கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 2,891 
 

தமிழ்நாட்டிலுள்ள ஒரு சிற்றுாரிலிருந்து ஒரு குடியானவன் பம்பாய் பார்க்கப் போயிருந்தான். ஊர் முழுவதும் சுற்றிப்பார்த்தான். மாலையில் கடற்கரையைப் பார்க்கப் போனான்.

அங்கே, கடற்கரையில் ஒரு சிறுபையன் அலையை நோக்கி வேகமாக ஒடுவதும், தண்ணிரைக் கண்டதும் பின்வாங்குவதும் பிறகு அலையிலேயே காலை வைத்துக் கொண்டு விளையாடுவதுமாக இருந்தான். அப்போது ஒரு பெரிய அலை வந்தது.

அதைக்கண்ட குடியானவன் பயந்துபோய், அப் பையனின் கூட வந்தவரைப் பார்த்து, “சிறுபையன் சுட்டித்தனமாக விளையாடினால் நீங்கள் பார்த்துக் கோண்டிருக்கிறீர்களே, அவனை அழைத்து உங்கள் அருகில் வைத்துக்கொள்ளுங்கள்” என்றான்.

அதுகேட்ட ஆள் சிரித்து, “அது பையன் அல்ல; பெண்” என்றார். அப்படியா? நீங்கள்தான் அப் பெண்ணின் தந்தையா?” என்று கேட்டான். குடியானவன்.

அவர் “இல்லையில்லை. நான் அந்தப் பெண்ணுக்குத் தந்தையல்ல. தாய்” என்று சொன்னவுடன் குடியானவனின் வியப்புக்கு எல்லையே இல்லை.

பெண்ணாக ஆணும், ஆணாகப் பெண்ணும் வேற்றுமை தெரியாத அளவுக்கு நடை, உடை, பழக்கங்களை , மாற்றி நடந்துகொள்ளும் வேடிக்கையைப் பம்பாயில் பார்த்துவிட்டு வந்த அவன், தன் ஊர் வந்ததும் அனைவரிடமும் அதைச் சொல்விச் சொல்லி சிரித்தான்.

எப்படி நம்நாட்டில் நடையும் உடையும்?

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *