ஞாயிறும் திங்களும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,198 
 

கதிரவன் எழுகின்றான், வெம்மையைச் சொரிகிறான், சுடுகின்றான். கோடை நாளல்லவா? அவன் கொடுமையைக் கேட்கவா வேண்டும்.

அரசே, நீயும் அத்தகையவன்… கோடைக் கதிரவன் போல் சுடுகின்றாய்…

ஆனால் ஒன்று-குடிகளை அல்ல! கொடும் பகையை!

உன் கொடிய கைகளை கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம்: ஏனெனில், எங்களிடம் இரவில் எழும் திங்கள் போல் வருகின்றாய்!

சுட்ட கைகள், குளிர்கின்றன; வெம்மை சொரிந்த கண்கள், அருள் சொரிகின்றன….

ஆதலின், ஞாயிறும் நீ, திங்களும் நீ.

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *