கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 6, 2021
பார்வையிட்டோர்: 11,554 
 

(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பேச்சி, ஒரு இன்பமான கனவு கண்டாள்.

இரட்டைக் கதவு போட்ட ஒரு வாசல், ஒரு கதவு மட்டும் திறத் திருந்தது. ஒரு கதவு மூடியிருக்கிறது. மூடியிருக்கும் அந்தக் கதவைப் பிடித்திருக்கும் பிஞ்சு விரல்கள் மட்டும் தெரிகிறது. ஒரு குழந்தையின் தலை மெதுவாக எட்டிப்பார்க்கிறது. திரும்பவும் மெள்ள எட்டிப் பார்க்கியது. பார்த்தவுடன் சிரித்துக்கொண்டே அது சரக்கென்று தலையை இழுத்துக்கொள்கிறது. திரும்பவும் மெள்ள…

பார்வதி அம்மன் கோவிலுக்குமுன் இருந்த வேப்பமர நிழலில் பேச்சி படுத்திருந்தாள். நல்ல நிலா. அவளைத் தொட்டுத் தொட்டு உலுக்குவது போல் மேல் காற்று இறைந்து இறைந்து அடித்துக் கொண்டிருக்கிறது. கைகளை அகல விரித்துப்போட்டு மல்லாக்க தன் தரையில் படுத்து அயர்ந்து தூங்கிக்கொண்டு கிடந்தாள் அவள். ரவிக்கை அணியாத மாராப்புச் சேலை வயிற்றில் இடந்தது. ஆடையும் விலகி அலங்கோலமாக இருந்தது.

தூங்க ஆரம்பித்தபோது அவள் படுத்திருத்த இடத்தில் இப்பொழுது மரத்தின் நிழல் விலக நிலவு காய ஆரம்பித்துவிட்டது. முகத்தின் மீது மட்டிலுமே வேப்ப மரத்தின் அடர்ந்த பந்து போன்ற ஒரு கிளையின் நிழல் பேச்சியின் முகத்தில் விழுவதும், காற்றின் தள்ளலால் அது விலகி முகத்தில் நிலவடிப்பதுமாக இருக்கும் போதுதான் பேச்சி மேலே கண்ட கனவைக் கண்டுகொண்டிருந்தாள்.

கனவு நீடித்தது. அவள், குழந்தையை எட்டிப்பிடிக்கப் போனாள். குழந்தை மறைந்து கொண்டது. அவள் பிராக்குப் பார்த்துக்கொண்டிருக்கையில் பேச்சியின் பின்னால் வந்து அவளுடைய சேவையைப் பிடித்து இழுத்தது குழத்தை. பிடிப்பதற்குத் திரும்பினால் குழந்தை மறைந்துவிடும். திடீரென்று குழந்தையைப் பேச்சி சேர்த்துப் பிடித்துக் கொண்டுவிட்டாள். ஆவி சேர்த்துக் கட்டி அணைத்து அதன் முகத்தில் மாறிமாறி முத்தமிட்டாள். குழந்தை தினறித் தன்னை உருவிக்கொண்டு போக உளத்துகிறது. ஆடை தீங்கிய திரண்ட மாரில் அந்த உளத்துதல் சொல்லமுடியாமல் பேரின்பமாக உடம்பு புல்லரித்தது பேச்சிக்கு.

இப்பொழுது அவள் கனவு கலைந்து அரை முழிப்புநிலைக்கு வத்து கொண்டிருந்தாள். தான், சோத்துப் பிடித்துக்கொண்டிருந்த குழந்தை தாங்கமுடியாத கனமாகத் தெரியவே தான் கண்டது கனவு அல்ல, திழலுக்குப் படுத்திருந்த மரமே தன்மீது சாய்ந்து அமுக்கி விட்டது என்று நினைத்தாள். அடிவயிற்றில் பாரமாக அமுக்கி நெஞ்சின்மீது விழுந்து கிடந்த மரத்தை சேர்த்துப் பிடித்திருந்த இரு கைகளையும் விட்டுவிட்டு, உயிர்தப்பிக்க நினைத்து விசில் ஸ்தாயையில் கோரமான ஒரு குரல் அவளிலிருந்து வெளிப்பட்டது. வெளிப்பட்ட அந்தக் கணத்திலேயே அவள் தூக்கம் தெளித்தாள்.

சற்று தூரத்தில் யாரோ ஒரு மனிதன் ஓடுவதுபோல் தெரிந்தது.

***

மேகாட்டிலிருந்து பருத்தி வெடிக்கும் காலத்தில் மட்டும் வந்து, பருத்தி எடுக்க வரும் வலசைக்காரர்களில் ஒருத்தியே பேச்சி. அந்தக் இராமத்துக்கு அந்த சீஸனில் நூற்றுக்கணக்கான வலசைப் பெண்கள் வருவார்கள். அவர்களில் சிலர் சம்சாரிகளின் தொமுக்களில் தங்கிக் காய்ச்சிக் குடிப்பார்கள். இடம் கிடைக்காதவர்கள் பொது இடங்களிலும் வசிப்பார்கள். பகிர்ந்துகொண்டு வருகிற பருத்தியில் ஒரு பகுதியை சம்சாரிகளின் வீடுகளிலேயே ஒரு சாக்கில் போட்டுக் கட்டி வைத்துவிட்டு மீதிப் பருத்திக்குக் கடைகளில் சீனிக் கிழங்கும், மொச்சைப் பயறும், கருப்பட்டியும் வாங்கித் தின்பார்கள். முக்கியமான உணவு அவர்களுக்கு மூன்று வேளையும் சீனிக்கிழங்குதான்.

அவர்கள் குளித்து யாரும் பார்த்ததில்லை. பருத்தி எடுத்துக் கொண்டு வெயிலோடு வெயிலாக வந்ததும், தெருக்களில் இருந்து கொண்டு மாராப்புச் சீலையை மட்டும் நீக்கி இடுப்பில் சுற்றிக் கொண்டு ஒரு போகிணித் தண்ணீரினால் முகம், கக்கம், முதுகு, மார்பு, கைகள் முதலியவைகளை மட்டிலும் கழுவிக்கொள்வார்கள். போகிணியில் மீந்த தண்ணீர் இருக்குமானால் பாதங்களையும் நனைப்பது உண்டு.

தகரக் குப்பிகளில் ஊரிலிருந்து அவர்கள் கொண்டு வந்திருக்கும் விளக்கெண்ணெயைத் தலையில் பூசிக்கொள்வார்கள். தெருக்களில் போனாலே ஒருவித துர்வாடை அவர்களிடமிருந்து வீசும். அழுக்கடைந்த குட்டையான பறட்டைத் தலைமயிரும், கைகளில் கனமான கல்வெள்ளிக் காப்புகளும், காதுகளில் வெள்ளி பித்தளைக் குணுக்குகளும், ஊத்தை திறைந்த மஞ்ச மஞ்சேரென்ற பெரிய மாட்டுப் பற்களும், அழுத்தமான நிறங்களுள்ள கண்டாங்கிச் சேலைகளும், ரவிக்கை அணியாத உருண்ட மார்புகளும், நீட்டி நீட்டிப் போகிற ஒரு விதத் தமிமுடனும் அவர்கள் இலங்குவார்கள்.

பேச்சியை அவர்கள் அவள் எதிரிலேயே ‘ஏ கோட்டிக் கமுதை என்றுதான் கூப்பிடுவார்கள். அவன் ஒருமாதிரி சுபாவம் உடைமரத்தைப் போன்ற பரட்டை மயிர்த்தலை. வாயின் உதட்டோரங்களில் நீண்டு வெளிவந்திருக்கும் சிங்கப்பல்கள், தூங்கும்போது வழிந்தோடிக் காய்த்த கொடுவாய்க்கறை, இடுங்கிய, பூளைதள்ளிய இல்லிக் கண்கள், அடர்த்த புருவங்கள், மழை பெய்து நனைந்த பனைமரத்தைப் போன்ற கருப்புதிறம். கருங்கோரைப் புற்களைப்போல மயிர் நீண்டிருக்கும் வியர்வை ஓடும் கக்கங்கள், திட்டுத்திட்டாய்ப் பூராவும் அமுக்கு படிந்து உறைந்துபோன மேல். வங்குபடிந்த வெளிர் நிறங்கொண்ட கால்கள். அதில் குளித்து தின்று மூத்திரம் பெய்வதால் விழுத்த தெறிப்புகள். தைந்துபோன, அமுங்கல் சிகப்பு நிறம் கண்டாங்கிச் சேலை; இவ்வளவு பிறவிக்கோரங்களுக்கும் மத்தியில், இயற்கை அவளுடைய மேலில் ஒரு விளையாட்டைக் காட்டியிருந்தது. கோயில் சிலைகளையெல்லாம் விருசக்கடிய ஒரு அப்சரஸின் ஸ்தன்யங்களைப் பெற்றிருந்தாள் அவள்.

***

பேச்சி இப்பொழுதெல்லாம் பருத்தி எடுக்கப் புஞ்சைக்கு சரியாகப் போகிறதில்லை. ராத்திரிநேரங்களில் அந்த மரத்தின் அடியில் இருட் டான இடமாகப் பார்த்துப்போய்த் தனியாக உட்கார்ந்து எதையோ எதிர்பார்த்துக் காத்துக்கிடப்பதாகத் தோன்றும். தாங்கமுடியாத சந்தோஷத்தினால் அழுவதுபோலவும், தாளமுடியாத துக்கத்தினால் சிரிப்பது போலவும் செய்வான் அவன். மீண்டும் மீண்டும் எத்தனையோ தரம் அந்த வேப்பமரத்தின் அடியில் கொடுவாய் வழிய அசிங்கமாக, மரக்கட்டையாய் உறங்கினாள். அதற்குப்பிறகு அந்த மாதிரிக்கனவு ஒன்றை அவள் காணவே இல்லை.

மூணு மாதங்களுக்கெல்லாம் ஒருநாள் பருத்திப் புஞ்சையில் பேச்சி வாந்தி எடுத்தாள். கூடியிருந்த பொம்பளைகள், அவளுக்கு மசக்கை என்று கேலி செய்தார்கள். அதில் எவளுடைய நாக்கு, கருநாக்கோ, பேச்சி நிஜமாகவே மசக்கையாகி இருந்தாள். அவளுடைய முகத்தில், பைத்தியங்களுக்கே இருக்கும் ஒருவித முகக்களைத் தோற்றத்திலிருந்து ஒரு மாறுதல் தோன்றுவதுபோல் இருந்தது.

பேச்சி இதுவரை கன்னிகழியாத, கல்யாணமாகாதவளாக இருந்தவள். ஆகவே இப்பொழுது இந்த சமாச்சாரம், காட்டுத்தி மாதிரி ஊருக்குள் பரவியது. பலர் அதை நம்ப யோசித்தார்கள். முக்கியமாக அந்த ஊரில் அது கன்னிப்பெண்களை திடுக்கிட வைத்தது. பேச்சியின் ஊருக்கும் தகவல் எட்டி அவளுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஆம்பிளைகள் பலர் வந்தார்கள். அவர்கள் பேச்சியை அடித்துக் கேட்டார்கள்.

‘யார்; சொல்லு சொல்லு’, என்று உதைத்தார்கள். தாங்கமுடியாத அடி அவள் மேலில் விழும் போது மாத்திரம் அவள் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்ததுபோல் சுற்றிலும் நிற்பவர்களைப் பார்த்து ‘என்ன’ என்று மட்டும் கேட்பாள். அது, என்னைப்போட்டு ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்; பேசாமல் போங்களேன் ஜோலியைப் பார்த்து என்று சொல்வது போலிருக்கும். சிலசமயம் அடி பொறுக்கமுடியாமல் போகும் போது, ‘எனக்குத் தெரியாது; சத்தியமாய் எனக்குத் தெரியாது. ஐயோ கடவுளே எனக்குத் தெரியாது; தெரியாது’ என்று கீச்சுக்குரலில் கூக்குரலிட்டு அழுவாள்.

வத்தவர்களுக்கு அவளுடைய காரியம், அவர்களுக்குத் தாங்க முடியாத அவமானமாகப்பட்டது. தங்கள் சக்தியை எல்லாம் செலவழித்து அவளை அடித்து நொறுக்கி எடுத்தார்கள். பல தடவைகளில் பேச்சி மூர்ச்சையானாள். ஆனாலும் அவளிடமிருந்து அவர்களால் எதையுமே தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் தோற்று விட்டார்கள். வந்தவர்களில் இரண்டு ஆண்கள், தங்கள் முகத்தில் தாங்களே அறைந்து கொண்டு தலையை இரண்டு கைகளிலும் தாங்கி அந்த இடத்திலேயே உட்கார்ந்துகொண்டு அழுதார்கள். அவர்களைச் சேர்த்த பொம்பிளைகள் அவளை வைத வசவுக்கு கணக்கு வழக்கில்லை, அவர்களில் ஒருத்தி கடேசியாகச் சொன்னாள்,

“இந்த முண்டையை கண்டங்கண்டமா நறுக்கினாலும் மனசு ஆறாது”

இன்னொருத்தி சொன்னாள்,

“ஒரு குழியைத் தோண்டுங்க. இவளை இங்கேயே உயிரோடெ புதைச்சிட்டுப் போயிறுவோம்”

ஊருக்குள் தினமும் காலையிலும் ராத்திரியும் சம்சாரி வீடுகளில் சோத்துக்கு வரும் குடிமகளும் வண்ணாத்தியும் இந்த விஷயம் பற்றி வீட்டுப்பெண்களுடன் நின்று நின்று, மூக்கின் மேல் விரலை வைத்து இப்படி உண்டுமா என்று தொடங்கி பேச்சியைப்பற்றி தாங்கள் அறிந்த விஷயங்களோடு கொஞ்சம் கற்பனையையும் கூட்டிச் சேர்த்துப் பேசினார்கள். சோத்துப்பெட்டியைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு குடிமகள் காளி சொன்னாள்.

‘அம்மா இனிமே சின்னஞ்சிறுசுகள் வேனல்காலத்திலே வெளியில், முத்தத்திலே படுத்துத் தூங்க நீதி இல்லை தாயே நீதி இல்லை’

‘எனக்கும் இவ்வளவு வயசாச்சி இப்படி ஒரு வங்கொடுமை நடந்து இந்தக் கண்ணாலே பார்த்ததில்லை தாயே’

‘என்ன செய்யமுடியும்; அவளும் நம்மளைப்போல் பொம்பிளை தானே; அடி பாதகத்தி’ என்று சொல்லி உணர்ச்சிவசமாகிக் கண்களில் பொங்கிய கண்ணீரைத் துடைக்காமல் வைத்துக்கொண்டே பளீரென்று சிரித்து,

‘ஆமம்ம, அப்பவும் ஒரு பொம்பிளைக்கு ‘இது’கூடத் தெரியாமலா போய்விட்டது?’ என்று கேட்டு மேலும் சிரித்தாள். அந்த நேரத்துக்கு அதே வீட்டுக்கு சோறு வாங்கிக்கொண்டு போக ஏகாலி சுடலியும் கையில் பனைநார்ப்பெட்டியுடன் வந்தாள். வந்தவள் காளி சொன்ன கடேசி அடியைக் கேட்டுக்கொண்டு சொல்லுவாள்,

‘தெரியாதா! அப்படியா வரும் தூக்கம் ஒரு பொம்பிளைக்கு? திருட்டுச் சிறுக்கிங்கே, கோட்டியில்லை அவ. கோட்டிக்காரி மாதரி வேசம் போடுதா..?’

ஆனால் காளியும் மற்றவர்களும் இதை நம்ப முடியவில்லை.

‘ஏதோ மோசம் போய்விட்டது, அவ்வளவுதான் கதை’ என்று சொன்னார்கள். அதை நினைக்கும்போதெல்லாம் அவர்களுக்கு வயிறு ‘பகீர்’ என்றது.

***

அந்த வருஷ ஆடி மாசம் மேல்காற்று அமோகமாய் அடித்ததால் கோடைப்பருத்தி வெடிப்பு ஓய்ந்த பருவமாய்விட்டது. வலசைக்காரர்கள் அவர்கள் ஊர்களுக்குப் புறப்பட்டுப் போய்விட்டார்கள். பேச்சி அவர்களோடு போகமுடியாது என்று சொல்லிவிட்டு இந்த ஊரிலேயே இருந்துவிட்டாள்.

மாசம் ஆக ஆக வயிறு பெரிசாகிக்கொண்டே வந்தது. வீடுகளில் குதிரைவாலி குத்திக்கொடுக்கிறது முதலிய காரியங்களை கூப்பிட்ட பேர்களுக்குச் செய்துகொடுத்து அவர்கள் ஊத்திய கஞ்சியைக் குடித்து வயிற்றை வளர்த்து வந்தாள் அவள்.

ஒரு வேலையும் இல்லாத தினங்களில் சில பொம்பிளைகள் ஐய்யோ பாவம்; வாயும் வயிறுமாய் இருக்காளே என்று இரக்கப்பட்டு வடி தண்ணி கொடுக்கிறது உண்டு, திட்டி வைதவர்களும், இளக்காரமாய் பேசினவர்களுங்கூட இப்போ பேச்சியின் பெரிய சரிந்த வயத்தைப் பார்த்து இரக்கப்பட்டு உதவினார்கள்.

வேளை வந்துவிட்டது. வெங்கா நாயக்கரின் மாட்டுத்தொழுவில் பேச்சியின் பேறுகாலத்திற்கு ஒரு மூலையில் தெறசல் வெத்து ஏற்பாடு செய்துகொடுத்தார்கள் பொம்பிளைகள். ஒருபக்கம் குஷி அவர்களுக்கு; ஒருபக்கம் இரக்கம். ஊர் கூடிப் பிரசவம் பார்த்தது இதுவரையில் இல்லை. நடுவீட்டு ரங்கம்மாள் தன் பேறுகாலத்துக்கு இடித்து வைத்திருந்த மிச்ச மருந்து உருண்டைகளைக் கொண்டுவந்து கொடுத்தாள். ஏகாலி நவரட்ணம் மாத்துத் துணிகள் கொடுத்து உதவினாள். குடிமகள் காளி பண்டுகம் பார்க்க வந்தாள்.

சுகப் பிரசவம்.

‘கோட்டிக்காரி வயித்திலே முத்துக்குட்டி போல இப்படி ஒரு ஆம்பிளைக் குழந்தை பிறந்திட்டதே’ என்று மூக்கின் மேல் விரல் வைக்காதவர்கள் கிடையாது. அவர்களுக்குத் தெரிந்த முகங்களை யெல்லாம் அவரவர்கள் மனசுக்குக் கொண்டுவந்து பிறந்த குழந்தையின் முகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தார்கள். ஒன்றும், ஒரு நிதானமும் பிடிபடவில்லை அவர்களுக்கு.

அங்கு கூடி இருந்தவர்கள் கேட்டுக்கொண்டபடி, குடிமகள் காளியே குழந்தைக்குச் சேனை வைத்தாள்.

பிரசவத்துக்குப் பிறகு பேச்சியின் முகத்தில் ஒரு ஆச்சரியமான மாறுதல் உண்டானது. அந்த மீதிப் பைத்தியக்களை பூர்ணமாக விலகி விட்டது போலத் தெரித்தது.

சிரசிலடிக்கும்படியாக அவன் மடுவில் வேகத்தோடு நிறையப் பால் இருந்தது. ஒருபக்கம் குழந்தை வாய்வைத்துக் குடித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்ததில் வெள்ளை நூல்களாக பால் பீச்சி அடித்துக் கொண்டே இருக்கும். மறு கையினால் மாராப்புத்துணியோடு சேர்த்து, காயத்திலிருந்து பீறிடுகிற இரத்தத்தை அமுக்கிப் பிடித்துக்கொள்கிற மாதிரி அமுக்கிப் பிடித்துக்கொள்வாள். வசதியான வீட்டுப் பொம்பிளைகள் இதைப் பார்த்து அதிசய ஆனந்தங்கொள்வார்கள். பேச்சி தொலைவில் வரும்போதே மனிதப் பாலின் கொச்சை நெடி கொல்லும்.

செழிக்கச் செழிக்கத் தாய்ப்பாலையே குடித்து வளர்ந்த குழந்தையின் ஆரோக்கியம் வர்ணிக்கமுடியாத ஒன்று. கனவில் கண்ட அதே அழகு நிறைந்த குழந்தைபோலவே இருந்தது அது.

பேச்சி இப்பொழுது, வேலைசெய்து சாப்பிடுகிற வீடுகளில் போடுகிற சோறு காணாமல் வீடுவீடாகப் பிச்சை எடுத்தும் சாப்பிட்டு வத்தாள். அழுங்குரலில் சொல் இன்னதென்றே விளங்காத தாலாட்டுப் பாடுவாள் குழந்தைக்கு. அந்தியும் வெள்ளனும் அவள், நடுத்தெருவின் சுவர் நிழலில் உட்கார்ந்து குழந்தையை மடியில் உட்காரவைத்துக் கொண்டு, போகிற வருகிற இளவட்டங்களின் முகங்களை அவர்களுக்குத் தெரியாமல் கூர்ந்து பார்க்கிறதும், பிறகு தன் மடியிலுள்ள குழத்தையின் முகத்தைப் பார்க்கிறதுமாவே இருப்பாள்.

***

திருஷ்டி என்று ஒன்று இருக்கிறதா என்று தெரியாது. பேச்சியின் குழந்தையை அது தைத்துவிட்டது என்று சொன்னார்கள். திடீரென்று ஒருநாள் ‘டிப்தீரியா’ காண்டு குழந்தை இறந்துபோய்விட்டது. ஊர்க்காரர்கள் பேச்சை அவள் நம்பத் தயாராயில்லை; தன் குழந்தை இருப்பதாகவே அவள் மனப்பூர்வமாக நம்பினாள். வழக்கம்போலவே அதனுடன் கொஞ்சினாள், முத்தமிட்டாள், சிரித்தாள், படுத்துக் கொண்டு பக்கத்தில் கிடத்திப் பீச்சும் இரு ஸ்தனங்களின் அமிர்தப் பாலினால் அதைத் தெப்பமாக நனைத்துக்கொண்டே அந்த சொகத்தில் கண்களைச் சொருகி உறங்கினாள்.

அவளுக்குத் திரும்பவும் கோட்டி வந்துவிட்டது என்று சொன்னார்கள். அவள் அதை இடுக்கிக்கொண்டே வீடு வீடாய் பிச்சை எடுத்தாள். பேச்சியின் ஊருக்குச் சமாச்சாரத்தைச் சொல்லி அனுப்பினார்கள். அவளுடைய ஊரிலிருந்து ஆட்கள் வந்தார்கள்.

இப்போது ஒரு புதிய போராட்டம் நடந்தது. பேச்சி குழந்தையைப் புதைக்கக் கொடுக்கமாட்டேன் என்று சொல்லி ஓட ஆரம்பித்தாள். மூணு நாலு நாளாகிவிட்டதால் குழந்தை உப்பி சில இடத்தில் சதை வெடித்துவிட்டிருந்தது. மறித்து மடக்கி அவனைத் துரத்திப் பிடித்து மல்லுக்கட்டி, அவருடைய குரங்குப் பிடியிலிருந்து பிடுங்கி எடுத்தார்கள். குழந்தையின் ஒரு கைகூட கொஞ்சம் பிய்த்து போய்விட்டது. அவளிடமிருந்து குழந்தை மீட்டது வீல் என்று விசில் ஸ்தாயையில் கத்திக்கொண்டே மூர்ச்சையானாள்.

குழந்தையைப் புதைக்கக் கொண்டுபோனார்கள். மூர்ச்சை தெளிந்த பேச்சி சுடுகாட்டுக்கு ஓடினாள். புதைத்து மூடிக்கொண்டிருக்கும்போது அங்கு வந்து சேர்ந்து, ஆர்ப்பாட்டம் செய்தாள். செம்மையாய் உதைத்துக் கைகால்களைக் கட்டிப்போட்டு ஒரு வண்டியில் அவளை அவள் ஊருக்குக் கொண்டுபோய்விட்டார்கள்.

அங்கே அவளை ஒரு வீட்டுக்குள் போட்டு அடைத்து வைத்திருந்தார்கள். அன்ன ஆகாரம் எதையும் அவள் தொடவில்லை. முழங்காலில் கைகளைக் கட்டிக்கொண்டு அண்ணாந்து வீட்டின் கைமரங்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். எப்பவாவது சில சமயம் பூட்டிய கதவில் வந்து தலையை பலமாக ‘ணங்ணங்’ என்று முட்டுவாள், ‘ஐயோ. உன் முகத்தைக்கூட நான் பார்க்கலையடா பாவி..’ மாரில் ஓங்கி ஓங்கி அடித்துக்கொள்கிற சப்தம் கேட்கும்.

ஒரு நாள் அந்த வீட்டின் ஒடுகளைப் பிரித்துக்கொண்டு ராத்திரியே தப்பி ஓடிப்போய்விட்டாள் அவள்.

மறுதான் எல்லா ஊர்களிலும் அவளைத் தேடினார்கள், யார் கண்ணிலும் தட்டுப்படவில்லை.

அவள் ராவோடு ராவாக ஓடினாள். உடம்பில் ஆடை என்பதே இல்லை. அவள் மங்கம்மா சாலையை கடந்து ஓடும்போது ஏர் வெள்ளிகள் வானத்தில் உச்சியைக் கடந்து வெகுதூரம் இறங்கி விட்டிருந்தது. வரிசையாகக் கூடார வண்டிகள் சாலையில், வண்டியின் அடியில் லைட்டைக் கட்டிக்கொண்டு போவது கொள்ளிவாய்ப் பிசாசுகள் நீளமாகப் போகிறதுபோல் இருந்தது. மாடுகளின் கிணுமணி ஓசையும், உள்வாயில் மசக்கை இல்லாததால் அச்சின் உராய்தலால் ஏற்படும் தீண்ட கீச்சு ஒலிகளும், சக்கரங்கள் சாவியிலும் தெப்பக் கட்டையிலும் மாறிமாறித் தட்டுவதினால் உண்டாகும் சத்தங்களும் இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தன. அந்தக் கூடார வண்டிகள் இலஞ்சியிலிருந்தும், செங்கோட்டையிலிருந்தும் மாம்பழங்களை ஏற்றிக்கொண்டு கோவில்பட்டிக்குப் போய்க்கொண்டிருந்தன. அதில் ஒரு வண்டிக்காரன் சோகமான தெம்மாங்குப் பாட்டுப்பாடிக் கொண்டே போனான். அந்த அர்த்த ஜாம இருட்டில் அந்தக் குரல் மனசை அறுப்பதுபோல் இருந்தது.

பேச்சி நேராகத் தன் குழந்தையைப்புதைத்த மயானத்தைப் பார்த்து ஓடினாள். அங்கே ஒரு பிரேதம் சிதையின் மூட்டம் விரிந்து நன்றாய்க் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் தன்னுடைய குழந்தையைப் புதைத்த இடத்தைத் தோண்டினான். தோண்டித் தோண்டி எடுத்துவிட்டாள். சதை அழுகி தீர் வடியும் அதை மார்புடன் அணைத்துக்கொண்டு கலகல என்று உரத்துச் சிரித்தாள். அப்படி சிரிக்கும் போதே அவள் கண்களிலிருந்து தாரை தாரையாய் நீர் வடிந்தது.

திடீரென்று அவளுக்குத் தாளமுடியாத பசி எடுத்தது நெருப்பில் வாட்டிய சீனிக்கிழங்கை எடுத்துத் தின்பதுபோல் வெகுசாதாரணமாக, எரிந்துகொண்டிருந்த பிரேதத்தின் ஒரு பகுதியை ஒரு குச்சியின் உதவியால் இழுத்து, சூடு ஆறுவதற்காக ஊதி ஊதிப் பற்களால் கடித்து இழுத்து வெந்த பிரேதத்தின் மாமிசத்தை ஆவலோடு தின்றாள். தன்னோடும், தன் குழந்தையோடும் எதையோ சிரித்துப் பேசிக்கொண்டே தின்றாள்.

***

ஊர் அடங்கி, நல்ல தூக்கத்திலிருந்தது. சீந்தரிப்பு மிகுந்த சோனைக் காற்று மேல் திசையிலிருந்து அலை அலையாய்த் தன் முழு வேகத்தோடு பியத்து வாங்கியது. மற்ற காலங்களில் அந்த அவ்வளவு மேல் காற்று எங்கேதான் போய்ப் பதுங்கிக்கொண்டு கிடக்குமோ என்று கிராமத்துக்காரர்கள் பேசிக்கொள்வார்கள். சித்திரை பத்துக்குமேல் ஐப்பசி பத்துவரைக்கும் அதன் பேயாட்டம் நடத்தி முடியும். ஒரு நதியின் வேகமான நீரோட்டத்தின் மத்தியில் வாழும் மீன் ஜீவராசிகளைப்போல் சம்சாரிகள் வாழும் இந்தக் கரிசல் பிரதேசத்தில் காற்று, பொங்கப் பொங்கச் சுழியிட்டு, படும் பொருள்களில் எல்லாம் உராய்ந்துகொண்டு சப்தமிட்டவாறு அந்தப் பிரதேசத்தை இரவும் பகலும் கடந்து ஓடிக்கொண்டே இருக்கும். மேற்குக் கருமலையில் ஒரு பெரிய கணவாய் இருக்கிறது. அதில் யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு பிரமாண்டமான ராக்ஷச மதகுப் பலகையால் அடைக்கப்பட்டிருக்கிறது. சித்திரை மாசம் பத்தாம் தேதி அதை யாரோ திறந்து விடுகிறார்கள்! கடல் மடை திறந்தது போல் உடனே காற்று ஒமோ என்று கொந்தளித்துக்கொண்டு ஒரு நதி ஓட்டமாக அந்தக் குறிப்பிட்ட பிரதேசத்தைக் கடத்து கொண்டு ஓடி வருகிறது. கொஞ்சங்கொஞ்சமாக அந்தப் பகுதி மனிதர்கள், வீடுகள், படப்புகள், மரங்கள் யாவும் காற்று வெள்ளத்தில் மூழ்குகிறது. மூழ்கடித்துக் கிழக்குநோக்கி அது இரைச்ச விட்டு நகர்ந்து வேகமாக ஓடுகிறது.

உறக்கத்தில் ஆழ்த்திருப்பவர்களைத் திடுக்குற்று விழிக்கச் செய்யும் ஒரு துர்நாற்றம் அந்தக் கிராமவாசிகளை உலுப்பி எழுப்பியது. யாரும் எப்பவும் அப்படி ஒரு நாற்றத்தை அனுபவித்ததில்லை. அதே போதில் உடம்பு புல்லரிக்கும்படியாக ஒரு குலவைச்சத்தமும் கேட்டது. அதைக் கேட்டவர்களின் உடலிலுள்ள சர்வாங்க மயிர்களும் நட்டக் குத்தலாக நின்றது.

அது ராப்பாடியான காலவீரனின் குலவைக் குரல் இல்லை. வரப் போகிற காலத்தைப்பற்றிச் சொல்லும் ஏதோ ஒரு சமிக்ஞை. இந்தப் பூமியில் யாருக்கு யாரோ ஒரு அநீதி இழைத்துவிட்டார்கள். மீண்டும் அதோ அந்தக் குலவைக் குரல் கேட்கிறது. குழந்தைகள் பதறிவிழித்துத் தங்கள் பெற்றவர்களை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள்.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அந்த மர நாற்றமும் குலவைச் சத்தமும் தூரத்தில் எங்கேயோ கேட்டு, குறைகிறது. துக்கத்தினால் தொண்டை வலிக்க வீட்டுக்குள் அடைத்து கிடந்த மக்கள் ஒருவரை ஒருவர் பிதியோடு பார்த்துக்கொண்டார்கள். அதன்பிறகு அவர்களுக்குத் தூக்கம் பிடிக்கவே இல்லை. ரகஸியக் குரலில் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள்.

***

ஊருக்குத் தொலைவிலுள்ள பெரிய உடங்காட்டில் பேச்சி நிலை கொண்டிருந்தாள். பகலில் கூகையைப்போல் அவள் வெளிப்பட மாட்டாள், பாம்புப்புற்றுகள் சூழ்ந்த உடை மரத்தின்மேல் அவள் இருக்கையாக வெயிலென்றும் மழையென்றும் பாராமல் அதன்மீது கிடந்தாள்.

நரகத்தின் நாற்றம் கொண்ட சிறிய எலும்புக் கோர்வையை இடது கையினால் மாரோடு அணைத்துப் பிடித்துக்கொண்டு பயங்கரமாகக் குலவையிட்டுக்கொண்டு வலது கையை வேகமாக வீசி அந்தக் கிராமத்தின் தெருக்களில் நடுராத்திரிக்குமேல், திட் திட் திட்டென்று அதிரும் சத்தத்துடன் குதிகாலைத் தரையில் இடித்து ஊன்றி நடந்து செல்லும் பேச்சியை இன்னசெய்வதென்று தெரியாமல் செயலிழந்து உட்கார்ந்திருந்தார்கள் ஊர்வாசிகள்.

பகலில் அவள் எங்கே போகிறாள், எங்கே இருக்கிறாள் என்பது யாருக்கும் புரியவில்லை. சுடுகாட்டில் எரியும் பிரேதத்தின் மாமிசத்தைத் தின்பதும், அது கிடைக்காத நாட்களில் உடங்காட்டில் முளைத்துக் கிடக்கும் கத்தாழையையும் தின்று ஜீவித்தாள் அவள். இந்த உலக மனுசர்களின் சங்காத்தமே வேண்டாம் என்பது போலிருந்தது அவளுடைய காரியம்.

காத்தடிக்காலம் போய், மழைக்காலம், பனிக்காலமும் போய், வேனிற்காலம் வந்தது. கோட்டிக்காரிக்குப் பயந்துகொண்டு ஜனங்கள் வெளியே படுத்து உறங்கமுடியாமல் கஷ்டப்பட்டார்கள்.

ஒரு நாள் பஜனை மடத்தின் எதிரிலுள்ள வேப்பமர வரிசையின் நிலா நிழலில், அந்த ஊருக்கு விருந்தாடி வந்திருந்த இளவட்டம் ஒருவன் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காடி வண்டிகளில் ஒன்றில் இருப்புச் சட்டங்களில் படுத்திருத்தவாறே தூங்கிவிட்டான்.

நிலா உச்சியிலிருந்து இறங்க ஆரம்பித்துவிட்டது. வேப்ப மொட்டுகள் ஏடவிழ்ந்து வாசனையைக் கொட்டிக்கொண்டிருந்தது. உப்பங்காற்று தென் கிழக்கிலிருந்து சொகமாக வீசிக்கொண்டிருந்தது. கழுத்தடியில் வியர்வை துளிர்க்க அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அவனுக்கு, பேச்சி அந்த இடத்துக்கு வந்ததோ அவள் தன்னை நெருங்கி வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறதோ அவனுக்குத் தெரியாது. அவளுடைய கை அவனுடைய முகத்தை தோக்கி மெதுவாகப் படர்ந்து சென்றது; பட்டென்று பின்னுக்குச் சுதாரித்துக்கொண்டான் கையை. திடிரென்று தன் உயிர்ஸ்தலத்தில் ஏற்பட்ட பிடியின் சிலிர்ப்பு வேதனையால் பதறி விழித்தான். எதிரே விரிந்த கண்களுடன் சிரித்துக்கொண்டு ஆடை தவிர்த்து நிற்கும் பெண் உருவத்தைப் பார்த்ததும், கோரமாகக் கூக்குரலிட்டு அலறினான். பயத்தினால் அவன் கண்கள் நிலைக்குத்த ஆரம்பித்துவிட்டது.

கிராமத்துக்காரர்கள் ஓடிவந்து, பாய்ந்து வண்டியிலுள்ள ஊணுக் கம்புகளை உருவி அடிக்குமுன்பு அவள், விசில் ஸ்தாயையில் கூக்குர லிட்டுக்கொண்டே ஓடி மறைந்துவிட்டாள்.

***

ஒருநாள் பின் இரவில் கிராமத்தார்கள், பேச்சியின் ஊர்க்காரர்களோடு சேர்ந்து கொண்டு, கம்புகள் சகிதம் ஒரு பன்றியை விரட்டி வேட்டையாடுவதுபோல் அவளை மறுக்கி மறுக்கி, விரட்டி, அடித்துப் பிடித்து அவர்கள் வசம் ஒப்படைத்தார்கள்.

பேச்சியை அவளுடைய ஊருக்குக் கொண்டுபோய் கை கால்களைக் கட்டி ஒரு மச்சு வீட்டுக்குள் போட்டு அடைத்துவிட்டார்கள். பிறகு என்னவெல்லாமோ வைத்தியம் மீண்டும் நடந்தது அவளுக்கு. என்ன செய்தும் பிரயோஜனம் இல்லை. ஒருநாள் ராத்திரி யாருக்கும் தெரியாமல் சுவரில் ஓட்டை போட்டு வெளியேறிவிட்டாள்.

திரும்பவும் அவள், அந்த அடர்ந்து வளர்ந்த உடங்காட்டிலுள்ள பாம்புப்புற்றுகள் சூழ்ந்த உடை மரத்தின்மேல் வந்து அடைக்கலமானாள்.

அந்த ராத்திரிகளில் அதுவும் நல்ல நிலாக்காலங்களில் மட்டுமே அவள் அங்கிருந்து வெளிப்படுவாள். வேட்டையாடும் வெருகுப் பூனை போல் பதுங்கிப் பதுங்கி வருவாள். முந்திமாதிரி அவள் இப்பொழுது ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. பார்வதியம்மன் கோவிலுக்கு முன்னுள்ள வேப்பமரத்தின் நிலா நிழலில் கொஞ்ச நேரம் வந்து தங்கி விட்டுப் போவாள். உறக்கத்தையே அதேக நாட்கள் கண்டிராத அவளுக்கு அந்த வேப்பமரத்தடிக்கு வந்ததும் ஒரு மாதிரிக் கிறக்கம் நிறைந்த அசதியான தூக்கம் வந்து அப்பும். அப்படியே சிறிது நேரம் போர்க்களத்தில் கிடக்கும் ஒரு பிரேதம்போலக் கையையும் காலையும் அகல விரித்துப் போட்டுக்கொண்டு சற்றே சவமாய்த் தூங்குவாள்.

தூங்கி முழித்ததும் அவளுக்குத் தன் குழந்தையின் அழகான சிரித்த முகம் ஞாபகம் வரும். அப்படியே கொஞ்சநேரம் அந்த வேப்ப மரத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு சப்தமில்லாமல் குலுங்கிக் குலுங்கி அழுவாள்.

அந்த வேப்பமரம் அவளுக்கு எந்தவித ஆறுதலும் சொல்ல முடியாத நிலையில் நின்றது. தன் கால்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, குமுறி வரும் துக்கத்தால் குலுங்கும் பேச்சிக்குப் பல திசைகளிலும் விரிந்த அதனுடைய பல கைகளை வானத்தில் அங்கு மிங்கும் ஆட்டி உஸ் என்ற சத்தத்தை வெளியிடும். தாங்கமுடியாத ஒரு பெருமூச்சை அது வெளியிடுவது போலிருக்கும்.

பூமியில் ஜீவராசிகள் இதோ, இப்பொழுது ஒவ்வொன்றாய் விழிக்க ஆரம்பிக்கப்போகிறது என்று சொல்லுவதுபோல விடிகாலையின் முதல்க்குரலாக அக்காக் குருவி கூவ ஆரம்பிக்கும். அக்காக் குருவியின் குரல் கேட்டதும் பேச்சி திடுக்கிட்டு எழுந்து, உடை மரத்தை நோக்கி விரைவாள்.

தூக்கங்கள் வரவர, உணர்வுகள் திரும்பத் திரும்பப் பேச்சி தன் குழந்தையின் நினைவே ஆனாள். கனவிலாவது குழந்தையைக் காண மாட்டோமா என்று ஏங்கினாள். அதேமாதிரி அவளுடைய குழந்தை ஒருநாள் அவள் கனவில் நிஜமாகவே வந்தான். பகபகவென்று சிரித்தான். அவளைத் தொட்டு விளையாடினான். அவன் தன்னை மறந்து சிலிர்த்தாள்.

பல மாசங்கள் கழித்து ஒருநாள் அந்தக் கிராமத்தில் பட்டப்பகலில் தீடிரென்று மனிதர்கள் தெருக்களில் கலைந்து பதறித் தங்கள் தங்கள் வீடுகளுக்குள் புகுந்து கதவை அடைத்துக்கொண்டார்கள். ஊருக்குள் புலி வந்து நுழைந்துவிட்டது போல் ஒரு நிலை. தாங்கள் பாதுகாப்பாக இருந்துகொண்டு, ஜன்னல் கதவுகளை மட்டும் பாதி திறந்து கவனித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

பிறந்த மேனியாக மீண்டும் நிறைமாச கர்ப்பிணியாய் வயிற்றைத் தள்ளிக்கொண்டு அந்தக் கோட்டிக்காரி ஸ்தனங்கள் ஆட, ஒரு ஆணைப்போல் கைகளை முன்னும் பின்னும் வீசிக்கொண்டு திட் திட் என்று பூமி அதிர அந்தக் கிராமத்தின் நடுத்தெருவே நடந்து சென்று கொண்டிருந்தாள்.

– சாந்தி, ஜூலை 1966

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *