இளமைக் காலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 13, 2020
பார்வையிட்டோர்: 5,209 
 

அராலி, இயற்கை வளம் கொழிக்கும் கிராமம் ! கடலும் கரையும் சேர்ந்த நெய்தல் நிலப்பகுதியோடு இருக்கிறது.ஓங்கி உயர்ந்த பனை மரங்களால் சோலைத் தன்மைக் கொன்டது.குடியிருப்புகள் நெருக்கமான இடங்களில்,வளவுகளும் சுருங்கியதில் பனை மரங்களைக் குறைத்து அழகையும் குறைத்து விட்டுருக்கிறார்கள்.வெட்டி துலா, வீட்டு கூரைகளிற்கு பயன்படுத்தி, பதிலுக்கு தென்னை நடப்பட்டிருக்கின்றன.தென்னை வழவழப்பான யாருமே ஏறக்கூடியது.பனை சொர சொரப்பென ….நெஞ்சுக்கும் மட்டை வைத்தே கயிறுப் போட்டு வலு அவதானமாக ஏற வேண்டியவை.தோலை எல்லாம் சீராய்த்து கிழித்து விடும் பயங்கரமிருந்ததால், ஓலை விழுகிற போதும் ஏற்படும் சிக்கலால் தான் வீட்டிற்கு எட்டத்திலே …பனைக்கு இடம்.பனை கற்பகத்தரு.அது வேற விசயம்.அதற்கும் தனி மரியாதை செய்து வளர,வளர்க்க வேண்டும்.இல்லை என்றால் வெட்டுகிறதை விட வேற வழி இல்லை.நெய்தல் நிலப்பகுதியில் வழுக்கியாறு ,காரைநகர் பெருவீதிக்கருகில்,மதகுக்கதவுகளுடன் கூடிய வட்டப்பொய்கையிற்குள் சென்று,நீளமான அராலிப்பாலதினூடாகக் கடலை அடைகிறது. மழை பெய்கிற ,கடல்பெருகிறக் காலத்தில் வாய்க்காலுக்கு வெளியிலும் திட்டு திட்டாக வெள்ளம்தேங்கியோ,பரந்திருப்பதைக் காணலாம்.கோடையில் வாய்க்காலுக்கு வடக்குப் பக்கத்தில் சிப்பி தோண்டுறது(எடுக்கிறது)இருக்கிறது.வீட்டுக்கு அடிக்கிற சுண்ணாம்பு,வெத்திலைக்குப் போடுறது எல்லாமே அதிலிருந்தே பயன்படுத்துகிறார்கள்.

வல்லை,கோப்பாய் வெளிகளைப் போல இது கல்லுண்டாய் வெளி என அழைக்கப்படுகிறது.து தெற்குப் பக்கமாக கொத்துக்கலட்டி(வெளி),நவாலி வீதிக்குப்பிறகு அப்பால் நெல் வயல்கள்,பின்னால் மண் கும்பங்கள்(சிறிய மலை)என்கிற மேடுகள் என்பனவற்றைக் காணலாம்.பிறகும். கல்லுண்டாய் வெளி தொடர்கிறது. சில இடங்களில் வயல் காணியாக மாறுகிறது, மேடுகள் தரையாகி விட்டன .இப்ப , மட்டுமே ஒன்று இரண்டைக் காணலாம் என்று நினைக்கிறேன். என்னவோ தெரியவில்லை,அவை, “ஆனைக்கோட்டை மண் மேடுகள்” என்றே அழைக்கப்பட்டன.அராலிவீதி என்பது தெற்கராலிக்குச் செல்கிற வீதியையே சொல்லப்படுகிறது.யாழ்ப்பாணத்தில் நகரத்தை விட எந்த கிராமத்திலூடாகச் செல்கிற வீதிக்கும் பெயர்ப்பலகைப் பெயர் வைத்திருக்கவில்லை.போருக்குப் பின் சிங்கள அரசாங்கம் சிங்களப் பெயர்ப் பலகைகளை வைக்கிறப் போக்கு எழுந்திருக்கிறது.13ம் சட்டத் திருத்தத்தை அவர்கள் எதிர்ப்பதற்கு தம் இஸ்டப்படி …வைத்து விடலாம் என்பதும் ஒரு காரணம்.

இந்திய அரசியலோடு விடுதலைப் போராட்ட த்தைக் கலந்திருக்கவேக் கூடாது.விடுதலைப்பற்றிய அரிவரியே தெரியாத குழுக்களினூடாக இந்தியாவிற்கு திரைக்குப் பின்னால் எதிராக இயங்கும் சக்திகள் ,பனிப்போர் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கின்றன,அதைப் புரிந்து கொள்கிற அறிவு நம் எந்த ஈழப்போராட்டக் குழுக்களிற்கும் இல்லை,நம்மவர்களுக்கூடாக நுழைந்து ராஜிவ் காந்தியை படுகொலை செய்து விட்டன.அதற்கான விலையை இன்று வரையில் ஈழத்தமிழர்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.மனிதப் பேரவலம்.இனப்படுகொலை ..எல்லாம் நிகழ்வதற்கான வாய்ப்புகளை வழங்கி விட்டிருக்கின்றன.இன்னமும் தொடரும் நிலையே இருக்கின்றது. ஈழத்தமிழினம்,திருமலை,மன்னார்த் துறைமுகங்களின் அபிவிருத்தி ஒப்பந்தங்களை,இலங்கையரசு அம்பாந்தோட்டைத் துறை ஒப்பந்தத்தை 99 ஆண்டு சீனாவிற்கு குத்தகைக்கு விட்டதைப் போல, ‘இந்தியாவிடம்’ தருவோம் மேற்கொள்ளுவோம் என வெளிப்படையாக அறிவித்து உன்மையாகவும் இருந்தால் தான் ….. இந்தியா வும் சில தளர்வுகளிற்கு இறங்கி ,இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை தூசு தட்டிப் பார்க்க விளையும் எனப்படுகிறது.

கல்லுண்டாய் வெளியிற்குள் ‘ நாடு விட்டு நாடு பறக்கிற பெரிய பறவைகள் ‘எல்லாம் அந்தந்த நாடுகளின் பனிக்காலத்தில், இங்கு வந்து இறங்குவது வழக்கம் .லைசென்ஸ் பெற்றிருந்த இளைப்பாரியக் கொழும்புத் தமிழர் சிலர் பறவை சுடும் துவக்கால் …. அவற்றை வேட்டையும் ஆடுகிறார்கள். அராலியில் அந்நேரம்,தேவசயாகத்தைத் தவிர வேற யாரும் வேட்டையாடியதாக தெரியவில்லை ஒரு முறை தேவசயாகம் அங்கிள், சைக்கிளின் பின் கரியலில் கட்டி வந்த”ஆலா”என்று அழைக்கப்பட்ட அப்பறவையின் , சிறகை விரித்துக் காட்டினார்,பெரிய விளையாடுற குட்டிப்பிளேன் போல இருந்தது.

வாடைக்காற்று நாவலில், நெடுந்தீவில் கூலாக்கடா என வருகிற பறவையும் இதுவாகவே இருக்க வாய்ப்பு இருக்கிறது .ஆலா,கூலா…(coola ) .சிறிய உச்சரிப்பு மாற்றமாகவே இருக்கின்றது.

அராலிவீதிக்கு தெற்கே கடலைத் தொடுற வரைக்கும் நெல்லு வளர்ந்திருப்பது போல கடற்பாசிச்சாறைக் அடைத்து வைத்திருக்கிற குட்டிக் குட்டி முளைகளுடன் கூடிய குட்டையான கடற்தாவரங்கள் , செரிந்தும், ஐதாகவும் பரந்தளவில் புதர்கள் போன்று சிறிது கூடுதலாக வளர்ந்தச் செடிகளுக்கூடாக ஏக்கர் கணக்கில் கரையோடு பரந்து அராலித்துறை வரைக்கும் போகின்றன. அவ்விடத்திலிருந்து பார்த்தால் ஒரு ஐயன்னார் கோவிலும் குடிமனைப் பக்கமாக எழுப்பப்பட்டிருக்கிறதைக் காணலாம் உள்ளே வாலையம்மன் கோவில்,தெற்கராலி அம்மன் ஆலையம் , இன்னும் உள்ளே போனால் ஐம்பது ,அறுபது என நிறைய சிறிய,பெரிய கோவில்கள் என கிடக்கின்றன.மாதாங்கோவில் என்ற பெயரிலும் பெரிய கேணியுடன் ஒரு ஆலயமும் இருக்கிறது.என்னடா என்று பார்த்தால் அதுவும் அம்மன் ஆலையம் தான்.போர்த்துக்கேயர்,ஒல்லாந்தர் விசாரித்த போது ஆங்கிலத்தில் அவ்வாறு மொழி பெயர்த்துக் கூற “ஒ!”என வியந்து இடிக்காமல் விட்டிருக்கிறாளாம் அதைக் காண்கிற போதெல்லாம் “மேரியம்மா”என்ற வார்த்தையே நினைவில் வர, வர அப்படியே விட்டு விட்டார்கள் என்று அவ்விடத்தார் கூறுகிறார்கள்.மகாவம்சம் போல எத்தனையோ புனைவுகள். அதில்களில் இதுவும் ஒன்று !

நாதன் வீட்டுக்குப் பக்கத்திலே இருந்த பரமேஸ் அக்காவின் வருத்தத்தில் இருந்த அம்மா சாக, உறவினர் ,அவருக்கு கல்யாணம் செய்து வைக்க, வேறு ஊருக்கு அழைத்துச் சென்றனர்.தாய்யும் மகளும் தான் இருந்திருக்கிறார்கள்.அந்த வீட்டுக்கு புதிய குடியிருப்பளாராக ஜானகி அக்காவும் ,சின்னுவும்,சின்னஞ் சிறுசுப் பட்டாளமாக தம்பி,தங்கையுமாக மானிப்பாய்யிலிருந்து வந்தார்கள்.சின்ன வயசிலேயே அவர்களுடைய தாய் மோட்சம் போய் விட்டார்.அப்பரும்,அண்ணரும் கொழும்பில் வேலை.ஜானகி அக்காவே தாய்யாக இருந்தவர். வந்த சில நாளிலே ஜானகி அக்கா, நாதனின் அம்மாவை தன் அம்மா போல கருதத் தொடங்கி விட்டார். சின்னுவின் அக்கா, மற்றும் இரண்டு , இரண்டு தம்பி, தங்கச்சிமார் என தாய் அற்ற குடும்பமாக நாதன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிற்கு வாடகைக்கு வந்த போது அவருக்கு இருபது ,இருபத்திரண்டு வயசு தான் இருக்கும் பாவம் அவர் என்ன செய்வார்? சின்னுவுக்கு அந்நேரம் நாதனின் வயசு, பதினைந்து. அந்த குடும்பத்திற்கு அம்மாவாக இருந்த அக்கா எந்த பெரிய பிரச்சனை என்றாலும் அம்மாவோடு வேலிக்கரையோரம் நின்று கதைப்பார்.அவருடைய அப்பாவும் ,அண்ணரும் கொழும்பிலே வேலை செய்தார்கள்.ஆறு மாசத்திற்கு ஒரு தடவை யாரோ ஒருவர் வந்து ஒரு கிழமை வீட்டிலே நின்று விட்டுச் செல்வார்.

அவர்களுடைய அம்மா மானிப்பாய்யிலே இறக்க முதலே மூத்த அக்காவிற்கு மணமாகி விட்டிருந்தது.புக்கம் போய் விட்டார்.அம்மாவிற்கு ஜானகியின் தவிப்பு தெரியும்.புரியும்.எனவே தைரியம் கூறியும் புத்தியும் கூறுவார்.சின்னுவின் அக்காவை ராசு மண முடிக்க விரும்பினார்.”ராசு நல்ல பையன் தானே. தவிர மானிப்பாய்யில் இருக்கிற போதே உங்களை அவருக்கு நல்லாய்த் தெரியும். தாராளமாய் செய்யும் “என்றார்.ராசுவின் குடும்பமும் முதலில் மானிப்பாய்யிலிருந்து அராலிக்கு பல ஆண்டுகளிற்கு முதல் வந்தவர்கள் தான். அராலியில் நாகேந்திரமடத்தடிக்கும் மானிப்பாய்க்குமிடையில் கண்ணுக்குத் தெரியாத நிறைய உறவுத் தொடர்புகள் இருக்கின்றன . இருந்தன .

அதே போல, மயிலியப்புலம், வட்டுக்கோட்டைக்குமிடையிலிருந்து வந்தவர்கள் போன்றவர்கள்.”தைரியமாக முடியும் “என்றார். சம்மதித்த பிறகு , கல்யாணம் கட்ட முதலே ராசு அங்கே “அத்தான்”அழைக்கப்பட்டார். அப்படித் தான் சின்னுவிற்கு கார்டியனார். அந்த தொடர்பு நாதனின் அம்மா சாகும் வரையில் தொடர்ந்தது, நாதனின் சகோதரங்களுடனும் தொடர்கின்றது.

அவனின் ,சின்னானின் வயசை ஒத்த பாஸ்கர், வீட்டுக் குடும்பமும் அச்சமயம் சின்னுவின் வீட்டு மறுபக்க ஒழுங்கையில் எதிர்த்தாற் போல் இருந்த வாடகை வீட்டிற்கு குடி வந்தனர். அதுவும் பெரிய குடும்பம் தான். ஆனால் தாய்,தகப்பனுள்ளவர்கள்.அக்குடும்பத்தில் நேர்த்தி வைக்கிறதும்,கோவில்களுக்கு நடந்து செல்வதும் பாஸ்கரின் அம்மாவிற்கு அல்வா சாப்பிடுவது போன்றது.அப்படி நேர்த்தி வைக்கிறது இவர்களிற்கு பெரும் ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது.முதல் தடவையாகப் பார்க்கிறார்கள்.ஆச்சரியமும் கொஞ்ச நஞ்சமில்லை.

ஒரு தடவை ,சின்னானும் அவனும் பாஸ்கரைக் கூட்பிடுற போது, பாஸ்கரனின் சின்னண்ணை மொட்டை அடித்து பிக்கு போல நின்றான்.”என்ன அண்ணை விசேசம்.உங்களுடைய மொட்டையும் வடிவாய்த் தான் இருக்கிறது”என்று சொல்ல பாஸ்கியின் அக்காமார் இருவரும் சிரித்தார்கள். அதுவும் அவன் அம்மா வைத்த ஒரு நேர்த்திக்கடன் . அப்படியான நேர்த்திகளால் அவர்களையும் கூட அக்காவாக சகோதரிகளாக பார்க்கிறது ,பிழங்கிறது விரைவிலே ஏற்பட்டு விட்டிருந்தது.இப்படி ஒட்டு மொத்தக் குடும்பமே குடும்பமாக பிழங்கினது கிராமத்திலேயே இது தான் முதல் அனுபவம். இல்லாவிட்டாலும் நண்பரின் குடும்ப உறவுகளும் ரீச்சர்ர குடும்பம் போல பலவித கோண ஒத்திசைவுகளால் நாளடைவில் சகோதரங்களாகப் பிழங்கிறது ஏற்பட்டு விடுகிறது தான்.பெண்பிள்ளைகளும் தான் சகோதரிகளாகி விடுகிறார்கள்.மாறுபட்ட பார்வை எழுகிற போது நட்பு தொடர்வதில்லை.சினிமாக்களைப் போல எதிராளிகளாகி விடுறதும் ஏற்பட்டு விடும்.

அந்நேரம், பெடியள் ஒன்றும் காதல் கனவுகள் காண்கிற வயதினரில்லை.அது பொதுவாக இருபது இருபத்திரண்டு வயதிற்கு மேலே தான்….தொடங்குவது.இனப்பிரச்சனை இல்லாது வேலை கிடைத்து என சுமூகமாகச் செல்கிற போது தான் ….எதிர் பார்க்க முடியும்.இங்கே வேலைக்குப் பஞ்சம்,படிப்பில் நிறைவு,தகுதி இல்லாத மண்டைக் குழப்பம்,வெப்பம், விச்ராந்தி, விரக்தி…எல்லாம் பெருக்கெடுத்து ஓடுற நிலையில் பால்யம் கரைந்து கொண்டிருந்தது.பிறகு, அறுந்த ஒ.லெவல், எ.லெவலாவது தேறி இருக்க வேண்டாமா?தொழிநுட்பக்கல்லூரியில் சேர்ந்து படிப்பது நம்பிக்கையற்றுப் படிப்பது போன்றது; காலத்தை ஓட்டுவது போன்றது என்ற விச்ராந்திகளை ஏற்படுத்தி இனப்பிரச்சனை என்ன ஒரு ஆட்டு ஆட்டுவிக்கப் போகுது என அவர்களிற்குத் தெரியவா போகிறது.

பெரிய ஆச்சரியம் என்ன என்றால் ,.நாதன்,பாலேஸ்,சின்னு எல்லோரும் இவர்களின் நேர்த்திக்கடனுக்காக இவர்களுடன் சேர்ந்து நடந்து கல்லுண்டாய் வைரவர்க் கோவிலுக்குச் சென்றார்கள்.காக்கைத்தீவு மீன் சந்தைக்கு அயலில் சாமிக்கராஜ் வளவுக்குப் பக்கத்தில் இரண்டொரு குடிமனைகளுடன் கோவில் இருக்கிறது.ஐயரின் குடிமனைகள் தானோ? அவை ?,இருக்கலாம்.“அந்த சாமிக்கராஜ்க்கு முன்னர் இயங்கிற போது, நாதனின் அண்ணர்க்கு மூன்று வயசிருக்கும், அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு சென்றிருக்கிறேன் “என்றான் அவனுக்கு பெரிய மூளை .இப்ப காலி, சாமிக்கராஜ்வளவு. பெயர் மட்டுமே இருக்கிறது .நம்ப முடியாமல் இருந்தது.

எப்படியோ அந்த கோவில் ஏறி ,சுத்திப் பார்க்கிற வணங்கிற வாய்ப்பு எல்லாம் கிடைத்தது பாஸ்கரின் அம்மாவாலே தான்.பிறகு ஒரு தடவை இவனும் பாலேஸும் இவர்களுடன் நல்லூருக்கும் சென்று உள் வீதியாய் தான் இருக்க வேண்டும், பாஸ்கரின் அண்ணர்மாருடன் சேர்ந்து உருண்டு பிரதிட்டை எடுத்திருக்கிறார்கள். கால்நடையாய்ச் சென்று தான். அந்த குடும்பம் மேலும் சில காலம் அராலியில் இருந்திருந்தால் நாதன், பாலேஸ் உட்பட …பல பேர்களையும் கோவில்,கோவில் என அலையிற பிறவிகளாக்கி வைத்திருப்பார்கள்.

பிறகு , அவன், எங்கே போய் ரஸ்ய நாவல்களை கையில் எடுத்திருப்பான்?, எடுத்திருக்கவே மாட்டான் . இயக்கம் எனத் திரியிறதும் ஏற்பட்டிருக்காது. இயக்கமொன்றின் தலைவர் கூறுறது சரி தான் போல இருக்கிறது.”நாங்கள் விடுதலையில் காதல் கொண்டவர்கள் இல்லை.எங்களை இந்த சிங்கள அரசுகள் தான் ,நீங்கள் தான் ஆயுதங்களை கையில் தூக்க வைத்திருக்கிறீர்கள்”.அதைப் போல தான் விடுதலைக்குழுவில் சேரல் கூட வெளியில் இருந்த இல்லாமைச் சூழல் தான்,பெற்றவர்,உற்றவர்,மற்றவர் எல்லாமே மதியாத நிலையிலே தான் ,கடவுளில் நம்பிக்கை வைப்பது போல இந்தச் சமூகச் சூழலை மாற்ற வல்ல அமைப்பினர் என்ற நம்பிக்கையில் சேரவும் வைக்கப் போகிறது. அந்தக் கதை எல்லாம் எதற்கு?

நா கேந்திரமடத்தடியைச் சேர்ந்தவர்கள் பெரிதாக கால்ப்பந்து விளையாடவில்லை.கிரிக்கெட்டே விளையாடினார்கள்.ஜெயா, விஜி அண்ணை,பாலன்,சின்னு, மயூரன்,,குரு ,ராசு,( மூவரும் சகோதரர்கள்),சின்ன விஜி ,ரகு,மோகன்,சுஜே,நாதன்,நந்தன்…இப்படி ஒரு குழு.ராசுவும் , ரகுவும் பந்து வீ ச்சாளர்கள்.மோகன்,பெரிய விஜி , ராசு மட்டை பிடித்தாடுகிறவர்கள்.மற்றவர்கள் சிலர் சிலநேரம் அடிப்பர்.ஒரே பந்திலும் ஆட்டம் இழந்து விடுவர்.இருந்தாலும் சிலசமயம் எதிர்க் குழுவுடன் கொளுவல்களுக்கும் போய் விடுவார்கள். ஒருமுறை ,….சுரேந்தை சின்னு ஒரு தள்ளு தள்ளி விட்டான்.அவன் முள்ளுக்கம்பிப் பக்கத்தில் போய் விழுந்தான். இப்படி உணர்ச்சி வசப்படுறதிலும் குறைவில்லை தான் .

சின்னு கொமேர்ஸ் பிரிவில் பரிட்சை எழுதினான்.போதியதாக தேறவில்லை.நாதனும் அப்படியேசின்னுவுக்கு ஜெ.பி க்குடும்பம்” திரும்ப மனம் தளராமல் படித்து எடு “என உற்சாகமூட்டியதுடன் அங்குள்ள அக்காமார், டியூசன் வகுப்பு கூட வைத்தார்கள்.மானிப்பாய்யைச் சேர்ந்த,அராலியிலிருந்த‌ அவர்களிற்கு சின்னு குடும்பத்தை நல்லாத் தெரியும்.உறவினர் கூட.தாய் செத்த பிறகு அந்த குடும்பத்திற்கு உதவி செய்ய விரும்பியவர்கள் பலர். 2ம் முறையோடு அவனுக்கு பரீட்சை அலுத்து விட்டது.மானிப்பாய்யிலிருந்த பிரீட்சார்த்தமுறையில் நடத்துற விவசாயப் பண்ணைக்குச் வேலைக்குச் சென்றான்.அப்ப அவனிடம் சைக்கிள் இல்லை.ஜே.பி வீட்டுச் சைக்கிளைக் கொடுத்துதவினார்கள். அங்கே,ஒருநாளைக்கு இருபது ரூபாவும் கொடுப்பார்கள்.கற்றும் கொடுக்கும்.வகுப்புகளும்.நடக்கும்.கிருஸ்தவ அமைப்பு ஒன்று நடத்திய ,தோலக்கட்டி,வரணிப் பண்ணைப் போன்று நடத்தப்பட்ட விவசாயப் பண்ணை அது.”நீயும் வாவன்”என்று நாதனையும் ஒரு தடவைக் கேட்டான்.

நாதன் அவ்வளவாகப் பிரியப்படவில்லை.தவிர அவனிடம் சைக்கிளும் இல்லை.சின்னுவுக்கு மானிப்பாய்யில் உறவினர் வேறு இருந்தார்கள் சிலவேளை அங்கேயே தங்கியும் விடுவான்.

மானிப்பாய்யிலே ,படிக்கிற போதே ஏற்கனவே அராலியைச் சேர்ந்த பாலன் அவனுக்கு உயிர் நண்பனாகி இருந்தான்.அராலிக்கு வந்த போது அராலியோடு ஐக்கியமாகி விட இப்படியான தொடர்புகளும் காரணம். மயூரன்,குரு,ராசு,… இவர்கள் படித்ததும் மானிப்பாய்யிலே தானாக இருக்க வேண்டும். அராலியில் ,சில குடும்பங்களிலே அரைவாசி கிருஸ்தவமும், சைவமுமாக கூட இருக்கின்றனர். உதயன் அண்ணா வீடும் அதில் ஒன்று. நாகேந்திரமடப்பகுதியிலே மட்டுமே கிருஸ்தவ சமூகத்தவர்கள் இருக்கிறார்கள்.சேர்ச் ஒன்றும் அங்கேயே எழுந்திருக்கிறது. அங்கே இருந்தவர்களில் கணிசமானவர்களில் தான் இங்கே வந்து குடியேறினார்களோ? …. என்று நாதனுக்கு சிலவேளை தோன்றும்.மானிப்பாய்யின் ஒரு சகோதரம் தான் நாகேந்திரமடம்.அப்படிப் பிணையல்கள் இருக்கின்றன. மானிப்பாய், கிருஸ்தவ சமூகம் பெருமளவில் காணப்படுற ஓரிடம். மற்றைய அராலிகளில் கிருஸ்தவ சமூகங்களைக் காணவில்லை. சமூகவாய்வுகள் பல சுவாரசியமான தகவல்களைத் தரலாம். இல்லை, இவன்ர சிந்தனைகள் தான் பிழையாக குறுக்கால போறதுவோ?

அராலி பெரிய ஒரு கிராமம். வடக்கை விட தெற்கு,கிழக்கு,மேற்கு என விரிகிறது.தற்போது செம்மணத்தி என அழைக்கப்படுற கிராமமும் அராலியில் உள்ளடக்கியது தான்.அது கிராமம் இல்லை, ஒரு பகுதி தான் .ஐ.பி.சி சனலில், கிராமம் என , நாதன் தற்போது பார்க்கிறான். இலங்கையின் சிங்கள அரசு தமிழரின் பகுதிகளை எல்லாமே உடைத்து,உடைத்து சிதறலாக்கி விடும் போல இருக்கிறது.ஒதுக்கப்படுறது என நினைக்கத் தொடங்கிற போது ஒவ்வொன்றுமே ,தனி அலகாக இயங்கவே விரும்பும்,முயற்சிக்கும்.அவற்றை ஏற்படுத்திக் கொடுக்க அரச நிர்வாக அமைப்புகள் இருக்கின்றன.மாகாணவரசுகள் இல்லை.மாகாணவரசு மேம்பட்ட சிந்தனைகள் உடையவை.தமிழீழம் என எழுகிறது அதற்கு மேலே சிந்தனைகள் கொண்ட அலகு.

இலங்கையில் இரண்டு பெரும் இனங்கள் வாழ்கின்றன .சிங்கள இனம் எல்லாத்தையும் குழப்பி அடித்து பொய்களை அதிகாரப்பீடத்தில் ஏற்றி முழு நாட்டையும் ஆள அடங்கா வெறி பிடித்ததாக இருக்கிறது.பாலாஸ்தினர்களின் நாட்டையும் கபளீகரம் செய்கிற இஸ்ரேலைப் போல,இஸ்ரேலும் இலங்கையின் ஒரு நட்பு நாடு.

ஆனால், அராலியில் , நாகேந்திரப்பகுதியில் கிரிக்கெட்குழு எழுகிற போது …..எல்லோரும் ஓரணி தான் . விளையாட்டும் ,நட்பும் , நெருக்கமான.. பிணைப்பையே வைத்திருந்தன. சின்னு,பாலன் இந்து மன்றம். திருவிழாவிற்கு பணம் சேர்த்துக் கொடுப்பார்கள்.நாதன், மன்றத்தோடு சேர்ந்து திரியவில்லை..கள்ளர் நடமாடுகிறார்கள் என்ற வதந்தியால், பி.எம் தலைமையில் ஊர்க்காவல் குழு ஏற்பட்ட போது அவனும் கூட அவர்களோட இரவில் திரிந்திருக்கிறான். இரவில் சில வீடுகளில் டீயும்,வடை, பலகாரங்களும் கொடுப்பார்கள்.குறைந்தபட்சம்’ டீ’ யாவது கிடைக்கும்.தலைவர், அந்நேரத்தில் தன் தபால் நிலைய அனுபவங்களை சுவாரசியமாக கூறுவார். கேட்க நல்லாய் இருக்கும். இவர் சுட்டியின் அப்பா.சுட்டியும் அவன் நண்பனாக இருந்தவன். சுட்டி , , துரைராஜா வைத்த வகுப்புகளிற்குப் போய்ப் படம் வரைஞர் கோர்ஸைப் படித்தான்.அவனைப் போல செட்டியார்மடப்பகுதியிலிருந்தும் குமாரும் போய்…அதே வகுப்புகளை எடுத்தான். முடிவில் லண்டன் பரிட்சைகளை எடுக்கக் கூடியதாகவும் வாய்ப்புகள் இருந்தன. இலங்கையரசு வைக்கிற பரிட்சைக்கு கொக்குவில் தொழிற்கல்லூரியில் எடுபட்டுப் படிக்க வேண்டும்.

ராசு, உதயன் அண்ணாமார் ஒரே பட்ஜ் நண்பர்கள் ஓட்டுமடத்திலுள்ள அலுமினியத் தொழிற்சாலைக்கு வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். அதே தொழிற்சாலையிலே நாதனுடன் படித்திருந்த நந்தனும் வேலைக்குச் சென்றான். பலவித அளவுகளில் பொங்கல்ப் பானைகள் செய்யப்பட்டன.அதே மாதிரியான தொழிற்சாலைகள் யாழ் நகரில் வேறு சில விடங்களிலும் கூட இருந்தன.ராசுவும்,உதயனும் சேல்ஸ்சிரப்பாகி லொரியில் பானைகளை சேகரித்து ஏற்றிக் கொண்டு கொழும்பு முதலான வெளி மாநிலங்களிற்குச் செல்றதாக வேலையில் உயர்ந்தார்கள். ஒரு லொரியில் சென்றது இப்ப இரண்டு லொரிகளாகியது. கிழக்கு மாநிலமும்,மலைநாடும் அதிகளவில் பானைகளை வாங்கின.ராசு சின்னானை உதவியாளனாக சேர்த்துக் கொள்ள இப்ப இரண்டு லொரிகளில் லோட் போய்க் கொண்டிருக்கின்றன. உதயனுடன் அராலிப்பெடியன் லோட்டோ உதவியாள் ஆனான் .

ஓட்டுமடத் தொழிற்சாலை உரிமையாளர்க்கிடையில் ஏதோ பிரச்சனை எழ ஒருவர் பிரிந்து சென்று யாழ் வண்ணார்ப்பண்ணையில் இருக்கிற கில்னர் ஒழுங்கையில் ஒரு தொழிற்சாலையை ஏற்படுத்தினார். அதில் தயாராகும் பானைகளை கருணா , இன்னொரு லொரியில் ஏற்றியும் வேறிடங்களில் சேகரித்தும் வெளி மாநிலங்களிற்கு அனுப்பினார்.

அவருக்கு சின்னானை ஓட்டுமடத்திலிருந்த போது …. நன்றாகப் பிடித்து விட்டிருந்தது. தனது சேல்ஸ் சிரப்பாக சின்னாளைக் கேட்ட போது ராசு மனப்பூர்வமாகச் செல்ல சம்மதித்தார்.அவர் தான் அவனுக்கு கார்டியனாக இருக்கிறவராச்சே.அலுமினியப் பானைகள் அதிகளவில் தயாராகின. கிராக்கியும் அதிகரித்துக் கொண்டே போனது.

அந்நேரம் ,நாதனும் பரிட்சையில் தவறி வீட்டிலே இருந்தான்.”ரீச்சர் ,அவனும் என்னோடு வந்து பார்க்கட்டுமே?”என்று சின்னான் அவன் அம்மாவிடம் கேட்டான்.அவரும் சம்மதித்தார்.அப்படி நாதன், லொரியில் சென்று மட்டகளப்பில்,கண்டியில்,நுவரேலியாவில் கூட கால் பதித்து ஒரு சினிமாப்படமும் கூடப் பார்த்து ஒரு கோல் அடித்திருக்கிறான் . கருணாவின் கழுத்தில் எப்பவும் ஒரு தங்கச்சங்கிலி தொங்கிக் கொண்டிருக்கும் .அதைப் பார்த்த. சின்னுவுக்கும் அந்தப் பழக்கம் பிறகு தொற்றிக் கொண்டது .

இதே போல அராலியின் இன்னொரு பகுதியான செட்டியார்மடத்தின் தொடர்பு எல்லாக் கிராமங்களிலும் இருந்தன.தீவார் செய்யாத யாவாரம் இல்லை.கால் வைக்காத இடமும் இல்லை. . பழைய காலத்தில் தீவாரைச் சேர்ந்தவர்களே அராலியிலும் செட்டியார்மடத்தை நிறுவியவர்கள். அவ்விடத்தில் ஒரு காலத்தில் வீதியில் மடம் போல இருந்த ஒரு சிறியக் கொட்டிலை அமைத்தவர்கள் என்கிறார்கள். கால்நடைப் பயணம்.அல்லது வண்டில் பயணம் என அந்தக் காலத்தில் வந்தவர்கள் ஊர்ப் புறங்களில் எல்லாம் இரவில் தங்கி இளைப்பார மடங்கள் நிறுவிக் கொண்டுச் சென்றிருக்கிறார்கள். நாகேந்திரமடக் கொட்டில்மடம் ,மற்றும் அராலிப்பாலமடம் கூட அவர்கள் நிறுவியதாகவே இருக்க வேண்டும். இவ்விரண்டையும் இன்றும் அவ்விட மக்கள் பராமரித்து வருவதைக் காணலாம்.

நாதன் அராலிக்குச் சென்ற போது செட்டியார்மடத் துண்டு வளவு , மடம் இருந்ததாகச் சொல்லப்பட்ட இடம் தோட்டக்காணியாகவேக் கிடந்தது.அதில் ஒரு கொட்டில் இருந்திருக்கலாம் எனத் தோன்றியது. ஆனால், சுவடு எதும் இருக்கவில்லை .பண்ணை வீதி திறந்த பிறகு ,பல மடங்கள் கவனியாது வயல்க்காணியாகி விட்டன.அந்த துண்டைக் கொடுத்தவர்களே மீள பாவிக்க எடுத்துக் கொண்டிருக்கலாம்.தேவைப் படவில்லை போல இருக்கிறது. இதை ,அங்கே இருக்கிற பெடியள்களிடம் கேட்கிற போது அவர்கள் ,வீட்டிலே போய்க் கேட்ட போது பெற்றோருக்கும் கூடத் தெரியவில்லை.”மடம் இருந்ததா? இப்ப , அது எங்கே?”என்று தாத்தாமாரைப் போய் விசாரித்தார்கள்..பொக்கை வாய்கள் சிலரே இருந்தார்கள் . சிரிக்கிறார்கள்.

“எழுதி வையுங்கடா வரலாறுகளை.ஒரு காலத்தில் உந்த சிங்களவர்களிற்கு எதிராக கதைக்க ‘அராலிவம்சம் ‘உதவியாய் இருக்குமடா”என்கிறார்கள்.இப்படி எழுதி வைக்காததாலே சிங்களமும் , அரசியலில் சிக்ஸர்,சிக்ஸராக அடித்து வலுவாகவே ஆட்டம் போடுகிறார்கள்.தமிழிலே இலக்கியம் படைப்பது என்பது கசப்பு கூடியது.கணிதத்தைப் போல ஒரு வகை அச்சத்தைக் காவிக் கிடக்கிறது.இன்னமும் கூட எழுதுறப் பழக்கம் தமிழருக்கு அவ்வளவாக எழ இல்லை.சிங்கள அராஜகக் கலவரங்கள் ,கறுத்த ஜூலை, பேரவலம் 09 யையும் பதியத் தவற விட்டுக் கொண்டே போகிறோம். எமது மூளையின் கப்பசிட்டியும் குறைவு என்பதால் ‘கோல் மால்’ இலங்கையில் தாராளமாக நடக்கிறது.எந்த நேரமும் குழம்புற பிறவிகளாகவே நாமக் கிடக்கிறோம்.எனவேத் தான் மகாவம்சம் சூரன் போராக உருவெடுத்திருக்கிறது.

தமிழருக்கு பதிவுகளே இல்லாதது, வரலாறே இல்லை என்று கொச்சைப் படுத்த இலகுவாகிறது. பல பொய்களை மெய்களாக்க முடிகிறது. சிங்களவருடைய தாயகம் ஒரிசா என்ற மாநிலம்.இங்கே ஒரு காலத்தில் அதிகளவில் அகதியாய் வந்து குடியேறிய மக்கள் சமூகம்.மகாவம்சம் என்கிற இவர்களுடைய பைபிள்,ஒரிசா,மகாராஸ்டிர மாநில மொழியாகிய பாளியிலேயே எழுதப்பட்டிருக்கிறது. தலைக்கீழாக சரித்திரங்களை மாற்றி பொய்களை மெய்யாக்கி பயணிக்க தமிழரின் பலவீனம் இடமளித்துக் கொண்டேயிருக்கிறது எதிர்க் கொள்ள எமக்கும் ஒரு எழுத்துக் குவியல்கள், புனைவுகள்,பக்திப் போக்குகள்,கற்பனைகள் உள்ளடக்கிய பைபிள்கள் வேண்டிக் கிடக்கின்றன.

இல்லாமல் கிடப்பது பாரிய விதியாய் , சிலுவையாய்த் தொடர்கிறது.

இவன் சின்னான் சென்ற மானிப்பாய் விவசாயப்பண்ணைப் போல,வரணியிலும் கோழிப்பண்ணை கிருஸ்தவ சபைகளினால் பல நடத்தப்படுகின்றன. வரணியிலிருந்து வருகிற முட்டைகளை விற்க யாழ் புதிய சந்தையில் ஒரு சிறிய விற்பனைக் கடையும் கூட இருக்கிறது.அதிலே நெடுக முட்டைக்கடை நந்தனைக் காணலாம். இவனும் மானிப்பாய்ப் பெடியன் தான்.எல்லா பண்ணைகளிற்கும் இணைப்பு களும் இருக்கின்றன. தோலகட்டிப் பண்ணையும் இதைப் போல பெயர் பெற்ற ஒன்று தான். அங்கிருந்து வார நெல்லிரசம் உலகம் முழுதிலும் உள்ள தமிழரில் பிரபசித்திப் பெற்றது.

கிருஸ்தவ அமைப்புகள் இதைப் போலவே கல்வி மையங்கள் ,தொழிற்கல்விக் கூடங்களெல்லாம் கூட நடத்துகின்றன. கிருஸ்துவத்திற்கு மாறிய வறிய மக்களுக்கு ஸ்கொலர்சிப்புகளும் வழங்குகின்றன.இல்லா விட்டாலும் கூட தலித் மக்களைச் சேர்ந்தவர்களிற்கும் மற்றவர்களிற்கும் வழங்கின்றன.பிறகு, அவர்கள் நன்றி விசுவாசத்தால் மதம் மாறுதலும் நடக்கின்றன.பேரவலப் போருக்குப் பின்னால் முஸ்லிம் மதத்திற்கு மாற்றுற ஒரு போக்கும் எழுந்திருக்கிறது. இதற்கு இலங்கை அரசும் ஆதரவு வழங்கின்றது. இந்துக்களிற்கும் இவர்களிற்குமிடையில் விலகலை அதிகப் படுத்துற அரசியல் நகர்வு அது.

13ம் திருத்தச்சட்டம் ஏற்பட்டதால் இலங்கையரசு வடக்கு,கிழக்கு மாநிலங்கள் தமிழருடய தாயகமாக பிரிந்து விடும் என்ற அச்சவுணர்வில் போர்க்குற்றங்களுடன் பெரும்மளவில் மனித இரத்தைக் குடித்த பிறகும் கூட அடங்கா விடாய்யுடன் உறுமிக் கொண்டே கிடக்கிறது.இலங்கையில் ஒன்பது மாநிலங்கள் உள்ளன. ஆனால் தமிழரின் இவ்விரண்டு மாநிலங்களிலே மட்டுமே படையினரில் நாற்பது வீதமானவர்களை நிறுத்தி வைத்திருக்கிறது. முகாம்கள், மக்களின் நிலங்களில் வியாபித்துக் கிடக்கின்றன .மக்கள் அகதிமுகாம்களிலும்,நலன்புரிச்சங்களிலும் இருந்து. சீரழிகிறார்கள் . போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு கணிசமானவர்கள் தண்டனைக்குள்ளாகிற போது தான் இலங்கையில் மிருக உணர்வுகள் ஓரளவிற்குள் அடங்கலாம்,கட்டுக்குள் வரலாம்.

உலகப்படத்தில், அமெரிக்காவின் வீட்டோச் சக்தியால் இஸ்ரேல் பலூன் கணக்கில் ஊதிப் பருத்துக் கொண்டு போவது போல,இலங்கையிலும் விடியல் ஏற்படும் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லை தான் .ஏற்படுத்திய 13ம் திருத்தச்சட்டம் அதுவரையில் கிடப்பில் போடப்பட்டே இருக்கப் போகிறது.ஆனால் என்றோ ஒரு நாள் அது உயிர்ப்படையும் என்ற அச்சம் மட்டுமே இலங்கை அரசுக்கு இருக்கிறது.

83 ஜூலைக்கு இற்கு முன், யாழ்ப்பாணத்திலிருந்து மூன்று லொரிகள், அலுமினியப் பானைகளைக் காவிக் கொண்டு இலங்கையிலுள்ள மற்றைய மாநிலங்களிற்கு எல்லாம் சென்றன.ஒன்றில் இராசு,ஒன்றில் உதயன்,ஒன்றில் சின்னான் ஒன்றில் இருந்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்..அராலியைச் சேர்ந்த இருவர் உதவியாளர்களாக இருந்தார்கள்.ஒருவர் வேறிடத்து ஆளாக இருந்தார். தெரியவில்லை.தொழிற்சாலையில் வேலையில் இருந்த ஒருத்தனாக இருக்கலாம்.

மூன்றுமே சீர்காழியின் கணிர் குரலில் பாட்டுக் கசட் ஒலிக்க ஓடிக்கொண்டிருக்கும்.ஓட்டுனருக்கு தூக்கம் வராது தடுக்க அந்தக் குரலால் மட்டுமே முடிந்தது. 77ம் ஆண்டில் தமிழுருக்கு தொடங்கிய ஏழரைச்சனி பிறகு தீரவே இல்லை. 83ம் ஆண்டுக்கலவரம் நிகழும் வரையில் ஒருமாதிரிச் சென்று கொண்டிருந்த வியாபாரம் அதற்குப் பிறகு, ஓரேயடியாய் படுத்து ஒய்ந்தே போனது.

பிறகான காலம் விடுதலை இயக்கங்களின் காலமாகி விட்டன.சின்னு வெளிநாடு போக அவனை சேல்சிரப்பாக வைத்திருந்த கருணாவும் உதவி புரிந்தார்.சின்னுவில் நிலவிய நேர்மை அவர்க்கு பிடித்திருந்தது.அவனை நம்பி கொடுக்கல் வாங்கலைச் செய்யலாம் என்ற நம்பிக்கையை அவன் காப்பாற்றினான். சின்னுவினுதவியால் ஜானகி அக்காவும் , ராசு அத்தானும் கடைசியாக புலம் பெயர்ந்து புதிய நாட்டிற்கு வந்தார்கள். எல்லார்ரக் குடும்பமும் சந்தோசகரமாக விரிந்தன. நிம்மதிப் பெருமூச்சுகள் விட்டனர் தற்காலிகமான புதிய நாட்டில், சின்னான் ஒரு உணவகத்திற்கு உரிமையாளனாக வளர்ச்சிக் கண்ட போது, குடிவகைகளை பாவிக்கிற பலவீனம் அவனுக்கு சிறுக ஏற்பட்டது.அதன் அபாயத்தைப் புரிந்து கொள்ள முதல் அவன் உடல் உள் அங்கம் ஒன்று பாதிப்புற்றுப் போனது.சாதிப்பவர்கள் சாதித்தவுடன் இறந்து விடுவது போல சின்னானும் சாவைத் தழுவி விட்டான் .

ராசுவும் ,சின்னானின் அண்ணரும் போருக்குப் பின்பு ஒரு தடவை ஊருக்குப் போய் திரும்பி வந்தார்கள்.ஒரு தங்கச்சிக் குடும்பம் அங்கேயே இருந்தது.

ஆனல் அன்று அலுமினியத் தொழிற்சாலையில் வேலை செய்த போது சுவாசித்த மாசுக்காற்றால் போலும் அலுமினிய நச்சு இரத்தத்திலும் ஏறி விட்டிருக்க வேண்டும். ராசுவிற்கும் இதயம் சம்பந்தமான நோய்கள் வரத் தொடங்கின.பேத்திக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த போது அந்த இதயமும் இயங்க பிரச்சனைப்பட்டது.தீடீரென மரணம் சம்பவித்து விட்டது. இப்படியாக இந்த பெரிய மரமும் இப்ப சாய்ந்து விட்டது.

அதே புலம் பெயர்ந்த நாட்டில் இருக்கிற நாதனும் அறுபது வயசைத் தொட்டு விட்டான். இன்னமும் ஐந்து வருசங்கள் தான் சதாரண வாழ்க்கையில் உழலப் போகிறான் என்ற சிந்தனை அவனுக்கும் ஏற்பட்டு விட்டிருக்கிறது. பிறகு,இவனுக்கும் கூட ஓட்டம் பக்கில் அடிக்கவே அடிக்கப் போகிறது.வானொலியில், சமய சந்தர்ப்பம் தெரியாமல் “இளமைக் காலம் ஒன்று…”என்ற சினிமாப்பாட்டு ஒலிக்கிறது.அவன் வெறுப்புடன் தன்னுள் சிரித்துக் கொண்டு நின்றான். கோவிட் முடியிறக் காலம் என்று …..அரசுகள் கூறுகின்றன.அவனும் ஒரு வேலையையும் . இனித் தேட வேண்டும்.மரத்திலிருந்து இலைகள் கொட்டுபட்டாலும் இருக்கிற இலைகள் இருக்கவும் வேண்டுமல்லவா !

இலங்கையில் என்றால், ஒரு வேலையில், கொளுவி விட்டால், பிறகு, இலை பழுத்து உதிரும் வரையில் மாசம் வரும் சம்பளப் பணத்தில் நிம்மதியாக காலத்தை ஓட்டலாம் அல்லவா .புதிய வேலை தேட வேண்டும் என்ற கஸ்டம் இருப்பதில்லை.இந்த நாடுகளிலோ….தலைகீழ் சீவியம். இலங்கை,, இனப்பிரச்சனை இல்லாத ஒரு நாடாகவே இருந்திருக்க கூடாதா?? எது நடக்காதோ ?, அவையே தான் சிந்தையிலும் வருகின்றன?கடவுள் , எந்த நாட்டில் ,மனிதனையும் நிம்மதியாய் வாழ விட்டிருக்கிறார் ? .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *