கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 28, 2022
பார்வையிட்டோர்: 1,832 
 

(1967 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மனிதன் ஏன் பிறக்கிறான்? என்ற கேள்விக்குப் பல தரப்பட்ட பதில்கள் வரலாம்! ஆனால் பெண் ஏன் பிறக்கிறாள் என்று கேட்டால், “பிள்ளைகளைப் பெற்றெடுக்க” என்ற பதில் உடனே வரும்!

முகத்தைத் திருப்பிக் கொள்வதில் பயனில்லை. கொஞ்சம் நேராகப் பார்க்கும் தைரியம் வேண்டும் நமக்கு.

நமது சமூகமும் அதன் அமைப்பும் இப்படி முகத்தைத் திருப்பிக் கொள்ளும் மனப்பான்மையில் தான் பின்னப் பட்டுக் கிடக்கிறது. பெண்களைப் பற்றி எண்ணிப் பார்க்கும் பொழுது தாய்மையும் தனித்து நின்று அழிந்து போகும் தன்மையும்தான் மிஞ்சி இருக்கின்றன. இவற்றை விட வேறு ஏதாவது இருக்கிறதா? இருக்கிறதென்றால் அது என்ன? என்ன அது?

ரகுமத்து தனக்குத் தானே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டாள். கடைசி வரை பதில் கிடைக்க வில்லை அவளுக்கு.

நீட்டி நிமிர்ந்து படுக்கையில் கிடந்தாள் ரகுமத்து. வீடு இருண்டு கிடந்தது. திண்ணையில் எரிந்து கொண்டிருந்த விளக்கு வெளிச்சம். கதவிடுக்கால் நுழைந்து வீட்டுச் சுவரில் நீண்ட ஒளிக்கோடு போட்டுக் கொண்டிருந்தது. எண்ணங்களை உதறித் தள்ளி விட்டு ஆழ்ந்த நித்திரையில் மூழ்கிவிடத் துடித்தது அவள் நெஞ்சு. முடியவில்லை. நெருப்பில் வாட்டிய வெற்றிலை போல் துவண்டு கிடந்து அவள் தளிர் மேனி, நெஞ்சு மட்டுமென்னவோ காதரைசி சுற்றி வளைந்து கொண்டிருந்தது.

யார் இந்தக் காதர்?

ரகுமத்தைப் பொறுத்த வரையில் உடல், உயிர், உலகம், வாழ்க்கை எல்லாம் அந்தக் காதராகத்தான் இருந்தான் சற்றுத் தூரத்தில் இருந்து கல்யாண வீட்டுச் சந்தடியும் சலசலப்பும் அவள் காதில் வந்து விழுந்து கொண டிருந்தன. வீட்டுக்கு முன்னால் தெருவில் மனித நடமாட் டமும் பேச்சுக் குரலும் கேட்டன. எல்லாம் கலியாண வீட்டுச் சந்தடிகள் தாம்.

ரகுமத்தின் புலனில் பாதி அழுது வடியும் தனது எதிர் காலத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தது. மற்றொரு பாதி கலியாண வீட்டுச் சந்தடிகளைக் கிரகித்துக் கொண்டிருந்தது.

மூடியிருந்த கண்களைத் திறந்து இருட்டைப் பார்க்க வேண்டுமென்று நினைத்தாள். ஆனால்! அந்தக் கண்க களுக்குள் காதர் நின்றான். கண்களைத் திறந்தால் அவன் தழுவி விடுவானோ? அவள் கண்களைத் திறக்கவில்லை. வாழ்க்கையில் நழுவி விட்டவனை, நிலையில் இழுத்துப் (பிடித்து நிறுத்த முயன்றாளா? முயல்வதற்கு என்ன இருக்கிறது? உயிர் இருக்கும் வரை அவன் உள்ளம் இருக்கும் வரை அவன் நினைவும் இருக்கும். அது மறக்காது. மறக்கக் கூடிய வகையிலா அவன் அன்பு செலுத்தினான்! அவள் மனம் அசை போடத் தொடங்கியது.

அன்று மாலை ஊரே கலகலப்பும் கட்டுக்கோப்பும் நிறைந்திருந்தது! நாளை வரப்போகும் ஹஜ்ஜரப் பெரு தாளைக் கொண்டாடுவதற்காக, மக்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர், ரகுமத்தின் வீட்டிலும் அதே நிலை தான்.

ரகுமத்தின் காக்கா செய்யது, தைக்கக் கொடுத்திருந்து உடுப்புகளை எடுப்பதற்காகக் கடைத் தெருவுக்குப் போயி ருந்தான். தாயார் கறிபுளி வாங்கச் சந்தைக்குப் போய் விட்டாள். ரகுமத்து காலையில இருந்து வீட்டு வேலை களை யெல்லாம் செய்து முடித்து விட்டாள். கருக்களானதும் வீட்டுக்குள் மஞ்சள் நீர் தெளித்துச் சாம்பிராணி தூபம் போட வேண்டிய வேலைதான் இருந்தது. அத்தோடு இன்னுமொரு வேலை? மருதாணி அரைத்து கையில் இட்டுக் கொள்ளும் வேலைதான் அது.

எந்த இஸ்லாமியப் பெண்ணுக்கும் மருதாணி போட்டு கொள்ளவில்லையென்றால் பெருநாள், கொண்டாட்ட மாக இருக்காது. எனவே ரகுமத்து முற்றத்தில் நின்ற மருதாணி மரத்தை நோக்கி நடந்தாள்.

மரம் சற்று வயதானது. கீழே நின்று ஆய்வதற்கு இலைகள் இல்லை . எனவே மரத்தில் ஏறி ஒரு கந்தில் சாய்ந்து நின்றபடி மற்றொரு கந்தில் இருந்த இலைகளை ஆய்ந்து கொண்டிருந்தாள் ரகுமத்து.

அந்தச் சமயம் பார்த்து தானா அவன் வரவேண்டும்? சைய்யதிடம் மருதாணி இலை வாங்கிப் போக வந்தான் காதர். தலைவாசல் கதவைத் திறந்து கொண்டு வளவுக்குள் வந்து விட்டான் அவன். காதரைக் கண்டவுடன் ரகுமத் துக்கு ஒன்றுமே ஓடவில்லை. வெட்கத்தில் அவள் நெஞ்சு குவிந்தது. முகம் சிவந்து வியர்வை அரும்பியது. வேறு வழியில்லை . அவசரவசரமாகக் கீழே இறங்க முயன்றாள், முடியவில்லை . சேலை சதி செய்தது. அவள் சேலை ஒரு மொட்டைக் கந்தில் சொருகிக் கொண்டு அவளைத் திண் டாட வைத்தது பூமியை நோக்கி ஒருகாலும் கந்தில் ஒரு காலுமாகத் தவித்தாள்.

ரகுமத்தை மரத்தில் பார்த்த காதர் தனக்குள் இலே சாகச் சிரித்தபடி வெளியே போக முனைந்தான் ஆனால் அவள் நிலையைப் பார்த்ததும், ஆபத்துக்குப் பாவ மில்லை என்ற உண்மை புரிந்தது. ஒரே பாய்ச்சலில் ரகு மத்தை அணுகி அவள் இடையில் கை கொடுத்துக் கீழே இறக்கினான்.

அவ்வளவு தான். கலைந்த தன் சேலையை அள்ளிப் பிடித்தபடி ஓடினாள். ஓடிச் சமயலறைக்குள் மறைந்து விட்டாள். வெட்கத்தால் உடலும் உள்ளமும் துடித்தன, அவளுக்கு.

ரகுமத்தைத் தொட்டு இறக்கிய காதர், அவள் கூந்தலில் இருந்து நழுவிய மருதாணிப் பூவை மறக்கவில்லை . அவள் ஓடி மறைந்ததும், கீழே கிடந், மருதாணிப் பூவை எடுத்து அவள் மறைந்த இடத்தைப் பார்த்தபடி ஒரு புன் சிரிப் போடு முகர்ந்தான்; முகர்ந்தபடி நகர்ந்தான்.

அவனது அந்தச் சிரிப்பிலே அவள் துவண்டாள். அவன் செயலிலே தன்னை மறந்தாள். அவன் தொட்ட இடத்தை யும் அதில் கிடைத்த உணர்வையும் எண்ணி அவள் நெஞ்சு தவித்தது. உடலெல்லாம் சிலிர்த்தது. நினைவிலே இன்பத்தை அனுபவிக்கும் பொழுது உணர்விலே எத்தனை வேதனை? அந்த வேதனையிலேயும் இனிமை இருக்கிறதே!

உணர்ச்சி அலைகள் கொந்தளித்த நிலையில் எல்லா வற்றையும் மறந்து தன் இடுப்பை அவன் தொட்டுப் பிடித்த உணர்வை எண்ணி விம்மியது அவள் நெஞ்சு அவனது அந்தப் பிடியிலே அவள் அடைந்த கத கதப்பு! ஆண்மை யின் அழுத்தம்!

“உம்மா…”

நெஞ்சுக்குள் ஏதோ அடைத்துக் கெகண்டது போல் திக்கு முக்காடியபடி கண் விழித்தாள் ரகுமத்து. இருட்டா கிக் கிடந்தது! திண்ணையில் எரிந்து கொண்டிருந்த விளக்கு அணைந்து விட்டது போலும், கல்யாண வீட்டுச் சந்தடி மும்முரமாகக் கேட்டுக் கொண்டிருந்தது.

பக்கத்து வீட்டுக் கதவு திறக்கும் ஓசை! அதையடுத் துக் கூரையில் தூங்கிக் கொண்டிருந்த கோழியொன்று கொக்கரித்தது. தெருவிலே காரொன்று கல்யாண வீட்டை நோக்கி ஓடுகிறது. திண்ணையில் படுத்துக் கொண்டிருந்த அவள் தாய் இருமிய சத்தம் கேட்டதும் தாயைச் சுற்றி அவள் எண்ணங்கள் சுழன்றன.

உம்மாவின் மனதில் இருந்த ஆசை; அதற்கு மாறாக அங்கே நடக்கப் போகும் கல்யாணம்; பாபம் அந்தத் தாய் உள்ளம் என்ன பாடுபடும் வேதனைக்கு மேல் வேதனை, எண்ணங்களில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் கூடத்தான்.

இஸ்லாமியப் பண்பாட்டில் விவாகமாவதற்கு முன் ஒரு ஆணும் பெண்ணும் நட்புறவு கொள்வது ஒழுக்கம் கெட்ட செயல்தான். இருந்தும் இளங்கன்று பயமறியாது’ என்பதற்கிணங்க, ஆசை நிறைந்த உள்ளத்தோடு அன்பு செலுத்தினார்கள். இருவரும். காதர் ஒரு தமிழ் ஆசிரி யன் ; ரகுமத்து ஏழாவது வரை படித்தவள் எனவே பண்பும் நாகரீகமும் தெரிந்து ஆசைக்கு வேக மூட்டாமல் இடம் பொருள் அறிந்து தங்கள் அன்பை வளர்த்துக் கொண் டார்கள்.

சமய சந்தர்ப்பங்களில் – விவாகம் வானுலகில் நிச்ச யிக்கப்படுகிறது – என்று வேதாந்தம் பேசுவார்கள். முதிய வர்கள். ஆனால்! இங்கே தாய் தந்தையர்கள் தாம் மக் களின் விவாகத்தை நிச்சயிக்கிறார்கள். அதிலும் ஆண் களின் தாய் தந்தையர்கள் என்ன நினைக்கிறார்களோ அது தான் இறைவன் கட்டளை. அந்தக் கட்டளை காதரைப் பணிய வைத்தது ரகுமத்தைப் பலி வாங்கி விட்டது.

இன்றிரவு அங்கே காதருக்குக் கலியாணம்! அவன். அங்கே மணக்கோலத்தில் காட்சியளிக்கிறான் இங்கே இவள் பிணமாகிக் கொண்டிருக்கிறாள்.

சமுதாயமும் அதன் சம்பிரதாயங்களும் அவிழ்க்க முடி யாத சிக்கல்! புரிந்து கொள்ள முடியாத புதிர்! இல்லை யென்றால் நாலு பேருக்ரு முன்னால் தாலிக்கட்டுவதன் மூலம் முன் பின் தெரியாத ஒருத்தி மனை வியாவதும், நாலு வருசங்கள் பழகி அன்பு செலுத்திய ஒருத்தி வேற் றாளுமாகி விடும் அற்புதம் நிகழ்கிறதே!

காதர் வாழ்க்கையில் நல்லவன்! ஆனால் தாய் தந்தை யர்கள் முன்னால் ஒரு கோழை? ஐந்து ஏக்கர் வேளாண்மை நிலமும், ஒரு புதிய வீடும் சில ஆயிரம் ரூபாய்களும் வேலையைச் சுலபமாக்கி விட்டன. அவன் மாப்பிள்ளை யாகிக் கொண்டிருக்கிறான், முன் பின் தெரியாத ஒரு பெண்ணை மனைவியாக்கிக் கொள்ள.

வெடிச் சத்தமும் பெண்களின் குரவை ஒலியும் ரகு மத்தின் கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொண்டிருந்தன. அந்த வேளையிலே தன் வீட்டில் இருந்து பெண் வீட்டை நோக்கி மாலை அணிந்து மாப்பிள்ளையாக நடைபோட் டுக கொண்டிருந்தான் காதர்!

இருண்டு கிடந்த தெருவெல்லாம் ‘கியாஸ்’ விளக்கு களின் ஒளி வெள்ளம் பாய்கிறது. ஊர் பிரமுகர்கள் அரபி மொழியிலே அமைந்த வாழ்த்துப் பாடல்களைப் பாடிக் கொண்டு முன்னால் வர பின்னால் காதர் மாப்பிள்ளை யாக வந்து கொண்டிருந்தான். மழை பெய்யவில்லை வெயில் எரிக்கவில்லை ; நடு நிசியில் குடை பிடித்து வந்து கொண்டிருந்தான் அவன்.

சந்தடி கேட்டுத் திண்ணையில் படுத்திருந்த ரகுமத் தின் தாயார் கண் விழித்தாள். கலியாண ஊர்வலம் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. திண்ணையில் உட் கார்ந்திருந்தபடியே சாத்தியிருந்த வீட்டுக் கதவைப் பார்த்தாள், பிறகு;

“ரகுமத்து! ரகுமத்து!!” என்று மகளை எழுப் பினாள்.

“என்னும்மா….!” ரதமத்து குரல் கொடுத்தாள்.

“ஊர்வலம் வருகுது புள்ள….”

“நமக்கென்ன உம்மா”

“ஊர்வலம் பாக்க நீ வரல்லியா புள்ள?”

“என்னத்த பாக்கிற உம்மா! நானும் ஒரு நாளைக்கு ஊர்வலமாப் போறவள் தானே!”

ரகுமத்து எந்த ஊர்வலத்தைப் பற்றிச் சொன்னாள் என்பது அந்தத் தாய்க்குத் தெரியாது, தெரிந்து கொள்ள அந்த முதியவள் முயலவில்லை.

– 1967, பித்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்ச் 1995, மல்லிகைப்பந்தல் பதிப்பகம், யாழ்ப்பாணம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *