அவள் கூறினாள். ஆம்! மயிலின் சாயலையுடைய அழகிய பெண்ணொருத்தி ஒரு ஆடவனுடன் செல்வதைக் கண்டேன்” என்று
என்ன பண்பு? ஆண், ஆணை மட்டுமே கண்டான். அருகில் சென்ற பெண்ணைக் காணவில்லை. பெண். பெண்ணை மட்டுமே கண்டாள். உடன் சென்ற ஆணைக் காணவில்லை.
அவர்களிடம் அத் தாய் கேட்டாள், “எவ்வளவு தூரத்தில் செல்லுகிறாள் விரைந்து சென்றால், அவளைக் கண்டுபிடிக்க முடியுமா? அவளைக் காணாமல் பெற்று வளர்த்த வயிறு பற்றி எரிகிறதே!” என்று அழுதாள்.
அவர்கள் கூறினார்கள், “வீணாக ஒடித் தேடியலையாதே அவர்கள் வாழத் துவங்கி விட்டார்கள். பக்குவம் அடையும் வரையில்தான் அவள் உனக்குச் சொந்தம். பக்குவமடைநது விட்டால், அவள் பிறருக்குச் சொந்தம். செந்தாமரை மலர் சேற்றில்தான் பிறக்கிறது. அது சேற்றிலேயே கிடந்தால், அது அழுகித்தானே போகும்? சேற்றைவிட்டு வெளியேறி மக்கள் முடியை அலங்கரிக்கும் போதுதானே அது பெருமைடைகிறது.
“முத்துக் கடலில்தான் பிறக்கிறது. கடலிலேயே கிடந்துவிட்டால் அதற்கு என்ன பெருமை? அது கடலை விட்டு வெளியேறி மன்னர்களின் முடியை அலங்கரிக்கும் போதுதானே அது பெருமையடைகிறது. திரும்பிக் செல்லுங்கள்” என ஆறுதல் கூறி அனுப்பிளைத்தார்கள்.
கதை நமக்கு ஒரு படிப்பினையை உண்டாக்குகிறது. அது, “இறக்கை முளைத்த பறவையை கூண்டில் அடைத்து வைத்திருப்பதைப்போல. மணம் செய்விக்காமல் பக்குமடைந்தப் பருவப் பெண்களை மணம் செய்விக்காமல் வீட்டில் அடைத்து வைத்திருப்பதும் தவறு” என்பது.
- அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை
தொடர்புடைய சிறுகதைகள்
ஒருமுறை நபிகள் நாயகம் அவர்கள் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார்கள். ஒருகிழவி பையன் ஒருவனை உடனகூட்டிக் கொண்டு வந்து அவர் முன்னே வந்து நின்றாள். என்ன என்றார்கள். “இவன் சர்க்கரையை அதிகமாகச் சாப்பிடுகிறான். சாப்பிட வேண்டாமென்று புத்தி சொல்லுங்கள், நான் சொல்லி இவன் ...
மேலும் கதையை படிக்க...
நபிகள் நாயகம் ஒருநாள் மாலைநேரத்தில் பள்ளி வாசலுக்குத் தொழப் போனார்கள். அங்குள்ள தண்ணிரி தொட்டியில் கைகால்களை சுத்தம் செய்யும் பொழுது மரத்திலிருந்து ஒருதேள் தண்ணீர் தொட்டியில் விழுந்து துடியாய் துடித்துக் கொண்டிருந்தது. நாயகம் அவர்கள் இரக்ககுணம் கொண்டு, அத் தேளைத் தரையில் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு பெரியவர் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார். பயணச்சீட்டு பரிசோதகர் எல்லோரிடமும் கேட்டு சரிபார்த்து விட்டு இவரிடமும் வந்து பயணச்சீட்டு கேட்டார்.
இவர் தன் சட்டைப்பையைப் பார்த்துவிட்டு பணப் பையையும் பார்த்துவிட்டு கைப்பையையும் பெட்டியையும் பார்த்துத் தேடிக் கொண்டே இருந்தார். பயணச்சீட்டை ...
மேலும் கதையை படிக்க...
சென்னை மாநகரில் மாளிகையிடத்தில் திரு. சச்சிதானந்தம் பிள்ளை, திரு.வி.க., மறைமலையடிகள் இவர்களுடன், விருந்துக்கு அமர்ந்து உண்டுகொண்டிருந்தார்.
அப்போது, சச்சிதானந்தம் பிள்ளை ரசத்தைப் பருகிக் கொண்டிருக்கும்போது சிறிது இருமினார். அருகில் இருந்த திரு.வி.க. கேட்டார் - 'அது என்ன? ரசம். அதிகாரமோ!” இருமும்போது - ...
மேலும் கதையை படிக்க...
இரண்டு பெருஞ்செல்வர்கள் ஒர் ஊரிலே வாழ்ந்து வந்தார்கள். ஒருவன் தருமி; மற்றவன் கருமி, ஒரே நாளில் இருவருமே இறந்து விட்டனர். அவ்வூரினர் திரண்டு வந்து இரண்டு பிணத்தையும் ஒரே நேரத்தில் எடுத்துச் சென்று சுடுகாட்டில் எரிக்கச் செய்தனர், இரண்டு சடலங்களும் தனித்தனியே ...
மேலும் கதையை படிக்க...
ஓர் ஊரிலே சுருட்டு வியாபாரிகள் இருவர். அவர்களுக்குள் போட்டி அதிகமாக இருந்தது.
போட்டி போட்டு ஒருவர்க்கொருவர் சுருட்டு விலையைக் குறைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள்.
தன் போட்டி ஆசாமி அசலுக்கும் குறைவாக விற்பதைக் கண்டு, மற்றவரால் அதைச் சமாளித்துப் போட்டி போட முடியவில்லை. எப்படிக் குறைந்த ...
மேலும் கதையை படிக்க...
பெருஞ் செல்வந்தர் ஒருவர் தன் பெண்ணுக்கு வெகு நாட்களாக ஒரு அறிவாளி மாப்பிள்ளையைத்தேடிக் கொண்டிருந்தார்.
ஒருநாள் இரண்டு பேர் தங்களைப் புத்திசாலிகள் என்று சொல்லிக்கொண்டு வந்தனர்.
செல்வந்தரும் வந்தவர்களை வரவேற்றுத் தன் மூத்த மாப்பிள்ளைக்கும் சேர்த்து மூன்று இலைகள் போட்டு உணவு பரிமாறி, அவர்களைச் ...
மேலும் கதையை படிக்க...
சுவாமி சச்சிதானந்தா என்ற தமிழகத்துத் துறவி, அமெரிக்காவில் ‘யோகிராஜ்’ என்ற சிறப்புடன் அமெரிக்க மக்களுக்கு ‘யோகாசனப் பயிற்சி’ அளித்துவருகிறார். இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டவர் அவருக்குச் சீடராக இருந்து யோகப் பயிற்சி பெறுகின்றனர். அந்த ஆசிரமத்திற்கு அமெரிக்க அரசாங்கமே அருந் துணையாக இருந்து ...
மேலும் கதையை படிக்க...
நாட்டு மன்னன் தன் நண்பனைப் பார்த்து, “என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான். நண்பன் சொன்னான் “நம்நாட்டில் உள்ள முட்டாள்களின் பெயர்களை எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்று.
மன்னன் : எத்தனை பேர் இருக்கிறார்கள்?
நண்பன் : நேற்றுவரை 6 பேர்களை எழுதி வைத்திருந்தேன். இன்று ...
மேலும் கதையை படிக்க...
‘ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும், பண்டித மணி கதிரேசஞ் செட்டியார் அவர்களும்,
திருச்சிக்கு மேற்கே, சொற்பொழிவாற்ற மாலை நேரத்தில் சென்றிருந்தனர்.
அங்கே, குளத்தங்கரையில், அனுட்டானம் செய்து கொண்டிருந்த நாட்டார் ஐயா அவர்கள் - பண்டிதமணி அவர்கள் (ஒரு கால் நடக்க விராது) தடியை ஊன்றி ...
மேலும் கதையை படிக்க...
திரு.வி.க. – மறைமலையடிகள்
மருமகன்களின் அறிவுத் திறமை