புறப்படு போர்க் களத்திற்கு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,062 
 

“விறலியே புறப்படு” என்றான் பாணன்.

“எங்கே”? என்றாள் விறலி.

“போர்க்களத்திற்கு”

“ஐயோ நான் மாட்டேன், பயமாயிருக்கிறது”

“போர் செய்யவல்ல, பொருள் வாங்க”

“செத்த வீட்டில் தருமமா? போர்க்களத்தில் பரிசா?”

சாதாரண போர்க்களம் அல்ல விறலி , பெருவழுதியின் போர்க்களம். கிழப் பருந்திற்கும் விருந்தளிக்கும் பெரு வழுதி நம்மையா சும்மா விடுவான். தயங்காதே. விரைவில் புறப்படு. அமுதம் கிடைக்கும். அழகிய பட்டாடை கிடைக்கும் விதவித நகைகளும் கிடைக்கும்.

துள்ளி எழுந்தாள் விறலி.

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *