ஸ்திர புத்தி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 8,776 
 

யாருடைய மனம் துக்கத்தில் துவள்வதில்லையோ, சுகத்தை நாடுவதில்லையோ, பற்று பயம் கோபம் ஆகியவற்றை விட்டவன் யாரோ ,அவன் புத்தி விழிப்புற்ற முனிவன் என்று கூறப்படுகின்றான்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர் பாண்டவர்களில் மூத்தவர் , தருமபுத்ரர் எனும் யுதிஷ்டிரன். ஸ்திர புத்தி உடையவர்.

ஸ்திர புத்தி பற்றி கீதை சொல்கிறது ( 2.56)
து:கேஷ்வநுத்விக்நமநா: ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:।
வீதராகபயக்ரோத: ஸ்திததீர்முநிருச்யதே॥ 2.56 ॥

“துன்பங்களிலே மனம் கெடாதவனாய்
இன்பங்களிலே ஆவல் அற்றவனாய்
அச்சமும் சினமும் தவிர்த்தனவாய்
அம்முனி மதியிலே உறுதி வாய்ந்தவென்ப”
(நன்றி கீதை பேருரை – நா கிரிதாரி பிரசாத்)

கீதையில் சொன்னது போன்று மதியிலே உறுதி கொண்டு நடப்பவர் யுதிஷ்டிரன். அவரது ஸ்திர புத்தி பற்றி ஒரு சிறு கதை.

பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். காட்டில் வாழ்ந்த அவர்கள் எண்ணற்ற துன்பங்களை எதிர்கொண்டனர். ஒருநாள் மான் வேட்டை ஆட சென்றபோது அந்த மாயமான் அவர்களுக்கு போக்கு காட்டிவிட்டு மறைந்தது. ஆடி ஓடி அலைந்து களைத்து அவர்கள் ஆயாசம் மேலிட்டு ஒரு இடத்தில் கlளைப்பாரறினார்கள். அவர்கள் அனைவருக்குமே தாகமும் பசியும் வாட்டியது.

தருமபுத்ரர் குடிக்க நீர் வேண்டியதால், சகா தேவன் நீர் தேடி சென்றவன் காட்டின் ஒரு அடர்ந்த பகுதியில் ஒரு சிறு குளத்தைப் பார்த்தான். அதில் இறங்கி தன இருகையாலும் நீர் மொண்டு குடிக்க முயன்றபோது அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு நாரை “இந்த நீரைக்குடிக்காதே. இது நச்சுப்பொய்கை. என் கேள்விகளில் சிலவற்றுக்குப்பதில் சொன்னால் உனக்கு நல்ல குடிநீர் தருகிறேன் என்றது.

“குடிக்க ஒரு மனிதன் தவிக்கின்றபோது வேலை கெட்டுப்போய் உனக்கு கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் நான் இல்லை” என்று அதைப் புறக்கணித்த சஹாதேவன் நீர் குடித்தான். மயங்கி விழுந்தான். மாண்டான்.

அடுத்ததாக அவனைத்தேடி வந்த நகுலனும் அவ்வாறே முடிந்தான். அர்ஜுனன் பீமன் இருவரும் கூட நாரையை அலட்சியம் செய்து நீர் குடித்து மாண்டனர்.

“எங்கே யாருமே திரும்ப வரவில்லையே” என கவலையோடு யுதிஷ்டிரர் அவர்களைத்தேடி நச்சுப்பொய்கை அடைந்து அங்கு அவர்களின் சடலங்களை பார்த்தார். நாரை அவரையும் எச்சரித்தது.

“சரி சீக்கிரம் உன் கேள்விகளைக் கேள்” என்றார் யுதிஷ்டிரர். நாரை உருவில் இதுவரை இருந்த அந்த பொய்கையின் காவலன் ஒரு யக்ஷன். அவன் தர்மரைக் 124 கேள்விகள் கேட்கிறான். அவரும் பதில் சொல்கிறார். அவைகளிலே சில உங்களுக்காக:

(நன்றி: மஹா பாரதம் & விளக்கம்:அருட்செல்வப்பேரரசன்)

1) யக்ஷன் : எது சூரியனை உதிக்கச் செய்கிறது?
யுதிஷ்டிரர்.: பிரம்மமே சூரியனை உதிக்கச் செய்கிறது

5) எதனால் ஒருவன் கற்றவனாகிறான்?
சுருதிகளாலேயே (அதன் கல்வியாலேயே) ஒருவன் கற்றவனாகிறான்;

6) எதனால் ஒருவன் பெரிய மகத்தான ஒன்றை அடைகிறான்?
தவத்துறவுகளாலேயே ஒருவன் பெரிய மகத்துவத்தை அடைகிறான்;

12) பக்தியற்றவர்களுக்கு இருப்பது போல அவர்களுக்கு இருக்கும் பக்தியற்ற நிலை {மறம்} எது?”
அவதூறே {தெய்வத்தை அவதூறு செய்வதே} அவர்களது பக்தியற்ற {மறம்} நிலையாகிறது

24) பெற்றுக் கொள்பவர்களுக்கு முதன்மையான மதிப்புடையது எது?
பெறுபவர்களுக்கு முதன்மையான மதிப்புடையது வாரிசு {சந்ததி} .

25) புலன்நுகர் பொருட்கள் அத்தனையிலும் இன்புற்றிருந்து, உலகத்தால் மதிக்கப்பட்டும், அனைத்து உயிர்களால் விரும்பப்பட்டும் உள்ள புத்திக்கூர்மையுள்ள எந்த மனிதன், சுவாசமுள்ளவனாக இருப்பினும், உயிரற்றவனாக இருக்கிறான்?
தேவர்கள், விருந்தினர், பணியாட்கள், பித்ரிக்கள் மற்றும் சுயம் ஆகிய ஐந்திற்கும் எதையும் காணிக்கையாக அளிக்கவில்லையென்றால், ஒரு மனிதன் சுவாசமுள்ளவனாக இருப்பினும் உயிருள்ளவன் ஆகமாட்டான்.

26) பூமியை விடக் கனமானது எது?
பூமியை விடக் கனமானவள் தாய்

27) சொர்க்கத்தைவிட {ஆகாயத்தைவிட} உயர்ந்தது எது?
சொர்க்கத்தைவிட {ஆகாயத்தைவிட} உயர்ந்தவர் தந்தை

28) காற்றைவிட வேகமானது எது?
காற்றைவிட வேகமானது மனம்

29) புற்களைவிட எண்ணிக்கையில் அதிகமானது எது?
புற்களை விட எண்ணிக்கையில் அதிகமானது எண்ணங்கள்

34) நாடு கடத்தப்பட்டவனுக்கு {வனவாசம் மேற்கொள்பவனுக்கு} யார் நண்பன்?
நாடுகடத்தப்பட்டவனுக்கு{வனவாசம் மேற்கொள்பவனுக்கு} வழிப்போக்கனே நண்பன்.

35) இல்லறத்தானுக்கு யார் நண்பன்?
இல்லறத்தானுக்கு நண்பன் அவனது மனைவியே

36) நோய்வாய்ப்பட்டவனுக்கு யார் நண்பன்?
நோய்வாய்ப்பட்டவனுக்கு நண்பன் மருத்துவன்

37) சாகப்போகிறவனுக்கு யார் நண்பன்?
சாகப்போகிறவனுக்கு நண்பன் தானம்

41) இந்த மொத்த அண்டத்திலும் இருப்பது என்ன?
இந்த அண்டம் முழுவதும் காற்றே {வாயுவே} இருக்கிறது

42) எவன் தனியாக உலவுகிறான்?
சூரியன் தனியாக உலவுகிறான்

43) பிறந்தவன் எவன் மீண்டும் பிறக்கிறான்?
சந்திரன் {பிறந்த பிறகும் மீண்டும் மீண்டும்} புதிதாகப் பிறக்கிறான்

46) அறத்தின் உயர்ந்த புகலிடம் எது?
ஈகையே {தானமளிப்பது; Liberality=தாராளவாதம்} அறத்தின் உயர்ந்த புகலிடம்.

47) புகழுக்கு புகலிடம் எது?
புகழுக்குக் கொடை புகலிடம்

48) சொர்க்கத்திற்கு புகலிடம் எது?
சொர்க்கத்திற்கு உண்மை {சத்தியம்} புகலிடம்

49) மகிழ்ச்சிக்கு புகலிடம் எது?
மகிழ்ச்சிக்கு நன்னடத்தை புகலிடம்

51) தேவர்களால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட நண்பன் {துணை} யார்?
மனைவியே தேவர்களால் அவனுக்கு அளிப்பட்ட நண்பர் {துணை}

53) அவனுக்குத் தலையாயப் புகலிடம் {கதி} எது?
தானமே அவனது தலையாயப் புகலிடம் {கதி}

54) பாராட்டத்தக்க காரியங்கள் அனைத்திலும் எது சிறந்தது?
பாரட்டத்தக்க காரியங்கள் அனைத்திலும் செயல்திறனே {skill} சிறந்தது.

55) ஒருவனது உடைமைகள் அனைத்திலும் மிகவும் மதிப்புமிக்கது எது?
உடைமைகள் அனைத்திலும் சிறந்தது ஞானம்

56) லாபங்கள் அனைத்திலும் எது சிறந்தது?
லாபங்கள் அனைத்திலும் சிறந்தது உடல்நலமே {ஆரோக்கியம்}

57) அனைத்து வகை மகிழ்ச்சிகளிலும் எது சிறந்தது?
அனைத்துவகை மகிழ்ச்சிகளிலும் சிறந்தது மனநிறைவே

58) உலகத்தில் உயர்ந்த கடமை {அறம்} எது?
ஊறு இழைக்காமையே {அஹிம்சையே} {தீங்கு செய்யாமையே} கடமைகளில் உயர்ந்தது {அறம்}

60) அடக்கப்பட்டால் வருத்தத்திற்கு வழிவகுக்காதது எது?
மனமானது அடக்கப்பட்டால் வருத்தத்திற்கு வழிவகுக்காது

61) கூட்டணியை {நட்பை} உடைக்காதவர்கள் (முறிக்காதவர்கள்) யார்?
நல்லோருடன் கூட்டணி {நட்பு} எப்போதும் உடையாததாகும் (முறியாததாகும்)

62) எது துறக்கப்படுவதால், ஒருவன் மற்றவர்களால் ஏற்கப்படுகிறான்?
கர்வத்தைத் துறப்பதால், அது ஒருவனை {மற்றவருக்கு} ஏற்புடையவனாக மாற்றுகிறது

63) எது துறக்கப்பட்டால், வருத்தத்துக்கு வழிவகுக்காது?
கோபத்தைத் துறந்தால், அது வருத்தத்துக்கு வழிவகுக்காது

64) எது துறக்கப்பட்டால், ஒருவன் வளமானவன் ஆகிறான்?
ஆசையைத் துறந்தால், அது ஒருவனை வளமானவனாக்குகிறது

65) எது துறக்கப்பட்டால் ஒருவன் மகிழ்ச்சியடையலாம்?
பேராசையைத் துறந்தால், அது ஒருவனை மகிழ்ச்சியடையச் செய்கிறது

70) உலகத்தை மூடியிருப்பது எது?
உலகம் இருளால் மூடியிருக்கிறது

71) தன்னைத்தானே ஒரு பொருள் கண்டறியமுடியாததற்குக் காரணமாக இருப்பது எது?
ஒரு பொருள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இருள் அனுமதிக்காது

73) சொர்க்கம் செல்வதில் ஒருவனைத் தோல்வியுறச் செய்வது எது?
உலகத்துடனான இத்தொடர்பினாலேயே {அதாவது பற்று [அ] ஆசையால்} ஒருவன் சொர்க்கம் செல்வதில் தோல்வியுறுகிறான்

74) ஒருவன் எதனால் இறந்தவனாகக் கருதப்படலாம்?
செல்வமற்ற மனிதன் இறந்தவனாகக் கருதப்படலாம்

78) வழி என்பது எது?
எது நன்மையோ அதுவே வழி

81) நஞ்சு எது?
வேண்டுகோளே {யாசிப்பது; பிச்சை கேட்பது} விஷம்

83) தவத்தின் குறி {குறியீடு} எனச் சொல்லப்படுவது எது?
தன்னறத்தில் {தனது தர்மத்தில்} நிலைத்து நிற்பது தவம் {தவத்தின் குறியீடு};

84) உண்மையான அடக்கம் {தமம்} எது?
மனதின் அடக்கமே, அடக்கங்கள் அனைத்திலும் உண்மையானது

85) பொறுமை எனப்படுவது எது?
பகையைச் சகிப்பதே பொறுமை

86) வெட்கம் என்பது எது?
தகாத செயல்கள் அனைத்திலும் இருந்து விலகுவதே வெட்கம்

87) ஞானம் என்று சொல்லப்படுவது எது?
தெய்வீகமே {உண்மைப் பொருளை அறிவதே} உண்மையான ஞானமாகும்.

88) அமைதி எது?
இதய {மன} அமைதியே உண்மையான அமைதி

89) கருணை எது?
அனைவருக்கும் மகிழ்ச்சியை விரும்புவதே கருணை

90) எளிமை என்று அழைக்கப்படுவது எது?
இதய அமைதி {மன அமைதியே} எளிமை
91) வெல்லப்படமுடியாத எதிரி எது?

கோபமே வெல்லப்பட முடியாத எதிரி
92) மனிதனின் தீராத நோய் எது?
பேராசையே தீர்க்கப்படமுடியாத நோய்

93) எவ்வகை மனிதன் நேர்மையானவன்?
அனைத்துயிர்களின் மகிழ்ச்சியை விரும்புபவனே நேர்மையானவன்

94) எவ்வகை மனிதன் நேர்மையற்றவன்?
கருணயற்றவன் நேர்மையற்றவனாவான்

95) அறியாமை என்பது எது?
தன் கடமைகளை அறியாததே உண்மையான அறியாமை

96) கர்வம் என்பது எது?
ஒருவன் தன்னைச் செயல்படுபவனாகவோ {actor = நடிகனாகவோ} வாழ்வில் பாதிக்கப்பட்டவனாகவோ உணர்வதே கர்வம் ஆகும்

97) சோம்பலெனப் புரிந்து கொள்ளப்படுவது எது?
ஒருவன் தனது கடமைகளைச் செய்யாதிருப்பதே சோம்பலாகும்

98) துன்பமெனப் பேசப்படுவது எது?
ஒருவனது அறியாமையே துக்கமாகும்

99) முனிவர்களால் நிலைமாறாஉறுதி எனச் சொல்லப்பட்டுள்ளது எது?
ஒருவன் தன்னறத்தில் {தனது தர்மத்தில்} நிலைத்து நிற்பதே நிலைமைமாறா உறுதியாகும்.

100) பொறுமை எது?
புலன்களை அடக்குவதே உண்மையான பொறுமையாகும்

101) உண்மையான சுத்தம் என்பது எது?
மனம் மாசடையாமல் கழுவுவதே உண்மையான நீராடலாகும் {சுத்தமாகும்}.

102) தானம் என்பது எது?
அனைத்து உயிர்களையும் பாதுகாப்பதே தானமாகும்

103) எந்த மனிதன் கற்றவனாகக் {பண்டிதனாகக்} கருதப்பட வேண்டும்?
தன் கடமைகளை அறிந்தவன் கற்றவன் {பண்டிதன்} என்று அழைக்கப்பட வேண்டும்.

106) எது ஆசை என்று அழைக்கப்படுகிறது? மற்றும் ஆசையின் ஊற்றுக்கண் எது?
உடைமைகளுக்குக் காரணமே ஆசை (ஆசைகளின் ஊற்றுக்கண் பொருள் உடைமைகள்)

107) பொறாமை எது?
இதய {மன} துக்கமே பொறாமை

109) பேடிசம் {டம்பம்}{#} எது?
அறநிலை நிறுவுதலே பேடிசம் {டம்பம்} ஆகும் {தான் அறம் கடைப்பிடிப்பதாகப் பிறருக்குத் தெரிவிப்பது டம்பமாகும் [போலித்தனமாகும்]}.

110) தேவர்களின் அருள் எது?
தானங்களின் கனியே {பலனே} தேவர்களின் அருளாகும்

111) பொல்லாங்கு {தீய குணம்} எது?
பிறரைக் குறித்துத் தவறாகப் பேசுவதே பொல்லாங்கு {தீயகுணம்} ஆகும்

112) அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன ஒன்றுக்கொன்று எதிரானவை. இப்படி ஒன்றுக்கொன்று பகையானவை எப்படி இணைந்து இருக்க முடியும்?
மனைவியும் அறமும் ஒருவருக்கொருவர் ஏற்புடன் செயல்படும்போது, நீ சொன்ன மூன்றும் {அனைத்தும்} இணைந்து இருக்க முடியும்

113) அழிவில்லாத {நித்தியமான} நரகத்தை அடையும் மனிதன் எவன்?
“ஏழைக்குத் தானமளிப்பதாக உறுதியளித்து அவனை அழைத்து, பிறகு, கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்று சொல்பவன் அழிவில்லாத {நித்தியமான} நரகத்தை அடைகிறான்.

115) ஏற்புடைய {இனிமையான} வார்த்தைகளைப் பேசும் ஒருவன் அடையும் லாபம் என்ன?
ஏற்புடைய வார்த்தைகளைப் {இனிமையாகப்} பேசும் ஒருவன் அனைவருக்கும் ஏற்புடையவனாகிறான் {அன்பனாகிறான்}

116) எப்போதும் தீர்மானத்துடன் செயல்படும் ஒருவன் அடையும் லாபம் என்ன?
தீர்மானத்துடன் செயல்படும் ஒருவன் தான் முயற்சிப்பதை {தேடுவதை} {வெற்றியை} அடைகிறான்

118) அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவனுக்கு {அவன் அடையும் லாபம்} என்ன?
அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவன் (அடுத்த உலகில்) இன்பநிலையை அடைகிறான்

119) உண்மையில் மகிழ்ச்சியானவன் எவன்?
கடனுக்கு ஆட்படாமல், வீட்டில் இருந்து வெளியே போக வேண்டிய தேவை இல்லாமல், {வாழ்வுக்காக வெளியூருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தமில்லாதவன்} ஒரு நாளின் {ஒரு பகலை எட்டுப் பகுதிகளைப் பிரித்து அதில் வரும்} ஐந்தாவது அல்லது ஆறாவது பகுதியில், சொற்ப காய்கறிகளைத் தன் இல்லத்தில் {தன் சொந்த வீட்டில்} சமைப்பவன் {சமைத்து உண்பவன்} உண்மையில் மகிழ்ச்சியுடைவனாவான்

120) அதிசயமானது எது?
நாளுக்கு நாள் எண்ணிலடங்கா உயிரினங்கள் யமனின் வசிப்பிடம் செல்கின்றன. இருப்பினும், மீந்திருப்பவை {உயிரோடு இருக்கும் உயிரினங்கள்} தங்களை இறவாத்தன்மை கொண்டவை என்று நினைத்துக் கொள்கின்றன. இதை விட வேறு எது அதிசயமானதாக இருக்க முடியும்?

121) பாதை எது?
வாதம் செய்வது எந்த ஒரு குறிப்பிட்ட முடிவுக்கும் வழிவகுக்காது. சுருதிகள் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டிருக்கின்றன; {இவரது} கருத்து அனைவராலும் ஏற்கப்பட்டது என்று சொல்லுமளவுக்கு ஒரு முனிவர் கூட இல்லை; தர்மம் {அறம்} மற்றும் கடமை சம்பந்தமான உண்மை {சத்தியம்} குகைகளில் மறைக்கப்பட்டிருக்கிறது; எனவே, பெருமை மிக்கவர்கள் {பெரியோர்} நடந்து சென்ற பாதையே நமக்கான பாதை.

122) {தினமும் நடைபெறும்} செய்தி எது?
அறியாமை நிறைந்த இந்தப் பூமி {சமையற்செய்யத்தக்க} ஒரு பெரிய கடாய் ஆகும். பகல்களையும், இரவுகளையும் எரிபொருளாய்க் கொண்டிருக்கும் சூரியன் நெருப்பு ஆகும். மாதங்களும், பருவங்களும் மரக்கரண்டிகளாகும். {உலகம் என்ற அந்தக் கடாயில்} காலம் அனைத்தையும் சமைத்துக் கொண்டிருக்கிறது. இதுவே {தினமும் நடைபெறும்} செய்தி ஆகும்.

123) உண்மையில் யார் மனிதன்?
ஒருவனது நற்செயலின் அறிக்கை சொர்க்கத்தை அடைந்து, பூமி எங்கும் பரவுகிறது. அந்த அறிக்கை நீடிக்கும்வரை, {அவன் மனிதன் எனப்படுகிறான்.}

124) அனைத்து வகைச் செல்வங்களையும் உண்மையில் கொண்டிருக்கும் மனிதன் யார்?
ஏற்புடையதும் ஏற்பில்லாததும், இன்பமும் துன்பமும், கடந்த காலமும் எதிர்காலமும் {என உள்ள அனைத்து இரட்டைகளும்} எந்த மனிதனால் சமமாகக் கருதப்படுகிறதோ, அவன் அனைத்து வகைச் செல்வங்களையும் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான் .

கடைசியில் அவர் பதில்களில் மகிழ்ந்து யக்ஷன் “யாரேனும் ஒரு சகோதரர் உயிர் பிழைக்க வைக்க முடியும் யார் வேண்டும் சொல்? என்றான்.

“நகுலன் “என்கிறார் தர்மர்.

“யுதிஷ்டிரா, மாவீரர்கள் அர்ஜுனன், பீமனை எல்லாம் விட்டு விட்டு நகுலனை ஏன் மீட்கப்பார்க்கிறாய்.?

“யக்ஷா, என் தந்தை பாண்டுவிற்கு இரு மனைவியர்கள். ஒரு மனைவி குந்தியின் புதல்வன் யான் இருக்கிறேன். மற்ற மனைவி மாத்ரியின் மூத்த புதல்வன் நகுலன். “தாய் தந்தைக்கு ஈமக்கடன் செய்யவாவது ஒவ்வொரு புதல்வன் வேண்டாமா சொல்?”

“யுதிஷ்டிரா , தர்ம புத்திரன் என்ற பேருக்கு பொருத்தமானவன் நீ. உன்னை சோதனை செய்து மகிழ்ந்தேன். உன்னுடைய நான்கு சகோதரர்களையுமே உயிர் பிழைக்க வைக்கிறேன். இது என் பரிசு உனக்கு ” என்றான் யக்ஷன்.

இதையே பகவத் கீதை புத்தி யோகி என்று சொல்கிறது. (ஸ்தித ப்ரஞன்)

கீதா சாங்க்ய யோகம் ஸ்லோகம் 53
ஷ்ருதிவிப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிஷ்சலா।
ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி॥ 2.53 ॥

பலவற்றை கேட்டு கலக்கம் அடைந்துள்ள உனது அறிவு எப்போது நிலையாக அசையாமல் உன்னில் நிற்குமோ அப்போது புத்தி யோகத்தை அடைவாய்.

கீதா சாங்க்ய யோகம் ஸ்லோகம் 55
ஸ்ரீபகவாநுவாச।
ப்ரஜஹாதி யதா காமாந்ஸர்வாந்பார்த மநோகதாந்।
ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ்ததோச்யதே॥ 2.55 ॥

ஸ்ரீ பகவான் கூறினார்: அர்ஜுனா ! எப்போது ஒருவன் தன்னாலேயே தன்னில் திருப்தி கொண்டு, அதனால் மனத்தின் எல்லா ஆசைகளையும் விடுகிறானோ அப்போது அவன் புத்தி யோகி என்று சொல்லபடுகிறது.

கீதா சாங்க்ய யோகம் ஸ்லோகம் . 57
ய: ஸர்வத்ராநபிஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய ஷுபாஷுபம்।
நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா॥ 2.57 ॥

யார் எதிலும் பற்றில்லாதவனோ, சுகத்தில் மகிழ்வதில்லையோ, துக்கத்தை வெறுப்பதில்லையோ, அவனது புத்தி நிலைபெறுகிறது.

கிருஷ்ணன், ராமர், தருமன், பீஷ்மர், போன்று ஸ்திர புத்தி உடையவர்களாக நாமும் ஆக முயற்சிப்போம் !

Print Friendly, PDF & Email

1 thought on “ஸ்திர புத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *