாலமாக நூலகங்கள் எரிகின்றன‌,நூல்கள்,கோப்புக்கள் எல்லாம் எரிகின்றன.

கீதைக் கதையும் அங்கேயும், அவர்கள் மூலத்திலிருந்தும் கூட வந்திருக்கலாம். இத்தாலிய மொழியில் கதைப் புத்தகங்கள் வாசிப்பவனாக ஆஞ்சலோ இருந்திருக்கிறான்.அவனுடைய நல்ல குணங்களிற்கு ஊற்றுக்கண் இருக்கத் தானே வேணும் .

பேபியை தனியே விட்டால்..அவனும் தனக்குள்ளே என்னென்னவோ எல்லாம் சிந்தித்துக் கொண்டே இருப்பான். ஆனால் இவனைப் போல இலக்கிய ரீதியாக இருக்காது என மட்டும் துணிந்து சொல்லலாம்.நம்மவர்களின் வாசிப்புப் பழக்கம் தானே தெரிந்த விசயம்..ஆனால்,வேலையில் உள்ள கவனத்தை சிதற விட மாட்டான்.ஆஞ்சலோவிடமிருந்து கற்றது தான்.இருந்தாலும் ஆஞ்சலோவை விட ரொனால்டோவே அவனோடு வேலை காரணமாக கூடுதலாகப் பழகிறது ஏற்படுகிறது.

.ஆஞ்சலோவும்,அவனும் தந்தை மகன் உறவு என்றால்,ரொனால்டோ நண்பன் போல விளங்கிக் கதைக்கிறான்.சிலவேளை, அவன் தனது ஆசைகளைக் கூட அளந்து கொண்டிருப்பான்.”பேபி,நீ என்ன சொல்றே?”என்று கேட்டுக் கொண்டும் இருப்பான். இடைக்கிடை அவனுடைய ஆலோசனைகளையும் கேட்பான்.பல தடவை பேபிட ஞாயத்தை அவன் ஏற்றுக் கொண்டுமிருக்கிறான்’தன்ர நினப்பு பிழை என்றால் அதை சரி எனச் சாதிக்கிற கர்வம் அவனிடமு‌ம் துப்பரவாக இருக்கவில்லை.

“நான் அதை கவனிக்காமல் விட்டு விட்டேன்.கனவு காணு என்று தானே மைக்கல் ஏஞ்சலோ கூறுகிறான்,நான் காண்கிறேன்”என்று தனது அறுவைக் குறித்துச் சொல்லிச் சிரிப்பான்.ஆஞ்சலோ இருக்கிற போது அந்த அலட்டல்கள் கட்டுப்பாட்டிலே இருக்கும்.

‘ஆரம்ப கூட்டை உடைத்தவன்’என்ற வருத்தம் ரொனால்டோ மீது ஆஞ்சலோவுக்கு உறுத்தினாலும் அவனும் இத்தாலியன் என்ற நினைப்பு இருக்கவே செய்தது.தவிர சிறு வயதிலிருந்தே அவனைத் தெரியும்.இந்த நாட்டுக்கு வந்த போது,ஏற்கனவே வந்திருந்த ரொனால்டோவே”நீ எங்களோட சமரியாக தங்கு,அப்பத் தான் கொஞ்சம் பணத்தை சேர்க்க முடியும்”என்று வழி காட்டி உதவியவன்.இத்தாலியிலே ரொனால்டோ வசதியானவன்,கல்லூரியில் முறையாக படித்து ..தேறினவன்.ஆஞ்சலோவுக்கு ..அந்த படிப்பெல்லாம் படிக்க வசதி இருக்கவில்லை.வெறும் அனுபவப் படிப்பு தான்.

பியர் தான் அவனுடைய ஓரே ஆசிரியர்.லைசென்ஸ் இல்லாத படிப்பு.அந்த வேறுபாடு ஊரிலே அவனுக்கும் ரொனால்டோவுக்கும் இடையில் நெடுகவே இருந்தது.நம்மூரில் கம்பஸில் படித்தவனுக்கும்,தொழிற்னுட்பக் கல்லூரியில் படித்தவனுக்கும் உள்ள‌து போன்றது.

ரொனால்டோவுக்கு உள்ள மதிப்பு அவனுக்கு இல்லை தான்..இருந்தாலும், குறைந்த சம்பளத்தில் வேலையை முழுமையாக, ஒழுங்காகக் கற்று கொண்டவன்.அவனுக்கு மட்டுமே தெரிந்த திறமை. அந்த மன இறக்கம் அவன் மனசிலும் இலேசில் இறங்கி விடக் கூடியதில்லை

ரொனால்டோ மேல் மரியாதை தொடர்ந்து இருக்கவே செய்தது. இப்போது இருவருமே மணமுடித்த நிலையில் , எல்லாமே மாறிவிட்டிருந்தன‌முந்திய மாதிரி சமரி நிலையை நினைத்துப் பார்க்கக் கூட‌ முடியாது, தனித்,தனியே பிள்ளை ,குட்டிகளுடன் இருந்தார்கள். இங்கே இருக்கிற‌ காலம் ஊரிலே இருப்பதைப் போலவா நட‌க்கிறது? விரைவாக ஓடி விடுகிறதே !.

ஊருக்குப் போய் மீள திரும்பி வந்த ரொனால்டோவிற்கு வேலை லேசிலே கிடைக்கவில்லை.அலைந்து திரிந்து சோர்ந்து வாழ்வே மாயம் பாடிக் கொண்டிருந்தான். ஒரு தடவை ஆஞ்சலோவை ,டிம்கொற்றனில் (தேனீர் கடையில்)சந்தித்த போது,”உனக்கு விருப்பம் என்றால் என்ற கம்பனியிலே வந்து சம்பளத்துக்கு வேலை செய்யன் !வேலையில் ஒரு கமிசனும் தாரேன்”என்று அழைத்தான்.ரொனால்டோ தானாக் கேட்க மாட்டான் என்று தெரிந்த, ஆஞ்சலோ, அவனை கால்வாசி பங்கு தாரனாக்கிக் கொண்டான். பந்தா இல்லாது சேர்ந்த அவனின் எப்பவோ இருந்த‌ நல்ல குணம் ஒன்று இப்ப வந்து சேர்க்கிறதில்லையா?நாம் நல்லது செய்தால்…தேடி வந்து உதவி செய்தும். புண்ணியமும் கூட ஒரு காப்புறுதி தான். சிங்களவர் கெட்டப் பேரை சம்பாதித்துக் கொண்டே போகிறார்கள்.ஏனெனில் அவர்கள் புண்ணியம் செய்யவில்லை.

வெளிநாடு என்றால் வராதவர்களிற்கு சொகுசு’ எனத் தெரிய‌… என்னென்னவோ எல்லாம் கற்பனை செய்து கொள்கிறார்கள்,

ஆனால்,வெளிநாடு எமக்கிருக்கும் எந்த உடனடிப் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க வல்லதும் இல்லை.அடிமட்டத்தில் எல்லாம் வேலை செய்ய வைத்து, உடம்பையும் கெடுத்து,அடிமை போல உழல வைத்தும் விடுகிற‌து. .அதிலே, இருந்து வெளிய வரா விட்டால்…அப்படியே இருக்க வேண்டியது தான்.அப்படி உதிர்ந்தவர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். சில பூக்கள் தானே மலர்கின்றன.பல பூக்கள் எனோ உதிர்கின்றன. பியரும் ,சினிமாப் பாட்டுகளும் தான் தாலாட்டுக்கள் .

ஸ்கிள் போன்ற தகுதியுடையவனுக்கும் சரி , உடனடியாக பழம் பழுத்து விடுவதில்லை.நாடும்,,நகரமும் செலவுடன் கூடிய பரீட்சைகளை.. புதிதாக வைக்கிறது. இங்கிலாந்தின் ஒரு குழந்தையான இந்த நாட்டுக்கு,அங்கே படித்து தொழில் தக‌மை பெற்றிருந்தாலும்கல்விப் பத்திரங்கள் மதிப்பீடு செய்யப்படுவதும்,,இங்கேயும் இவர்கள் வைக்கிற பரீட்சையிலும் தேறினாலே… போல.சூதாடுற வாய்ப்பு வழங்கப்படுகிறது. இப்படி சுயமாக பணத்தை வைத்து ஆடுற ஆட்ட மும் லேசானதில்லை. விடாக்கண்டர்களே வாகை சூடுகிறார்கள். துணிந்தவர்களிற்கே உலகம் !

சிலர் , அதற்கேப் பணத்தை சேர்க்க முடியாமல் போராடி , களைத்து சோர்ந்து முயற்சியை கைவிட்டு விடுகிறார்கள்.தேறினாலும் சங்கிலித் தொடர் போல சோதனை மேல் சோதனைகள் இருக்கின்றனவே .பிறகும் ஒரு குழுவின் முன்னால் கேள்விகளுக்கு சரிவர, திருப்தியான பதில் அளிக்கா விட்டால் அரோகரா தான்.

இவையெல்லாம் ரொனல்டோவைப் போல‌ மேல் படிப்பு படித்தவர்களின் நிலை.

இவர்கள் நிலைஇயே இப்படி என்றால்,ஆஞ்சலோ போன்றவர்களை யாருமே கவனத்தில் எடுப்பதே இல்லை.இவர்கள் சுயமாக வெளிக்கிட்டு வியாபாரத்தைக் கட்டிக் கொண்டாலன்றி சிமார்ட்டாக வாழவே முடியாது.விக்கி என்ற தடி,அவன் கால்களில் ஊன்ற உதவினான்.அப்படி யாராவது ஒருத்தர் எப்பவுமே தெரிந்தவர்களை ,தங்களுக்குத் தெரிந்த ஸ்கிள்ளை கற்பித்தும் கைதூக்கி வேலையில் நல்ல நிலையில் சேர்த்து விடவே முயல‌ வேண்டும். விட்டால் தான் உண்டு.

ஏனெனில் நீண்ட காலம் ஒரே நிலையிலே கிடக்கப் போறார்கள்.ஓரளவு நல்ல நிலையை எய்தினாலேயே , மேலும் நீச்சல்லடித்து முன்னேற முடியும்.யூத மக்களே, நுண் வலைஅமைப்பை புரிந்தவர்களாக‌ எல்லா நாடுகளிலும் சிமார்ட்டாக இருக்கிறார்கள். சங்க காலத்தில் தமிழர்கள் .. இதே போல சங்கம் அமைத்து எல்லாம் சாதனைப் படைத்தவர்கள் பலவித நுட்பச் சிந்தனைகளில் எல்லாம் கொடிக் கட்டிப் பறந்தவர்கள்.இன்று,அவர்களின் சிந்தனைகளை வேற்றாட்கள் எடுத்துக் கொள்ள …வாசிப்பறிவு இல்லாதவர்களாக ,லோகாய அனுபவங்கள் அற்றவர்க‌ளாக படிப்பறிவு அற்ற‌வர்களாக‌ சீரழிகிறார்கள்.

மற்ற இனத்தவர்களிற்கும்,இந்த நிலமைதான் . எதுவுமே புரிவதில்லை. இல்லை.தம்தம் நாட்டில் இருப்பது போலவே போட்டியும் ,பொறாமையும்,குழிபறிப்புக்களும் தனிமையும் எனச் சீரழிந்து கொண்டு… அடிமையும், கொத்தடிமையுமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பழைய மானுடா எழுந்து வா !

இப்படிப், படிக்க வேண்டியது நிறையவே கிடக்கின்றன‌ ;இருக்கின்றன.

‘வெற்றி அடைந்து விட்டோம்’என மகிழ்றதுக்கு முன்னாலே கண்நூறு பட்டது போல ஆஞ்சலோவும்,ரொனால்டோவும் கழன்று விட்டார்கள்.அப்பவும் விக்கியே,பீற்றரைச் சேர்த்து அவனை காப்பாற்றி விட்டவன்.ரொனால்டோ திரும்ப வந்து ஒட்டினாலும் தன் நிலை குறித்த வெப்சாரம் எப்பவும் அவன் மனதில் இருந்தது.ஆஞ்சலோ பல படிகள் மேலே இருந்தான் .ஆனால், தக‌மையில் கீழே இருப்பவனாகவே தெரிந்தான்.

அவன் ..லாபம் அடைந்து செழிப்படையிறதைப் பார்க்கிற போது பொறாமைப் படுகிறான்.மனித மனமே இது தானே!எல்லாருக்கும் படிப்பு,வேலை பயிற்சி என்ற சோசலிச முறைகளை முதலாளித்துவம் பின்பற்றுவதில்லையே.

ஏழைக்கு கீழே இறங்கி விட்டவர்கள் போதைப் பொருட்களை கடத்தியும்,கொமிசனைப் பெற்றுக் கொண்டும்,சினிமாவில் வருகிற மாதிரி துவக்குடன் திரியிறதும் சுடுபட்டுக் கொள்றதும்;சாகிறதும் என்ற தலைவிதிகளை வைத்திருக்க வேண்டியது தான். இங்கத்தைய கறுப்பின மக்களின் பேப்பர் செய்திகள் இப்படியாக தானே இருக்கின்றன‌.

பெரிய மோட்டர்களில் ஒரே வேலையை செய்வதாக இருந்தாலும்,சிக்கலான நிலமைகளில் ரொனால்டோவினால் மட்டுமே வெளிய வர முடியும் என்ற யதார்த்தமும் வேறு இருந்தது.அதனால் தனக்கு ‘மேலதிகமான ஒரு பங்கு வேண்டும்’என்ற உட்குரலை இப்ப எல்லாம் ரொனால்டோ கொண்டிருந்தான்.

ஒரு கம்பனியாகவே பதிவு இருந்தது,இன்வென்ர‌ரி (கணக்கு வழக்கு எடுக்கிறது)எடுக்கிற போது ஆஞ்சலோக்கு தலையிடிப்பதாகவே இருந்து கொண்டிருந்தது.பீற்றரிடம்… ஆலோசனை கேட்டான்.”இரண்டு பகுதியாகவே பிரித்து விடன்.ஒன்றுக்கு நீ பொஸ்,மற்றதுக்கு உன்ர மனிசி ‘என பதி.தனித்தனியான‌ கணக்கு வழக்குக‌ள் கொஞ்சம் எளிதாக கூட‌ இருக்கும்”என்றான்.

பீற்றரே, அந்த வேலைகளை எல்லாம் நகரசபைக்கு அலைந்து.. விக்கியைப் போலச் செய்தான்.

ஆஞ்சலோ அதற்குரிய சம்பளம் என ஒரு தொகையை பீற்றரிடம் நீட்ட‌, “நீ தானே எனக்கு சம்பளம் தாரயே,இது வேணாம்”என பெருந்தன்மையாக‌ வாங்க மறுத்தான்.”விக்கியைப் போல நீ பெண் நண்பியோட இவன் திரியிறவனில்லை.குடும்பம் என ஒழுங்காக இருப்பவன்.மனைவி,பிள்ளைகளோடு சந்தோசமாக செலவு செய்யன். போனஸாக நினைத்து வாங்கிக் கொள்”என்று வற்புறுத்த,’சரி ‘என வாங்கிக் கொண்டான்.

ஆண்டுகள் இறக்கைக்கட்டிப் பறந்தன.ஆஞ்சலோ உண்மையிலே கிழவனாகத் தான் போய் விட்டான். காது கேட்கிறது மேலும் மந்தமாகி விட்டது. அங்கே, கொம்பிரசர் ஒன்று விட்டு வேலை செய்கிற போது எழுகிற பெரும் சத்தம் மோசமாக‌..காது கிழியிறது போல இருந்தது. அது அனைவர் காதுகளையும் தான் செவிடாக்கிக் கொண்டிருந்தது

.ஆஞ்சலோவின் குடும்ப வைத்தியர்,அதைச் சுட்டிக் காட்டி சொல்லி இருக்க வேண்டும்.அவன் வேற தொழிற்சாலைகளில் பீற்றரை விட்டு கேட்டறிந்து,கொம்பிரசரைச் சுத்தி வர சீமேந்துக் கற்களை வைத்துக் கட்டி,அறைக்குள் அதை வைத்துப் பூட்டி…சத்தத்தை பெருமளவு குறைத்து விட்டான்.என்ன இப்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்குச் செலவுகள் அதிகம் என்பதால்… பல தொழிற்சாலைகள் தவிர்த்து விடுகின்றன. இதைப் போலவே காபன் வரிகளைச் செலுத்த இவர்கள் பின்னடிக்கிறார்கள். பலதைக் கவனிக்காது விடுவதன் விளைவுகளாக நீர்நிலைகள் நாசமாகி விடுன்றன,காடுகள் அழிகின்றன. தொழிற்சாலைகளில் வேலை செய்கிறவன் காலையில் முகத்தைக் கழுவி மூக்கைச் சீறிச் சிந்தும், போது கறுப்புக் கலரில் சீறலில் இடம் பெற்றிருப்பதைக் காண்கிறான்.கண்ணுக்குத் தெரியாத அந்த தூசி உயிரை எடுக்கக் கூடியளவு பயங்கரமானது.அகதி மனிதன் அற்ப ஆயுசில் இறந்தால் என்ன, நீண்ட ஆயுசில் இறந்தால் என்ன யாருக்குத் தான் கவலை?

. உலக நாடுகளே ‌சூழல் மாசடைதல் ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போட கள்ளம் அடித்துக் கொண்டிருக்கின்றன.முதலாளித்துவாதிகள் எப்பவும் தண்ணீரில் பலகாரம் சுடுகிறவர்கள் தான்.ஆஞ்சலோ பிழைக்க வந்தவன்.’தொழிற்சாலை என்றால் சத்தங்களுடன் கூடியது தான்’என்ற எண்ணம் அவனது மூளைப்பதிவுகளில் இருந்ததே இழுவலுக்கு காரணம். .பத்து பதினைந்து வருசத்திற்குப் பிறகு செய்கிறான்.

சத்தம் குறைந்த பிறகு பேபிக்கு கூட‌ ஒரு புதிய உலகத்தில் இருப்பது போல ஆகா..! என்றிருக்கிறது.ஜோன்னும் இப்ப சிறிது வளர்ந்து விட்டிருந்தான். பீற்றர்,அவனுக்கு தன்னுடைய வேலைகளை ஒரளவு பழக்கி விட்டிருந்தான்.ஆனால், அவனுக்கு இன்னமும் மோட்டர் …திருத்துறதில் விருப்பம் ஏற்படவில்லை. சம்பந்தமேமில்லாத ‘ட்ராவ்ஸ்மன்’கோர்ஸையே படித்திருக்கிறான்.ஆஞ்சலோ, “ஒபிஸ் வேலைகளை பார்க்கிறானே,அதுவே போதும் பீற்றர் “என விட்டு விட்டான். ஜோன்னுக்கு பீற்றரின் வேலைகள் சிரமமாக இருக்கவில்லை.அவனுக்கு ஆங்கிலம் தண்ணிப் பட்டபாடு.கொஞ்சம் நிதானமாக இருந்தால்…நின்று பிடித்து விடுவான்.

கையிக்க ,காலுக்க வந்தவன் ‘அதைச் செய் ,இதைச் செய்’என இப்ப அதிகாரமாகச் சொல்கிறது பேபிக்கு உள்ளுக்க உறுத்துகிறது .எந்த மனிதனுக்கும் ஒரு ஈகோ இருக்கத் தானே செய்யும்!ஆஞ்சலோ சொல்றது வேற,இவன் சொல்றது வேற இல்லையா?. ஆனால், ரொனால்டோவோடு ஜோன் அப்படி எல்லாம் ஓடர் பண்ண மாட்டான்.இத்தாலியன்,தவிர அப்பர் தரவலி என்ற,மரியாதைப் பயம் அவனுக்கு நெடுக இருந்தது.

ஆனால் ,ரொனால்டோ,வேற விதத்தில் குழம்பிக் கொண்டிருந்தான்.ஆஞ்சலோவிற்கு காதிலே பிரச்சனை ஏற்பட்ட பிறகு,அவர்களோட நின்று வேலை செய்வது வெகுவாகக் குறைந்து விட்டிருந்தது.ஒன்று,இரண்டு தடவை வந்து பார்த்து,நின்று அலட்டி விட்டுப் போய் விடுகிறான்.அவன் அங்கே வந்து வேலை செய்வதற்கு…. தனக்கும் என்று ஒரு சம்பளம் போட்டுக் கொண்டே இருக்கிறான்.அவர்களோடு வேலை செய்கிற போது அது ஒரு விசயமாகவே தெரியவில்லை.இரண்டாக பிரித்த பிறகு,அந்த சம்பளத்தை மனைவியின் பேருக்கு மாற்றி விட்டிருந்தான்.அவள் தொழிற்சாலைக்கே வராதவள்வருகிறாள்.இப்ப அவள் பேரிலே இருப்பதால் கிழமையில் அதிசயமாக‌ இரண்டு நாள் பெரிய மோட்டரின் ஒபிஸி ற்கு வந்து இருந்து பில்லுகளைப் பார்த்து விட்டு போய் விடுகிறது ஏற்பட்டிருக்கிறது. இந்த நாடகத்திற்கு பெருந்தொகை போகிறது ரொனாட்டோவைக் குழப்பிக் கொண்டே இருக்கிறது. சுத்து மாத்து வழிகள் எப்பவும் பிரச்சனைகளைக் கொண்டு வாரவையே. !

எல்லாமே பீற்றரின் யோசனை தான். அவளையும் ஒபீசிற்கு வருகிற போது சில வேலைகளைச் செய்து மரியாவிடம் கொடுத்து விட்டு போகும் படி பழக்கி இருந்தான்.இப்ப,ஆஞ்சலோ வேலை செய்வதில்லையே.வேலையே செய்யாமல் அவன் மனைவியிற்கு என்று அந்த‌ சம்பளம் போடப்படுவது என்ன நியாயம் ?,ரொனால்டோ, இப்பவெல்லாம் கம்யூனிஸ்டு போல சிந்திக்கிறான். சுத்தமாகப் பிடிக்கவில்லை.நகரசபையோ ,வரியை (பணத்தை) அறவிடுவது போலில்லாமல் ,பறிப்பது போல மோசமாக மாறிக் கிடக்கிறது.எனவே, எல்லா தொழிற்சாலைகளுமே இப்படி கீயா மாயா என கள்ள‌ வேலைகளை செய்து கொண்டேயிருக்கின்றன‌..

அரசு தான் முதல்க் கள்வன். சட்டத்திற்கு மேல் சட்டத்தைப் ஏற்படுத்தி எங்கும் களவு செய்ய தயங்குவதில்லையே,ஒரு வியாபாரி மட்டும் செய்தால் என்ன ,தலை முழ்கியா விடப் போகிறது?

பிடிபட்டாலும் அவர்களது வக்கீல் மூலமாக சமாளித்து வெளிய‌ வந்து விடுவார்கள். ரொனால்டோ,ஆஞ்சலோவிடம் “அவளுக்கு என்று வேலையாள் சம்பளம் பிரிம்பாய் போடாதே” என்று இரண்டு மூன்று முறை கேட்டுப் பார்த்தான்.

சம்பளத்தை நிறுத்தினால்..லாபம் கொஞ்சம் கூடுதலாகக் காட்டும்.அதிலே கால்வாசிப்பங்கு வரியாய்ப் போய் விடப் போகிறது. நிர்வாகப் பிரச்சனை எங்கே புரியப் போகிறது ?அவனுக்கு கிடைக்கும் பணத்தை கூடுதலாக கேட்க அவன் ஆசைப்படுகிறான் என ஆஞ்சலோ …கவனத்தில் எடுக்கவே இல்லை. எனவே, ரொனால்டோ வேறு சில திட்டங்களை தன்னுள் இரகசியமாய் தீட்ட, ‌ ஆரம்பித்தான்.

பெரும் மோட்டர்களை கொண்டு வார வாடிக்கைக் கம்பனிகள் சுமார் பதினைந்து மட்டிலே இருந்தன.ஒவ்வொன்றுமே பல தொழிலாளர்களைக் கொண்டு இயங்குவன.சில இரண்டு சுற்று வேலையாட்களைக் கொண்டும் இயங்கின.

தொழிற்சாலைகளில் உள்ள மாசுகள்..யந்திரங்களுக்கும் கேடுகளை விளைவிக்கின்றன‌.அதில் ஈரலிப்பும் படிகிற போது குறுக்கு மின் சுற்றோட்டங்கள் ஏற்பட்டு மோட்டரினுள்ளே உள்ள வயர்கள் எரிகின்றன.குறைந்தது ஆறு மாசத்திற்கு ஒரு மோட்டராவது ஒரு தொழிற்சாலையில் பழுதாகும்.,பனிக்குளிரின் ஏற்ற இறக்கம்..வேறு சில காரணங்களும்..மோட்டர்களுக்கு கோவிந்தா பாடுகின்றன‌ .திருத்திய மோட்டர்களை கொண்டு போய் பொறுத்துற போது… ரொனால்டோ ,பல வித ஆலோசனைகளையும் கூறி..என்ன வேலைகளை செய்திருக்கிறோம்..என பலதைக் கதைத்து ‘நல்ல மனிதர்’ என்ற பிம்பத்தை அவர்கள் மனதில் மெல்ல மெல்ல‌ வளர்த்து வந்திருக்கிறான்.

பதினைந்து வாடிக்கையாளர்கள் என்றால் லேசு பட்டதில்லை.அதில் இரண்டொன்று தான் மூடுவிழா நடத்தும்.அரசாங்கமும் சிற்சில சட்டங்களில் சலுகைகளை அளித்தும் .. மூடுபடாதும் பார்த்து கொண்டிருகின்றது.

மூடினால் வேலையில்லாப் பிரச்சனைக் கூடுகின்றது.பொருளாதாரத்திலும் தாக்கம்.தொடர்ந்து ஓடினாலே ,புதுசு,புதிசாய் சிந்தித்து நிறுவனமும் வியாபாரத்தை வளர்க்க முயல்கின்றது.இந்த நாடு,சிறிலங்காவைப் போல முட்டாள் நாடு இல்லை.என்ன பிரச்சனை இருந்தாலும் பொருளாதாரத்தில் கை வைக்கிறதில்லை,பாதுகாக்கவே முயல்கிறது.

தனிக் குடும்ப அங்கத்தவர்களே சந்ததி சந்ததியாக பல வருசங்களாக நடத்துற வியாபார நிறுவனங்கள் கணிசமாகவே இருக்கின்றன.கம்பனிகளில்,தனி மனிதத் தவறுகளால் தான் இய‌க்கமற்று விடுறது எல்லாம் ஏற்படுகின்றன‌.அரசு, எப்பவும் உடந்தையாக இருப்பதில்லை.புதிதாக வியாபாரம் தொடங்கிறவர்களிற்கும் வகுப்புகள் வைத்து அடிப்படையை பலமாக போடுவதற்கும் ஆலோசனைகள் கூறுகின்றன .இருந்தாலும் வரிகள் அறவிடுவதிலும் கறாரா ….இருக்கின்றது.. சிறிலங்காவில் எத்தனை தமிழரின் தொழில் நிறுவனங்கள் எல்லாம் உடைக்கப்பட்டன,எரிக்கப்பட்டன.அவை தாயாரித்த பொருட்கள் யாவும் இன்று வெளிநாடுகளிடமிருந்து அதிக விலைகளில் வாங்கப்படுகின்றன.தொழில் தெரிந்த வல்லுனர்களையும் அனுபவஸ்தர்களையும் ,கொன்றார்கள் ,எரித்தார்கள்.

“இலங்கை எங்கட நாடு,அதிலிருக்கிற அனைவரும் பலமான கைகள்,தூண்கள்,இலங்கையை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன”என்ற சிந்தனைகள் அற்ற வெங்கலாந்திகள் அல்லவா அங்கே இருக்கின்றார்கள்.என்ன தேசியம் பேசுகிறார்கள் என்பது அவர்களிற்குத் தான் வெளிச்சம்.பெரும்பான்மை என்பது பலமில்லை.பெருந்தன்மை என்பது தான் பெரும் பலம். புத்தர் சிலையும்,சிங்கச் சிலையும் கட்டிக் கொண்டு இன்னமும் திருந்தாதவர்களாகவேக் கிடக்கிறார்கள்.

கிருஸ்மஸ் வார நேரங்களில் வாடிக்கையாளர் மனதை குளிர்விக்க, பூப்பாசலும்,ரோஜல் விஸ்கி,வைன் போத்தல்களுடன் புதிய வருசகலண்டரையும்..ஆஞ்சலோவின் பிரதிநிதியாய்,விக்கி நெடுக அவர்களிற்குக் கொடுத்து வாரான்.

அந்தப் பகுதி ரொனால்டோவின் கவனிப்பில் நடக்கிறததால் , ஆஞ்சலோ , விகல்ப்பமில்லாமல்.அவனையே அனுப்பிக் கொண்டிருந்தான். இப்பவே அவனுக்கு நிறையக் கொடுக்கிறான் தானே,எனவே அதிகமாக துள்ள மாட்டான் என நினைக்கிறான்..அவனும் ஆஞ்சலோவிற்கு நிறைய செய்திருக்கிறான் தானே.விக்கி முக்கியமானவனாக இருந்தாலும் ரொனால்டோ இல்லாட்டி..அந்த தொழிற்சாலையே இல்லை தானே ! அந்த நன்றியும் இருக்கிறது.இப்போது தரமான மோட்டர் பகுதிகளை வழங்கின்ற , திருத்துற‌ நிறுவனம் என்ற பெயரைப் பெற்று விட்டிருக்கிறது.

தொழிற்சாலையில் வேலை செய்கிற வேலையாட்களுக்கு கிருஸ்மஸ்க்கு முதல் நாள் ‘பிட்சாவுடன் வேறு சில உணவுப் பொருட்ககளையும் வரவழைத்து ‘பார்ட்டி’ ஒன்று கோலாகலமாக நடைபெறும் நடக்கும்.ஒவ்வொருவருக்கும் சிறிய ரோஜல் விஸ்கி போத்தலும்,கொடுத்து அவர்கள் வருசத்தில் உழைக்கிற மொத்தப் பணத்தில் நாலு வீத விடுமுறைக் கொடுபனவுச் செக்கையும் கொடுப்பா ர்கள் .அப்ப மூடுற தொழிற்சாலை இரண்டு கிழமைக்குப் பிறகு, புது வருசம் பிறந்த பிறகே திறக்கும் .

அந்த விடுமுறை நாட்களிலும் மோட்டர்களை திருத்திக் கொடுக்கணும் என்று வந்தால் ஆஞ்சலோ,பேபியையும்,ரொனால்டோவையும் வேலை செய்யக் கேட்பான்.அவனும் கூட வந்து வேலை செய்வான்.’டீ,சாப்பாடு எல்லாம் வாங்கியும் கொடுப்பான்.ஓவர் டைம்மான பணத்தையும் கையிலே கொடுப்பான்.செக்காகக் கொடுத்தால் அரசாங்கத்திற்கு கணிசமாக வரி கட்ட வேண்டும்..

சட்டரீதியாகப் போனால்… அவர்களுக்கும் வழக்கமான சம்பளத்தை விட அரை மடங்கே அதிகமாக வரும்.

. கையிலே பணமாக கொடுக்கிற போது ஒன்றறை மடங்குச் சம்பளம் அ ப்படியே கிடைக்கிறது.எல்லா நேரங்களிலும் வருவதில்லையே.தவிர்க்க முடியாத சில சந்தர்ப்பங்களிலே அவசியம் என்றாலே தானே ஏற்படுகின்றது.அரசாங்கமும் ..இதை பெரிதாக கண்டுக் கொள்கிறதில்லை.அந்த நேரங்களில் குடித்துப் போட்டு கார் ஓடுவதை தான் நகரக் காவலர்கள் விரும்புவதில்லை.குடியை விற்கிறவரும் வியாபாரிகள் ஆச்சே.அதனால் அங்கேயும் ‘கதவை அடைக்கச் சொல்ல முடியாது.

தன்னுடைய திட்டத்தை ரொனால்டோ பேபியிடமும் கூட சொல்லவில்லை. விடுமுறை எல்லாம் முடிந்த பிறகு ஒரு நாள் ரொனால்டோ வேலைக்கு வரவில்லை.

ஆஞ்சலோ,பேபியோட நின்று வேலை செய்து கொண்டிருந்தான்

,முதல் நாள் இத்தாலிய தொலைகாட்சியில்,சனல் நாலு தொலைகாட்சியை , சிறிலங்காவின் போர்க்குற்றங்களைப் பார்த்து விட்டிருந்தான். ஈராக்கில், ஆவ்கானிஸ்தானில், பாகிஸ்தானில், லிபியாவில், சிரியாவில்,ஏன் பாலஸ்தீனர்களுக்கெதிராக இஸ்ரேல் நடத்துற தொடர்கிற‌ கதையில் எல்லாம் நடக்கிதைறதை தணிக்கைப் படுத்தி, அரசியல்ப் படுத்தி, வெறும் செய்திகளாக ஒரு நிமிசம் , இரண்டு நிமிசம் என காட்டி விட்டு விடுவார்கள் .பாதிக்கப்படுறவர்களைப் பற்றி சிந்திக்க முதலே தீ விபத்தை, சுனாமியை..இப்படி எதையாவது காட்டி செய்தியை திசை திருப்பியும் விடுவார்கள்.அதன் அழுத்தத்தை நிதானித்து உறைக்கும்படி காட்டப் பிரியப்படுவதில்லை.

வழமைக்கு மாறாக‌ ஈழ அனர்த்தத்தை ரத்தத்தை உறையும்படி காட்டி இருந்தார்கள்.ஒரு தடவைக்கு மேல் அதை பார்க்க எவருக்குமே மனத் தைரியம் வேண்டும்.

.பார்த்த ஆஞ்சலோவிற்கு மனநிலை பாதிக்கப் பட்டு விட்டிருந்தது .ஆஞ்சலோவிற்கு அதே சதா கண்ணில் ஓடிக் கொண்டிருக்க வேண்டும் !

தீடிரென‌ “முந்தியெல்லாம் எனக்கு புத்த சமயத்திலே நிறைய விருப்பம் இருந்தது. இப்ப வெறுக்க வைத்து விட்டார்களே”என்றான்.பேபிக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

“உன்ர நாட்டிலே உன்னுடைய பகுதிக்கு போய் வரக் கூடியதாக இருக்கிறதா?” என்று ஆதரவாகக் கேட்ட போதே,’சனல் நாலை’எங்கயோ..பார்த்திருக்கிறான் என்பது புரிந்தது.

எங்கட வீட்டையும் ,காணியையும் வீசேச பாதுகாப்புப் பகுதி என பிடித்துக் கொண்டு விட்டார்கள்.எங்களுக்கு அயல் அட்டையில் இருந்தவர் நிலையும் அது தான்.அரசாங்கம் பிடுங்கிக் கொண்ட காணிகள் என்றால் அரோகரா தான்! திரும்பக் கிடைக்கப் போவதில்லை.அதிலே, ராணுவம், சிங்களவரை வேறு குடியேற்றி விட்டது”என்றான் சோகமாக..

“ஜீசஸ் கிரைஸ்”என்றவன்,தொடர்ந்து ஆதரவாக “ஜீசஸ் சொல்கிறார்,தோற்கடிக்கப் பட்ட இடத்திலேயே,உங்களையும் ஜெயிக்கவும் வைப்பார்’என்று,பைபிலே இருக்கிறது,கவலைப்படாதே”என்றான்.தொடர்ந்து”உங்கட நிலத்தை யாருமே பிடுங்க முடியாது,என்றோ ஒரு நாள் உங்களுக்கு திரும்ப வந்து கிடைத்தே தீரும்.இப்ப சிறிலங்கா, போர்க் குற்றவாளியாய் நல்லாய் மாட்டுப் பட்டு விட்டது,இனி என்ன வார்த்தை ஜாலம் கதைத்தாலும் இதிலிருந்து வெளியே வர முடியாது.வரலாற்றில்,முகத்தில் கரி பூசிய இனமாகவே இருக்கும்”. என்றான்.

பேபி விரக்தியாய் சிரித்தான்.”அவர்களுக்கு சூடு சொரணையே கிடையாது என நிரூபித்த நீண்ட வரலாறு இருக்கிறது”. என்றான் . தொடர்ந்து”எம் அரசியல் தலைவர்களுடன் பல தடவைகள் சமாதான உடன்படிக்கைகள் எழுதி இருக்கிறார்கள்.மையின் ஈரம் காய முதலே கிழித்தும் எறிந்து விட்டிருக்கிறார்கள்.திருந்துற சனம் கிடையாது அது!”என்றான்.

ஆஞ்சலோ”நீ பைபிளையும் ஒரு தடவை எடுத்து வாசி ! உன்ர வார்த்தையிலே ‘மாற்றமே’வராது என்ற நிலைப்பாடு தான் இருக்கிறது. நம்பு.இன்றைக்கு நம்புறது தான் நாளைக்கு நடக்கிறது.எங்கட ஆட்கள் கூட தான் இத்தாலி உருவாகும் என நம்பவில்லை.இப்ப பார் இத்தாலி தலை நிமிர்ந்து நிற்கிறது. !நாளைக்கு நடக்கப் போவதை உங்கட மகிந்தாவாலே கூட கேஸியம் சொல்ல முடியாது தெரியுமா உனக்கு” என்றான்..

பேபி அவன் நியாயத்தை ஒப்புக் கொண்டான். ஒரு விடுதலை வீரனைப் போல! “உங்களுக்கு ஒரு நாள் விடியல் வரத் தான் போகிறது.தர்மம் உங்கட பக்கம் இருப்பதால்…ஒரு நாள் எப்படியும் வென்றே தீரும்.நம்பிக்கையை இழக்காதே”என்றான்.தொடர்ந்தான்.

“உனக்குத் தெரியுமா?,இன்றைய அமெரிக்காவிலே இருக்கிற கலிபோர்னியா,நியூ இங்கிலாந்து, டெக்டாஸ்..மாநிலங்கள் உண்மையிலேயே மெக்சிக்கோவினுடையவை என்று, இன்று அமெரிக்காவின் மாநிலங்களாக‌. இருக்கின்றன‌.போரில் வெற்றி பெற்றால் அபகரிக்கலாம் என்ற விதி ஒருநாள் சர்வ ஜன வாக்கெடுப்புக்கு போகவே போகின்றது. ஜனநாயகத்தின் பேரில் மீள மெக்சிக்கோவிற்கு ஒரு நாள் கிடைக்கவே போகிறது . அதே போல உங்களிற்கும் நடக்கும்.

உங்களுடைய தமிழிழ மாநிலம்,இந்தியாவின் ஒரு மாநிலமாக சேர்ரதுக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.இந்திய இலங்கை ஒப்பந்தப்படி வடக்கு,கிழக்கில் சர்வ ஜன வாக்கெடுப்பு நடத்தி இணையிறதா இல்லையா? என்றும், இந்தியாவுடன் சேர்ரதுவா என்றும் கூட முடிவெடுக்கலாம்.இன்றைய கிரீமியா முடிவெடுத்தது போல‌, …என்ற சரத்து இருக்கிறது.உங்களோட செய்த ஒப்பந்த்தை கிழித்து எறிந்தது போல சிறிலங்காவால் இதை ஒன்றும் செய்ய முடியாது இருந்து பாரேன்..இந்தியா மெளனம் காப்பதை பிழையாக எடுத்துக் கொள்கிறார்கள்.பூமாலை ஒபரேசன் போல இந்தியா நினைத்தால்..பல ஒபரேசன் செய்ய முடியும்.,அந்த சர்வஜன வாக்கெடுப்பை வெளிநாடுகளிலும் கூட‌ ஈழத்தமிழர்களிடம் ஒரு வாக்கெடுப்பை நடத்தி,தமிழிழ மாநிலமாக‌ ,சிறிலங்காவை விட்டு இந்தியாவோடு சேர விருப்பமா?என க் கூட‌ நடத்த முடியும்.ஜக்கியநாடுகள் சபையூடாக வல்லரசுகள் அரசியல் நடத்த முயல்வதையும் தடுத்து நிறுத்த‌, காப்பாற்ற இருக்கிற‌ ஒரு வழி. இந்தியாவின் மாநிலமாவது தான். ஆஞ்சலோவிற்கு இந்தியாவில் நம்பிக்கை.

ஈழத் தமிழர்களிற் கோ இந்தியாவில் நம்பிக்கை இல்லை. ஆனால்,சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை காப்பாற்றுற அரசாங்கமில்லை,காவு எடுக்கிற அரசாங்கம் தான்!

தனி நாடாகிறதும் கூட உங்களுக்குக் நல்லதில்லை.ராணுவச்செலவு.., பிசாசுச் செலவு.

இந்த வல்லரசுகள் கழித்த குப்பை ஆயுதங்களை எல்லாம் விற்று விலையாக்க உங்கள் தலையிலே கட்டுவார்கள். வெறும் விரயச் செலவுகள்.ஒவ்வொரு குட்டி நாடுகளும் குட்டிச் சுவராவதும்,முட்டாள் தனமான வறுமையில் சீரழிவதும் இவற்றால் தான்.

சிறிலங்கா உண்மையிலே வளமான தீவு.ஏன்,இங்கத்தையக் காசு அங்கே நூறு ரூபா, நூற்றிஜம்பது ரூபா என்று எகிறிப் போய்க் கிடப்பது எதனால்?இந்த குபைகளை வாங்கிக் கட்டிக் கொண்டதால் தான்.தடை செய்யப் பட்ட ஆயுதங்கள்,வெளியில் விற்கவே முடியாது.ஆனால், சிறிலங்கா வாங்கி இருக்கிறது.அதனாலே, போர்க்குற்றவாளி என்ற அவமானம்.கேள்வி கேட்பவர்கள் அதை விற்றவர்கள் தான்.அவர்களுக்கு இரண்டு மடங்கு ஆதாயம்.இதையெல்லாம் விளங்கிய லத்தின் அமெரிக்காவே சிறிலங்காவிற்கு சார்ப்பாக நிற்கிறது,பாரன் முரணை?

இந்தியா மற்ற மாநிலங்களைப் போல உங்களையும் இணைத்துக் கொண்டால் ..நீங்கள் காப்பாற்றப்படுவிர்கள்.இந்த வழி இந்தியாவிற்கும் உடன்பாடனதாகவே இருக்கும்.அமெரிக்கா,பிரித்தானியா போன்ற ஜரோப்பியா நாடுகளை விட இந்தியா நேர்மையாக நடக்கிற நாடு.இந்தியாவைக் குறித்து மனதின் ஒரு மூலையிலே பயத்தைக் கட்டிக் கொண்டு தான் இந்த நாடுகள் எல்லாம் இந்தியாவை பிரச்சனைகளில் சிக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன.”

இவன் என்ன புதுக் கதை சொல்கிறான்?புலிகள் வளர்த்து விட்ட இந்திய வெறுப்பு இருகிறதே.. !,இந்தியா வேறு காஸ்மீர் பிரசனையால் நேர்மையாக நடக்க முடியாமல் தள்ளாடுகிறதே? சாத்தியமாகுமா? ..பேபி குழம்பிப் போனான்.

பிரான்சுக்கு வெளிநாடுகளில் மாநிலங்கள் இருப்பதாக பேபியும் எதிலேயோ வாசித்த ஞாபகம் இருக்கிறது.பிரான்சு,நட்புநாடுகளில் பிரெஞ்சு பேசும் பெரும்பான்மையுடைய பகுதிகளை ‘அப்படியெல்லாம் கேட்டு சங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள்,அந்த நாட்டோடு இறைமையுடன் இருங்கள்’எனக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

ஆஞ்சலோ அழுத்தம் திருத்தமாக “தமிழீழமும் இந்தியாவின் ஒரு மாநிலமானால் தமிழர்கள் கெளரவத்துடன் தலை நிமிர்ந்து வாழ முடியும்,உங்கட வீரத்தையும் இந்திய‌ராணுவத்தில் காட்ட முடியும்.”என்றான்!

“நடைமுறைச் சாத்தியமில்லையே”என்று பேபி சிந்தனையுடன் மறுத்தான்.

“இத்தாலி நடைமுறைச் சாத்தியமாகி இருக்கிறதே,எப்படி?”என ஆஞ்சலோ திருப்பிக் கேட்டான். அதோடு இன்னொன்றையும் சொன்னான்.

“இந்தியா, அணிசேராக் கொள்கைக்காக தயங்கிக் கொண்டிருக்கிறது.நீங்கள் மனசு வைத்தால்,தமிழ் நாடு,உங்களுக்கு தாய் போன்றது தானே,அது முழுமூச்சாக குரல் கொடுக்கும்.சிங்களநாட்டுக்கு பாலம் கட்டுற பாரதியின் கனவும் கூட ஒரு காலத்தில் சாத்தியமாகும்”என்றான்.ஆஞ்சலோவும் ஒரு பிரேமதாசா தான்.ஆங்கிலம் தெரியாது என்ற தாக்கத்தால்,தானாகப் படித்து ஈழத்து செய்திகளை எல்லாம் தீவிரமாக படித்து வருகிறான் போல இருக்கிறது.பாரதியை..படிக்கிறளவுக்கு என்றால்…வாசிப்பு அனுபவம் ஈழத்தமிழர்களை விட அதிகமாகத் தான் இருக்க வேண்டும். இவனுக்கு அமிர்தலிங்கமும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் எனவும் தோன்றியது. அமிர்தலிங்கம் தான் இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கை எழுதக் காரணமாக இருந்தவர்!,நம்மவர்கள் எழுதி இருந்தால்,கிழித்தெறிந்து விடுவார்கள் என்று தான் ..அப்படி எழுத வைத்திருப்பாரோ? என்று பேபி நினைக்கிறவன்.புலிகள் அவரை அவசரப்பட்டு கொன்று விட்டார்கள்.இப்ப உயிருடன் இருந்தால்…தமிழர்கள்,பாதுகாப்புடனும் ,கெளரவத்துடனும் ஆஞ்சலோ சொன்ன முறையில் தான் முடியும் என்றால் முழுமூச்சுடன் முயற்சியில் இறங்கி இருப்பாரே!அவரைப் போல சுயநலமில்லாது செயல்படுறவர்கள் இல்லாமல் போய் விட்டார்களே’என்று வருத்தமாக இருந்தது.

பேபிக்கு,ஆஞ்சலோவின் கருத்துக்களை நினைக்க நினைக்க சுகமாக இருந்தன.காலுக்கு கீழே நசுக்கப் படுற எறும்புக் கூட்டம் பெரிய யானையை வீழ்த்த முடியும் என்ற நீதிக் கதை!காலுக்குக் கீழே சுற்றுற சக்கரம் ஒரு நாள் தலைக்கு மேலேயும் வரும்.(நீர்ப் பறவை சினிமாவில் வார வசனம்).சரியாய் தான் இருக்கிறது.’எமக்கும் சுதந்திர மூச்சு விடுற தமிழீழ மாநிலமோ,நிலமோ..ஒரு நாள் கிடைக்கவே போகிறது’என்ற நம்பிக்கை முதல் தடவையாக ஏற்பட்டது.

வீழ்வது என்றால் அதோட எல்லாம் முடிந்து போவதில்லையே,தோல்விகள் தானே…பிறகு வெற்றிகளை சாதிக்க வைத்தன!ஏன் இந்த சிறிய பின்னம் எங்களுக்குப் புரிவதில்லை?உணர்ச்சி வசத்தில் வீழ்ந்து விடுகிறோம்.அதனால் தான் எங்களால் சிந்திக்க முடிவதில்லை என்பது பேபிக்குப் புரிந்தது.ஆஞ்சலோ எங்கட பிரச்சனைக்கு வெளிய இருப்பதால்..தீர்க்க தரிசனமாக பார்க்க முடிகிறது.எங்களால் முடியவில்லை.கைமுனு,தீர்க்க தரிசனமாக அப்படி பார்த்ததால் தான் அநுராதபுரத்தையும்,பொலநறுவையும் எல்லாளனிடமிருந்து மீட்க முடிந்தது.எங்களாலும் முடியும் தான்.

தெளிந்த பார்வையே முதலில் அவசியம். நாமும் அப்படி தீர்க்கதரிசனமாக பார்க்கப் பழக வேண்டும்.இந்த உயிர் வாழ்க்கை மிச்சம் குறுகியது தானே!எப்படியிருந்தாலும் ஒரு பதருக்குச் சமமானது தானே,மொழி,மதமற்ற நிலையில் ஒரு நாள் உதிரத் தானே போகிறோம்.அதையும் வீரர்களாகி கெளரவத்துடன் உதிர்வோமே!அதற்கு ஒரே வழி தயார் படுத்தல்கள் தான் . அச்சமில்லை,அச்சமிலை,அச்சம் என்பதில்லையே!நிச்சியமாக தனக்கு ஒரு நாள் பையித்தியம் பிடிக்கத் தான் போகிறது’அவனுள் இருந்த‌ மனச்சாட்சி சிரித்தது.

இப்படி பல வழிகள் இருந்தாலும்,நம்மவர்களிடையேயும் எழுகிற சிறு சிறு சூறாவளிகளும் ..எமக்கு கிடைக்க விடாமல் தள்ளித் தள்ளி போட்டுக் கொண்டே இருக்கும்.இதெல்லாம் நடக்க இந்தியாவிற்கும் தமிழர்களுக்கும் ஏற்பட்ட பகைமை மாற வேண்டும்.தமிழர்களும் மனிதர்கள் தான் என்ற அனுதாபம் எல்லாம் பிறக்க வேண்டும்.காந்தி பிறந்த நாடு,காந்தியத்தை லேசிலே தொலைத்து விடாது என நம்பலாம்.ஆனால் லஞ்சம்,பிரச்சனைகளில் என இருக்கிற இந்தியாவிற்கு உண்மையான இந்தியா புரியுமா?தெரியுமா??இந்தியாவிலிருந்து ‘மரண தண்டனை முறை’யை எப்ப இருந்து நீக்கி விடுகிறார்களோ..அப்ப தன்னை புரிந்து கொள்ள தொடங்கி விட்டது என்பதை புரிந்து கொள்ளலாம்.காந்திய நாடு அதை வைத்திருப்பது நல்லாவே இல்லை.பிரித்தானியாவின் ஒரு பிள்ளையான கனடாவே அதை துணிச்சலாக நீக்கி வைத்திருக்கிற போது,இந்தியாவால் ஏன் முடியாது!அதை, வைத்திருப்பதாலே இந்தியாவில் பிளவுகள் அதிகரிக்கின்றன. பலவீனம் அடைகிறது.

இவர்களுடைய பகுதியில் கமராவோ,ஒட்டு கேட்கும் கருவியோ இல்லாததால் ரொனால்டோ,எல்லாத்தையும் தயார் படுத்தி விட்டு,பேச ஆரம்பித்தான்.”தனியாய் போய் தொழில் தொடங்க தீர்மானித்து விட்டேன்.எங்களிடம் வார வாடிக்கையாளர்களையும் கேட்டு உறுதிப் படுத்தி விட்டேன்,என்னிடம் கொண்டு வருவதற்கு சம்மதம் என்றிருக்கிறார்கள்.நீயும் என்னோடு வருவாயா?”ஆவலுடன் கேட்டான்.ஜோன்,வேலை வாங்குவது பேபிக்கு பிடிக்கவில்லை என்பதை கவனித்திருந்தான்.நல்லவனான ஆஞ்சலோவை விட்டுப் போறது சரியா?என்ற குரல் உள்ளுக்குள் கேட்டது.’திறமையும்,தகுதியும் உடையவன் தனது உழைப்பை சீப்பாக்குவதை விரும்புவதில்லை என்பதால்..ரொனால்டோ போகிறான்’என்று புரிந்திருந்ததால்..வாய்,அவனை முந்திக் கொண்டு “வாரேன்”என்று விட்டது.மனச்சாட்சி குரல் எழுப்ப முதல்,’தர்மத்துக்கான பாரதப் போரில், கிருஸ்ணர்,அதர்ம வழிகளையும் கையாண்டு போரை வழி நடத்தி இருக்கிறாரே!என்ற பதிலை நினைத்துக் கொண்டான்.மனச்சாட்சி சிரித்தது.

ரொனால்டோ,தான் எடுத்திருந்த கட்டிடத்திற்கும் கூட்டிக் கொண்டு போய் காட்டினான்.பல ஆண்டுகளாக ஆஞ்சலோவைப் போல திவாலாகிப் போன கம்பனிகளின் ஏல விற்பனைக்குச் சென்று ரகசியமாக இயங்கக் கூடிய கருவிகளை எல்லாம் வாங்கி,ஸ்டோரேஜ்ஜில் அறை எடுத்து சேர்த்து வந்திருக்கிறான். அவற்றை எல்லாம் ..கொண்டு வந்து பொறுத்தி விட்டிருந்தான்.நாளைக்கே என்றாலும் வேலையை ஆரம்பிக்க முடியும்.கிருஸ்மஸுக்கு ஒரு கிழமை இருக்கிற போது, ரொனால்டோ “வேலையிலிருந்து நிற்கப் போறேன்.பழைய மின்சார பராமரிப்பு வேலையை பார்க்கப் போறேன்”என்றான்.

ஆஞ்சலோ நம்பவில்லை.அளவெடுப்பது போல பார்த்தான்.அவனால் ஒன்றும் அறிய முடியவில்லை.”சரி “என்று அனுமதித்தான்.பேபியிடம் வந்து “உன்னோடு ..ஏதும் கதைத்தானா?”என்று கேட்டான்.”ஓம் கதைத்தான்”என்றான். இவனோடு கதைத்து என்ன ஆகப் போகிறது என்று நினைத்தானோ, என்னவோ”இனி நீயும் நானும் தான் வேலை செய்ய வேண்டியிருக்கும்.உனக்கும் சம்பளம் கூட்டித் தாரேன்.வேலையைப் பார்”என்று திரும்பினான்.பேபிக்கு உள்ளுக்க குறுகுறுத்தது.

‘பெரிய மனிதன் பெரிய மனிதன் தான்!,எதுவும் கேட்காது விட்டானே,அவனுக்கு அவசரப்பட்டு வாக்கு கொடுத்து விட்டேனா?மறுபடியும் குழம்பினான்.ஒன்றை அடைய வேண்டும் என்றால்,அதற்கு விலை கொடுக்க வேண்டியே இருக்கும்.சுதந்திரமாக வேலை செய்ய வேண்டுமானால் ஆஞ்சலோவிற்கு காட்ட வேண்டிய நன்றியை மறக்கத்தான் வேண்டும்.

தமிழனாய் பிறந்து விட்டானே, தமிழர்களை ஆட்டி வைக்கிற குணம் அவனை மட்டும் விட்டு விடுமா..என்ன?.கிருஸ்மஸ் விடுமுறை எல்லாம் கழிந்து வேலைக்கு திரும்பிய போது “பேபி நானும் வேலையை விட்டு விலகிறேன்” என்று தெரிவித்தான். ஆஞ்சலோவிற்கு ஒன்றுமே விளங்கவில்லை.”நின்று என்ன செய்யப் போகிறாய்?”என்று கேட்டான்.”ரொனால்டோ,புதிய கம்பனி ஒன்று தொடங்கி விட்டான். என்னையும் வந்து வேலை செய்ய சொல்லி கேட்டிருக்கிறான்.அவனோடு வேலை செய்து பழகி விட்டது.நானும் சம்மதித்து விட்டேன்”என்றான்.ஆஞ்சலோ அவனை அளந்து பார்த்தான்.

மகனாய் பழகியவன்.திட்ட மனம் வரவில்லை.ரொனால்டோ ஊர்க்காரன்.அவன் செய்ததிற்கு முன் இவனுடையது ஒன்றுமேயில்லை.”சரி நீ போகலாம்.உன்னுடைய மிச்ச செக்குகளை வந்து பெற்றுக் கொள்”என்றான்.அது தான் ஆஞ்சலோ!

அவனுக்கு விக்கி பிரியிற போது தோளில் தட்டி”உன்னால் எதையும் சமாளிக்க முடியும்,தைரியமாய் இரு”என சொன்னது ஞாபகம் வந்தது.மேலும் “நீ ஒரு யானை போன்றவன் என்பதை என்றும் மறக்காதே”என்றிருந்தான்.உடம்பை சிலிர்த்துக் கொண்டான்.’சோர்ந்து போவனா அவன்?அவன் கிழ உடம்பில் இளரத்தம் ஊறியது. ரொனால்டோவின் புதிய வேலைத்தளம் துப்பரவாக இருந்தது.அங்கே காதை பிளந்த கொம்பிரசை விட இங்கே இருந்ததின் சத்தம் அரை மடங்கு தான்.இதையும் குறைக்க ஏதாவது செய்யவே வேண்டும்.இப்ப தானே திறக்கிறான். ஒரு காலத்தில் செய்வான் என நம்பலாம்.

வேலை வீடு என ஓடுவதால்…ஆண்டு போவது கூட தெரிவதில்லை.ஆஞ்சலோவை விட நாலு,ஐந்து வயசு குறைந்தவன் ரொனால்டோ.பேபி இவனை விட எட்டு ஒன்பது வயசு குறைந்தவன்.அறுபது வயசை தாண்டுற போது உடம்பு பழைய வாகனமாக போய் விடுகிறதே,கழிக்க வேண்டிய வரிசையில் இருப்பவர்கள்.

இப்ப பேபி தான் ரொனால்டோவிற்குப் பலம்.”நீயும் பங்குதாரனாய் சேரன்”என்று ரொனால்டோ கேட்டான்.’இவன் பங்கு காரனாய் இருந்ததால் தான் இப்படி எல்லாம் செய்கிறான்.நானும் போய் ஆட்டம் போட வேண்டாமே ‘ என்று நினைத்தான்.”வேண்டாமப்பா.உன்னிடத்தில் சம்பளத்திற்கே வேலை செய்கிறேன்,போதும்”என்றான்.”சரி உன் விருப்பம்.அங்கே உனக்கு இருபத்தி இரண்டு டொலர்(மணிக்கு),இருபத்தி நாலாக தருகிறேன்.சம்மதம் தானே”என்று கேட்டான்.அவன் முகத்தை பார்த்தான்.”நீ என்ன போட்டாலும் சம்மதம் தான்”என்று பேபி சிரித்தான்.

ஆஞ்சலோவிற்கு வந்த வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் இங்கே வரத் தொடங்கியிருந்தார்கள்.ஆஞ்சலோவிடம் ஒன்று இரண்டு பேர் நின்றிருந்தார்கள்.பீற்றருக்கு ஆத்திரம்.”இரண்டு மூன்று ஸ்கிள் வேலையாட்களை வேலைக்கு எடு.நான் அவர்களை மீண்டும் இங்கே கொண்டு வாரேன்”என்று ஆலோசனை கூறினான். “அவனும் இத்தாலியன்.பிழைச்சுப் போகட்டும்.கீரைக்கடைக்கு எதிர்கடை வேண்டாம்.வாரதே போதும் .புதிய ஓடர் எதையும் எடுக்காதே”என்றான்.அதாவது ஏறத்தாழ அந்த பகுதியை மூடி விட தீர்மானித்து விட்டான்.

மாற்றங்கள் இயைப்பாக்கம் அடைந்து விடும் தானே!அவனுடைய சிறிய மோட்டர் பிரிவு வியாபாரம் நல்லாவே இருந்தது.ஒரு பகுதியிலே எல்லா வேலைகளையும் நடைபெறுவதாக இருந்தது.மனைவியின் பெயரில் இருந்த வியாபாரத்தை ரத்து செய்து விட்டான்.இனி ஒரு கம்பனி தான்.

பேபிக்கு தொலைபேசியில் ரொனால்டோவின் மிச்ச செக்குகளை மகனை அனுப்பி பெற்றுக் கொள்ளும்ப‌டி தெரிவித்தான்.அவனுக்கு சிறிது மனத்தாக்கம் தவிர கோபம் இல்லை.எல்லாம் நல்லபடியாய் போய்க் கொண்டிருந்தது.

ஆஞ்சலோ போல ஈழப் பிரச்சனைகளில் ..அனுதாபம் கொண்டு ஊடகச் செய்திகளை கேட்டு வந்து ரொனால்டோ கதைப்பவனில்லை.அந்த வலத்தில் பேச்சே எழுவதில்லை.வேலையில் மரியாதையாகவே பிழங்கினான்.சில நேரம் வேலையை முடிக்க மேலதிகமாக நிற்க வேண்டியும் ஏற்பட்டது. ஆஞ்சலோவைப் போலவே பணத்தைக் கொடுத்தான்.தேனிலவு சுமார் எட்டு வருசங்களாக போய்க் கொண்டிருந்தது. பேபிக்கும் எட்டு வயசு கூடி விட்டது.அவனும் கண்ணாடி இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது.ரொனாடோவிற்கு மறதி சிற்சில சமயம் ஏற்படுகிறது.பேபி சொன்ன பிறகே ‘அட..’என்று வேலையை செய்வான்.

ஆஞ்சலோவின் மகனைப் போலவே இவன்ர மகனும் வேற எதையோ படித்தான்.அதை சொல்லி கவலைப் படுவான். மகன், கல்லூரிக்குப் போகாத நாட்களில் வேலைத் தளத்திற்கு வந்து சொல்லிக் கொடுக்கிற வேலையை செய்வான்.ரொனால்டோவின் மனைவி ஒபிஸ் வேலைகளை செய்தாள்.அவள் வராத போது ரொனால்டோ ஒபிஸ் வேலையையும் பார்ப்பான்.

சிலவேளை போனவனைக் காணவில்லை என்று போய்ப் பார்த்தால் கதிரையில் இருந்தபடியே குறட்டை விட்டுக் கொண்டிடிருப்பான்.பாவமாக இருக்கும். தள்ளாண்மைக் உள்ளாகி விடுகிறான். ஆனாலும் மோட்டரில் கை வைத்தால் அவன் கவனம் அதில் குவிந்தே இருக்கும். முந்தியது போல அலட்டல்கள் குறைந்து விட்டிருந்தது.வார மோட்டர்களை குறித்த திகதிக்குள் திருத்தி முடிப்பதை பேபி கவனத்தில் வைத்திருந்தான்.பிந்துறதென்றால் ரொனால்டோவிற்கு தெரிவிப்பான்.அவன் கொடுப்பனவை இருபத்தைந்தாக்கி விட்டிருந்தான்.அதற்கு மேல ஏற்றவில்லை.அது தான் அங்கே இருக்கிற அதிக சம்பளம்.

மற்றபடி அரசியல்வாதிகளுக்கும்,அரசவேலை செய்பவர்களுக்கும்,தனியார் கம்பனியில் ஒபிஸ்வேலை செய்பவர்களுக்குமே இவர்களை விட அதிகமான சம்பளத்தை பெறுகிறவர்கள்.அது ஏறிக் கொண்டே இருக்கும்.அந்த ஏற்றமே போதவில்லை என்று ஸ்ரைக்கெல்லாம் செய்கிறவர்கள் அவர்கள் தான். மாநில அரசு, இம்முறை குறைந்தளவு உறுப்பினர்களைக் கொண்டதாக ஆட்சியை பெற்றிருந்தது. பொதுவாக அதிக வரிகளை விதித்து மக்களை கஸ்டப்படுத்தாத இந்த அரசு,போதிய பலமில்லை என்றபடியால்..அதிக வரிகளை விதித்து மக்களை கஸ்டப்படுத்த தொடங்கி இருந்தது.அரசியலிலே சரியானவர்கள் யாருமே இல்லை என்பது சரியாய் தான் இருக்கிறது.முந்தி,மாநில வரி,மத்திய அரசின் வரி..கட்டுவது இருந்தது தான்.ஆனால் மாநில வரி சொகுசு தன்மையான பொருட்களை வாங்குற போதே கட்ட வேண்டும்.மத்தியதரத்தினரும்,வறிய பிரிவினரும் பெரும்பாலும் வாங்கிறதுக்கு கட்டாயமாக இருக்கவில்லை.மத்திய வரி எல்லாப் பொருட்களுக்கும் கட்டாயம் அறவிடப்படும்.மாநில வரியின் அளவு கொஞ்சம் கூடத் தான்.எல்லாவற்றுக்கும் அறவிடப் படவில்லையே’ என்பதால்…பரவாய்யில்லையாக இருந்தது.சிறு தொழிற்சாலைகளுக்கும் சலுகைகள் இருந்தன.தற்போது விற்பனை வரி என பேரை மாற்றி இரண்டு வரிகளையும் கட்டாயம் அறவிடப்பட்டன.

அரசினர்,தனியார்,சமூக சேவையினர் எல்லாருக்குமே மாநில‌வரி ..சுமையாகி விட்டது. ரொனால்டோவிற்கும் அதிகளவு கட்டுவதாக ஏற்பட்டு விட்டது.அவன் சில சிக்கனங்களை செய்ய …யோசித்தான்.ஆஞ்சலோவைப் போல அவனும் கிருஸ்மஸ்க்கு முதல் மண்டரின் உணவகத்திற்கு அல்லது பிரபலமான உணவகத்திற்கு குடும்பத்தோடு பேபியையும் கூட்டிச் சென்று பார்ட்டி வைப்பவன்.அவன் மனக்குழப்பத்தில் இம்முறை அப்படி பார்ட்டியை வைக்காமல் டபிள் போனஸாக பேபியிற்கு ஒரு தொகையை குடுத்து விடுவோம்’என நினைத்தான்.அவனுக்கும் உடல்நலரீதியாகவும் பிரச்சனைகள் இருந்தன.உணவகத்தில் சாப்பிடுவதில் ரசனையும் குறைந்திருந்தது.சோர்வு,பஞ்சி,தள்ளாண்மையால்..தன்ர நிலையில் இருந்தே கணக்கை போட்டு விட்டான்.

கதை குறைந்து விட்டதால்,அதை சொல்லி விளங்கப்படுத்த தவறி விட்டான்.

தமிழர்களில் இரண்டு விதமாக வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள்.முறை கிறையுடன் வாழ்கிறவர்கள் ஒரு வகையினர்.லிபரலாக வாழ்கிறவர்கள் இரண்டாமதினர்.பேபி ,தீவிரமாக முறை கிறைகளை பின்பற்றி வாழ்கிற ஊரிலிருந்து வந்தவன்.அவனை அறியாமலே அது அழுத்தமாக அவனுள் பதிந்திருந்தது.யாராக இருந்தாலும் நடைமுறையில் இருக்கிற முறைகளை உடனடியாக மாற்றிக் கொள்ளக் கூடாது.அம்முறையை வைத்துக் கொண்டே எதிர்த் தரப்பை.. “இதை மாற்றினால் என்ன,எப்படி மாற்றலாம்?”என யோசனைகளைக் கேட்டு,அதன் அடிப்படையில் தான்..அதையும் மெல்ல, மெல்ல மாற்ற வேண்டும்.ரொனால்டோ மனத்தத்துவம் எங்கே படித்திருக்கிறான்?.எங்கட கல்வியும் பிரித்தனியரால், ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு அமைவாக கொண்டு வரப்பட்டது தானே!வாழ்க்கைக்கு உதவாதக் கல்வியாகத் தானே இருக்கிறது.வாழ்நாள் முழுதும் பள்ளிப்பாடங்களைத் தவிர வெளியில் வார புத்தகங்களை எழுபத்தைஞ்சு சதவீதத்தினருக்கு மேற்பட்ட தமிழர்கள் படிப்பதே இல்லையே.சாதிய முறைகள் மாறாததிற்கும்,சீதனம் வாங்கிற மாதிரியான சமூக குறைபாடுகள் தொடர்ந்தும் நிலவுறதிற்கும் காரணம் அது தானே!

எங்கட அரசியல் அதிகாரங்களை சிங்கள அரசு நயவஞ்சகமாக பிடுங்கிக் கொண்டதால், எம்மாலும் எம் குறைகளை அலசவும்,முற்போக்கான நடைமுறைகளை கட்டமைத்துக் கொள்ளவும் முடியாமல் தவிக்கிறோம்..இவற்றையும் விதியில் சேர்த்துக் கொள்வதா? ?

பேபி,கதைப் புத்தகங்களையும் வாசிக்கிறவனாக இருந்திருந்தால்…”இந்த முறை பார்ட்டி வைக்கவில்லை”என்று ரொனால்டோ சொன்ன போது மூளையில் சுள்ளென கோபம் ஏறி இருக்காது.பெருந்தன்மையாக..ஏன் சொல்கிறான்?என்று சந்தேகங்களைக் கூட அவனிடம் கேட்டிருப்பான்.சில்லறை சுண்டங்காய் விசயம்.சின்னக் கல் கூட காலை இடர வைத்து விடுவதில்லையா? விட்டது

‘அது ஒரு செலவா?’பேபி அதிருப்தியுற்றான்.எப்படிச் சொல்லலாம்? நினைக்க நினைக்க உள்ளுக்க குமுறல்களே அதிகமாகின.தெளிந்த நீர்ப்பரப்பில் கல்லை எறிந்தது போல தோன்றிய‌ அலைகள் அலையலையாய் சுனாமி போல வளர்ந்து கொண்டே வந்தன.

“இவன் என்னை எவ்வளவு சீப்பாக நினைத்து விட்டான் “ என்ற அம்பு உள்ளத்தில் ஆழமாக தைத்து விட்டது. இப்படியே சிங்களவர்களும் தைத்து விட்டதாலே நாமும் உணர்ச்சிக் குமுறல்களில் வீழ்ந்து கிடக்கிறோம்.சிக்கிக் கிடக்கிறோம் என்பதே உண்மை.அதிலிருந்து வெளியில் வந்த பிறகே ,விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட முடியும் போல கிடக்கிறது.பலவீனம் எது?,பாதை எது?..என தெரியாதிருந்தோமானால்…எல்லாம் கூலாம்பாணி தான். மனிதரில் மிருகம் உண்டு !

ஆஞ்சலோ எத்தகைய நல்லவன் ?

அவனை விட்டு வந்திருக்கக் கூடாது என்றெல்லாம் கூட….. நினைப்புகள் வரத் தொடங்கி விட்டன.

பேபியும் ஒன்றை மறந்து விட்டான்.நாம், இந்த நாட்டுக்கு அகதியாக தான் வந்திருப்பவர்கள்.எம்மவர்கள் பலர், முறையான வேலை இல்லாமல்,ஸ்கிள் வேலையாளான தகுதியும் இல்லாமல் ….பெரும்பாலும் பொதுவேலையாளார்களாக குறைந்த சம்பளத்திலேயே இரண்டு மூன்று வேலைகளை அடித்துக் கொண்டிருக்கிற போது சிலவேளை கள்ளப் பேப்பரில் ,மற்றவர்களின்(லான்டட் பேப்பர்) பேப்பர்களைக் காட்டி வேலையில் சேர்ந்து, கூட வேலை செய்து மாட்டுப்பட்டு பிரச்சனைகளில் சீரழிந்து கொண்டுமிருக்கிறார்கள்.

அரசாங்கம் பொதுவாகவே அதிகமான வரிகளை அறவிடுகிறது.அதுமட்டுமில்லை அவர்களை அதிகமாக‌ வக்கீல்களிடமும் செல்ல வைத்து ஒவ்வொரு முறை செல்கிற போதும் அவர்களுடைய கட்டணம் பல் வையித்தியரிடம் செல்வது போல ..அதிகமானது,,தள்ளி விட்டு பழி வாங்கிக் கொண்டே இருக்கிறது. அந்த பணத்திற்காகவே பல நாட்கள் உழைக்க வேண்டும்.இங்கே உள்ள எல்லா அமைப்புகளுமே சிறிலங்கா அரசைப் போல இரக்கமற்றவையாய்யே காணப்படுகின்றன.ஒரு காலத்தில் பிறகு, இங்கே இந்த கஸ்டம் சிறிது ஒய்ந்து விடுகின்றன.விதி விலக்காய் தொடருவதும் கிடக்கின்றன தான்.

சிறிலங்காவைப் போல நித்தியக் கண்டமாக இருக்கவில்லை என்பதே ஆறுதல்.

தீராதவர்கள் மதம் மாறி,மதவாதிகள் மூலமாகவும் தீருறது இருக்கின்றன.அங்கே பெளத்தத்தைப் போல இங்கே,கிருஸ்துவத்திற்கும்…அரசில் செல்வாக்கு இருக்கவே செய்கின்றது.

ஊரிலே மாறி வந்த கடனை அடைக்க முடியாமல் சாதாரணமாக கிடைக்கிற வாழ்க்கையையே ‌ தொலைத்து விட்டவர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.பெண்களைப் பற்றிக் கதைக்கிறவர்கள் ஆண்களைப் பற்றி கதைப்பதில்லை என்ற யாதர்த்தமும் ஆண்களுக்குமே இருக்கிறது. அதை அடிப்படையாய்க் கொண்டு தனுஸ் நடித்த “தேவதையை….”என்ற ஒரு பெயரில் வந்த திரைப்படம் பலரால் விரும்பிப் பார்த்ததாக அறிகிறோம்.

எனவே உயர்வேலைகளில் காலை வைத்தவர்கள்..வேலைத் தளதில் அவமானத்திற்குள்ளானாலும், எம்மவர்களை வேலையில் சேர வைத்து,ஸ்கிள்வேலையாளரராக மாற்றி விட முயல்றதை ஒரு சேவையாக நினைத்து உதவிட‌ வேண்டும்.ஊரில் உள்ள சகோதரங்கள் மற்றும் உறவினர்கள் உயிர்வாழ அனுப்புற பளுவை அது குறைக்கிறதல்லவா.

வாழ்க்கைத்தரம் உயராவிட்டால் வீட்டிலே பிரச்சனை, வெளியிலே பிரச்சனை , ஊரிலே பிரச்சனை எனக் கிடக்கிறவன், எமது நாட்டுப் பிரச்சனைத் தீர்வுக்கு எதுவும் செய்ய முடியாதவனாகி விடுகிறான்.

.நாம் தயார்படுத்தல்களைச் செய்யா விட்டால் நமக்கும் ‘விடுதலை’என்பது கிடைக்காமலே போய் விடும்.

எனவே இப்படி செய்யிற கடமை ஒவ்வொருவருக்குமே இருக்கிறது.சாதி,மத வேறுபாடுகளை மறந்து கை தூக்கி விட வேண்டியவர்களாக நாம் அனைவரும் இருக்கிறோம்.நம்முடைய வேலைத்தளத்தில் பிரச்சனையை வளர்க்காது ராஜதந்திரத்துடன் செயல்படவும் வேண்டும் என்ற விசயத்தை பேபி மறந்தே விட்டான்.

கணநேர உணர்ச்சி வசப்பட்டதால் புத்திசாலித்தனமாக சிந்தியாது,தான் வராவிட்டால் ரொனால்டோவால் இந்த கம்பனியை நடத்த முடிந்திருக்காதே, எனக்கு மரியாதைச் செய்ய தவறி விட்டானே ,என்ற கோபத்தால் நல்ல விசயங்களை நழுவ விட்டு விட்டான்.பேபி மட்டுமில்லை,நம் விடுதலைக்கு ஆயுதம் ஏந்தியவர்கள் கூட இப்படி புத்திசாலித்தனமாக சிந்திக்காததால் தான் தம்மையும் இழந்து தம் இயக்கங்களின் வீழ்ச்சிக்கு காரணமாய்ப் போய் கிடக்கிறார்கள்.

ஏன் பேபி மரியாதையைச் சிந்தித்தான்?அவன் ரொனால்டோவை மதிக்கவில்லையா?பெரு மதிப்பு வைத்திருக்கிறான்.நண்பனாக எதைப்பற்றியும் கதைத்தவன் ,கதைக்கிறவன்.ஆஞ்சலோவை விட்டு விலகி வாரதுக்கும்,ஒரு நண்பன் கூப்பிடுறான்’என்றே தட்ட முடியாமல் வந்தவன்.

அவன் மனதில் உள்ள ரொனால்டோ, தன் இயல்புகளிலிருந்து அவன் தவறி விட்டான். “மதியாதர் வீட்டில் மிதியாதே என்று மானமுள்ள தமிழனுக்கு ஒளவை சொன்னது….”என்ற கண்ணதாசன் பாட்டு அவன் மண்டைக்குள் வந்து விட்டது.அடிக்கடி சினிமாப் பாட்டு கேட்கிறதும் வில்லங்கம் போல இருக்கிறது.வெளியில் தமிழ்க் குரல்கள் கேட்கிறது குறைவாய் இருக்கிற போது,தமிழ்…வானொலிகளும்,தொலைக்காட்சிகளுமே கேட்க வைத்து ஆறுதல் படுத்துகின்றன.இவர்களிற்கு நல்ல நிகழ்ச்சிகளை தயாரிதளிக்க வேண்டிய கடமை இருக்கின்றன.

உலகிலே பெரிய பகையாளி யார் தெரியுமா?நண்பனே தான்!நீண்ட காலமாக நண்பனாக பழகி வருகிற போது,நம் மனதில் நண்பன் நேர்மையானவன் என்ற எண்ணமும் படிந்து விடுகிறது.அந்த பிம்பம் மனதில் அசைக்க முடியாது படிந்து விடுகிறது.ஒரு சந்தர்ப்பத்தில் அவன் சிறு பிழையாக செயற்பட்டால்,அந்த பிம்பத்திலிருந்து தெறித்து வீழ்ந்து விடுகிறான்.உள்ளத்தில் அந்த பழைய நண்பன் சாகும் வரையில் வீற்றிருப்பான்.ஆனால்,வெளியில் தெறித்தவன் தெறித்தவன் தான்.ஒட்டவே முடியாது சாகும் வரையில் இழுபட்டு விடும் அந்த நட்பு.

அந்த நண்பன் செத்து விட்டாலோ தனிமையில் கிடந்து அழு அழுவென்று அழுவான்

இருவர் ‘படத்தில் மணிரத்தினம்,எம்ஜிஆர்,கருணாநிதியின் அந்த நட்பை இப்படி அழகாக காட்டி இருப்பார்.

பேபி,கோபத்தில் விசமத்திற்கு கிருஸ்மஸ் பார்ட்டி வைக்கிற தினத்தில் வேலைக்குப் போகாது ‘பெரிய கிளாசிக் பிட்சா’ இரண்டை வேலைத்தளத்திற்கு கொண்டு வரச் சொல்லி தொலைபேசியில் ஓடர் பண்ணினான்.

டெலிவரி பண்ணிய போது ரொனால்டோ”நான் ஓடர் ஒன்றும் பண்ணவில்லையே”என்று வாங்க மறுத்தான்.

“எங்களுக்குத் தெரியாது. உங்க‌ கம்பனி பேர் சொல்லித் தான் ஓடர் கொடுத்தார்கள்.உங்க பிரச்சனை உங்களோடு…..ஐம்பது டொலரை ‘பே’ பண்ணுங்கள்”என்று அவன் ஒற்றைக் காலில் நின்றான். அவனுக்கு ஐம்பது டொலர் ஒரு காசா?சுண்டக்காய்!குடுத்து அனுப்பினான்.பேபி செய்திருக்கிறான் என்று புரிந்து விட்டது.போனை எடுத்தி பேபிக்கு அடித்தான்.

வீட்டிலே இருந்து பேபி அமுத்தலாக “பிட்சா பார்ட்டி எல்லாம் எப்படி போகிறது ரோனாடோ?”என விஸ்கி மயக்கத்தில் நக்கலாகக் கேட்டான்.ரொனால்டோவிற்கு ஏறிக் கொண்டு வந்தது .திட்டி விட்டான்.பேபி சிரித்துக் கொண்டு திட்டுக்களை வாங்கி விட்டு “என் ஜோய்”என்றான்.

அதற்குப் பிறகு ரொனால்டோ பேசவில்லை. “பாய்” என்று விட்டு போனை வைத்தான்.ரத்த அழுத்தம் தான் தேவையில்லாமல் ஏறுகிறது.அவனுக்கு மனசு சரியில்லை.பிட்சாவை பக்கத்து கராஜ்காரனிடம் “கிருஸ்மஸ் பரிசு “என கொடுத்து விட்டான்.வீட்டுக்கு அடித்து மனைவியையும்,மகனையும் வேலைத்தளத்திற்கு வர வேண்டாம் “என்று சொல்லி விட்டு பூட்டிக் கொண்டு வெளிக்கிட்டான். மில்லர் தவறணைக்குப் போய், சிறிய விஸ்கி போத்தல் ஒன்றை எடுத்து குடித்துப் போட்டு,. இத்தாலிய மொழியில் “போனால் போகட்டும் போடா..”பாடலைப் பாடினான்.கூட இருந்தவர்கள் கை தட்டி கரகோசம் செய்தார்கள்…இரவு போல வீட்டுக்கு வந்தான்.

அடுத்த நாள் தவறை உணர்ந்து வீட்டிலேயிருந்து பேபிக்கு அடித்தான்.”குழப்பத்தில் என்னவோ பேசி விட்டேன்.மறந்து விடு!ஒரு கிழமை வக்கேசன் முடிய வேலைக்கு வா”என்று தண்மையாகக் கூறினான். ஒரு கிழமை முடிய பேபி வேலைக்கு வந்தான்.ஆனால்,ரொனால்டோ சாதாரணமாக இல்லை.அவர்களுக்கிடையில் சுமுக நிலை நிலவவில்லை.வேலையில் சுரத்தில்லாமல் இருந்தான்.ஒபிசில் எறியிறதுக்கென இரண்டு ,மூன்று கதிரைகள் இருந்தன.அவற்றை “எடுத்து வெளியில் போடு”என்று பேபியிடம் கூறினான்.பேபிக்கு கோபம் வந்து விட்டது.”நான் இங்கே மோட்டர் திருத்தத் தான் வந்தனனான்.உன்ர மகனைக் கூப்பிட்டு அதை எறியச் சொல்”என்று விட்டு வேலை இடத்திற்குப் போய் விட்டான்.புருசன் பொஞ்சாதிச் சண்டை போல திரும்ப பத்திக் கொண்டு விட்டது.

ஒவ்வொரு பேச்சும் பூதமாக பிறப்பெடுக்கிறது.ரொனால்டோ வெளிய வந்து “பேபி நான் மனக் குழப்பத்தில் இருக்கிறேன்.என் பேச்சை பெரிசாய் எடுக்காதே.நீ வேலையைச் செய்”என்று விட்டு திரும்பவும் ஒபிசிற்குள் புகுந்து விட்டான்.இருந்த வேலையை முடித்து விட்டு “இனி என்னத்தைச் செய்யிறது?”என்று வந்து கேட்டான்.அதில் கொளுவல் தன்மை இருந்தது.”இவ்வளவு தான் வேலை.போய்யிட்டு நாளைக்கு வா”என்ற ரொனால்டோவின் குரலில் கோபம் சிறிது தொனித்தது.

பேபியும் மறுபேச்சு பேசாது சேர்ட்டை மாட்டிக் கொண்டு அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்குப் போனான்.பொதுவாக வேலை செய்வதால் தோள்மாட்டிலே (பட்டையிலே) ஒரு வலி இருக்கிறது வழக்கம்.இன்று ஏற்பட்டதில்லை.அவன்”தோளிலே வலி”என்று அவசரப் பிரிவிற்குச் சென்றான்.அவனுக்கு ‘எக்ரே’என எல்லா வைத்திய பரிசோதனைகளும் நடந்தன.ரொனால்டோவிற்கு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் வைத்திய அறிக்கையை வாங்கிக் கொண்டான்.”ஒரு கிழமை ஓய்வில் இருக்க வேண்டும்”என வைத்தியர் எழுதிக் கொடுத்திருந்தார்.

வேலையில் விபத்தோ,நோவோ ஏற்பட்டால் வேலை வழங்குபவர் வேலையாள் வர முடியாது நிற்கும் நாளுக்கும் சம்பளமும் வழங்க வேண்டுமெனச் சட்ட விதிகள் இருந்தன.வீட்டுக்குப் போக முதல் ரொனால்டோவிற்கு போன் அடித்தான்.பேபி தோளில் ஏற்பட்ட வலியைக் கூறி ,ஆஸ்பத்திரியில் நடந்த பரிசோதனை விபரங்களையும் கூறி’ஒரு கிழமைக்கு வேலைக்குப் போக வேண்டாம் ‘என தெரிவித்தையும் கூறினான்.”வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பது உனக்குத் தெரியும் தானே?”என்று இயல்பாக சொல்வது போல நக்கலாகக் குத்திக் காட்டிச் சொன்னான்.ரொனால்டோவிற்கு மறுபடியும் கோபம் பொத்திக் கொண்டு வந்தது.

‘ “ போனிலே கதைக்க வேண்டாம்.நான் கொம்பன்சேசன் கந்தோருக்கு வைத்தியரின் அறிக்கையை அனுப்பி விடுகிறேன்” என்று கூறி விட்டு ‘ஃபக்ஸ்’ இலே உடனடியாக அனுப்பியும் விட்டான்.

பிரச்சனை விபரீதமாகி விட்டது.

ரொனால்டோவிற்கு தலையிடி வந்து விட்டது. இவனுக்கு என்ன பிடித்து விட்டது?சிறிய விசயத்தை பெரிசுப் படுத்திக் கொண் டே போறானே!,அலுப்பாகவும் இருந்தது.இனிமேல் அதிகமாக யாருடனும் நேருக்கமாய் பழகக் கூடாது.இவ்வளவு காலமாகியும் கூட மனிசியோடு அளந்து பேசுற நாம் நண்பர்களுடன் தானே அதிகமாக பேசுகிறோம்.நட்பு என்பது ஓரே பட்ஜில் தானே இருக்க முடியுமா?.வெளிநாட்டில் எங்கே பட்ஜ் ஆட்கள் இருக்கினம்?,வேலைத்தளத்தில் இருகிறவயள் தானே இருக்கினம்.பேபி அடுத்த பட்ஜில் இருப்பவன்.அது தான் இவனுக்கு சிறிய விசயமாக இருகிறது,அவனுக்கு பெரிய விசயமாகி ரோசத்தை கிளற வைக்கிறது.ரோசத்தை எல்லாம் அவர்களுடைய தமிழிழத்தை பெறுவதற்கல்லவா காட்ட வேண்டும்.இங்கே வந்து காட்டுறானே!என்று கோபமும் வந்தது.

சிகரட்டை பத்தி சுகமாக இழுத்துப் புகையை விட்டுக் கொண்டு வக்கீலுக்கு போனை அடித்தான்.தலையிடி குறையவில்லை.இடித்துக் கொண்டே இருந்தது.ஆனால் வெளியில் சிறிய மரமொன்றில் ஏறுறது,இறங்கிறது,அங்கும் இங்கும் பார்த்து விட்டு நிலத்திலிருந்து எதையோ கையில் எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிடுற அணில் கண்ணில் பட்டது.எல்லா உயிர்களும் இந்த வயிற்றுக்குத் தானே அடித்துக் கொள்கின்றன.மனிதனுக்கு பேசுறதும் ,சிந்திக்கிறதும் ஏற்பட்டு விட்டதால் என்னென்ன‌ ஆட்டம் எல்லாம் போடுகிறான்.நானும் கூட அதில் ஒருத்தன் தான்.சிறிய சிரிப்பும் வந்தது.எத்தனை சுயநலம்,பணாத்தாசை,மனிசி,பிள்ளைகளின் பணத்தாசையும் சேர்த்துக் கொண்டு வாழ்க்கையை வாழ விடாமல் அடிக்கிறது. ..சிகரட்டை ஊதி, ஊதி எறிகிறேன்.

பேசாமல் இந்த பேபியை கூட்டிக் கொண்டு போய் தண்ணிப் பார்டியை வைத்திருக்கலாம்.தன்னையே கடிந்து கொண்டான். முற்பிறப்பிலே செய்த ஏதோ ஒரு கர்மப்பலன் தான் தடுத்து வஞ்சித்திருக்க வேண்டும்.எதுவரை போகிறது..?பார்ப்போமே! மனது சிறிது ஆறுதல் பட, வக்கீலிடம் விசயத்தைச் சொன்னான்.

“உன்ர ஆள் சிமார்ட்டாக நடந்திருக்கிறான்.நீ அவனைக் கூப்பிட்டு தயவாக கதைத்து ஒரு டீலுக்கு வரப்பார்.ஒரு கிழமைக்குப் பிறகு வேலைக்கு வா.சம்பளப் பணம் தாரேன் என்றெல்லாம் ஒப்புக் கொள்.பணம் எல்லாரையுமே மாயம் செய்யும்”என்று ஆலோசனை கூறினான்.

ஆனால்,ரொனால்டோவாவினால் சிவாஜியைப் போல மாறுப்பட்ட நடிப்பை உடனடியாக நடிக்க முடியவில்லை.இப்ப குதித்து ஓடி நின்று அணில் யோசிக்கிறது.அங்கும் இங்கும் மலங்கப் பார்ப்பது என நிற்கிறது.என்ன பிரச்சனை என ஆராய்ந்தான்.மனித அரவம்,பனிக்குளிர்…என்று எதாவது சிக்கல்களை எதிர் நோக்கிறதா?இதுவும் கூட சிக்கல்கள் மத்தியில் தானே வாழ்கிறது.இந்த அணில் இந்த நாட்டைச் சேர்ந்ததில்லை போலவே படுகிறது.ஒருமுறை பேபி கூட முதுகில் கோடு விழுந்த அணிலைக் காட்டி “இது எங்க நாட்டு அணில்,அதாவது ஆசிய அணில்,இந்த கோடு விழுந்திற்கு ஒரு கதை இருக்கிறது”என்று அளந்திருக்கிறான்.பேபியிட நினைப்பை துரத்த முடியாது.அவன் வேலைக்கு வரா விட்டாலும் கூட அவனுடைய அருவம் ஒன்று பக்கத்திலே நின்று தர்க்கித்து டெம்பரை ஏற்றத் தான் போகிறது..என்பது புரிந்து போயிற்று.

ஒபிசில் சிறிய அலுமாரியில் மறைத்து வைத்திருந்த விஸ்கியை எடுத்து தண்ணீர் கலக்காமல் சூடாகக் குடித்தான்.பேபியோடு இன்னொரு இந்தியனும் பகுதி நேரமாக வந்து போய்க் கொண்டிருக்கிறான்.அவனை முழுநேரமாக வேலை செய்ய கேட்க வேண்டியது தான்.ஆனால் எவனும் பேபியைப் போல வருவானா?இரண்டு மோட்டர்கள் திருத்த வேண்டி இருந்தன.அவற்றில் சிற்சில வேலைகளை செய்யச் சொல்லி விட்டு ஒபிசிற்குள் வந்தவன் ,நாளைக்கு மோட்டரில் கையை வைப்போம் என தீர்மானித்துக் கொண்டான்.இப்ப அந்த அணிலைக் காணவில்லை. கதிரையில் இருந்து சுற்றி விளையாடிக் கொண்டிருந்தவன் ..தூங்கிப் போனான்.

ஸ்கிள் வேலையாட்கள் ஒவ்வொருவருமே வேலை செய்வதற்காக கருவிகளை வேலைத்தளத்திலிருந்து இரவலாகப் பெறுவதில்லை..அவரவருக்குரிய சிறிய பெட்டியில் அல்லது இங்கத்தைய கடைகளில் விற்கிற , நாலு சில்லுகளைக் கொண்ட வண்டி போன்ற உருட்டுகிற, மேற் பக்கமாக‌ திறந்த லாச்சிகளைக் கொண்டதும், அலுமாரியும் கொண்ட பெட்டியில் சொந்தமாக வாங்கி கொண்டு வந்து வைத்திருப்பார்கள்.வேலை மாறுகிற போது, விலகிற‌ போது அவற்றையும் எடுத்துக் கொண்டே செல்வார்கள் .பேபியினுடைய கருவிப் பெட்டி ரொனால்டோவின் வேலைத்தளத்தில் அகப்பட்டு விட்டது.அவன் , தொலைபேசியில் அழைத்து “சனிக்கிழமை, என்ர மகன் நிற்பான் .நீ வந்து காலையிலே எடுத்துக் கொண்டு போ”என்று சொல்லவில்லை.

எதையும் முறையாய்ச் செய்தால் துணிவாக‌ முகம் கொடுக்கலாம்.அதை, தாறு,மாறாகச் செய்து விட்டாலோ முகம் கொடுக்க முடிவதில்லை.நாங்கள் என்றால் கைக் கலப்பில் ஈடுபட்டு ,மூக்கு உடைப்பட்டு ரத்தக் காயம் கண்டு விட்டதென்றால்….ஒய்ந்து போய் விடுவோம்.சிலவேளை மனமிரங்கி,மன்னிப்பு கேட்கிற தறுவாய்யில் “கோபத்தைக் கிளறி விட்டாய்,அது தான் அடித்து விட்டேன்,இப்படி இனிப் பேசாதே”என்ற மாதிரி எல்லாம் தணியிறது இருக்கின்றன.

ஆனால்,இங்கே இருப்பவர்கள் பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். சில தடவைகள் தணியிறது இல்லை.வன்முறையாக சிங்களவர்கள் போல வெறி பிடித்த நாய்கள் போல செயல்பட்டு விடுகிறார்கள்.இங்கே கொலையில் முடிவதெல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கின்றன.இவர்களா?இந்த வன்முறைக்காரர்கள் என நம்புறது கஸ்டமாக இருக்கிறது..எந்த வகை குற்ற உணர்வும் இல்லாதவர்களாக குற்றம் செய்து விட்டு நிற்கிறார்கள்.

சில நாடுகளில் மரண தண்டனை நடைமுறையில் இருக்கின்றன‌.சிலதில்…மரண தண்டனை முறைகள் கிடையாது.சிறிலங்கா மரண தண்டனை முறையைக் கொண்டு வர முயல்கிறது.இனப் படுகொலைகளைச் செய்த அனைவருக்கும் மரண தண்டனை விதிப்பார்களா?என்ன?,குற்றவாளிகளிற்கு எவரையும் தண்டிக்க உரிமை கிடையாது.அது அரசனாக இருந்தாலும் சரி,ஆண்டியாக இருந்தாலும் சரி.அது தான் இங்கே கிடக்கிற பெரிய‌ பிரச்சனை.

செய்பவர்களிற்கு தாம் செய்வது குற்றம் என தெரிவதில்லை, விளங்கிறதில்லை. இவையெல்லாம் தொலைக்காட்சித் திரைப்படங்களில்,வீடியோ விளையாட்டுகளில் தடை செய்யப்பட்டிருக்கவில்லை.வேலை,வீடு,திரை என இருப்பவர்கள் அதையே அப்படியே பிரதிபலிக்கிறார்கள். “இவர்கள் மட்டும் குற்றவாளிகள் இல்லை.எனவே ,நான் இவர்களை மன்னித்து திருத்தவே முயல்வேன்”என்று அன்று காந்தி சொன்னதிலும் அர்த்தம் இருக்கிறது.புத்தரும் இதைத் தான் சொல்லப் போகிறார்.ஆனால், சிறிலங்கா,அரசியல்வாதிகள் தான் எல்லாரையும் மிஞ்சியவர்களாயிற்றே !

முறையற்றச் செயல்களால் நிலவிய உறவுப் பாலங்கள் அறு பட்டுத் தான் போய் விடுகின்றன.மற்றைய பெடியனிடம் “பேபியிட ஞாபகமாக இந்த பெட்டி இங்கே இருக்கிறது, இருக்கட்டும்”என்றிருக்கிறான்.சுமார் ஐந்நூறு டொலர் பெறுமதியானது.திரும்ப இன்னொரு செட்டை வாங்க வேண்டியது தான்.என்ன, நான் ஓரேயடியாய் விலக முடிவெடுத்து விட்டேனா?பேபிக்கே தன் நினைப்பு ..’பிழையாக காலெடுத்து வைத்து விட்டேனா?’என்ற‌ தடுமாற்றத்தை ஏற்படுத்தியது.அடுத்தது என்ன தான் செய்வது ?உணர்ச்சிவசப் பட்டதால் எதையுமே யோசிக்காமல் பலவீனப்பட்டு போனேனா?..எனவும் சிந்தித்தான்.

கொம்பன்சேசன்காரன், ரொனல்டோவிற்கு போன் அடித்து கதைத்தான்.ரொனால்டோவிற்கு கதைத்துப் பழக்கமில்லை.தப்பும் தவறுமாக கதைக்க தீர்ப்பு பேபியின் பக்கமாகி விட்டது.அவர்கள் வேலைத்தளத்திற்கும் வந்து பார்த்தார்கள்.விட்டு விட்டு வேலை செய்யும் கொம்பிரசரின் சத்தம் இங்கேயும் காதை பிளந்து கொண்டு இருந்தது.”சத்தத்தை குறைக்க ஏதாச்சும் செய் “என்று வலியுறுத்தினார்கள்.பேபி காது பாதிக்கப்பட்டு விட்டது என்றால் மேலதிகமாக அதை குணப்படுத்துற செலவும் கொடுக்க வேண்டும்.எனவே அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யிறது போல‌ ரொனாடோவிற்கு நாலைந்து தேவையில்லா பெரிய செலவுகள்.

பிரச்சனை வராதவரையில் …ஒ.கே!தான். ஆனால் வந்து விட்டால் விடுதலைப் பிரச்சனையைப் போல‌ ,தொல்லைகள் லேசிலே விட்டு விடா. பேபியின் தோள்பாட்டு வலி மாறும் வரையில் அவன் தெரப்பிற்குப் போய் வரும் செலவை ஏற்பதாக கொம்பன்சேசன் பிரிவு அறிவித்தது.போய் வருவதற்கான டாக்சி செலவுகளையும் ஏற்பதாக…கூறி .டாக்சிற்கான வவுச்சரையும் அனுப்பியது.அவன் வேலைக்கு போக முடியாத நாட்களுக்கான‌ ,மாசத்திற்கான வேலை நிவாரணப் பணத்தை கொடுப்பதற்கு அதற்குரிய காப்புறுதி நிறுவனமும் ஒப்புக் கொண்டது.தெரப்பி சிகிச்சைகள் சுமார் ஆறு மாசத்திற்கு இழுபடும்.பிறகு வேலைக்கு போகத் தொடங்கி விட்டால்..நிவாரணப் பணம் கொடுப்பதை நிறுத்தி விடுவார்கள்.வேலைக்குப் போகா விட்டால்..பத்து மாசம் வரையில் தொடர்ந்து கொடுப்பார்கள்.. வேலைக்குப் போகாமல் காசு கிடைக்கிறதென்றால் சுப்பர் அல்லவா பேபிக்கு நல்ல ஒய்வு. தேவைப்பட்டது .நல்லாய் அனுபவித்தான்.

வேலை இல்லா காலங்களில் கிடைக்கிற நிவாரணங்களில் ‌ புதிதாக ஆட்சிக்கு ‌ வந்த‌ பழைவாத மாநில அரசு பல பிரச்சனையை ஏற்படுத்தி வைத்திருக்கின்றது.முந்தி என்றால்..வேலையில் இருப்பவருக்கு செய்யிற‌ வேலை பிடிக்கவில்லை ,வேறு வேலை எடுக்கப் போகிறேன் என்றால் அல்லது வேலைப்பகுதி மூடு விழா கொண்டாடினால்..இந்தப் பணத்தைப் பெறலாம். அதற்காக செய்யிற வேலை போது இந்த காப்புறுதி நிறுவனம் சிறு தொகையை உங்க பணத்திலிருந்து கழித்துக் கொண்டே வரு கிற போது. நிவாரணப் பணத்தோடு கணிசமான பணமும் முதலாளியும் கொடுத்துக் கொண்டே வருவார். முதலாளியின் கடிதம் எல்லாம் தேவையில்லை தற்போது காரணமில்லாமல் நிறுத்தினால், வேலைகள் வராத போது நிறுத்தனால் மட்டுமே பெற முடியும். முதலாளியின் கடிதமும் வேண்டும்.

இப்ப கட்டாயம் முதலாளியின் கடிதம் இருக்க‌ வேண்டும். தொழிலாளியிற்கு இருந்த‌ உரிமைகளை மாற்றி விட்டார்கள் வேலையில் தவறு விடுகிறான் என க் கண்டு நிறுத்தி விட்டால், அல்லது பிடிக்கா விட்டால் பல பொய்களை கூறி முதலாளி, கடிதத்தைக் கொடுக்க முடியாது என‌ அடம் பிடிக்கலாம். வேலை செய்கிற போது.உங்களிடமிருந்து கழிக்கப்பட்ட பணமும் கிடைக்காது போய் விடும். முந்தி இந்த விசாரணைகள் இல்லாமலே கடிதம் கொடுக்கப் பட்டது. வேலை வாய்ப்பு கந்தோரில் கொடுத்து நிவாரணத்தைப் பெற்று வந்தோம்.வேலை பார்த்த போது கிடைத்ததில் அறுபது வீதப் பணம் தபாலில் செக்காக ஒவ்வொரு மாசமும் வரும்.

இப்ப முதலாளி விரும்பினாலே கடிதம் கொடுப்பார்கள்.அதாவது அவர்களுக்கு விருப்பம்,இரக்கம் எல்லாம் ‌ ஏற்பட வேண்டும் . பழைவாதக் கட்சி எப்பவும் முதலாளித்துவ முஸ்டியை காட்டிக் கொண்டு நிற்கிற கட்சி .

தகுதி படைத்தவன்,தன் வேலை கிடைக்கவில்லை என்று சிறிய‌ வேலையில் புகுந்தால் , புகுந்தது தான், வெளிய வர முடியாது.கொத்தடிமையாய் இழுபட வேண்டியது . வெல்வயர் வேற,வேலை நிவாரணம் வேற.இந்த பணம் அரச கயானாவிலிருந்து வருவதில்லை.வேலைப் பகுதியிலிருந்து கழிக்கப்படுகின்றது.இதைப் கொடாத போது,இதுவும் வரிப் பணம் போல மேலதிகப் பணமாக திரள்கிறது.மத்திய அரசாங்கம் என நினைக்கிறேன், தம் இஸ்டப்படி பயன்படுத்திக் கொள்கின்றது.

ஆமான‌ வேலை கிடைக்க முதல் சிற்சில வெளிகள் ஏற்படவே செய்கின்றன..அந்த நேரம் பணம் இல்லாமல் தவிக்க வேண்டி ஏற்பட்டு விடுகிறது கறுப்பர்களையும்,தேசியமக்களையும் பழி வாங்கத் தான் இப்படி ஆடுகிறார்களோ (மாற்றினார்களோ?)என நினைக்கவும் வேண்டி இருக்கிறது.அதனால் எல்லாருமே பாதிக்கப் படுகிறார்கள்.) நேர்மையான முதலாளி நேர்மையாக நடப்பான்.ஆனால் எல்லாரும் நேர்மையாகவா இருக்கிறார்கள்?.அரசாங்கம், தொழிலாளர்களின் பணத்தை இப்படியானக் குறுக்கு வழிகளால் கஜானாவிற்கு எடுத்து கொள்கிறது.இது ,ஜனநாயக மீறல் தான்!.ஆனால்,அரசாங்கம், எந்த சட்டத்தை இயற்றி , எந்த ஜனநாயக உரிமையும் உங்களிடமிருந்து எந்த நேரமும் பறித்துக் கொள்ளவும் முடியும். சிறிலங்காவில் கொடிக் கட்டிப் பறக்குதல்லவா. !

வீட்டிலே, தம்பியுடன் விஸ்கியை குடித்துக் கொண்டிருந்த பேபி”நான் இவனுக்கு நல் லாய் பாடம் படிப்பித்து விட்டேன்”என்று மயக்கத்தில் உளறினான்.தம்பிக்காரனும் ஸ்கிள் வேலையாள், சொந்தமாக தொழில் செய்கிறவனும் கூட!அவன் ஒரு முதலாளி. தன் வேலையாள் இப்படி செய்தால் எப்படி இருக்கும்?என்று ஒரு தடவை எண்ணிப் பார்த்தான்.தலையைச் சுற்றியது. உதறிக் கொண்டான்.”நீ இழந்தது கொஞ்ச நஞ்சமில்லை என்பது உனக்கு தெரியுமா?” என்று பதிலுக்குக் கேட்டான்.

“நான் ஸ்கிள்காரன்.வேற இடத்திலே எந்த நேரத்திலும் வேலையை எடுக்க முடியும்”என்றான்.கர்வமும் மனிதனை அடிக்கடி ஆட்டிப் படைக்கின்றது.ஆறு ,ஏழு வருசம் போனால்..அவனும் ரொனால்டோவைப் போன்றவனாகி விடுவான் என்பதை மறந்தே விட்டானே.வயசில் செய்கிற போது உள்ள தகுதி, வயசு போன பிறகு புறக்கணிப்புக்குள்ளாகி விடுகிறது.முதலாளி க்கு துள்ளுற உடலுடைய நல்ல உடல் கட்டுள்ள வேலையாள் எப்பவும் தேவைப்படுகிறான் .

“நீயும் மனிசியைப் போல நீ செய்தது தான் சரி, என நியாயம் பிடிவாதம் பிடிக்கிறாய் ;கதைக்கிறாய்.இந்தப் பேச்சை இதோட‌ விடுவோம்.ஏழாம் மனிதன் திரைப்படம் பார்த்தாயா , எப்படி இருக்கிறது?”என்று பேச்சை மாற்றக் கேட்டான்.கதைத்துக் கொண்டிருந்தவனிடம் என்ன ஒரு பதிலையும் காணோம் என எட்டிப் பார்த்தான்.

பேபிக்கு ஆறாம் அறிவு இல்லை.செட்டியில் அப்படியே தூங்கிக் கொண்டிருந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *