மூடி இருந்தது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 3,032 
 

நாளை! நாளை எனக்கு விடுதலை. நான் எதிர் பார்க்கா மல் அது என் அருகில் வந்து விடவில்லை. வாஸ் தவமாக! மாதங்கள், வாரங்கள், நாட்கள், மணிகள், நிமிஷங்கள், ஏன் வினாடிகளும்கூட -அவைகள் ஒவ்வொன் றின் கால அளவையும், கணக்குப் போட்டுப் போட்டுப் பார்த்து விட்ட பிறகு தான் என்னை நெருங்கி வந்தன. எப்படி அந்தக் கடைசி மின் வெட்டு நேரம், சாசுவதமான விடு தலையைத் தரும் கணப் பொழுது, சாவு என்பது உயிர் வாழ்க்கை முழுதும் கண் எதிரில் தோன்றித் தோன்றி, “ஒரு நாள் உன்னிடம் வருவேன்; தயாராக இரு” என்று காதில் சம்மட்டி போட்டு அடிக்கிறதோ, அப்படி இருந்தது.

எதிர்ச் சுவரில் அடிபட்ட மாதங்கள், நாட்கள் ஒழுங்கான வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக இருக் கின்றன; ஒரு நீண்ட வெட்டு உச்சியிலிருந்து அடிவரை ஊடுருவிப் பாய உயிரற்றுக் கறுத்து நிற்கின்றன. அந்தப் புழுக்கைப் பென்சில் ஏதோ ஒரு கையிலிருந்து கெஞ்சி வாங்கினது. அது தான் அந்த நாட்களைச் சிருஷ்டித்தது; ஏன்? அதுவே தான் அவைகளை அழித்ததும்; எவ்வளவு மெதுவாக அந்த நாட்கள் வளர்ந்தன. கருப்பைச் சிசுவின் வளர்ச்சி; அது இதைவிட வேகமாக வளர்ந்ததா, குன்றியதா?

அந்த முதல் நாள்! ஆது பிறந்து வளர்ந்தது என்னுள் எவ்வளவு அழுத்தமாகப் பதிந்து, இருக் கின்றது! நான். அதை ஒன்று. என்று இலக்கத்தில் குறித்தேன். பின்பு இரண்டு மூன்று, நான்கு…ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக முளைத்தன.

இன்று நூற்று அறுபத்து ஐந்து நூற்று அறுபத்து – ஆறுக்கு முந்தின எண். பாலர் வகுப்புக் குழந்தை இதைச் சொல்லி விடும். ஆனால் எனக்கும். அந்த எண்ணுக்கும் உள்ள சம்பந்தத்தை அதற்குச் சொல்லத் தெரியாது; “நீ கைதி, ஞாபகம் இருக்கட்டும்” என்று எச்சரிக்கும் கடைசி இரவு இன்று, நூற்று அறுத்து ஆறு: அதன் இரவு என்னைச் சுதந்திரமுள்ளவனாக அடையும். அந்த இரவுக்குத்தான் என்ன அதிருஷ்டம்! க பூட்டியாகிவிட்டது. வெறும் இரும்புக் கதவல்ல ; அது வாயில்லாமலே பேசும். வருஷம் வருஷமாக அது பேசப் பழகி வந்திருக்கிறது. வார்டர் பாஷையில் அது பேசும். கைதியின் பாஷை அதற்குப் புரியும். வழக்கம் போல் அது தன் தோரணையில் உறுமியது. நான் அப்போது தான் அதன் கைதியாக நிலையில், காலடி எடுத்துவைத்துப் பிளாக்கிற்குள் நுழைந்து கொண்டிருந்தேன். என் கடைசித் தினத்தைக் கொண்டாடிய நாள், கொண்டாடிய விதம் அது.

“அடே, அறுநூற்று இருபத்து மூன்று, போ, போ!” இவ்வளவு தான் அதன் உறுமல். கைதிக்குப் புரியாதா அதன் கறுவின தொனி? அலக்ஷியமாகக் சிரித்தேன். இருந்த நாட்கள் எல்லாம் இருந்து விட்டுப்போகிறேன் ; புண்படுத்தும் வார்த்தை பேசு அப்போது மனமில்லை. “என்னைக் காக்கும் பொறுப்பை நாளை முதல் கொடுக்க மாட்டேன்; கடந்துபோன நாட்களுக்காக மன்னிக்க வேண்டும்” என்றேன். உடனே என்ன நடந்தது. புராண பர்னீசசைப்போலப் பயங்கரமாக வீரிட்டுக் கதவு சீறிப் பாய்ந்து தன் வாயை மூடிக் கொண்டது. நான் தள்ளிப் போய்விட்டேன். அதன் ஆகாரம் பறிபோகப் போகிறது; ஆத்திரம் வருவது சகஜந்தானே?

நான் என் படுக்கையில் உட்கார்ந்துகொண்டிருந்தேன். ஆமாம், அது என் படுக்கை தான். யாரும் மறுக்க முடியாது. என் கைகளால் நான் வாங்கிக் கொண்டது. வாங்கிக்கொள்ளும் போது தான் என்ன திருப்தி! வேறு எந்தப் படுக்கையும் இவ்வளவு மனோ சாந்தியை இதுவரையில் தந்தது இல்லை. அந்த இரண்டும் அடங்கின அந்தப் படுக்கை – அந்தச் சாக்கு, அவ்வளவு முரட்டு வார்த்தை கூடாது – நூலுக்குப் பதிலாகச் சணல் கொண்டு நெய்தது அது – அந்தக் கம்பளி: அதன் கணக்கற்ற துவாரங்களையும் சிக்கு நாற்றத்தையும் பற்றிய வியாக்கியானம் எதற்கு?

அந்தச் சாக்கு! கம்பளி!- அவர்கள் பெயர் கொடுத்து இருக்கிறார்கள். இன்னும் அவை என்னுடையவையே. நான் விரும்பினால் அவைகளைக் கிழித்து எறிந்திருக்க முடியும். அந்தச் சுதந்திரம் எனக்கு உண்டு. கைதி ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ஒரு வாரம், பத்து நாட்கள் மார்க்குப் பிடிக்கப்படும். அவ் வளவு தான். ஆனால் நான் அவைகளைப் பத்திரமாகவே சேர்க்கப்போகிறேன். பத்திரமாக! எத்தனை கைகளி லிருந்து எவ்வளவு பத்திரமாக என் கைக்கு வந்திருக் கிறதோ அப்படியே. நான் அவர்களைப் பின்பற்றுவேன்.

அந்தத் தட்டு, குவளை – அவைகளையுந்தான். இன்னும் எத்தனை கை மாறவேண்டு மென்று அவைகளின் தலையில் எழுதியிருக்கிறதோ!- அவை வாழ்க! இயற்கையான ஓய்வை எதிர்பார்த்துக்கொண்டிருக்கட்டும். நான் தொடமாட்டேன்.

இந்த உடைகள் : இவைகளும் என்னுடையவையே! கொஞ்சம் அஜாக்கிரதை காட்டி இவைகளைக் கிழித்து எறிந்திருக்கலாம், வேறு யாருக்கும் உபயோகப் படாமல். நிச்சயமாக, இந்த உடைகள் பெருமை தரக்கூடியவையல்ல. இவை ஒரு கைதியின் உடைகள்! சும்மா கொகத் தாலும் வெளியுலகம் உபயோகிக்கத் தயங்கும்; ஏன்? மறுத்தும் விடும். ஆனால் இந்த உடை என்னுடையது என்பதிலே எனக்குக் கர்வந்தான். வெளியுலகம் இதைப் பற்றி நினைப்பது இருக்கட்டும். வெளியே இதை எடுத்துப்போக அவர்கள் அனுமதித்தால் – ஆனால் அது நடக்காத காரியம் – நான் இதை அணிந்து கொண்டு கண்கள் முன் நடப்பேன். எவனாவது வந்து, ‘நீ கைதி” என்று சொல்லட்டும்; குன்றிப் போவேன்.

அந்த உடைகள் எனக்காக அமைக்கப்படவில்லை. நான் இவைகளுக்காக அமைக்கப்பட்டிருந் தேன்போல் இருக்கிறது. வாஸ்தவமாக, இவை எனக்குத் தனி உருவம் ஏற்படுத்திவிட்டன. உருவம் என்று சொல்லும்போது உடலையும் உடையையும் பிரித்துப் பேச முடியாது. உடையால் ஏற்பட்டது உருவம். அது தானே தோலின் வேலையும்!

இந்த 623 என் நம்பர் தான்; இல்லை, என் பெயர் அது; சிறைச் சாஸ்திரப்படி எனக்குத் தக்க சடங்குகளுக்கு இடையே இடப்பட்ட நாமகரணம். தொட்டிலுக்கு உங்களை அழைக்கவில்லை என்று கோபம் வேண்டாம். பழி வாங்க வேண்டுமானால் இனியும் என்னை 623 என்றே அழையுங்கள். இருவருக்கும் ஒரு வேளை அது திருப்தி தரலாம். இந்த நம்பரைத்தான் என் உடை ஒவ்வொன்றும் முத்திரை வைத்துக்கொண்டிருக்கின்றது.

நாளை இந்த உடைகளை என்னிடமிருந்து பிரித்து விடுவார்கள். எனக்கு முன் விடுதலையானவர்களுக்கும் இது தானே நேர்ந்தது? இந்த 623 என்னிடமிருந்து மறைந்து விடும். சிறைச்சாமான் அறைக்குச் சரிபார்த்துப் போய்விடும். இவை ஒருவேளை வெளுக்கப் படலாம். நான் நினைக்கிறேன் : அந்த வெளுப்பில் அந்த நம்பர் அழிந்து விடுமா பூரணமாக? இல்லை, மங்கலாக இன்னும் இருக்குமா?

அதன் மங்கின வரைவுகள் இருந்தால் அவன் சிரமப்பட்டுக் கண்டு பிடித்து விடுவான். சொல்ல மறந்து விட்டேனே : அவன் தான் – என் வாரிசு – நான் பத்திரமாக விட்டுப்போன இந்த உடைகளை, என் சொத்தைத் தன்னுடையதாக அனுபவிக்கப் போகிறவன் – அவன் என்ன நினைப்பான்? “623 எவனோ? என் அண்ணாத்தை” என்று இவ்வளவு தான் நினைப்பானா? இல்லை ; இன்னும் என்னவாவது நினைப்பானா? எப்படி வேண்டுமானாலும் நினைப்பை ஓட விட்டுக் கொள்ளட்டும். அவனோடு தகராறு கொடுக்க நான் தான் இங்கே இருக்க மாட்டேனே.

அப்போது நான் சுதந்திர மனிதனாக இருப்பேன். எங்கேயாவது, சிறை என்று அர்த்தம் தொனிக்க நிற்கும் இந்த நான்கு சுவர்களுக்கு வெளியே இருப்பேன்.

உட்புறம் இருப்பவர்களைப் பற்றி வெளியே இருப்பவன் அங்கிருந்து நினைக்க என்ன அவசியம் இருக்கிறது? ஒரு காலத்தில் உட்புறம் இருந்தவன்; அவ்வளவு தானே?

வாஸ்தவமாக நான் அதற்கு முன் கைதியாக இருந்த தில்லை. மனித சமூகம் செய்யும் ஒழுங்கீனங்களை யெல்லாம் அடக்கிக்கொள்ள இந்த நிலப்பரப்பு விசாலமானதாக இருக்கிறது. யாரும் இந்தச் சுவர்களுக்கு உட்புறம் வராமல் தலைமறைவாகவே இருந்து காலம் தள்ளிவிட்டுப் போய்விடலாம். துரதிருஷ்ட சாலிகள் சிலரே, இல்லை, தங்கள் குற்றங்களைச் சாதுர்யமாக மறைக்கத் தெரியாதவர்களே உங்கள் வந்து விடுகிறார்கள். நானோ ராஜீயக் கைதி; பகிரங்க மாகக் குற்றத்தை ஒப்புக்கொண்டு உள்ளே வந்தவன். இது எனக்குப் புதிதாக இருந்தது. சப்பென்று இது வரையில் கழிந்த நாட்களிலிருந்து இது ஒரு மாறுதல். நான் இதை அனுபவித்தேன். விரும்பி நாட்களைப் போக்கின தாகத்தான் எனக்கு நினைவு.

நாளை, சட்டத்தின் உடும்புப்பிடி தளர்ந்து விடும். நான் தக்கபடி தண்டிக்கப்பட்டு விட்டதாக அது திருப்திப் பட்டு இருக்கலாம்; அல்லது அலக்ஷியமாகக் கருதி வெளியே வீசி இருக்கலாம். எப்படியும் நான் வெளியே போய்விடுவேன், சுதந்திர மனிதனாக ! இந்த இரும்புக் கம்பிகளைப் பிடித்து நின்று கொண் டிருப்பதற்குப் பதிலாக எங்கோ ஒரு ரெயில்வே ஸ்டேஷன் கதவின் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு டிக்கட் பரிசோதகரை எதிர்பார்த்து நின்று கொண் டிருப்பேன். பிறகு என் மாடி ஜன்னல் கம்பிகள் வழியாகச் சாலையைப் பார்த்துக் கொண்டு இருப்பேன்.

இப்படியெல்லாம் நினைப்பில் ஆழ்ந்திருந்தபோது திடிரென ஞாபகம் வந்தது: சிறையின் கடைசிச் சூரியாஸ் தமனத்தைப் பார்க்கத் தவறிவிட்டேன். வெளியே இருட்டுக் கும்மிவிட்டது. எத்தனை தடவைகள் அந்த இருட்டை மீறி ஊடுருவிப் பார்க்கக் கண்கள் முயன்றிருக்கின்றன! இருட்டு! தனி ஆத்மாவின் ஒரே நண்பன்! இது உங்களுக்குப் பிடிக்காது. “வெளிச்சம் இல்லாமல் முன்னேற முடியாது” என்பீர்கள்; ‘பின் வாங்கவும் முடியாது’ என்று நான் சொல்கிறேன். என்னால் வளர முடியாவிட்டாலும் தேய்ந்து போகாமல் இருந்தால் போதும். அது எனக்குத் திருப்தி தரும்.

இன்று கடைசி நாள்! அந்தக் கும்மிருட்டின் நடுவே புள்ளிகுத்திப் போகும் வெளிச்சம் அதோ தெரிகிறது. வார்டர் தன் கைவிளக்குடன் கடமையைச் செலுத்திக் கொண்டு போகிறான். இரண்டு மணி நேரம் இப்படி வளைய வந்து கொண் டிருக்க வேண்டும், அவனை விடுவிக்கப் பதில் ஆள் வரும் வரையில். பின்பு மறுபடியும் தன் முறைக்குத் தயாராக வேண்டும். அவன் வெளியே போக முடியாது. நான் நாளை போய் விடுவேன். அவனோ முறையாக நடைபோட்டு, குளிருக்காக ‘மப்ளர்’ ஒன்று முகத்தை மறைக்க, விளக்குடன் நாளையும் இப்படியே தான் இருப்பான். மறுநாள், அடுத்த நாள்…இப்படியே. அவன் விடு தலையை எதிர்பார்க்கவேண்டியவன் அல்ல.

என் நண்பர்கள் குறட்டை இதோ என் காதுகளில் விழுந்து கொண்டிருக்கிறது. என்ன நிம்மதி! கனவில் கூட இந்த நினைவு உபத்திரவப்படுத்தாது. அவர்கள்ளுடைய நாட்கள், காலம் அதிகம் நீண்டது; என்னுடையதைப் போல் குறுகின தல்ல. அல்பாயுசு அல்ல. ஆனாலும் நிச்சயம் ஒரு நாள் அவர்களுக்கும் வரும். தங்கள் நாட்களும் குறுகிவிட்டதை அவர்கள் காண்பார்கள். அந்த நினைவு அவர்களைத் தொல்லைப்படுத்தும், இப்போதைய என் நிலையைப் போல்.

எப்படியும் இருள் வளர்ந்து கொண்டு வந்தது. சேகண்டியின் முதல் அடி நிச்சப்தத்தை உடைத்து எறிந்தது. நான் பொறுமையோடு எண்ண ஆரம் பித்தேன். பன்னிரண்டு அடித்து அது ஓய்ந்தது. நடு நிசியாகி விட்டது. இன்னும் படுக்கையில் உட்கார்ந்து கொண் டிருக்கிறேன். நாளை இரவு பன்னிரண்டுக்கு இந்த ராக்ஷஸக்குரல், சேகண்டி சப்தம் என் காதைக் கிழித்து எறியாது. தூக்கத்தைக் கலைத்துப் புரண்டு படுக்கச் சொல்லாது. எங்கேயோ வேறு ஏதாவது சுவரில் மாட்டியிருக்கும் கடிகாரம் ஒன்று, தூக்கத்தைக் கலைத்துவிடுவோமோ என்று உள்ளூறப் பயத்துடன் மிருதுவாக அடிக்கும். நான் அதை எங்கே கேட்கப் போகிறேன்? நான் தான் சுதந்திர மனிதனாக நிம்மதி யோடு குறட்டை விட்டுக்கொண்டிருப்பேனே!

இவைகளெல்லாம் – இந்தப் படுக்கை, தட்டு, குவளை , நம்பர், இரும்புக் கிராதிகள், சுற்றுப்புறம், இந்த வாழ்க்கை நினைவுகள் எல்லாம் கடந்து போனவையாகி விடும், நான், சுதந்திர மனிதனாக ஆனதும். எத்தனையோ கடந்த நாட்கள், நினைவுகள் அவற்றோடு இவையும் போய் ஒட்டிக்கொள்ளும். அப்போதைய நாட்களும், நினைவு களும் முந்தி வந்து நிற்கும். ஆகவே, இப்போதாவது இந்த நாட்களை நான் அழுத்தமாக நினைப்பூட்டிக்கொள்கிறேன்.

நான் தூங்கி விட்டதாகத் தெரிந்தது. கண் விழித்த போது அதைக் கேட்க முடிந்தது – அந்த ஒற்றைக் குரலை! ஆழத்திலிருந்து கிளம்பி உச்சியில் போய் நிற்கும் அந்த அழைப்பு – பிரார்த்தனைக்கு! சுருட்டி மடக்கி எழுந்தேன். என் கடைசிப் பிரார்த்தனை அது. ஒரு காலி இடம் இருந்தது; அதிலே போய் நின்றேன், அவர்களில் ஒருவனாக; கடைசித் தடவையாக நின்றேன்.

அது முடிந்தது. கீழ் வானம் வெளுப்பதைக் கம்பிகளில் கைவைத்துப் பார்த்துக்கொண்டு நின்றேன். அவை குளிர்ந்து இருந்தன. ஒரு வேளை என் விரல் களின் உஷ்ணத்தை அனுபவித்து இருக்கக்கூடும். ஒரு நாள் தானே? வெளுத்த கீழ்வானக் கருப்பையிலிருந்து

சூரியன் ஒளியோடு பிறப்பதை நான் பார்க்க முடிந்தது. ஏற்கனவே அதன் கிரணங்கள் என்னைச் சுதந்திர மனிதனென்று உணர்வதாக நான் உணர்ந்து விட்டேன். ஆனாலும் பூசாரி வரம் கொடுக்கவேண்டுமே?

பிறகு வழக்கம்போல் வார்டரின் கைக்கொத்துச் சாவி பூட்டைத் திறந்து விட்டது. தினசரி வேலைகள் ஆரம்பமாகி நிறைவேறிக்கொண்டிருந்தன. ஆனால் எல்லாம் என்னிடம் பேசினது “கடைசி! கடைசி!! கடைசி!!!” என்பது தான்.

இந்த உலகத்திலிருந்து கடைசி மனிதனாக வெளியேறுவதிலே எனக்கு ஆசைதான்; அது முடியாதே!

அப்புறம் வார்டர் வந்தான். ‘பிளாக்’ வாசலில் நின்று பலக்கக் கத்தினான்: ‘623’ என்று இரண்டு மூன்று தரம். எனக்கு அழைப்பு வந்துவிட்டது. ‘நான் தான்’ என்று போய் நின்றேன். “உன்னுடைய தெல்லா வற்றையும் எடுத்துக்கொண்டு வா” என்றான். ஆமாம், என்னுடைய தெல்லாந்தான் இன் னும் ! அப்படியே வாரிச் சுருட்டிக்கொண்டு அவன் பின் சென்றேன். அவை கணக்கிடப்பட்டன. ஒரு கைதி அவைகளைக் கட்டி மூலையில் எறிந்தான். இனி அவை என்னுடையவை அல்ல. அந்த அசேதனப் பொருள்கள் பெருமைப்படலாம். பிறகு என்னுடையவற்றைக் கொடுத்தார்கள். நூற்று அறுபத்தாறு நாட்களுக்கு முன்பு அவை என்னுடையவனவாக இருந்தன ; இப்போது மறுபடியும் எனக்குச் சொந்தமாகிவிட்டன. நான் அணிந்து கொண்டேன். என் பக்கம் நின்ற சில குரல்கள் எனக்கு ஓர் உருவம் வந்து விட்டதாகக் கூறின. ஆமாம்; சுதந்திர மனிதனின் உருவமாக இருக்கும் அது.

அதன்பின் அந்தச் சம்பிரதாயச் சடங்குத் தொல்லைகள் ; நான் கைதியாக இருந்ததை ஊர்ஜிதம் செய்யும் கடைசிச் சடங்குகள் – இல்லை, சுதந்திரமடை வதற்கான பூர்வாங்கச் சடங்குகள் என்று வைத்துக் கொண்டாலும் சரி. சம்பிரதாயச் சடங்குகள்! எங்கிருந்தாலும் மனிதன் இவைகளிலிருந்து தப்பித்துப் போக முடியாது.

எல்லாம் முடிந்து விட்டது. நான் அந்தக் கதவை நோக்கி நடந்து போய்க்கொண்டிருந்தேன். அந்தக் கதவு ஒரு நாள் என்னை விழுங்கிவிட்டது. இப்போது வெளியே கக்கப் போகிறது. பாவம்! ஜீரணிக்க முடியாத குடல்! நான் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு விட்டேன். எனக்கு ஞாபகம் இருக்கிறது, அப்போது நடந்து கொண்டவிதம். “உங்களை விட்டுப் பிரிவதற்கு வருந்துகிறேன்” இதுதான் நான் சொன்னது. முட்டாள்! நான் சொல்லி இருக்கக்கூடாது. அளவுக்கு மீறின உணர்ச்சி! வார்டர் என்னோடு வந்துகொண் டிருந்தான். கதவைத் திறந்து அனுப்பிவிட்டுத் திரும்பிப் போவான்; என் பிளாக்குக்கு அல்ல; அவன் பிளாக்குக்கு.

திடீரென்று அவன், “போய்விட்டுத் திரும்பி வருவீர்களா?” என்று கேட்டான். நான் அதிர்ந்து போனேன். அவன் என்னை அறிந்து கொண்டு விட்டானா? பின் ஏன் இந்தக் கேள்வி? அவன் முழுதும் தெரிந்து கேட்கவில்லை; கொஞ்சம் தெரியும். நான் அப்போது வந்தது போல் மறுபடியும் வரலாம். இது சகஜமாகத் தோன்றி இருக்கக்கூடும். கேள்வி சின்னது தான். ஆனால் பதில் சொல்லத் தயங்கினேன்.

பின்பு, “எனக்கே தெரியாது. யார் தான் சொல்ல முடியும்?” என்றேன்.

அவன் திருப்தி அடைந்துவிட்டான். என் முன் நின்ற கதவு வழிவிட்டது. இது இரண்டாவது கதவு. சிறை என்ற அழுத்தமான தொனியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கம்மச்செய்யும் ஓசையோடு அது விரிந்து கொடுத்தது. நான் அதைத் தாண்டி வந்துவிட்டேன். ‘சிறை’ என்ற தொனியை அழுத்தமாக்கும் ஓர் ஓசையோடு அது குவிந்து கொண்டது. அந்த வார்டர், என் துணை ஆள், எங்கே?

அடுத்த கதவு! அதையும் நோக்கி நான் போய்க் கொண்டிருந்தேன். அதுதான் மூன்றாவது, கடைசி! அந்தக் கதவை , “இந்த ஆளை வெளியே விடு” என்று ஒரு முரட்டுக் குரல் அதிகாரம் செய்தது. ஆள்! நான் உயர்ந்துவிட்டேன். சிறை எல்லைக்குள் தான் இருந்தேன் ; ஆனாலும் ஆளாகிவிட்டேன். கைதியல்ல. எனக்கு மதிப்புக் கொடுத்த அந்தக் குரலுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அதைக் கவனித்தேன். அதே குரல் தான்! எனக்குப் பின் அடைத்துக் கொண்ட கதவுக்கு உட்புறம், “இந்தக் கைதியைக் கொண்டு போ , அங்கே!” என்று வாய் ஓயாமல் கூவிய அதே குரல் தான். என்ன இருந்தாலும் மனிதன் அவ்வளவு கீழே போய்விடுகிறதில்லை.

கடைசிக் கதவும் திறக்கப்போகிறது. நான் ஒரு சுதந்திர மனிதன் ஆகிவிடுவேன், அந்தக் கதவு நிலையிலிருந்து ஓர் எட்டு வெளியே எட்டிப்போட்டதும். என் ஹிருதயம் நிரம்பி இருந்தது. நிம்மதியா அல்லது கனமா? இரண்டும் அல்ல. இல்லை, இரண்டும் சேர்ந்து. ஒரு கிரீச் சப்தம். அது ஓர் அபிமான ஹிருதயத்தின் அடியிலிருந்து எழும் அநுதாபக்குரலின் தொனியென்று எனக்குப்பட்டது. அந்தத் தொனியோடு கடைசிக் கதவும் திறந்து கொண்டது. எதையும் நான் சொல்லி விடக்கூடும்; அந்த க்ஷணத்து உணர்ச்சியை மட்டும் சொல்ல முடியாது. அது ஹிருதயத்தின் தனிச்சொத்து அதற்குப் பாஷையே இல்லை.

நான் வெளியே ஓர் எட்டு எடுத்து வைத்துவிட்டேன். என்னவோ திரும்பிப்பார்க்கத் தோன்றியது; பார்த்தேன். “சுதந்திர மனுஷா, பிரஷ்டா! இனி இந்தப் பக்கம் திரும்பாதே” என்று ஓர் உறுமலோடு (நான் நினைத்தேன்) கதவு இறுகிக்கொண்டது.

அப்புறந்தான் நான் எதிரே பார்த்தேன், சுதந்திர மனிதனாக. எனக்கு முன் ஒரு சாலை நீண்டு போகிறது. பின்னால் கட்டிடங்கள், மனிதன் ஆக்கியவை. இன்னும் பின்னால் மரங்கள் கறுத்து அடர்ந்த கூட்டம். அதற்கும் தள்ளி, முழுதும் வளைந்து நின்ற மலைத்தொடர்ச்சி. பின்னும் தொலைவில் வானவெளி கீழிறங்கி எதிலோ கலந்து முயங்கி ஒன்று படுகிறது. இவ்வளவுதானா?

இல்லை. அதற்கும் பின்னால் கண்கள் வெறியோடு ஊடுருவிப் பார்த்தன.

அந்தக் கண்களில் என்ன விழுந்து கொண்டிருந்தது? அது தெளிவாகிக்கொண்டிருந்ததா?

ஆமாம், இன்னும் ஒரு கதவு மூடி இருந்தது.

– ஸரஸாவின் பொம்மை (கதைகள்), முதற் பதிப்பு: 1942, கலைமகள் காரியாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *