கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 13,292 
 

என் பேத்தி ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

காலை நேரம்.

புஞ்சையிலிருந்து தொலைபேசியில் செய்தி வந்தது. ‘கல்யாணி இறந்துவிட்டார். நேற்று இரவு இறந்துபோனார். இன்று பிற்பகல் எடுக்கிறார்கள்’ என்றார், தொலை பேசியில் பேசியவர்.

‘நீங்கள் யார் பேசுவது?’ என்று நான் கேட்டேன்.

‘நான் நரசிம்மனின் மகன்’ என்றார் அவர்.

எந்த நரசிம்மன்?

எனக்கு நிறைய நரசிம்மன்கள் பழகியிருந்தார்கள், கூத்தில் உள்ள நரசிம்மனையும் சேர்த்து.

கல்யாணிக்குக் கல்யாணம் பண்ணிவைப்பதில் என் பங்கு மிகப் பெரிதாக இருந்தது. அவருடைய தங்கையைக் கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்த நரசிம்மன் என்ற தையற்காரனின் பங்கும் பெரிதாக இருந்தது. நாங்கள் இருவரும் நண்பர்கள். ஒருவருக்கொருவர் நண்பராக இருந்ததாலேயே கெட்ட பெயர் எடுத்தவர்கள். கல்யாணியும் என் நண்பர். கல்யாணிதான் என் நண்பர். அதற்குப் பிறகு கல்யாணியின் தங் கையைக் கல்யாணம் பண்ணிக் கொண்டவிதத்தில் நரசிம்மன் எனக்குக் கூடுதலான நண்பரானார். செம்பனார்கோயிலில் தையற்கடை வைத்திருந்த சர்க்கரையின் மூலம் அதே செம்பனார்கோயிலில் தையற்கடை வைத்திருந்த நரசிம்மன் நண்பரானார். எனக்குக் கல்யாணி நண்பர் என்பதால் அவருடைய தங்கையைக் கல்யாணம் பண்ணிக்கொள்வதில் என் உதவியைப் பெற்று அதன் மூலம் கூடுதலான உறவு உண்டாயிற்று எனக்கும் நரசிம்மனுக்கும் இடையில்.

எனக்கும் கல்யாணிக்கும் இடையில் 12 வயது வித்தியாசம் இருந்தது. இறக்கிறபோது வயது 82 என்று பிறகு அவருடைய கருமாதி அன்றைக்குப் புஞ்சைக்கு ஃபோன் செய்து பேசியபோது தெரிந்துகொண்டேன். கடைசி பன்னிரண்டு ஆண்டுகளில் அவர் சக்கர நாற்காலியிலேயே பொழுதைக் கழித்தார். அவருக்கு நீரிழிவு நோய் இருந்தது. அதில் அவர் ஒரு காலை இழந்து பிறகு சக்கர நாற்காலியில் ஏறிக்கொண்டு புஞ்சையின் இன்னொரு விநோதமான பாத்திரமாகமாறியிருந்தார். சக்கர நாற்காலியில், மாடியில் இருந்த அவர் மகன் வீட்டில் சென்னையில் அவரால் பொழுதைக் கழிக்க முடியவில்லை. எனவே, அவர் புஞ்சைக்குத் திரும்பிவிட்டார். இந்தப் பன்னிரண்டு வருஷங்கள் அவருக்குப் புஞ்சையில் மிகவும் சந்தோஷமாகவே போயிருந் திருக்கின்றன. சக்கர நாற்காலியில் எங்கும் அவர் போய்வந்து கொண்டிருந்ததால் அவருக்கு நல்ல உடற் பயிற்சியும் கிடைத்திருக்கிறது. அவருக்குப் பிடித்தமான அரசியலைப் பேச முடிந்திருக்கிறது. அதற்குப் போதுமான டீக்கடைகள் புஞ்சையில் இருந்தன. அவர் திராவிடக் கழகத்துக்காரர். கடைசிவரையில் அவர் திராவிடக் கழகத்துக்காரராகவே இருந்தார்.

என்னுடைய பேத்தி சென்ற ஆண்டுக்கு முந்தின ஆண்டு சிங்கப் பூரிலிருந்து வந்திருந்தபோது புஞ்சைக்கு நாங்கள் போயிருந்தோம். அப்போது அவள் கல்யாணியைப் பார்த்தாள். மேற்குப் பார்த்தும் கிழக்குப் பார்த்தும் இருந்த வீடுகளைக்கொண்ட மேலவீதியின் மேல் சாரியில் தெற்குப் பார்த்து இருந்த வீட்டின் முன்தாழ்வாரத்தில் அவர் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். ‘என்ன கொழந்தெ, ரவியோட மகளா?’ என்று என் பேத்தியை அருகில் அழைத்து அணைத்துக்கொண்டார். அது ஒரு நாற்பது நாற்பத்தைந்து வருஷங்களுக்கு முந்தியதாக இருக்குமானால் சாராய வாடையில் என் பேத்தி அவர் மேலேயே வாந்தி எடுத்திருப்பாள். இப்போது வேர்வை நாற்றம் மட்டுமே இருந்தது. என் பேத்தி அந்தத் தழுவலில் சற்றுநேரம் அப் படியே இருந்தாள். எனக்கு மட்டும் ஆச்சரியமாகவே இருந்தது. எப்படி இந்த மொடாக்குடியன் குடியை விட்டுவிட்டு ‘அ’ குடியரானார்! அது அவருடைய கல்யாணத்தின் போதே ஆகிவிட்டது. ஆனால் பெரிய வைராக்கியமுள்ள ஒரு பரம்பரையில் வந்த அவர் குடியை விட்டது ஒன்றும் ஆச்சரியம் இல்லைதான்.

அந்தப் பரம்பரையில் ஏற்கனவே நான் சின்னதாடியைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். சின்னதாடி கல்யாணியின் சின்ன நாயனா. இப்போது கல்யாணியின் நாயனா பெரியதாடியைப் பற்றிச் சொல்ல வேண்டும். அவர் மிகவும் மௌனமாகப் புஞ்சையின் தெருக்களில் உலவிக்கொண்டிருந்தார். பேசும் போது தலையை ஆட்டி ஒரு ஆஸ்பதம் போட்டுவிட்டே பேசுவார். இவர்கள் எல்லோருமே கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவர்கள். கஸ்தூரி நாயுடுவின் வீட்டுக்கு எதிரில் இருந்த அவர்கள் வீடு எனக்குத் தெரிந்தே வசவசவென்று இருந்தது. இத்தனை ஜனங்களைக்கொண்ட அந்த வீட்டில் எல்லோரும் பேசினார்கள் என்றால் எல்லோருக்குமே காது செவிடாகி இருந்திருக்க வேண்டும். அவர்களுக்குக் காது நன்றாகவே கேட்டது. ஆனால் பேச்சு குறைந்துவிட்டது போலும். அப்படித்தான் இருக்க வேண்டும். தலையை ஆட்டுவது. மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பது. பேச்சு உள்ளிருந்து புறப்பட்டு யோசனை அனுமதித்த பின்னர்தான் வரவேண்டும் போலிருக்கிறது. தலையை ஆட்டுவது அதற்கான ஆமோதிப்பு போலும். இந்தப் பேச்சு ஒன்றும் விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டுவராது. எனவே, பேசலாம்.

அவரைப் பற்றி ஒரே ஒரு சம்பவத்தைச் சொன்னாலே போதுமானது என்று நினைக்கிறேன். குழந்தைகளான எங்களுக்கு அக்ரகாரத்தைவிட்டு மேற்கே வந்து தெற்கே திரும்பினால் இருந்த டீக்கடைகளின் வாசல் பெரிய பொழுதுபோக்கு ஸ்தலம். அப்போது நாங்கள் அந்த டீக்கடைகளில் ஏ. கே. சி. நடரா ஜனின் கிளாரினெட் கேட்டுக்கொண்டிருந்த காலம். எஸ். ஜி. கிட்டப்பா, தியாகராஜ பாகவதர், டி. ஆர். மகாலிங்கம், டி. கே. பட்டம்மாள் இவர்களையெல்லாம் கொஞ்சம் பின்தள்ளிவிட்டு ஏ. கே. சி. போன்றவர்கள் முன்னுக்குவந்துவிட்ட காலம் அது. அலுத்துப்போகிற அளவுக்கு ஏ. கே. சியைப் போட்டிபோட்டுக்கொண்டு மாற்றி மாற்றிப் போட்டுக்கொண்டிருந்தார்கள் டீக்கடைக்காரர்கள். நாங்கள் ஏ. கே. சியைச் சங்கீதமாகக் கேட்பதை விட்டுவிட்டு வெறும் சப்தமாகக் கேட்கிற அளவுக்கு வந்துவிட்டோம். அந்த சப்தத்தைக் கேட்டுக்கொண்டு நின்றிருந்தபோது, என்ன ஆச்சரியம் இது!

அங்கு ஒரு ஆச்சரியம் நடக்கப் போகிறது என்று எங்கள் உள்ளுணர்வில் புலப்பட்டுவிட்டதுபோலும். நாங்கள் எல்லோரும் அங்கு தோளில் மேல் துண்டைப்போட்டு மத்து சிலுப்புவது போலச் செய்துகொண்டிருந்த பெரியதாடியின் பக்கம் திரும்பினோம். தெற்கே இருந்து ஒரு நாய் வெகுவேகமாக வடக்கை நோக்கிச் சாலையில் பெரியதாடி நின்றுகொண்டிருந்த பக்கம் ஓடிவந்து கொண்டிருந்தது. அது அவரைக் கடக்கிறபோது நாயக்கர் ஒரு தாவலில் குனிந்து நாயின் பின்னங்கால்களைப் பற்றித் தலையைச் சுற்றிக் கார்த்திகைக்கு மாவலிப்பைச் சுற்றுவதுபோலச் சுற்றித் தரையில் அடித்துக் கொன்றுவிட்டார். எல்லோரும் ஆச்சரியத்தில் பேச்சிழந்து இருந்தார்கள்.

அது ஒரு வெறிநாய். புஞ்சையில் அது இரண்டொரு நாள்களுக்கு முன்பு இரண்டு பேரைக் கடித்திருந்தது.

அடுத்த முறை புஞ்சைக்குப் போகிறபோது என் பேத்திக்கு அந்த இடத்தைக் காட்ட வேண்டியிருக்கும். இந்த முறை அவளால் புஞ்சைக்குப் போக முடியவில்லை. செப்டம்பர் வாக்கில் அவள் ஃபோன் செய்தபோது ‘இந்த முறை புஞ்சைக்குப் போய்விட்டுவர வேண்டும் தாத்தா’ என்றாள். ஏனெனில் போன முறையும் அவளால் போக முடியவில்லை. போன முறை சுனாமி வந்துவிட்டது. இந்தமுறை அடை மழை. இந்த முறையும் ஊருக்குப் போய்விட்டு வரமுடியாமல் போய்விட்டதே என்றும் கல்யாணி இறந்துவிட்டாரே என்றும் என் பேத்தி வருந்தினாள். தொலைபேசியில் செய்தியைக் கேட்டதும் அப்படியே உட்கார்ந்துவிட்டாள். இடிந்து உட்காருதல் என்பதற்கு அப்போதுதான் எனக்கு உண்மையான அர்த்தம் புரிந்தது.

கல்யாணிக்கு அந்தப் பெயரை வைத்தவர் எங்கள் பெரியப்பாதான். பெரியப்பா அவருடைய வாத்தியார். அவர் வைத்த பெயரில் அவருக்குப் பெரிய சந்தோஷம் இருந்தது. ‘பெரிய ஸார் வைத்த பெயர். பெரிய ஸார் வைத்த பெயர்’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். எங்கள் அப்பா சின்ன ஸார்.

அவருக்கு விஜயன் என்ற ஒரு பெயர் இருந்தது நினைவுக்குவருகிறது. கல்யாணத்தின்போது கல்யாணி என்கிற விஜயனுக்கு என்று போட்டார்கள். பத்திரங்களில் விஜயன் என்ற பெயர் பயன்பட்டிருக்கும். கல்யாணி என் நண்பராக இருந்ததால், எங்கள் பெரியப்பா அவருக்கு வைத்த பெயரே நிலைத்துவிட்டது என்பதைச் சொல்லிக்கொள்வதில் அவருக்குப் பெருமையாக இருந்தது.

நான் குழந்தையாக எங்கள் பெரியப்பா போதித்த வகுப்புக்குப் போயிருக்கிறேன். அப்போது கல்யாணியைச் சந்தித்தது இப்போது நன்றாக நினைவுக்குவருகிறது. ஒரு சந்தோஷ உணர்வாக உடம்பில் பரவுகிறது. செம்பனார்கோயிலிலிருந்து வரும் சாலை மேலவீதியாக வடக்கே திரும்பும் முனையில் இருந்த பள்ளிக்கூடத்தைத் தவிர இப்போது கல்யாணி வீடு கட்டிக்கொண்டிருந்த இடத்துக்கு எதிரே பெரிய கோயிலுக்குப் போகிற சந்துக்கு இடப்பக்கத்தில் இருந்த கட்டடத்தில் எங்கள் பெரியப்பாவின் வகுப்பு இருந்தது. அப்போது புஞ்சைப் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்புவரை இருந்தது. எங்கள் அப்பா அந்தப் பள்ளிக் கூடத்தில் இருந்தார். இடமின்மையால் இங்கு சில வகுப்புகள் நடந்தன. அங்கு என்னைக் கல்யாணி கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போனது இன்னமும் நினைவிருக்கிறது. அந்த உறவு இன்றுவரையில் தொடர்ந்தது.

கல்யாணிக்குக் கல்யாணம் பண்ணி வைப்பதில் என் பங்கு மிகப் பெரிதாக இருந்தது என்று சொன்னேன். சர்க்கரையைப் பற்றியும் சொன்னேன். சர்க்கரைக்கு அவப் பெயர் இருந்தது. அதனால் அவனோடான எங்கள் நட்பு கேவலமாக மதிக்கப்பட்டது. அவன் அக்ரகாரத்தில் இருந்த பெண்களுக்கு ஜாக்கெட் தைத்துக்கொண்டு வந்து கொடுத்தான். அதை வைத்து அவனைக் கேவலமாகப் பேசினார்கள் வடுவத் தெருவில். அதனால் அவனைநாடான் என்றார்கள். அவனுடைய அண்ணன் கௌரவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருடைய ஜாதி மறைந்து இருந்தபோது சர்க்கரையுடைய ஜாதி பெரிதாகத் தெரிந்தது. சர்க்கரையும் தெரியாத்தனமாக ஜாதியைப் பாராட்டினான். எங்களுக்குச்சாதாரண ஒளிப்பந்தம் உலகளவில் பெரிய அவதானிப்புக்குள்ளாகியிருக்கிறது. 1936 பேர்லின் ஒலிம்பிக் போட்டியில்தான் ஒளிப்பந்தத்தின் உலகச் சுற்றுலா ஆரம்பமாகியது. இதைத் தொடங்கியவர் ஹிட்லர். ஆரிய இனத்தின் மகாத்மியங்களைப் பரப்புரைக்க இந்த விளையாட்டுகளையும் தீப்பந்தத்தையும் பாவித்துக் கொண்டார். இப்பொழுது இதே தீவெட்டி மேற்கத்தைய கலாச்சாரத்தின் சமீபத்திய உன்னதச் சின்னமான மனித உரிமைகளைப் போதிக்கும் கூரான கருவியாக மாற்றப்பட்டிருக்கிறது. காலனியக் காலத்தில் கிறிஸ்தவம் இருளில் வாழ்கிறவர்களை நாகரிக நாயகர்களாக உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது. பிறநாட்டுப் பிற்போக்குத்தனங்களைப் பழுதுபார்க்கும் அதே வேலையை இன்றைய பின் காலனியச் சூழலில் மேற்கத்தைய அரசுகள் மனித உரிமைகள் மூலம் சாதிக்க முயல்கின்றன.

சீனாவின் மனித உரிமைகள் பற்றிய பதிவேடு அவ்வளவு பிரகாசமானதல்ல. சீன ஆக்கிரமிப்பினால் திபேத் கலாச்சாரம் கரைந்து கொண்டிருக்கிறது. திபேத் ஏற்படுத்திய கலகலப்பில் மறக்கப்பட்ட இன்னொரு சீனா விளிம்பு நிலை மக்கள் ஙீவீஸீழீவீணீஸீரீ மாகாணத்தில் வாழும் ஊகிகுர்ஸ்கள் (ஹிவீரீலீuக்ஷீs). இவர்கள் முஸ்லிம்கள். இவர்களைச் சீனமயமாக்குதலில் பேஜிங் அரசுதன் எந்திரங்களைச் செம்மையாகப் பயன்படுத்திவருகிறது. ஊகிகுர்ஸ்கள் இஸ்லாம் மத்தைச் சேர்ந்தவராகையால் இவர்களின் பிரச்சினையைத் தூக்கிக்காட்ட மேற்கத்தைய ஊடகங்களிடையே ஒரு தயக்கமிருக்கிறது. சீனாவுக்குப் பெரிய வல்லரசுகளின் வரிசையில் இடம்பிடிக்க ஆசை. ஒரு வல்லரசின் அடையாளம் பல்லின, பல்மொழி, பல்சமய, பல்கலாச்சார மக்களுக்குக் காட்டும் தாராளத் தன்மையாகும். இன்னொன்று பல கருத்துகள் முன்பின் முரணாக இருந்தாலும் அவற்றைச் சகித்துக்கொள்ளும் தன்மையே. இது சீனாவிடம் இல்லை. இந்தப் பரந்த நாட்டைச் சீனா அரசியல் அமைப்பு பெரும் பான்மையினரான ஹான் இனக் கண்ணோட்டத்திலேயே பார்க்கிறது, நிச்சயிக்கிறது.

இந்தக் கட்டுரையின் பிரதான கவனம் சீனா அல்ல. மேற்கத்தைய நாடுகளின் மனித உரிமைப் பேச்சே. இந்தக் கட்டத்தில் மனித உரிமைகள் தோற்றம் குறித்து எளிமைப்படுத்தப்பட்ட ஒரு சின்னத் திரட்டு. மனித உரிமைகள் பற்றிய கருதுகோள்கள் சடுதியாகத் தோன்றியவையல்ல. அவற்றைப் பற்றிய எண்ணங்களும் நிலையானவையுமல்ல. இவை மாறிவரும் சமூக, அரசியல், பண்பாட்டுத் தேவைகளுக்கும் அதற்கு மேலாக மேலாட்சி செய்யும் நாடுகளின் வினைமுறைதிறன்களுக்குப் (stக்ஷீணீtமீரீவீநீ) பொருந்துமாறு பதப்படுத்தப்பட்டவை. இவை மூன்று வகைசார்ந்தவை. முதலில் ஐக்கிய நாடுகள் சபையில் இரண்டாம் உலகப் போருக்குப்பின் அறிமுகப்படுத்தப் பட்டபோது தனி மனித அரசியல் உரிமைகளுக்குத்தான் அதிக மதிப்புக் கொடுக்கப்பட்டது. தனி மனித சுதந்திரத்தில் அரசு தன்னிச்சையாகத் தலையிடுவதைத் தவிர்ப்பதே இந்தப் பிரகடனத்தின் நோக்கம். இந்தத் தனிப்பட்ட மனித உரிமைகளுக்கான பின்னணி பிரான்சுப் புரட்சியும் அமெரிக்க உள்நாட்டுக் கலவரமுமாகும். இதற்கு அதிக அளவு ஆதரவு மேற்கத்தைய தாராண்மையும் சனநாயக நாடுகளிலிருந்து கிடைத்தது. இந்த எண்ணங்களைப் பதிவு செய்யும் பிரதிகள்: ஹிஸீவீஸ்மீக்ஷீsணீறீ ஞிமீநீறீணீக்ஷீணீtவீஷீஸீ மற்றும் மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ சிஷீஸ்மீஸீணீஸீt ஷீஸீ ஷிஷீநீவீணீறீ ணீஸீபீ சிவீஸ்வீறீ ஸிவீரீலீts. இதற்குப் பிறகு 60களில் சோசலிச நாடுகளினால் அரசியல், பொருளாதார, பண்பாட்டு உரிமைகள் முன்னெடுத்து வைக்கப்பட்டன. இதற்கு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற சோசலிசப் புரட்சியே காரணமாகும். மனித உரிமைகளைத் தனி ஆளின் பிரத்தியேக சம்பந்தமாக, அரசியல், பொருளாதார, சூழலமைப்புகளை நீக்கிப் பார்க்கும் மேற்கத்தைய நாடுகளின் சார்புத்தன்மைக்கு சோசலிசக் கருதுகோள்களின் கூட்டு உரிமைகள் திருத்தப்பாடாகும். எவ்வாறு தனி மனித உரிமைகள் காப்பாற்றப்படுகின்றனவோ அவ்வாறே இனக் குழுமங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது சோசலிச நாடுகளின் கருத்து. மூன்றாவது கட்டத்தில் நாடுகளின் தேசிய வள உற்பத்தி அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி உள்ளார்ந்த மனித உரிமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. புதிதாக விடுதலையடைந்த ஆப்பிரிக்க, ஆசிய, லெத்தீன் அமெரிக்க நாடுகள் காலனிய ஆட்சியின்போது சீரழிக்கப்பட்ட தங்களின் பொருளாதார உடைமைகள், வளங்களை மீண்டும் சீர்திருத்துவது தமக்குரிய மனித உரிமை என்று வலியுறுத்தின. ஐ.நா சாசனம் ஷரத்துகள் 55, 56லும் ஹிஸீவீஸ்மீக்ஷீsணீறீ ஞிமீநீறீணீக்ஷீணீtவீஷீஸீ 22, 27இலும் இவை அங்கீகரிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இவை எல்லாம் வாசிப்பதற்கு இனிமையாக இருக்கின்றன. ஆனால், இவற்றைப் பூலோக அரசியல் அரங்கில் கையாளும்போது தான் சங்கடம் வருகிறது.

மேற்கத்தைய சொல்லாடலில் மனித உரிமைகள் பற்றி இரட்டை நிலை உண்டு. மேலே சொன்ன மூன்று வகையில் மேற்குலகச் சொல்லாடலில் முதலாவதே முன்னிறுத்தப்படுகிறது. இன்று சீனாவைத் தாக்குவதற்குத் தனியார் உரிமைகளே பயன்படுத்தப்படுகின்றன. மேற்கத்தைய வர்ணிப்பில் மனித உரிமைகள்கூட ஒரு குறுகிய தேர்வே. பேச்சு, எழுத்துச் சுதந்திரம், சுய நிர்ணயம், வாக்குரிமைகளையே மேற்கத்தைய அரசியல்வாதிகளும் விமர்சகர்களும் பிரதானப்படுத்துகிறார்கள். தனி மனித உரிமையின் முக்கிய அம்சமான சித்திரவதையைப் புறக்கணித்துவிடுகிறார்கள். சீனாவின் மனித உரிமைக் கறைகள் தெரிகிறது. அதேபோல் சாதாரண மனித உரிமைகளுக்கே இடம் தராத அமெரிக்க அரசின் கொள்கை மரபு கண்ணுக்குத் தெரிவதில்லை. பர்மா பௌத்த பிக்குகளை அதிகாரத்திற்கு உண்மையைப் பேசச் சொல்லும் அய்ரோப்பிய அரசியல் தலைவர்கள் அமெரிக்காவின் அட்டூழியத்திற்கு முன்னால் வாய் அடைத்துப் போயிருக்கிறார்கள். கீணீtமீக்ஷீ தீஷீணீக்ஷீபீவீஸீரீ என்ற சித்திரவதை முறை (ஆளுக்கு முகத்தைக்கட்டி நீருக்குள் மூழ்குவது போல் அமிழ்த்தி எடுப்பது) புஷ் அங்கீகரித்தபோது ஜனநாயகத்தின் கண்காணிகளான பிரித்தானியாவோ ஜெர்மனியோ பிரான்சோ எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

மேற்கின் மனித உரிமை ஆதரவுகூட முரணானது. மனித உரிமைகளுக்கும் அரசியல் லாபங்களுக்கும் பொருளாதார வாய்ப்புகளுக்குமிடையே மோதல் ஏற்பட்டால் மேல் நாட்டு அரசுகளைப் பொறுத்த மட்டில் தங்களின் அரசியல், வாணிக ஆதாயமே முக்கியம். சவூதி அரேபியா இதற்கு உத்தம உதாரணம். ஜனநாயகத்தின் அனா ஆவன்னாவைக்கூட மதிக்காத இந்த ஆட்சியைத் தங்களின் வியாபார நோக்கு காரணமாக மேற்கு நாடுகள் போஷித்துவருகின்றன.

மேல் நாடுகளின் இரட்டைக் குரல் தனி வகையானது. விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று சொல்லுகிறார்கள். ஆனால், சீனாவின் சந்தையில் வர்த்தகம் செய்ய மேற்கு நாட்டு வாணிக ஸ்தாபனங்கள் போட்டிபோடுகின்றன. சீனமக்களும் அரசும் வேறு. சீன மக்களுக்காக ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற வேண்டும். இதைத்தான் தலாய் லாமாவும் விரும்புகிறார். எனக்கு என்னவோ விளையாட்டு வீரர்களை இந்தப் போட்டிகளில் பங்கு வகிக்க வேண்டாம் என்பது மேற்குலக நாடுகளின் இரட்டை நிலைப்பாடுக்கு இரைக்கப்பட்ட கடா என்றுதான் தோன்றுகின்றது.

கறுப்பர்கள், கனவுகள், கவலைகள்

வி. எஸ். நைபால் பற்றிய ஒரு ஆவணப்படத்தை பிபிசி நாலாவது அலைவரிசையில் பார்த்த கையுடன் இதை எழுதுகிறேன். அவர் எளிதில் எரிச்சல்படக்கூடியவர், சில தீர்க்கமான எண்ணங்கள் கொண்டவர், தன்னையும் தன்னுடைய எழுத்துகள் பற்றியும் உன்னதக் கருத்துடையவர் என்ற அபிப்பிராயம் உண்டு. இந்தக் கட்டுருவாக்கங்களுக்குக் களங்கம் வராதபடி அறுபது நிமிட நிகழ்ச்சியில் நைபால் நடந்துகொண்டார். எட்வர்ட் சயத் இவரை ‘அறிவுலகின் சறுக்கல்’ என்று சொன்னது நினைவுக்குவந்தது. நைபால் இந்திய வம்சாவளியில் வந்த ட்ரினிடாடைச் சேர்ந்தவர். இதே நாட்டைச் சேர்ந்த, இந்தியப் பின்புலத்தைக் கொண்ட இன்னுமொரு மேற்கிந்தியப் படைப்பாளியிருக்கிறார். அவர் பெயர் சாம் செல்வன் (ஷிணீனீ ஷிமீறீஸ்ஷீஸீ.) எனக்கு நைபாலைவிட செல்வனின் எழுத்து பிடித்திருக்கிறது. இதற்குக் காரணம் நைபாலைப் போல் மூன்றாவது நாடுகளைப் பற்றி மேற்கத்தைய தாராளவாத வாசிப்பாளர்களை மகிழ்வூட்டும் சித்தரிப்புகள் இவர் எழுத்தில் இருப்பதில்லை. இவருடைய எழுத்துகளில் நைபால் கண்டுகொள்ளாத அல்லது கண்டு கொள்ள மறுக்கும் காலனிய ஆட்சி மற்றும் உலகமயமாக்கம் ஏற்படுத்திய தகவல் குழப்பங்கள், சோக விளைவுகள் பற்றிக் கூர்மையான பார்வைகள் இருக்கும். தருணம் கிடைக்கும்போது செல்வனின் படைப்புகள் பற்றி எழுதுகிறேன். இப்போதைக்கு நான் சமீபத்தில் படித்துமுடித்த இவரின் விஷீsமீs கிsநீமீஸீபீவீஸீரீ நாவல் தரும் இரண்டு முக்கியச் செய்திகளை மட்டும் தருகிறேன்.

இந்த ‘மோசே அசண்டிங்’ செல்வனின் மூன்று பகுதி நாவலில் நடுப்பாகமாகும். செல்வனின் எழுத்துக்களில் ஒரு வசதி என்னவென்றால் முன்பின் நாவல்களைப் படிக்காமலேயே இந்த மூன்று தொடர்களில் எந்த ஒரு நாவலுக்குள்ளும் இலேசாக நுழைந்துவிடலாம். ஒரு நாவல் பெரும்திரட்டு அந்தஸ்து பெறுவதற்கு அதன் தீர்க்கதரிசனப் பார்வை முக்கியமானதாகும். இந்த நாவல் 70களில் எழுதப்பட்டாலும் அதில் அடையாளப்படுத்தப்பட்ட சில புலப்பதிவுகள் இங்கிலாந்தில் அந்நியர் குடியேற்றம் பற்றி வருவதை முன் அறியக்கூடிய அறிவுடன் எழுதப்பட்டவை. உதாரணத்திற்கு ஒன்றைத் தருகிறேன். மேற்கிந்தியத் தீவிலிருந்து இங்கிலாந்தில் குடியேறிய மோசே அனுகூலமற்ற சீதோஷ்ண நிலை, ஆங்கிலேயர் காட்டிய இயல்பான இனவெறுப்பு இவற்றையும் மீறிக் கொஞ்சம் பணம் சேர்த்துத் தனக்கென ஒரு வீட்டை வாங்கிச் சொத்துரிமையாளராகிவிடுகிறான். தான் சாதித்துவிட்டேன் என்ற பெருமிதம் இருந்தபோதும் அவனின் சாதனை ஒரு அபாய அறிவிப்பு என்றே அவனுக்குப் படுகிறது. அப்போது மோசே யோசிக்கிறான். பொதுமக்கள் நினைக்கிறார்கள். அன்றாட வாழ்வில் தினமும் ஒடுக்கப்பட்ட கறுப்பர்கள் ஆக்கினையையும் அந்நியப்படுத்துதலையும் வெறுப்பையும் தாங்க முடியாமல் ஒரு நாளைக்குக் கொதித்து எழுவார்கள். அப்போது இந்த நாட்டையே கலங்கவைக்கும் இனக் கலவரம் வெடிக்கும். இந்தக் கருத்து தப்பானது என்று மோசேக்குத் தெரிகிறது. இனக் கலவரத்திற்கு மோசே தரும் காரணம் சற்று வித்தியாசமானது. நம்மையும் கொஞ்சம் சலனப்படவைக்கிறது. மோசே எண்ணுகிறான் இனவெறியாட்டம் எப்போது இந்த நாட்டில் தலைதூக்கும் என்றால் வெள்ளையர் மனத்தில் என்றைக்குக் கறுப்பர்கள் சொகுசாக, சௌகரியமாக, சுக போகங்களுடன் வாழ்கிறார்கள் என்ற கருத்து தோன்றுகின்றதோ அப்போது எழும் இனக் கிளர்ச்சி நாட்டையே திடீரெனக் கலங்கவைக்கும். செல்வனின் கதாபாத்திரம் நினைத்தது போல் பெரும்பான்மையான ஆங்கிலேயரின் எண்ணம் வந்த குடியேறிகள் இங்குள்ள சில சலுகைகளைப் பயன்படுத்தி, குஷியாக வாழ்கிறார்கள் என்பதே. உதாரணத்திற்கு ஒன்று. வெள்ளைத் தொழில் வர்க்கத்தினர் கவுன்சில் வீடு கிடைப்பதற்கு மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால், குடிபுகுந்தோர் வரிசையைத்தாண்டி கவுன்சில் குடியிருப்புத் தலங்களில் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். இது ஆங்கிலேய உழைப்பவர் வர்க்கத்தை மட்டுமல்ல, வெள்ளை மத்தியதரத்தினரிடையேயும் எரிச்சலையும் பதற்றநிலையையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. இன்று இங்கு உள்ள வலதுசாரி ஊடகங்களினால் இந்த எரிச்சல் மேலும் ஊக்குவிக்கப்படுகிறது.

கடைசியாக, செல்வனின் நூல் தரும் இன்னுமொரு தகவல். குடியேறிய தொடக்க நாள்களின் கறுப்பர்களின் நாளாந்த வாழ்க்கையைப் பற்றிய செல்வனின் வர்ணிப்பு. என்னுடைய தளர்த்தியான மொழிபெயர்ப்பில் தருகிறேன். கறுப்பர்களுக்கு நாள்தோறும் நடப்பவற்றையும் ஆங்கிலேயரின் தினசரி அடிப்படைத் தேவைகள் சீராகச் செயல்படக் கறுப்பர்களின் பங்கை உணர்ச்சியுடன் செல்வன் இவ்வாறு பதிவு செய்கிறார்: அதிகாலையில் அடிக்கும் முதல் கடிகாரத்தின் எழுப்பொலி கறுப்பர்களின் வீட்டில் கேட்கும். சூரியனின் புதிய கதிர்களைக் கறுப்பர்கள்தான் பார்ப்பார்கள். முதல் வெண்பனித் துளிகள் கருப்பரின் தேகத்தில்தான் விழும். இலையுதிர் காலத்தில் உதிரும் முதல் இலை கறுப்பர்கள் தலையைத்தான் தொடும். அதிகாலையில் அலுவலகத்தைச் சுத்தம் செய்பவர் கறுப்பராயிருப்பார். குப்பைத் தொட்டிகளைத் தூய்மைப்படுத்துபவர் கறுப்பரே. உங்கள் பாதாள இரயில் ஓட்டுநர் கறுப்பராய்த்தான் இருப்பார். மதுக்கடையில் மதுபானத்தைப் பரிமாறுபவர் கறுப்பர். வெதுப்பகத்தில் (தீணீளீமீக்ஷீஹ்) கடும் சூட்டைத் தாங்கிக்கொள்பவர் கறுப்பர். தெருவில் விழும் முதல் மூத்திரத் துளி கறுப்பருடையதாகத்தான் இருக்கும். கடைசி வரி செல்வன் எழுதவில்லை. நான் சும்மா சேர்த்துக்கொண்டது. செல்வன் ஆவணப்படுத்தியது 70களின் பிரித்தானியா. இனி அதிதுரித முன்னோக்கிப் பொத்தானை அமுக்கிச் சமகால ஆங்கிலேயச் சூழலுக்கு வாருங்கள். இன்றைக்கு அய்ரோப்பிய ஒன்றியம் விரிவடைந்ததினால் தினமும் புதிய வாழ்வைத் தேடி வரும் போலிஷ், ருமேனிய, பல்கேரிய, லாட்வியரை இந்தச் செல்வனின் நாவலில் வரும் கறுப்பர்களுக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்யுங்கள். இன்று மாறிவரும் புலம் பெயர்ந்தோர் அசைவியக்கத்தில் (னீஷீதீவீறீவீtஹ்) புதிய கறுப்பர்கள் யார் என்று தெரியவரும். செம்பனார் கோயில் தையற்கடைக்கு வந்துபோன, ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்று வந்த ஒரு தலித் நண்பன் இருந்தான். அவன் இல்லாத போது அவனைச் செடி என்பான் சர்க்கரை. செம்பனார்கோயிலில் செடி என்பது தலித்துகளுக்கு அவர்களுக்குத் தெரியாமலே சூட்டப்பட்டிருந்த பெயர். அவன் எங்களுக்கு இணையாகப் பழகினான். அவனைச் செடி என்று சொல்வதற்கு என்ன நியாயம் இருக்கிறது சர்க்கரைக்கு.

நரசிம்மனுக்குப் பற்கள் பெரிதாக இருந்தன. அவை நரசிம்மாவதாரத்தின் பற்களைப் போலவே இருந்தனவாம். எப்போதும் சிரித்துக் கொண்டே பீடியைத் தொடர்ந்து புகைத்துக்கொண்டிருந்தான் நரசிம்மன். பிரஹலாதர்களாகிய எங்களிடம் நரசிம்மன் சந்தோஷமாக இருந்தது போலும். ஆனால், நாங்கள் இரணியனை அல்லவா இணையற்ற வீரனாகப் பாராட்டிக்கொண்டிருந்தோம். நரசிம்மனின் பற்களுக்கு இடையில் இடைவெளி பெரிதாகத் தெரிந்தது. சிரித்தால் மட்டுமே வெளியில் தெரியும்படி பற்கள் உள்ளடங்கியே இருந்தன. பீடிப்புகை படிந்து சுட்டுக் கருத்த உதடுகளுக்கு உள்ளே புகையால் பழுத்த பற்கள் சிரிப்பில் பெரிதாகத் தெரியும். அதைக் காட்டிக்கொள்வதில் அவனுக்குத் தயக்கமில்லை. சிரித்துக்கொண்டே இருப்பான். சிரிப்புக்கு இடையிலும் புகை இழுப்புக்கு இடையிலும் மிகவும் சந்தோஷமாகப் பேசுவான். புகை இழுப்புக்கூட மிகச் சந்தோஷமாக நுரையீரல்கள் நிறைய நிறைய இழுப்பதாக இருக்கும். புகை பிடிப்பதில்லை அது. புகை குடிப்பது. அதுகூடச் சரியான பிரயோகமாகத் தெரியவில்லை. குடிப்பது எல்லாம் இரைப்பைக்கு அல்லவா போகிறது. கபடமில்லாமலும் பயமில்லாமலும் மிகச் சந்தோஷமாகப் புகைபிடித்து மிகச் சந்தோஷமாகவே சிறுவயதில் அவன் செத்தும் போய்விட்டான்.

பெரியதாடியின் வேகமான நடைக்குப் பின்னால் நாங்கள் நாய்க் குட்டிகளைப் போல ஓடி கல்யாணியின் கல்யாணப் பேச்சைப் பேசிக் கொண்டிருந்தோம். நரசிம்மனுக்கு ஆணிக்கால். தெத்தித்தெத்தி நடப்பான். அதோடு ஓட்டம். சட் டெனப் பெரியதாடி நின்று திரும் புகிறபோது அவர்மேல் மோதிக் கொண்டுவிடுவதைப் போல் முட்டுக் கட்டைபோட்டு நாங்கள் நிற்போம். எங்களை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் திரும்பி நடப்பார் பெரியதாடி. ‘ஒதவாக்கரைகள் ஒதவாக்கரைகள்’ என்பதுபோல இருக்கும் அந்தப் பார்வை.

கல்யாணி திராவிடக் கழகத்துக்காரர் என்பதல்லாமல் அவர் வேலையில்லாமல் திரிகிறார் என்பதும் அவருடைய நாயனாவுக்கு அவருக்குக் கல்யாணம் பண்ணிவைப்பதில் பெரிய தடையாக இருந்தது. பணம் தேவைப்பட்டால் ஒரு வாழைத்தாரை வெட்டிக்கொண்டு போய் விற்றுவிட்டு வந்துவிடுகிறார்.

கல்யாணிக்குக் கல்யாண ஆசை வந்த கதை எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஒருமுறை கல்யாணி என்னைக் குரங்குப்புத்தூருக்கு அழைத்துக் கொண்டு போனார். போகும் வழியில் சர்க்கரையையும் அழைத்துக் கொண்டு போனோம். குரங்குப்புத்தூரில் சர்க்கரையின் சொந்தக்காரர் ஒருவர் சாராயம் காய்ச்சினார். கள்ளச்சாராயம். உள்ளபடியே அதுதான் நிஜச்சாராயம். நான் இலங்கையிலிருந்து வந்த சாராயத்தைக் குடித்திருக்கிறேன். மணிப்பூரில் ‘ரைஸ் ஒயின்’ என்று அழைக்கப்படுகிற சாராயத்தைக் குடித்திருக்கிறேன். அது எங்கள் வீட்டின் இரண்டாம் கட்டில் அடுக்கிவைத்திருக்கும் தவிட்டு மூட்டைகள் சிக்குப்பிடித்து நாறுவதுபோல் நாறிற்று. நாள்பட்ட உமியின் நாற்றம். பகோடாவில் சாராயம் குடித்திருக்கிறேன். இந்தச் சாராயங்களைக் குடிக்கிறபோதெல்லாம் அந்தக் குரங்குப்புத்தூர்ச் சாராயத்தின் நினைவுதான் வந்தது.

சாராயம் கலப்படம் இல்லாமல் இருக்கிறதா என்பதைக் காண்பிக்க காலிபாட்டிலின் வாயில் தீக்குச்சியைக் கிழித்துக்காட்டி அது ‘பக்’கென்று எரிந்து வெடித்துத் தழல் இளஞ்சிவப்பிலும் இளம்பச்சையிலும் வெளியேறி பாட்டில் காய்ந்திருப்பதைக் காட்டினார் கல்யாணி. நாங்கள் முட்டமுட்டச் சாராயம் குடித்தோம். அவர்கள் வறுத்த கருவாடு தொட்டுக்கொண்டார்கள். நான் அப்போது அதெல்லாம் பழகிக்கொள்ளவில்லை. எனக்கு எலுமிச்சங்காய் ஊறுகாய் கொடுத்தார்கள். உலகமே சந்தோஷத்தில் மிதக்க நாங்கள் காவிரிப்பூம்பட்டினம் மண்சாலையை அலைந்துகொண்டு வந்தோம். மண்ணை உழுது புழுதி கிளப்பிக்கொண்டு வந்தோம். அந்தச் சாலையைக் கீழணையிலிருந்து காவிரிப்பூம்பட்டினம்வரை போட்டு இரண்டு புறமும் ஆலமரங்கள் வைத்த கரிகாலனைப் புகழ்ந்து கொண்டே வந்தோம். அந்தச் சாலையைச் சோழன் போட்டான் என்பது செவிவழிச் செய்தியாகவே எங்களை எட்டியிருந்தது. காவிரிப் பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழர்கள் இப்படி ஒரு சாலையைப் போட்டிருப்பார்கள் என்பதை எந்த ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்டு நாங்கள் நம்பினோம். ‘மண்ணை நன்றாக உழு’ என்றார் கல்யாணி. அது நம் பண்டைத் தமிழர்கள் மிதித்த மண் என்றார். கொரங்குப்புத்தூர் நாடாருக்குச் சாராயம் காய்ச்சும் மரபு அப்படியே சங்ககாலத்திலிருந்து தொடர்ந்துவருகிறது என்றார். திராவிடக் கழகத்துக்காரராதலால் அவர் படிப்பதிலும் அதிகக் கவனம் செலுத்தினார். வெ. சாமிநாதசர்மா எழுதிய புத்தகங்களை நான் அவர் வீட்டில்தான் பார்த்தேன். கோபால கிருஷ்ண பாரதியின் நந்தன் சரித்திரக் கீர்த்தனைகளும் எனக்கு அப்போதுதான் அறிமுகமானது. உ. வே. சாமிநாதய்யர் எழுதிய கனம் கிருஷ்ணய்யர், கோபாலகிருஷ்ண பாரதியார் முதலிய புத்தகங்களை அவர்தான் கொடுத்தார். படித்தேன். ஓர் அபூர்வமான உணர்வு என்னிடம் இருந்தது. ஒரு பெரிய தொடர்ச்சியில் நான் இன்றைய ஒரு கட்டம். இது என்னைப் பற்றிக்கொண்டிருந்தது.

அப்புறம் நாங்கள் காவிரிக்குப் பக்கத்தில் காவிரிக்கரையில் ஏறினோம். ஏனெனில் அதற்குப் பிறகு கிடாரங்கொண்டான் வந்துவிடுகிறது. தெரிந்தவர்கள் வந்துவிடுவார்கள். அது எனக்காக. அவர் ஊரறிந்த குடிகாரன். காவிரிக்கரையில் ஏறியதும் ஆதிமந்தியும் ஆட்டனத்தியும் எங்கள் பேச்சில் இடம் பிடித்துக் கொண்டார்கள். அவர்களைப் பற்றிப் பாரதிதாசன் எழுதியிருக்கும் புத்தகத்தை நான் படித்திருந்தேன். சுய மரியாதை மரபில் அது கல்யாணிக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் அதையும் நான் அவரிட மிருந்துதான் படித்திருந்தேன். இந்தக் காவிரியில் எப்படி ஆட்டனத்தி அடித்துக்கொண்டு போகப்பட்டான் என்ற கேள்வி எங்களுக்குள் எழுந்தது. அப்போது காவிரி ஆழமாக இருந்ததா? இன்னும் இன்னும் ஆழம் என்று இறந்த காலத்தில் அதன் ஆழம் பாதாளம் வரையில் போய்ச்சங்க காலத்தில் அடி நாகலோகத்தைத் தொட்டுக்கொண்டு இருந்ததால் ஆட்டனத்தியால் நீந்த முடியாமல் தண்ணீரில் அடித்துக் கொண்டு போகப்பட்டுவிட்டான் என்றார் கல்யாணி. கல்யாணி சுத்த சுயமரியாதைக்காரராக இருந்த காரணத்தால் அவருக்குப் பழைய பெருமை பேசிக்கொண்டிருப்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இன்று இன்று இன்று என்ன என்று கேட்டுக்கொண்டே இருப்பார்.

இன்றைப் பற்றி எனக்கு நினைவு வந்தபோது இன்று எங்கள் மாமா வீட்டுக்கு வருகிறார் என்பது நினைவுக்கு வந்துவிட்டது. அப்போது நாங்கள் பள்ளக் கொல்லையைக் கடந்துகொண்டிருந்தோம். கல்யாணி ஒரு உபாயம் சொன்னார். போதை தெளிவதற்குக் காவிரியில் கிடந்து புரளலாம் என்று. காவிரியில் தண்ணீர் அரித்து ஓடிக்கொண்டிருந்தது. படுத்துக் குளித்தாலும் உடல் முழுதும் நனையாது. என்றாலும் படுத்துப் புரள்வதற்கு மிகப் பிரமாதமாக இருக்கும். மணலில் குதிரை புரள்வது போல் புரளலாம். வளைவில் களிமண் பாங்கான பகுதியில் தண்ணீர் பள்ளம் பண்ணியிருக்கும். அதில் தலைமுழுகக் குளிக் கலாம். தண்ணீர் ஓடிக்கொண்டே இருப்பதால் சுத்தமாக இருக்கும். அப்போது காவிரி சாக்கடையாக மாறவில்லை. காவிரியைத் தெய்வமாக நினைப்பவர்கள் காவிரி நெடுகிலும் இருந்தார்கள். கல்யாணி, காவிரியை ஒரு பெண்ணைப் போலவே மதித்தார்.

நாங்கள் தண்ணீரில் மணலில் புரண்டு புரண்டு குளித்தோம். உள்ளே ஏற்கனவே பெரிய பழைய நதி ஓடியிருப்பதால் இரண்டு தண்ணீரும் ஒன்றுக்கொன்று உறவு கொண்டு எங்களைப் பெருத்த சந்தோஷத்துக்கு ஆளாக்கியிருந்தது. இந்த நதிக்குக் கொஞ்சம் சலுகை காட்டினார் கல்யாணி. வேத காலத்து நதி. சோமநதி. வேட்டி சட்டைகளை அவிழ்த்துவைத்து விட்டு ஜட்டியுடன் குளித்தோம். உடம்பெல்லாம் மணல். தலையெல்லாம் மணல். அரித்தோடும் தண்ணீரில் எதிர் நீச்சல்போட்டு தண்ணீரோடு அடித்தோடும் மீன்களைப்போல விழுந்து விழுந்து குளித்தோம். ரொம்ப குஷியாக இருந்தது. அப்படியே கரைந்து தண்ணீரோடுபோய்க் காவிரிப்பூம்பட்டினக் கடலில் கலந்துவிடமாட்டோமா என்பதுபோல் இருந்தது. ஒருகால் இப்படிக் கரைந்துதான் ஆட்டனத்தி காவிரியோடு போயிருக்க வேண்டும். இதே போன்ற எண்ணங்கள் கல்யாணியின் மனத்திலும் ஓடியிருக்க வேண்டும். ‘பக்தர்களைக் குறைசொல்வது தப்பு’ என்றார் கல்யாணி. நான் ஏன் என்று கேட்கவில்லை. சர்க்கரை மௌனமாகவே இருந்தான். தன் சொந்தக்காரன் இவ்வளவு அற்புதமான மதுவைக் காய்ச்சி, கல்யாணியிடம் பெயர் வாங்கிவிட்டான் என்ற சந்தோஷத்திலேயே பின்தங்கி விட்டான்.

கரையோடு போனவர்கள் கல்யாணியைக் குசலம் விசாரித்துக்கொண்டு போனார்கள். நாங்களெல்லாம் என்ன குழந்தைகளாகிவிட்டோமா என்று கேட்டுக்கொண்டு போனார்கள். ஒங்களுக்கென்ன இன்றுதான் பதினெட்டாம் பெருக்கா? சப்பரத்தட்டிகள் எங்கே? மரக்கிளைகளில் ஏறிக்குதிக்கச் சொன்னார்கள். கொழந்தெயாரு நடேசய்யரு புள்ளையா என்று என் யோக்யதையைச் சிலாகித்துக் கொண்டு போனவர்களும் உண்டு. அப்போதெல்லாம் கல்யாணி பதில் சொல்லவில்லை. அவர்களெல்லாம் நாங்கள் அதீத உணர்வுகளோடு இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டவர்கள். அப்படியென்றால் நாங்கள் இன்னும் மண்ணில் புகுந்து புறப்பட வேண்டும்.

‘அண்ணே, இந்தக் கரையோடுதானே அண்ணே ஆதிமந்தி ஓடினா?’ என்று அவர் ஒருவரைப் பார்த்துக்கேட்டார்.

‘யாரய்யா அது ஆதிமந்தி?’

அந்த மனிதருக்கு மந்தி என்றால் பெண் குரங்கு என்பதுக்குமேல் ஒன்றும் தெரியாதாகையால் பெரிய குழப்பத்தோடு போய்விட்டார். ஆனால், அடுத்துவந்த ஆள் ‘ஒரு கல்யாணமா கார்த்தியா… ஊதாரித்தனமா சுத்திக்கிட்டிருந்தா பொறுப்பு எங்கே வரப்போகுது. பெரியதாடி என்ன பாவம் செஞ்சாரோ… குடிகாரப்பய குடிகாரப்பய’ என்று சொல்லிக்கொண்டே போனது கல்யாணியின் காதில் விழுந்துவிட்டது. அவர் கோபப்படவில்லை. ‘கண்ணா… ஒரு யோசனை தோணுது. கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன? என்றார். அப்புறம் கொஞ்சம் மௌனமாகிவிட்டார். அவருக்குக் கல்யாண யோசனை வந்தது அந்தச் சந்தர்ப்பத்தில்தான்.

நாங்கள் நீண்ட நேரம் குளித்தோம். கண்கள் சிவந்துவிட்டன. வழியில் கிடாரங்கொண்டான் டீக்கடையில் ஒரு டீ குடித்துவிட்டு, ஒரு ரிண்டான் மாத்திரையை வாங்கிப்போட்டுக்கொண்டு வீட்டுக்குப் போய்விட்டோம். என்னோடு கல்யாணி வீட்டுக்கு வந்தார். போதை தெளிந்துவிட்டது. நாங்கள் குளித்தது ஒரு தூக்கத்துக்கு ஒப்பாக இருந்தது. ஏதாவது நாற்றம் வருகிறதென்றால் அது தன்னிடமிருந்து வருகிறது என்று நினைத்துக் கொள்ளட்டும் என்றுதான் அவர் என்னோடு வந்தது. எங்கள் மாமா வந்திருந்தார். கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டு ஆடிக்கொண்டி ருந்தார். நான் தலையில் இருந்தமண் எல்லாம் போக வேண்டு மென்று குளிப்பதற்குக் கிணற்றுக்குப் போனேன். ஏற்கனவே, மடுவில் குளித்துத் தலையில் மண் எல்லாம் போய்விட்டிருந்தது. வீட்டில் குளிப்பதால் சோப்பின் மணம் கொஞ்சநஞ்ச வாசனையைக் கழுவிவிட்டுவிடும் என்று எண்ணினேன். நான் குடித்திருந்தேன் என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை. கல்யாணி என் நண்பர் என்பது எங்கள் மாமாவுக்குத் தெரியும். யாருக்கும் அடங்காத தறுதலை என்ற பெயரும் எனக்கு இருந்தது. என்னைத் தறுதலை என்று எங்கள் மாமா எண்ணாவிட்டாலும் யாருக்கும் அடங்காதவன் என்று நினைக்கிறவர்தான்.

எங்கள் மாமா போன பிறகு மாலையில் என்னைப் பார்க்கக் கல்யாணி வந்தார். வழக்கம்போல ஆளுயர மூங்கில் கம்பும் பெரிய வாழைக்கொல்லை அரிவாளுடனும் இருந்தார். அரிவாள் வாழைக்கொல்லைக்காக. மூங்கில் கம்பு அவர் சிலம்பம் பழகுவதற்காக. அவர் அறிந்த சிலம்பத்தைத் தினமும் பழகாமல் அவர் இருப்பதில்லை. காவிரிக்கரையில் அவர்களுக்குச் சொந்தமாக இருந்த வாழைத் தோட்டத்தின் இடையில் ஒரு நல்ல தென்னந்தோப்பு இருந்தது. அதில் சில மரங்களுக்கு இடையில் கம்பு சுற்றுவதற்குப் போதுமான இடமிருந்தது. அதில் ஒரு மணிநேரம் நன்றாகப் பழகிவிட்டு வருவார். ஏதாவதொரு காரணத்தினால் ஒரு நாளைக்கு விட்டுப்போய்விட்டதென்றால் அடுத்த இரண்டு நாள்களில் அரைமணி அரைமணி நேரமாக ஈடுசெய்து சுற்றிவிடுவார். இந்தத் தோற்றம்கூட அவருக்கு அவப் பெயரைக் கொடுப்பதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும்.

”வா கல்யாணி, சேவகம் பண்ணக் கிளம்பியாச்சா?” என்றாள் எங்கள் பாட்டி. அவள் சேவகம் என்றது தலையாரியைப் போல இவரும் ஒரு தலை உயரக் கம்பு வைத்துக்கொண் டிருப்பதால். மேலும் சம்பளம் இல் லாத ஊழியம் செய்பவர் என்பதை யும் குறிக்கத்தான். ஒரு கட்டு வாழை இலையைக் கொண்டு வந்து தாழ் வாரத்தில் வைத்துவிட்டுச் சிரித்தார் கல்யாணி. ”இல்லை பாட்டி” என்றார். அது நான் பாட்டியைக் கூப்பிடுவதைப் போன்றதொரு தொனி.

”என்னமோ . . . போப்பா இப்படியே காலத்தெ ஓட்டிவிடப் பாக்கறெ” என்றாள் பாட்டி.

”பாட்டி நான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன் பாட்டி”

”என்ன இது கூத்து” என்றாள் எங்கள் அம்மா.

”கூத்துமில்லே ஆட்டமுமில்லே. நெஜமா கல்யாணம் பண்ணிக்கப் போறேன்”

”அதெச் செய் முதல்லே” என்றாள் எங்கள் அம்மா.

”என்னமோப்பா நாயக்கர் பேரெக்காப்பாத்தினேன்னா அதுலே மொதல்லே சந்தோஷப்படறவ நான்தான்” என்றாள் பாட்டி.

”பெண் யாரு?” என்று கேட்டாள் எங்கள் அம்மா.

”இனிமேதான் பாக்கணும்”

அந்தச் சில மணிநேரத்தில் ஒருவன் ஏசலாகப் போட்டுவிட்டுப் போனது இப்படி வளரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர் பெண் பார்த்த படலமும் எனக்குத் தெரிந்துதான் நடந்தது.

நாங்கள் காரைக்காலுக்குக் குடிக்கப்போனபோது அது நடந்தது. நாங்கள் எல்லோரும் சைக்கிளில் போனோம். போகிறபோது ஒரு காரியமாகப் போய்விட்டு, வருகிறபோது குடித்துவிட்டுவந்தோம். ராமகிருஷ்ணனுக்குச் சொந்தக்காரனும் எங்களுக்கு நண்பனும் எங்களோடு படித்தவனும் ராமகிருஷ்ணன் வீட்டில் இருந்தவனும் அரப்புலிசுர சதகத்தைக் கரைத்துக்குடித்தவனுமான தாணுவின் மாமாவின் வீடு தென்னங்குடியில் இருந்தது. அவர் நகர் சார்ந்த நாகரிகத்தை அனுசரிப்பவர். மேலும் ஃபிரெஞ்சுக் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள் மிகவும் நாகரிகமானவர்களாகத் தோற்றம் தருவார்கள். நீர்காவி ஏறிய வேட்டியை அவர்கள் கட்டுவதில்லை. சலவை செய்த சட்டையையே அணிவார்கள். நாங்கள் புஞ்சையில் நீர்காவி ஏறிய வேட்டியையே கட்டிக் கொண்டிருந்தோம். எங்கள் ஊரில் சலவைத் தொழிலாளர்கள் இருந்தார்கள். என்றாலும் சலவை செய்த வேட்டியை எடுத்து அன்றாடத் தேவைகளுக்குக் கட்டுவதற்கு எங்களுக்குத் தயக்கமாக இருந்தது. மேலே சட்டையே அணிவதில்லை. அது ஊர்ப் பயணத்துக்கு மட்டுமே. ஆனால் அவர்களோ வீட்டில்கூடச் சலவை செய்த சட்டையை அணிந்துகொண்டிருந்தார்கள். வீடு ஒட்டடை அடிக்கப்பட்டு எப்போதும் புதிது போலவே இருக்கும். அவர் வீட்டுக்கு மெத்தைகள் தைக்கவே நாங்கள் போனோம். அப்போது இலவம் பஞ்சு மெத்தைகள்தான் இருந்தன. பஞ்சை அடித்து மெத்தை தைக்க வேண்டும். நரசிம்மன் தையல்காரனானதால் அவனையே கூப்பிட்டிருந்தான் தாணு. தனக்கு வேண்டியவனுக்குப் பணம் போகட்டுமே என்று அவனுடைய மாமா இதற்கு ஒத்துக்கொண்டிருந்தார். நாங்களும் கூடப் போனோம்.

அவரை நானும் அறிவேன். அவர் ராமகிருஷ்ணனின் வீட்டுக்கு அடிக்கடி வருகிறவர். ராமகிருஷ்ணனின் அம்மாவின் தங்கையை அவர் மணந்துகொண்டிருந்தார். நாங்கள் நரசிம்மனின் வேலையில் உதவ முடியும். நரசிம்மன் மெத்தைக்கு வேண்டிய துணியைச் செம்பனார் கோயிலிலேயே தைத்துக்கொண்டு வந்துவிட்டான். கையில் கொண்டுபோக வேண்டியது ஊசியும் நூலும்தான். பஞ்சு தென்னங்குடியில் இருந்தது. ஒரு சைக்கிளில் இருவர் இருவராகப் போனோம். சர்க்கரையை நாங்கள் அழைத்துக்கொண்டு போகவில்லை. தாணு ஏற்கனவே தென்னங்குடி போய்விட்டான். நானும் கல்யாணியும் ஒரு சைக்கிள். ராமகிருஷ்ணனும் நரசிம்மனும் ஒரு சைக்கிள்.

கல்யாணியை வெளியில் வைத்துவிட்டு ஒரு அறையில் பஞ்சைப் போட்டுக்கொண்டு கழியால் நாங்கள் அடித்தோம். அதற்கான வில்லை நாங்கள் தேடவில்லை. அதற்கான தொழிற்திறமை முஸ்லிம்களிடமே இருந்தது. நாங்கள் வில்லால் பஞ்சு அடிக்கிற கற்பனையோடேயே கழியால் பஞ்சு அடித்தோம். கழி பஞ்சைக் கொந்திக்கொந்திக்கொண்டு வந்தது. சுவர் எல்லாம் பஞ்சு. கூரை எல்லாம் பஞ்சு. எங்கள் மேலெல்லாம் பஞ்சு. எங்கள் நுரையீரலில் பஞ்சு. பனி மூட்டம்போலப் பஞ்சு அறையை மூடிக்கொண்டிருந்தது. இவற்றிலிருந்தெல்லாம் பஞ்சின் தரம் கெட்டுப்போய்விடாமல் துரும்புகள் பஞ்சில் கலந்துவிடாமல் மெதுவாகப் பஞ்சை எடுக்க வேண்டியிருந்தது. ஒரே நாளில் அடித்து மெத்தைக்குப் பஞ்சடைத்துவிட்டோம். பிறகு கூரையை ஒட்டடை அடித்துச் சுவர்களைப் பெருக்கித் தரையை எல்லாம் பெருக்கித் துடைத்து மெத்தையை ஈரத்துணியால் துடைத்துப் பஞ்சு களைப் போக்கி வெயிலில் காயவைத்து எங்கள் மூக்கு நுரையீரல் தலைமேலெல்லாம் ஒட்டிக் கொண்டிருந்த பஞ்சைத்துடைத்தும் தும்மியும் காறித்துப்பியும் வெளியேற்றி அங்கு ஒன்றுமே நடவாதது போல ஆக்கிக்கொடுத்துவிட்டுவர இரண்டு நாள்கள் பிடித்தன. அப்படியரு துல்லியமான வேலையை அவர் இதற்கு முன் கண்டிருக்க முடியாது. மூன்றாம் நாள் காலையில் நாங்கள் புறப்பட்டோம்.

கல்யாணியை வெளியில் வைத்திருந்தது அவருக்கு நல்லதாகப் போய்விட்டது. அவர் கற்பனையில் கல்யாண ஆசையைக் காவிரிக்கரையில் போனவன் போட்டுவிட்டுப் போனதற்குப் பிறகு அவர் புலம்பல் என்ற அர்த்தம் தொனித்துவிடாமல் சற்று முன்னதாகவே முடித்துக்கொண்டு தன் கல்யாண ஆசையை எல்லோரி டமும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். அப்படி அவர் தாணுவின் மாமாவிடமும் பேசியிருப்பார் போலிருக்கிறது. அவர் அதற்குச் சாத்தியமான ஒரு யோசனையைச் சொல்லிப் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பெண்ணையும் காட்டி அவர்களோடு தொடர்புப்படுத்திவிட்டார் கல்யாணியை. கல்யாணி ஆள்களைக் கவரும் நட்பு பாராட்டத் தெரிந்தவர். அதனால் அங்கு உறவை உண்டாக்கிக்கொண்டுவிட்டதோடு அந்தப் பெண்ணோடு காதலையும் ஸ்தாபித்துக்கொண்டுவிட்டார். இந்த இரண்டு நாள்களில் உள்ளே மெத்தை உருவாயிற்று. வெளியில் காதல் உருவாயிற்று.

எங்கள் புறப்பாடு திட்டமிட்ட படியே நடந்தது. நாங்கள் நேரே காரைக்காலுக்குப் போய் பாரில் உட்கார்ந்துகொண்டு குடிக்கத் தொடங்கிவிட்டோம். எந்த பிராண்ட் எந்தக் கலவையில் எப்படிக் குடிக்க வேண்டும் என்பதற்கெல்லாம் வாத்தியார் கல்யாணிதான். அந்தக் குடியை நாங்கள் கல்யாணியின் காதலுக்குச் சமர்ப்பித்தோம். அந்த க்ஷணம் நானும் நரசிம்மனும் கல்யாணிக்குக் கல்யாணம் பண்ணிவைக்கும் பொறுப்புக்குப் பிரமாணம் எடுத்துக்கொண்டோம்.

குடித்துவிட்டு நாங்கள் ஊர் திரும்பியபோது காரைக்காலின் தெருக்களில் சைக்கிளை உருட்டிக் கொண்டு வந்தோம். தெருவை அலைந்துகொண்டு வந்தோம். குடித்துவிட்டு அப்படி வருவது பெரிய பெருமையாக இருந்தது எங்களுக்கு. அடங்காப்பிடாரியாக இருப்பதில் லயிப்பு இருந்த காலகட்டம் அது. சமூக நியதிகளை உடைத்தெறிந்து அதில் மூத்திரம் பெய்து காறித்துப்பி நாசப்படுத்த வேண்டும் என்றும் அதுவும் போதாமல் மனம் வெறுப்புக்கொள்ளும் காலகட்டமாக அது இருந்தது. அது திராவிட இயக்கத்தால் உண்டாகியிருந்த மனநிலைதான். மிக மெதுவாக மாறும் சமூகத்தில் நாங்கள் பொறுமையில்லாதவர்களாக இருந்தோம். எங்களுக்கெல்லாம் தலைவர் கல்யாணி. அவருடைய கல்யாணம் என்னும்போது எங்கள் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.

திரும்பும்போது கல்யாணியால் சைக்கிள் மிதிக்க முடியவில்லை. ஒருக்கால் எங்களைவிட அவர் அதிகம் குடித்திருந்தாரோ என்னவோ? நாங்கள் எதையுமே இயல்பாக எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்த போராட்டத்தில் இருந்துகொண்டிருந்த காரணத்தால் போதைகூட எங்கள்மேல் ஏறத் தயங்கிவிட்டதுபோலும். இந்தச் சமூகத்தை எதிர்த்த யுத்தத்தில் நாங்கள் போர்வீரர்கள். அப்படித் தான் அப்போது எங்கள் மனநிலை இருந்தது. நாங்கள் ஒன்றுமே ஆகாதவர்களைப்போல இருந்தோம். ஆகாயத்தில் இருந்தோம். பெரிய பெருமை. படுபலம். கல்யாணியை சைக்கிளில் வைத்துக்கொண்டு நான்தான் ஓட்டிக்கொண்டு வந்தேன்.

அவரைக் காதலிப்பதற்கும் ஒரு பெண் இருக்கிறாளா என்றுதான் நாயக்கருக்குத் தோன்றியது. நாயனா மறுக்க மறுக்க அவருடைய காதல் வலுவாக வளர்ந்தது. எங்களை அன்னியில் அவர் இரண்டொருமுறை தென்னங்குடிக்குப்போய் விட்டு வந்தார். நாங்கள் அறியாமல் அங்கே போய்விட்டு வந்தாரோ என்றும் எங்களுக்குச் சந்தேகம் இருந் தது. இப்படி அவர் தென்னங்குடி போய்விட்டு வருவது அநியாயமாக ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்கிவிடும் என்று நாயக்கர் பெரிய கவலைக்கு ஆளாகிவிட்டிருந்தார்.

இப்படி ஒரு புள்ளையா வந்து பொறக்கணும். என்ன பாவம் செஞ்சோமோ என்றே அவர் குன்றிப்போய்க் கொண்டிருந்தார் என்பது எங்களுக்கு அவர் எதிர்வீட்டுக்காரர் கஸ்தூரி நாயுடுவிடம் பேசிக்கொண்டிருப்பதிலிருந்து தெரிந்தது. இதில் கஸ்தூரி நாயுடு தலையிடமாட்டாரா என்ற ஆதங்கமும் அவருக்கு இருந்திருக்கக் கூடும். ஆனால் இந்த நேரத்தில் அவருக்கு நம்பிக்கை வரும் இரண்டொரு காரியங்கள் நடந்தன. அந்த நேரத்தில்தான் அவர் நான் மேலே குறிப்பிட்ட வீட்டைக் கட்டியது. அதை மட்டும் அவர் கட்டாமல் இருந்திருந்தாரானால் அவருடைய கல்யாணத்துக்கு ஒத்துக்கொண்டிருக்கமாட்டார் நாயக்கர். வீட்டைக் கட்டிப்பார்! கல்யாணம் பண்ணிப்பார் என்று ஒரு பழமொழி இருக்கிறதல்லவா? அவர் வீட்டைக்கட்டிப் பார்த்துவிட்டதனால் இனிமேல் அவருக்குக் கல்யாணம் பண்ணிப்பார்க்கலாம் என்று நாயக்கர் தன் ஸ்தானத்திலிருந்து கீழிறங்கி வந்துவிட்டார் போலிருக்கிறது.

அந்த இடத்தில் இடிந்த ஒரு பழைய வீடு இருந்தது. வரிசையாகக் கிழக்குப் பார்த்த வீடுகளின் இடையில் பாழடைந்துபோயிருந்தது அந்த வீடு. ஆள்களைவிட்டு அந்த வீட்டின் செங்கற்களைப் பெயர்த்து அடுக்கி ஒப்பேறிய ஓடுகளைப் பிரித்து அடுக்கித் தெற்குப் பார்த்து வாசலை வைத்து வீட்டைக் கட்டுவதற்கு அஸ்திவாரம் போட்டுவிட்டார் கல்யாணி. அது தெருவின் சாரியில் அமையவில்லை என்பதும் ஆரம்பத்தில் அவருக்கு நாயனாவிடம் அவப் பெயரைக் கொடுத்தது. ஊரோடு ஒத்துப்போகாத காலிப்பயல். காலிப்பயல்கள் அதுதான் சரியானது.

அந்த மனைக்கட்டின் கோடியில் இருந்த ஒரு மூங்கில் கொத்தின் மூங்கில்கள் எல்லாவற்றையும் வெட்டி மேற்கே காவிரிக்கரையில் இருந்த குட்டையில் ஊறப்போட்டு விட்டு – அந்தக் குட்டையில் மட்டும் தான் அதிகம் மனிதர்கள் குளிக்காமல் இருந்தார்கள் – போதாக் குறைக்குப் புதிய ஓடுகளை மட்டும் வாங்கிக்கொண்டு அழகிய ஒரு சிறிய வீடு உருவாகிக்கொண்டு வந்ததைப் பார்த்த பிறகுதான் ஊரோடு முரணிக்கொண்டு அவர் வீட்டைக்கட்டவில்லை என்பதும் தெற்குப் பார்த்து வாசலை வைத்துக்கட்டுகிறார் என்பதும் நாயனாவுக்குப் புலப்பட்டது.

கிளுவை வேலியால் வாயிலை அடைத்து, அந்தக் கொல்லைக் கோடியில் போகிறவரையில் கிளுவை வேலியால் எல்லாவற்றையும் நன்றாக அடைத்துக் கொத்தி வாழை வைத்து அது நன்றாகக் குருத்துவிட்டு ஓரிரு இலைகள் வெளியில் வந்து இடமே களைகட்டியபோது நாயனாவுக்கு நன்றாக நம்பிக்கை வந்துவிட்டது. புஞ்சையில் கிளுவை என்றால் அது சின்னதாடியைத்தான் நினைவுபடுத்தும். கிளுவை வேலிபோடுவதும் கிளுவைப் பேத்துகளை வெட்டி வியாபாரம் பண்ணுவதும் ஒரு பெரிய கலை. அதை மிக நன்றாகச் செய்தவர் சின்னதாடி. அப்படியே கல்யாணி பரம்பரைப் பழக்கத்தில் வருவது கண்டு பெரியதாடிக்கு உள்ளூரச் சந்தோஷமாகவே இருந்தது. நானும் நரசிம்மனும் செய்ய முடியாத காரியத்தை வீடும் வாழைத் தோட்டமும் கிளுவை வேலிகளும் செய்துவிட்டன.

கல்யாணி மிக எளிமையாகக் கொண்டாடிய கிரகப்பிரவேசம், என்னவோ வீட்டை நாயக்கர்தான் கட்டி கிரகப்பிரவேசம் பண்ணுவது போல இருந்தது. நாங்கள் எல்லோரும் இருந்தோம். அது ஒரு நல்ல சடங்காகத்தான் நடந்தது. அவருக் கும் மனசுக்கு ஒத்துப்போயிற்று. அவருடைய நாயனாவுக்கும் சம்பிர தாயமாக இருந்தது. அதற்குப் பிறகு நாய்களைப் போல நாங்கள் நாயனாவுக்குப் பின்னால் ஓடவில்லை.

வீடு கட்டியதைத் தொடர்ந்து அவர் தன் டீக்கடையைத் திறந்தார். அது உட்கார்ந்து இருப்பதற்கு சந்தோஷமான இடமாக அமைந்துவிட்டது. தெற்கு வடக்காக நீண்ட ஓர் அமைப்பு. அதன் நடுவிலிருந்து கிழக்கே போகும் ஒரு பகுதி அடுப்படிக்கு. மனையின் வடமேற்குத் தென்மேற்கு மூலைகளில் இரண்டு தென்னை மரங்கள் இருந்தன. அந்தத் தென்னைகளைச் சுற்றி வட்டமாகக் கூரை அமைத்து, அதன் அடியில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அமைப்புகளை உருவாக்கியிருந்தார். அந்த வசதிகள் தெற்கு வடக்காக இருந்த தென்னைகளின் வரிசையில் உண்டாக்கப்படவில்லை. அது இடைஞ்சலாக இருக்கும் என்று விட்டுவிட்டார் போலிருக்கிறது. தென்னைகளுக்கு வெளிப்புறத்தில் அழகான கிளுவை வேலியை அடர்த்தியான படலை வைத்து அமைத்துவிட்டார். இடம் மிகச் சுத்தமாக இருந்தது. நான் ஏற்கனவே சொல்லியிருந்த அக்ரகாரத்தின் முனையில் இருந்த டீக்கடைகளும் இருந்தன. இது வடக்குவீதி வடக்கே திரும்பி சாலையாக மாறும் இடத்தின் கீழ் கையில் இருந்தது. இது வடக்கு வீதி மேலும் தொடர்ந்து கிழக்கேபோய்த் தெற்கே திரும்பிக் கீழ வீதியாக மாறிவிடுகிறது. தெற்கு வீதியான வடுவத்தெருவிலிருந்து வரும் சந்து, குருக்கள் வீட்டை ஒட்டி மேலும் தொடர்ந்து வடக்கு வீதியில் வந்து சேர்கிறது. எனவே இந்தக் கடை இந்தப் பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து வடக்கே போய்ப் பழைய டீக்கடைகளை நாடவேண்டிய அவசியமற்றுப் போயிற்று. இது அக்கடைகளுக்குப் போட்டி அல்லவென்றும் தன் கடை புதிய வாடிக்கையாளர்களை உண்டாக்குவதிலேயே கருத்தாக இருக்கும் என்றும் அந்தக் கடைக்காரர்களுக்குச் சொல்லி அவர்களுடைய கவலைகளைப் போக்கியதுதான் கல்யாணியின் முதல் வேலையாக இருந்தது.

முதன்முதலில் புஞ்சையில் பறையர்கள் எல்லோரும் சமமாக உட்கார்ந்து டீ குடிக்க அனுமதித்தார் கல்யாணி. எல்லோருக்கும் கொடுத்ததைப் போல அதே டபரா டம்ளர்களில் அவர்களுக்கும் டீ கொடுத்தார். அதற்கு முன்பெல்லாம் அவர்களுக்கு டீக்கடையின் பக்கத்தில் சார்ப்பு இறக்கி இருப்பார்கள். அதிலிருந்துதான் அவர்கள் டீ குடிக்க வேண்டும். அவர்களுக்கு டபரா டம்ளர் கிடையாது. கண்ணாடி டம்ளர்கள் தனியாக ஒதுக்கப்பட்டிருக்கும். டீ வேண்டுவோர் அந்தக் கண்ணாடி டம்ளரை எடுத்துவைக்க வேண்டும். அதில் டீக்கடைக்காரர் வெந்நீரை ஊற்றுவார். அதைக் கழுவிவைத்தால் டபரா டம்ளரில் டீயை ஆற்றி அதில் ஊற்றுவார். எடுத்துக் குடித்துவிட்டு அதை அவர்களே அதற்கான இடத்தில் கழுவிவைத்துவிட வேண்டும். இதுதான் தொடர்ந்துகொண்டிருந்தது. இப்போது இதைத் தன் கடையில் மாற்றிவிட்டார் கல்யாணி. இதற் கெல்லாம் ஒத்துக்கொண்டவர்கள் கல்யாணியின் கடைக்கு வந்தார்கள்.

இன்னொரு அற்புதமான வேலையைச் செய்தார் கல்யாணி. அவர் கோயில் காளையைப்போல ஊர் சுற்றிக்கொண்டிருந்ததால் அவருக்கு யார் யார் வீட்டில் என்னென்ன விசேஷமான பலகாரங்கள் பழக்கத் தில் இருக்கின்றன என்பது தெரிந்திருந்தது. அவற்றைத் தயாரித்துக் கொண்டுவந்து தன் கடையில் ஒவ்வொரு நாள் சிறப்பான அம்சங்களாக விற்பனைக்கு வைத்துவிட்டார். அது மாலை நேரங்களில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அளவு மட்டும் விற்கப்படும். அது அவர் கடையின் தனிச்சிறப்பாக எங்கும் பரவ ஆரம்பித்துவிட்டது. தனக்கு லாபம் குறைவாகப் போதும் என்றும் வருபவர்களுக்கு நல்ல பொருள்கள் கிடைக்க வேண்டும் என்பதும் அவருடைய லட்சியமாக இருந்தது. எனவே மிக உயரிய காபி, டீ அவருடைய கடையில் கிடைத்தது. இளம் காலைப் பொழுதும் மாலை நேரங்களும் மிக இனியவையாகப் பலருக்கு மாறிவிட்டன.

குறிப்பாக மன அழுத்தத்தைக் கொடுக்கும் மாலைப் பொழுது மிகவும் சுவாரஸ்யமான மாலைப் பொழுதாக மாறிவிட்டது. இப்போது டீக்கடைக்குப் பால் கொண்டுவரும் நபராகப் பெரியதாடி மாறிப் போய்விட்டார். இனிமேல் கல்யாணத்தை முடித்துவிடலாம் என்ற கட்டம் வந்துவிட்டது.

கல்யாணம் நடந்தது. கல்யாணம் கஸ்தூரி நாயுடுவின் வீட்டில் நடந்தது. பெரிய சந்தோஷம். கஸ்தூரி நாயுடுவுக்குப் பெரிய சந்தோஷம். ‘மாமா’ என்று கூப்பிடு குரலுக்கு ஓடிவந்து திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறவர் அல்லவா? யோசனைகள் பண்ணுகிறவர்கள். மதிக்காத இளைய தலைமுறை மார்பைத் தூக்கிக் கொண்டு தெருவோடு போகிறபோது மதிப்பாகத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு யோசனை பண்ணுகிறதென்றால் அதற்குப் பெரிய மதிப்பு இருந்தது.

நாங்கள் பெரிய சந்தோஷத்தில் இருந்தோம். சர்க்கரை ராமகிருஷ் ணனின் வீட்டுக்கு நல்ல காய்ச்சிய சுத்த சாராயத்தைப் பாட்டில் பாட்டிலாகக் கொண்டுவந்துவிட்டான். இப்போது நாங்கள் மட்டுமே சாராயம் குடித்தோம். நாங்கள் குடித்துக்கொண்டிருந்தபோது பெண்ணும் பிள்ளையும் பெரிய கோயிலுக்குப் போகிறார்களென்றும் எங்களைக் கூப்பிடுகிறார்கள் என்றும் ஒருவன் ஓடிவந்து சொன்னான். நாங்கள் கச்சேரியை முடித்துக் கொண்டு எழுந்து ஓடினோம். பெண்ணும் பிள்ளையும் மேளதாளத்துடன் நற்றுணையப்பன் சந்நிதிக்குப் போனார்கள். இதுவரையில் நாங்கள் கிண்டல் பண்ணிக்கொண்டிருந்த குருக்கள் சம்பிரதாயங்களை எல்லாம் முடித்துத் தீபாராதனைத் தட்டைக் கண்ணில் ஒத்திக்கொள்ள பெண்ணுக்கும் பிள்ளைக்கும் முன் கொண்டுவந்து காண்பித்தார். கல்யாணி தீபாராதனையைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொண்டார். அவரைத் தொடர்ந்து நாங்களும் ஒத்திக்கொண்டோம்.

இனிமேல் என் பேத்திக்குத் தெரியும், என் உறவு கல்யாணியோடு எப்படிப்பட்டது என்பது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *