துறவியான மன்னன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 4, 2022
பார்வையிட்டோர்: 5,112 
 

(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பல நூற்றாண்டுகட்கு முன்பு கருநாடக நாட்டிலே ஓர் அரசன் இருந்தான். அவன் முடிசூட்டப் பெற்ற பிறகு சிலகாலம் அரசாட்சியை நடத்திக்கொண்டிருந் தான். முற் பிறப்பில் செய்த நல்வினையின் மிகுதியி னாலே அவ்வரசனுடைய உள்ளம் அரசாட்சி செய்தலை வெறுத்தது. அவன் தன் மனைவியுடன் பெரியோர் களை அடைந்து அறிவு நூல்களைப் பயின்றான். அதனை நன்கு ஆராய்ந்தான்.

நாளாக நாளாக அரசனுடைய உள்ளம் அர சாட்சி செய்தலை அடியோடு வெறுத்தது. மறுமைக் குப் பயனற்ற இவ்வரசாட்சி வேலையை நாம் ஏன் செய்தல் வேண்டும்? இதனால் நமக்கு யாது பயன்? அரசாட்சியிலே செலவிடும் பொழுது வீண் பொழு தேயாகும். அந்தப் பொழுதை இறைவனை யெண்ணு வதிற் செலவிட்டால், எவ்வளவோ பயன் பெறலாமே, என்று எண்ணினான்.

வீடு, வாசல், மனைவி, தாய்தந்தையர் , அரசாட்சி, பொருட்செல்வம் எல்லாவற்றையும் ஒருங்கு துறந்தான். துறவிக்கோலம் பூண்டு வெளியே சென்றான். நகர மக்களும் அமைச்சர்களும் பிறரும் அரசனைத் தடுத்து நிறுத்தப் பார்த்தார்கள். யாருடைய சொல்லையும் அரசன் கேட்கவில்லை. பெரியோர்களை யடுத்து மேலும் அறிவு நூல்களைப் பயின்று இறுதி யிலே வீடுபேறடைந்தான்.

‘வீடுபெற நில்” (இ – ள்.) வீடு – வீடு பேற்றை , பெற – அடையும்படி, நில் – அதற்குரிய அறிவு வழியிலே நிற்பாயாக.

– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *