களவாடிய தருணங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 13, 2020
பார்வையிட்டோர்: 17,025 
 

இலையுதிர் கால இலைகள் மெள்ள தன் இருப்பிடம் விட்டு சென்று கொண்டிருந்தன எங்கு செல்ல போகிறோம் என்று தெரியாமல் சுழன்று கொண்டு இருந்தன அப்போது ஒரு பலத்த காற்று தென்னங்கீற்றை வருடி எடுத்து வந்த தென்றலின் இன்னிசை கூடிய ஓர் இதமான காற்று சட்டென்று அவன் மீது வீச என்ன காரணமென்று புரியவில்லை. அது ஒரு மாலை பொழுது மேற்கே கீழ் வானம் சிவந்து கிடந்தது வீசிய காற்று மேற்கே அவனை திருப்பியது. கீழ் வான சிவப்பிற்க்கு போட்டியாக வெட்கம் சிவக்க அவள் நடந்து வந்தாள். விற்றென்று அந்த சிவப்பில் ஓர் மின்னால் வெட்டியது அவள் கடைக்கண் பார்வையின் வீச்சு அது.

மையம் கொண்ட புயலை எதிர்பார்வையிட மின்னல் வந்த நேரமது. சிவந்த வெட்கம் கொஞ்சும் நானம் கொஞ்சம் பார்வையென அவள் நெருங்கி வரும்போதே அவன் உடம்பெல்லாம அனலேறியது ஆயிரம் அரிவைகள் கூடி நின்றபோதிலும் கண் பார்ப்பவன் இன்று இவள் கண்னை பார்க்கமுடியாமல் வெட்கம்தலைக்கேற அவள் கால் கொலுசின் ஓசை வெளிவரும் இடம் பார்க்க சென்றான். ஆண்கள் வெட்கப்படும் தருணத்தை முழுமையாக அன்று தான் உணர்ந்தான். எத்துனையோ முறை பார்த்து பழகிய முகம், இருந்தபோதும் இன்று அவன் பார்வையில் ஏதோ ஒரு மாற்றம் அது ஒரு ரசாயன மாற்றமாக இருக்கலாம் காதல் அனுக்களை உயிர்க்காற்று ரசாயன கலவையின் துணை கொண்டு எங்கோ கடத்தி சென்று கொண்டிருந்தன் காரதணமாக இருக்கலாம்.

முதல் பார்வையிலே காதல் வந்து தொற்றிக்கொள்ள அவன் அவ்வளவு பலவீனமாகவும் இல்லை அதேபோல முதல் சந்திப்பிலே காதலில் விழும் பலம் அவள் அகராதியிலே இல்லை ம்ஹூம் அது பெண்கள் அகராதியிலே இல்லை.

புயல் கரையைகடப்பதற்கு மாறாக அன்று மின்னல் புயலை கடத்தி சென்றது.

இப்படி சில காதல் சேஷ்டைகள் நடைபெறுவது வழக்கம் தான் ஆனால் இந்த சேஷ்டை உணர்வுகளுக்குள் ஊடுருவி காதலின் வெட்கசிவந்த குழம்பில் இருவரையும் தள்ளிவிட்டு இருவரும் தத்தளிப்பதை பார்த்து வேடிக்கை பார்க்கும் காதலின் கோர இன்முகம் எவ்வளவு இனிமையானது என்று உணர்திட மனிதனாய் ஜனனம் எடுத்த அத்துனை பிறவிகளையும் காதல் கடலில் முங்கி தூய்மைபடுத்த இறைவன் எத்தனித்த அவதாரமே என்று வகையறுக்க வந்தது தான் காதல் என்று இங்கு குறிப்பிடும் போது அதை உணர்ந்தவர்கள் பொன்முறுவலும் உணராதவர்கள் நமட்டு சிரிப்பையும் வெளிப்படுத்துவது இங்கே தவிர்க்க முடியாதது. அப்படி நமட்டு சிரிப்போடு மேற்கொண்டு பின் தொடர்ந்து காதலில் விழுந்து விடாதீர்கள் என்று எச்சரிக்க விரும்பவில்லை ஏனென்றால் அதுதான் காதலின் சாசனம். அது காயங்கள் தரும் காயத்திற்கு மருந்துகள் தரும் வலியின் உணர்வை தரும் உணர்வில் வடுவை தரும் மொத்தத்தில் அது இறைவனை காண ஏங்கும் முடிவில்லா பேரின்பத்தை தரும்.

அப்படி பேரின்ப வரத்தை பெற தான் தயாரானான் அவன். பார்வையின் விழித்திரையில் சிக்கியவளையெல்லாம் மனையாள் என்று நினைப்பவன் ஆண்வர்கத்தின் அகவரிசையிலே இல்லாதவன். அப்படி எண்ணிலடங்கா பெண்களை பார்த்த கண்கள் இவள் கண்களில் சிக்குண்டு தவிப்பதை உணர்ந்தான் அவன் தாயை உணர்ந்தான் அவன் துணையை உணர்ந்தான் தனக்கானவள் இவள் என்று உணர்ந்தான். அவளை ரசிக்க சித்தமானான் உச்சி எடுத்த வகிட்டை தாமரை மலர் முகத்தை அதில் பனி துளி போல் சிதறிகிடந்த மூக்குத்தியை அவள் காதுகளில் சிம்ம சொப்பனமிட்ட கம்மலை கைவிரல் மோதிரத்தை கால் கொலுசை கொலுசின் ஓசையை என அவன் ஒரு தலை காதலை இராவணனின் பத்து தலை கொண்டு சேமித்தான்.

‘அவளுக்கும் தான் நம்மீது அபிராயம் இருக்குமோ ம்ஹூம் இருக்காது நம்மலலாம் யாரு காதலிப்பா’ என்று அவன் மனம் கிடந்து தவித்தது. ஆனால் அவள் கண்களில் காதல் தெரிகிறதே! ஒரு பெண்ணின் கண்கள் என்ன சொல்கிறது என்று தெரியாதளவிற்கா இந்த ஆண் வகையறாக்கள் முட்டாளிகிடக்கின்றன. இல்லை இது காதல் இல்லை ம்ம் இது காதல் தான் என்று ஏங்கி வெம்பி துடிக்கும் அவன் இதயத்தை அவள் கேட்டாலோ என்னவோ.

காதல் அசைவுகளை மெதுவாக கடத்தினாள்.

பெண்கள் பார்த்ததும் காதல் கொள்ள மாட்டார்கள் அழகை பார்த்து கொள்ள மாட்டார்கள் பின்பு எதை பார்த்து கொள்வார்கள் ஆகச்சிறந்த நடத்தயை பார்த்து கொள்வார்கள். அப்படி என்ன அந்த நடத்தை அவளை காதல் வயப்பட செய்தது என்று அவளுக்கு தான் வெளிச்சம் ம்ஹூம் அவள் மனதுக்கு தான் வெளிச்சம்.

அவளுக்கு கொஞ்சம் திமிர் அதிகம்தான் அந்த திமிர் தான் அவள் அழகும் கூட. அதை அவன் வெகுவாக ரசித்தான் அந்த திமிர் அவனை இன்னும் காதல் கொள்ள செய்தது. இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்த போதும் பெரிதாக பேசியதில்லை ஆனால் அவர்கள் கண்கள் பேசியது தினமும் பேசியது. அந்த கண்களின் சம்பாஷனையில் ஊடல் இருந்தது காதல் இருந்தது மோதலும் இருந்தது. அப்படிபட்ட சம்பாஷனையின் விளைவை தான் அவன் கவிதையாக வடித்தான் காதல் அவனை கூட கவிஞனாக்கியது காலத்தின் கொடுமை.

அவள் காதல் சீற்றங்கள் அதிகமானது அவன் மனம் கனமானது காதல் அவன் மனதை நிறைத்தது நிரம்பி வழிய தொடங்கியதை வழிந்தவற்றை எங்ஙனம் நிரப்ப அவளுக்கு உரித்தானது அவளுக்கே சேரட்டும் என ஒரு வழியாக முடிவுக்கு வந்தான்.

காதலை சொல்ல ஒரு நொடி போதும் ஆனால் காதல் களவாடிய தருணங்களை சொல்ல ஒரு ஆயுள் வேண்டும்

காதலை சொல்லி காத்திருப்பது சுகம் தான் இருந்தும் விலகி சென்றால் தான் அது தீர்ந்திடுமா

பாரக்காமல் பேசாமல் இருந்தால் தான் அவை மறந்திடுமா

இப்படி காதல் களவாடிய தருணங்களை சேமித்து ஒரு காதல் வரலாற்றையே எழுதிடலாம். அப்படி தான் தன் காதல் வரலாற்றின் நடுப்பக்கங்களை எழுத தொடங்கினான். அந்த பக்கங்களை உரையாடலாக தான் உணர முடியும் வாக்கியங்களாக வர்ணிக்க முடியாது.

காதல் அவன் வாழ்க்கையில் பலவற்றை களவாடியது அவன் நெடுநாள் தூக்கத்தை பசியை சிரிப்பை வேதனையை பாரத்தை அந்த இனிமைகளை அவன் வாயாற சொல்லும் நேரம் வந்தது அவளை அவன் பார்த்த அதே நல்வேளையில்.

“உன்கிட்ட ஒன்னு சொல்லனும்”

“ம்ம் சொல்லு”

“உன் கண்ணு என்ன கொல்லுது”

“என்ன சொல்ற”

“ஆமா உன் கண்ண பார்த்து என்னால பேசமுடியல”

“இதுல எல்லாமே இருக்கு இதுல என் கவிதைகள் நான் சொல்ல நினைக்கிறது எல்லாமே இருக்கு என் கவிதையின் இலக்கனமே நீ தான் நீயே படிச்சு தெரிஞ்சுக்கோ எல்லாம் உனக்கு சேர வேண்டியது தான்

என் மனசுல இருந்ததல்லாம் இதுல சொல்லிட்டேன்

ஆனா உன் மனசுல இருக்குறத தான் நீ சொல்ல மாட்டேங்குற….

ஆம்பளய்ங்க காதல் தேன் மாறி அதுல எந்த கலப்படமும் இருக்காது

அந்த காதல் பார்த்தவுடன வர்றது

அது பழக்கத்துனாலயோ

அழக பார்த்தோ குணத்த பார்த்தோ வர்றதில்ல

அது அப்படியே பார்த்தவுடன வரும் பார்த்தவுடனே இவ நமக்கு பொண்டாட்டியா வந்தா நல்லா இருக்குமுனு தோனும்

அது அப்படி எல்லாருகிட்டாயும் வந்துறாது உன்கிட்ட வந்துச்சு….

நீ கோச்சுகலனா ஒன்னு சொல்றேன் எனக்கும் உனக்கும் இப்ப இரண்டு பிள்ளைங்க தெரியுமா…

எனக்கு புரியுது

சாதி மதம் ம்ம் தெரியும்….

நான் நல்லவனா உன்ன வச்சு காப்பாத்துவேனானு உனக்கு சந்தேகம் வரலாம் தப்பே இல்ல

பத்து மாசம் சுமந்து பெத்த அம்மாவ

25 வருஷமா பாசத்த ஊட்டி வளர்த்த அப்பாவ

கூடவே ஒட்டி உறவாடி வளர்த்த தங்கச்சிய நினைக்கனும்… அவங்க வேதனைப்படகூடாது சந்தோஷமா இருக்கனும்… எல்லாம் ரைட்டு நீ நினைக்கிறதுல எந்த தப்பும்மில்ல…

ஆனா அதுகாக காதல மனசுகுள்ளயே வச்சு என்னயும் கொன்னும் உன்னை கொன்னுட்டு இருக்கியே அந்த கொடுமைய நான் எங்கனு போய் சொல்ல…

பொம்பளய்ங்க காதல் கடல் மாறி அதுல என்ன இருக்குனு தெரியாது எவ்ளோ ஆளமுனு புரியாது.

காதலுங்குறது புனிதமானது மா !

அது சாதி மதம் இனம் அவ்ளோ ஏன் சில சமயம் அன்புக்கும் பாசத்துக்கும் கூட அப்பாற்பட்டது…

அத பூட்டி வச்சு மறச்சு வாழ்க்க முழுக்க வேதனைப்பட்டு திரியுறதுக்கு தைரியமா சொல்லி எது வந்தாலும் பாத்துகலாமுனு சொல்லறது தான் நம்ம பண்ற காதலுக்கே மரியாதை.

இப்ப கூட உம்ம்ம்ம்ம்னு சொல்லு எங்க வீட்ல இருந்து கூட்டி உன் வீட்ட தேடி உன்ன பொன்னு கேக்க

அதுக்கும் முடியாதுனா ஒன்னும் சொல்றதுகில்ல வாழவே பயபடுறவகிட்ட வேற என்னத்த சொல்ல…

காதல் வாழும் !!

காதலர்கள் ஹ்ம்.”

இன்னும் தான் அவள் வார்த்தைகள் மௌனம் காத்தன இன்னும் அது எத்துனை காலம் தான் நீளுமோ ஆனால் கண்ணீர் மட்டும் தாரை தாரையாக சிந்தியது அந்த கண்ணீர் தான் பதில் கூறுமோ அந்த கண்ணீரின் பாஷை தான் யார் அறிவாரோ. மெல்லிய நிசப்தம் எதோ ஒன்று சொல்ல அவள் நா துடித்தது.

அவள் சொல்ல வாயெடுத்தாள் வானத்து மின்னல் வெட்டியது புயல் மையம் கொள்ள தயாரானது கீழ்வானம் சிவக்க கார்மேகங்கள் மழை துளிகளை அள்ளி வாரியனைத்து வந்து கொட்ட காத்திருந்தன புயலும் மின்னலும் மையல் கொள்ளும் நேரம் தான் வந்தன வான் மழை பொங்கி நிலத்தில் விழுந்திட்ட இலைகளை நனைத்தன புயலும் மின்னலும் மையல் கொள்ளும் அழகை கண்டு சிலிர்த்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *