தொழில்முறை நடிகையாக இருந்து, வீராச்சாமியைக் கல்யாணம் கட்டியவுடன், பிள்ளை குட்டி என ஆனபின் குடும்பத்தைக் கவனிப்பதிலேயே காலத்தை ஓட்டினாள் கௌரி. வழக்கம் போல அன்றும் வீராச்சாமியுடன் விவாதம்.
“ஏய், இன்னான்றே இப்போ ! சொம்மா தென்துக்கும் கத்தி கூப்பாடு போட்டுனுகீற…” என்று விழி பிதுங்கித் தள்ளாடிய வீராச்சாமி, கௌரி விட்ட அறையில், வாசல் தரையில் பொத்தென்று விழுந்தான்.
“கௌலீ ழீ ழல்லா இலுக்கனு….” என்று கை எடுத்துக் கும்பிட்டவனிடம் இருந்து சற்றைக்கெல்லாம் பேச்சு மூச்சைக் காணோம். பதறி போனாள் கௌரி. கிட்ட நெருங்கி நாசித் துவாரத்தில் விரல் வைத்துப் பார்த்தாள்.
‘நல்ல வேளைக்கு மூச்சிருக்கு !’ என்று தெம்பானாள். குமட்டிய சாராய நெடியைத் தாங்கிக் கொண்டாள். வீராச்சாமியின் அவிழ்ந்த வேட்டியை, இறுக்கிக் கட்டி, அவனைத் தரதரவென குடிசையினுள் இழுத்து, தூக்க முடியாது தூக்கி கயிற்று கட்டிலில் போட்டாள்.
குடிசை மூலையில், ஏதோ நிகழ்ச்சி ஓடிக் கொண்டு இருந்த இலவச டி.வி.யை அணைத்தாள்.
சட்டைப் பொத்தான்களை அவிழ்த்து விட்டு, அங்கே கிடந்த ஓலை விசிறியில் லேசாக விசிறி விட்டாள்.
“இந்தாம்மே கௌரீ…வூட்டுல தான் கீறியா ?” என்று குடிசைக் கதவை அடித்தாள் கோமளவல்லி.
கதவைத் திறந்த கௌரி, “யக்கா, இது இம்ச நாளுக்கு நாள் தாங்கலக்கா…” என தன் கணவனின் நிலை குறித்துப் புலம்பினாள்.
“இப்படி வாய் பேசாத இருந்துகினா, அது (வீராச்சாமி) வாயடைக்கிறது கஷ்டங்கண்ணு”
“யக்கா, நீ வேற, ஏய்யா இப்டி குட்சிட்டு வந்து கலாய்க்கிற. நமக்கும் புள்ள குட்டினு ஆகிபோச்சி. ஆனது ஆச்சி, கடலு பக்கம் எப்பதான் போவேனு கேட்டு தான் உட்டேன் ஒரு உடு, அது தாங்காத சுருண்டுகிச்சி” என்றாள் கௌரி.
“அய்யே அடிச்சியாக்கும்… ம்ம்ம்ம்ம், இப்டி செஞ்சீனாக்கா அது உன் காலாண்ட சுத்தி சுத்தி வரும் பாரு !” என்று ஒரு யோசனையும் சொன்னாள் கோமளவல்லி.
“சொம்மாங்காட்டியும் சொல்லாதக்கா !”
“மெய்யாலுமே தாங் கண்ணு, செஞ்சி தான் பாரேன்.”
***
இரண்டொரு வாரங்களில் நல்ல மாற்றம் இருந்தது வீராச்சாமியிடம். நேரத்துக்கு கடலுக்குப் போவதும், மீன் அள்ளி வருவதும், குழந்தைகளை இஸ்கூலுக்கு அழைத்துச் செல்வதும் என ஆளே மாறிப்போனான்.
“இன்னாம்மே… எப்டிகீற ? அய்யே மூஞ்சீல சிரிப்பப்பாரு …” என்றார் திண்ணைப் பேச்சில் ஒரு நாள் கோமளவல்லி.
ஆனந்தத்தில் திக்குமுக்காடிய கௌரியால் அழுகையை அடக்க முடியவில்லை.
“ஏம்மே இதுக்குப் போயி அயுதுனுகீற. கவ்லைய உடும்மே. சொம்மாவே கடலு உப்பா கீது, அப்பாலிகா தாங்காது !” என்று நமட்டுச் சிரிப்புச் சிரித்தார் கோமளவல்லி.
***
வீராச்சாமியைத் தன் வசம் வைத்துக் கொள்ள, கௌரியிடம், கோமளவல்லி அப்படி என்ன யோசனை சொல்லி இருப்பார் ? உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டுங்கள்.
இரண்டொரு நாட்களில் பதில் இங்கு
))
ஒரு சின்ன க்ளூ : இந்த கதையிலும், இதற்கு முந்தைய சில பதிவுகளிலும் பதில் ஒளிந்திருக்கிறது.
***
ரெண்டு நாளாச்சுபா … உங்க முயற்சிகளுக்கு நன்றி. எனது பதில் கீழே,
கோமளவல்லியின் ரோசனை:
‘எதுனா டி.வி. நிகழ்ச்சிக்கு ஜட்ஜா போயி, நம்ம குப்பத்துல ஒரு ப்ரோக்ராம் வச்சிகினு, வீராச்சாமிய அதுல கலந்துக்க வச்சி, போட்டுத் தாக்கிருவேன்’னு சொல்லிப் பாரு கண்ணு
))))
தொடர்புடைய சிறுகதைகள்
சட சட என்று ஆரம்பித்த பெரும் தூறல், சில நொடிகளில் மண் தரையை நீர்த் தரையாய் மாற்றியது. நீரின் பளபளப்பில் நிலம் மின்னியது.
"ஏலேய், சின்னச்சாமி ... தூத்த பெரிசா ஆரம்பிச்சிருச்சு, ஆட்டப் புடிச்சி கட்டுடா" என்று குரல் விடுத்து, அங்குமிங்கும் திரிந்த ...
மேலும் கதையை படிக்க...
"ஊரெல்லாம் ஷோக்கா கீதுபா" என்கிற பாஷையை குப்பத்தில் கூட கேட்கமுடிவதில்லை. அல்ட்ரா மாடர்ன் தமிழுக்கு மாறியிருந்தனர் அனைவரும்.
தன்னைப் போலவே சர்வ சாதரணமாக ஆங்காங்கே அமெரிக்க, ஐரோப்பா, ஆஸ்திரேலியா கண்டம் ரிடர்ன் இந்தியர்கள். கையில் மினரல் வாட்டருடன் உலாவுவதைப் பார்க்கும்போதே தெரிந்தது சந்தீப்புக்கு.
மனைவியும் ...
மேலும் கதையை படிக்க...
கடந்த சில வாரங்களாகவே அவளிடம் அந்த மாற்றம் ஏற்பட்டிருந்தது. முன்னைப் போல அவள் இப்போது இல்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போய் அவளைப் பார்க்க வேண்டும்.
போன மாதம் கூட அவளைப் பார்த்த போது அப்படி ஒரு வசீகரம். கரும்பச்சையில் ...
மேலும் கதையை படிக்க...
நீண்டு அகன்ற அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு பருத்த ஆலமரம் போல பரந்து விரிந்து காட்சியளித்தது. பல்வகைப் பறவைகள் அதில் வாசம் செய்தன. மன்னிக்கணும், பல்வகை மனிதர்கள் அதில் வசித்து வந்தார்கள்.
முறையே பணி செய்து, போதுமென ஓய்வு பெற்று, அறுபதைக் கடந்த ஜெகந்நாதனும், ...
மேலும் கதையை படிக்க...
வாகாய் வளைந்து நெளிந்து, ஒல்லியாய் உயர்ந்து வளர்ந்திருந்தது அந்த அழகிய நெல்லி மரம். தூவானத்திற்கே வெட்கப்பட்டு, இழுத்துப் போர்த்தியிருந்தது கருப்பு ஈர ஆடையை.
வெண்முத்துக்கள் சிந்திய மழைத்துளிப் போர்வையில், அடுக்கடுக்காய் வெளிர்பச்சை இலைகள். இலைகளுக்குப் போட்டியாய் பச்சை ருத்ராட்சங்களென சடை சடையாய் நெல்லிக்கனிகள்.
சில ...
மேலும் கதையை படிக்க...
பெய்த மழையில் உழுத நிலமாய் சதசதத்துக் கிடந்தது மாட்டுக் கூடம்.
நடுவில் குப்புறக் கிடந்த கூடையை சுவரோரமாய் நகர்த்தினான் பாண்டி. 'கொக் ... கொக்...' என்று கூடை நகர, உள்ளே நாலைந்து கோழிக் குஞ்சுகள்.
ஆத்தாவுக்கு எப்பச் சொன்னாலும் புரியாது. இந்த மாட்டுக் கூடத்துல ...
மேலும் கதையை படிக்க...
'நீங்க எல்லாம் எழுத வந்துட்டீங்க' என்பது போல் பார்த்தார் எழுத்தில் மூத்த, வயதில் சிறிய எழுத்தாளர் இனிமைவேந்தன்.
அந்த அறையில் ஒரு பத்து பதினைந்துபேர், இழுத்து விட்ட மெத்தையில் அமர்ந்து ஆளுக்கு ஒரு தலைகாணி போன்ற முன்டில் சாய்ந்தோ, விழுந்தோ அமர்ந்திருந்தனர். சங்க ...
மேலும் கதையை படிக்க...
அடித்துப் பிடித்து வந்து, அந்தக் கடிதத்தைத் தன் கணவன் ராஜுவிடம் காண்பித்தாள் ரேவதி ...
உலகமே வியக்கும் தொலைக்காட்சியில் இருந்து, உலகமே பார்க்கும் ஒரு நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக வருமாறு எழுதியிருந்தார்கள் அக்கடிதத்தில்.
"ஏங்க, எத்தனை நாள் அவரு வர்றாரு, இவரு வர்றாரு, நம்மள ...
மேலும் கதையை படிக்க...
"இந்த நேரம் என்று கிடையாது. ராப்பகலா யாருமே அந்தப் பக்கம் போறதே கெடையாது தங்கச்சீ ! செல வருசம் முன்ன, உன்ன மாதிரி வயசுப் பய புள்ளைக நாலஞ்சு, இப்படித்தேன், நாங்க சொல்றதக் கேட்காம, எங்கள ஒரு மாதிரி பாத்துபுட்டு, 'அட ...
மேலும் கதையை படிக்க...
காலை மணி ஏழு பதினைந்து. 'ஜூரோங் ஈஸ்ட்' நோக்கி செல்லும் துரித ரயில் 'புக்கிட் பாத்தோக்' நிலையத்தை அடைந்து, ஊரும் புழு போல ஊர்ந்து நின்றது.
ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்த கூட்டம் ரயிலை நோக்கித் திரள, பருத்த மேனியரின் வெடித்த சட்டை போல, ...
மேலும் கதையை படிக்க...
கிராமத்தில் மழையும், மின்வெட்டும்
அடுக்குமாடிக் குடியிருப்பும், அடுத்தடுத்த கட்டிடங்களும்
பிடித்ததும் பிடிக்காததும்