கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 27, 2015
பார்வையிட்டோர்: 12,368 
 

அவனும் என்னதான் செய்வான் பாவம்.தினசரிகளில் இரவு பணிரெண்டுமணி வரைக்கும் படிக்கிறான். பாடங்கள் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் ஒரு மணியைக்கூட எட்டித்தொட்டு விடுகிறது.

கொட்டாவி விடுதலுடனும்,உடல் முறுக்கிய தூக்கக் கலக்கத்துடனுமாய் படிக்கிறான் படிக்கிறான், உடல் அலுக்கும் வரை படிக்கிறான், எழுதுகிறான் கை வலிக்கும் வரை எழுதுகிறான், கேட்டால் எங்களது டீச்சர் கொடுத்த வீட்டுப் பாடம் என்கிறான், வாங்கிப் பார்த்தால் ஒரே கேள்வி பதில்களை இருபது அல்லது அதற்கு மேற்பட்டு எழுதச் சொல்லியிருப்பார்கள். ஏன் அப்படி எனக்கேட்டால் பதில் டீச்சர் சொன்னார்கள் என்பது தாண்டி வேறொன்றுமாய் இருப்பதில்லை.

இது சம்பந்தமாக டீச்சரிடம் போய் கேட்கலாம் என்றால் அதற்கும் மனம் ஒப்புதல் அளிப்பதில்லை. அதை மீறி பையனிடம் கேட்டால் பையனின் பதில் வேறு மாதிரியாக இருக்கிறது, அப்பயெல்லாம் வந்து கேக்க வேணாம்.நீங்க வந்து போன கோவம் எங்க மேல திரும்பும் வேணாம் அது எதுக்கு அனாவசியமா,, என்றான்.

இப்படித்தான் அவன் மூணாம் வகுப்புப்படிக்கையில் அவனது வகுப்பு ஆசிரி யை பிரம்பு கொண்டு காலில் அடித்து கால் வீங்கிப்போனது, பள்ளியில் போய் கேட்கலாம் என்றால் வீட்டில் மனைவி வேண்டாம் என்கிறாள், என்ன செய்ய அப்புறம்? கேட்டால் ஏதாவது வம்பு வரும், நாம் போய் கேட்க நாம் பேசிய பேச்சின் மீதான வேகம் பையன் மீது பாயும் என்ற அவதானிப்புக்குப் பிறகு விட்டுவிட்டாகிவிட்டது. எழுதுதல் படித்தல் மனப்பாடம் செய்தல் என்கிற இதர இதரவான விஷயங்களுக்கெல்லாம் சரியாகப்படுவது இரவுதான் என்றாகிப் போன நிலையில் அவனும் படிப்பிற்காய் அந்த நேரத்தில்தான் தஞ்சமடைய வேண்டியதிருக்கிறது,

அதிகாலை விழித்தெழுந்துபடிப்பதும் எழுதுவதும் சாத்தியம் கொள்கிற விஷய மாய்த் தெரியவில்லை.அதை மீறி ஒரு நாளின் நகர்தலில் அதிகாலை எழுந்துஎழுதவோ படிக்கவோ உட்கார்ந்தால் ஒன்று நேரத்திற்கு பஸ்ஸைப் பிடிக்க முடியாமல் போய்விடும் அல்லது சரியாக சாப்பிடமுடியாமல் அரை குறையாக எழுந்து ஓட வேண்டியிருக்கிறது. அதனால் அவன் சொல்லி விட்டான். இனி மேல் என்னை காலையில் ஏழு மணிக்கு எழுப்புங்கள் போதும் என/

இவன் எழுந்து பல்விளக்கி டீக்குடித்து,,,,,,என பாதி வேலைகளை முடித்த பின்தான் அவனும் எழுந்திருக்கிறான், அவன் எழும்போது அவனது தலைக்கு நேராக அவனுக்குப் பிடித்த கோடு போட்ட சட்டை தொங்கும்.

உங்கள் மகனுக்கு எந்த ட்ரெஸ் போட்டாலும் நல்லாவே இருக்கும் என பி.டூ ஸ்டோர்க்காரர் சொன்னது ஞாபகம் வருகிறது,ஒரு தடவை துணி எடுக்கும் போது/

சார்சும்மா எடுத்துப் போடுங்க, தம்பிக்கு எந்தக் கலர்ல பேண்ட் சட்ட, போட்டாலும் சூப்பரா இருக்கும்,மேட்சாவும் இருக்கும் என்றார். அதன் படி பள்ளிக் கூட யூனி பார்ம் பையனுக்கு நன்றாக அமைந்து போனது. ரெடிமேடில் வேணாம். தைத்துப் போட்டுக் கொள்ளலாம் என்றான். அதுவும் இரண்டு செட் போதும் எனவும் சொல்லி விட்டான்.

இதற்கு முன்னான வருடங்களில் ரெடிமேடாக பேண்ட் சர்ட் எடுத்த போது ஏதும் பேசாதவன் தைக்கப்பட்டு வந்த உடைகளைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ந்துபோனான். அதுவும் அவனுக்குப் பிடித்த டெய்லர்கடையில் தைத்து வந்த ட்ரெஸ் எனவும் இரண்டு தினங்கள் அதைப் பற்றிய பேச்சுதான்,திறந்த வாய் மூடவில்லை. பெருமிதம் தாங்கவில்லை.

அவனது அண்ணந்தான் இவனுக்கு அந்த டெய்லர் கடையை அறிமுகம் செய்து வைத்தான். அவனுக்கு அவன் பிரெண்ட் மூலமாய் அறிமுகம்/

அப்படியான கடையில் தைத்து இரண்டே நாட்களில் வாங்கிக் கொண்ட துணிகள் தான் பையனை அந்த அளவிற்காய் பேச வைத்தது.

அப்படியாய் தைத்து வாங்கிய யூனிபார்ம் சட்டை தவிர்த்து பையனுக்கு மிகவும் பிடித்தது பிஸ்கட் கலரில் நீள நீளமாய் கோடுகள் இறங்கிய சட்டை. பார்க்கக் கொஞ்சம் மதிப்பாக இருந்தது. பையனிடம் இருந்த எந்தக் கலர் பேண்ட் டுக்கும் அது மேட்சாகித் தெரிந்தது. அந்த சட்டையை உள்பனியன் போடாமல் அவன் போட்டுப் பார்த்ததில்லை.

”சும்மாவா பின்னே எப்பிடியும் ரெண்டு மூணு வருஷங்களாவது வைச்சிருக்கணு ன்னு நெனச்சி எடுத்த சட்டை. சீக்கிரம் கிழிஞ்சி போச்சுன்னா என்ன செய்ய? இப்பிடில்லாம் வேர்வையில போட்டு அடிச்சாகிழியும்தான, சீக்கிரம் எனவும் இன்னைக்கு வெயில் கொஞ்சம் அதிகம்தான், காலையில எட்டு மணிக்கே இந்த வெயில்ன்னா இன்னும் நேரம் கெடக்கு பொழுது சாய,,/

இன்னைக்கி அடிக்கிற வெயிலப் பாத்தா மழை வெயில் போலத்தான் தெரியுது. கெழக்கு மொகம் கறுத்து மேற்கு மொகம் வெளுத்துத் தெரியுது எனச் சொன்ன பையனின் பேச்சுக்கு தலையசைக்க தான் செய்தான் இவனும் பஸ் ஏற்றிவிடச் சென்ற ஒரு நாள் காலை.

படிக்கிறபடிப்பு தவிர்த்து பிறவற்றில் கவனம் செலுத்தி யோசித்துப் பார்க்கக் கற்றுக் கொண்டுள்ளான் இப்பொழுது. அது அவனில் எப்படி வந்தது எப்பொழுது வந்தது எனத் தெரியவில்லை. வந்துவிட்டது, அதுவும் நல்லதெனவேபடவும் செய்கிறது

அவன் பள்ளிவிட்டு வரவே மாலை ஆறு மணியாகிப்போகிறது சமயாசமயங் களில் அது ஏழுமணிவரை கூட நீளும்.பள்ளி விட்டு 5.30 மணி பஸ்ஸிற்கு ஏறினால் ஆறு மணி அல்லது5.50ற்குமுக்குரோட்டிற்கு வந்து விடுவான்,

அந்தபஸ்ஸின்பெயரே பறக்கும் ரதம்தான்.பஸ் கிளம்பியதும் டயர்க ளைகட்டி வைத்துவிடுவார்கள்அல்லது டயர்கள்உள்ளிழுத்துக் கொள்ளும். அதனால் சடுதியில் போய் சடுதியில் வந்து விடும்.

பஸ்ஸின் வெளிப்புறம் முழுக்கவுமாய் மாடர்ன் ஆர்ட் வரையபட்டிருந்தது போல்கலர் அடிக்கப்பட்டிருந்த பஸ் பார்ப்பதற்கு கொஞ்சம் அழகாக இருக்கும், பஸ்சினுள்ளாய் இருக்கிற சவுண்ட் சிஸ்டமும் சீட்அரேஞ்மெண்டும் புதிதாக பஸ்ஏறுபவரைகொஞ்சம்அசத்தி விடுவதுண்டு, ஆனால் வேகம்தான் கொஞ்சம் ஆளைபயமுறுத்திவிடும்.

ஒரு மழை மாதத்தின்முன் மாலைப்பொழுது அது ,இவன் பணி முடிந்து வந்து கொண்டிருந்தான் அந்த பஸ்ஸிலேயே/ உட்கார இடமில்லை. எப்பொழுதாவது தனது சீட்டில் உட்காருகிற கண்டக்டர் எழுந்து சார் உட்காருங்கள் என்றார். இல்லை வேணாம் காலை பத்து மணியிலிருந்து மாலை ஐந்து வரை உட்கார்ந்து கொண்டேதானே இருக்கிறோம் வேலை செய்கிற இடத்தில், இப்பொழுதாவது கொஞ்சம் நிற்போம் என்கிற நினைப்பில் நின்று கொண்டே இருப்பதுதான்.

நிற்கிறேன் பரவாயில்லை. எனச் சொல்லி கொண்டே வந்து கொண்டிருந்த வேளை பக்கத்து ஊர் வந்து விடுகிறது, அங்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு கிளம்பப் போகிறவேளையில் இரண்டு பேர் ஓடி வந்து ஏறினார்கள், நல்ல தண்ணி போலிருக்கிறது, நிறைபோதையில் அவர்களால் நிற்கக் கூட முடியவில்லை, தள்ளாடிக் கொண்டே நின்றார்கள். அவர்களது கோபமெல்லாம் எப்படி அவர்களை ஓடவிட்டு பஸ் ஏறவிடலாம் என்பதே,,/

”ஏண்டா எங்கள என்ன இளிச்சவாயன்னு நினைச்சயா ஒழுக்கமா பஸ்ஸ நிப்பாட்டி ஆள்கள ஏத்தீட்டு போக மாட்டயா,,,? பெரிய,,,,,,,,,,,நீயி, பஸ் என்ன ஒங்க அப்பன் வீட்டுதா, சம்பளத்துக்கு வேலை பாக்குற நாயி,,, ஒனக்கு அவ்வளவு திமிறா, வெட்டிபயலுகளா,,,,,என கெட்ட வார்த்தைகளில் வைய ஆரம்பித்து விட்டார்கள். இவ்வளவும் நடந்தது கண்டக்டர் டிக்கெட் கேட்க போன போது/

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார் கண்டக்டர். சரி ஒக்காருங்க, இனிம நீங்க வந்தா அரை மணி நேரம் கூட நின்னு ஏத்தீட்டுப்போவம், சரிதான என கண்டக்டர் சொன்னதைக்கூட காதில் வாங்காமலும் டிக்கெட்டும் எடுக்காமலும் ஒரே பேச்சை திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருந்தார்கள் பஸ்ஸிலேறிய இருவரும். பார்த்தார் கண்டக்டர் இது வேலைக்காகாது என அவரும் சண்டைக்கு இறங்கி விட்டார், ஏண்டா,,,,,,,,,,,,ஆள் தெரியாம திரியிறிங்களா நாங்க எத்தன ஊரப் பாத்தவுங்க, எங்ககிட்டயேவா, நானும் சின்னப்புள்ளக்கி சொன்ன மாதிரி சொல்லிக் கிட்டு இருக்கேன் ரொம்பத்தான யெக்குறீங்க ரெண்டு பேரும் ஏண்டா நீங்க என்ன,,,,,,,என ஒருவரின் சட்டையை எட்டிப்பிடித்து விட்டார், சண்டையும் சத்தமும் பெரிதாகவும் டிரைவர் வண்டியை நிறுத்தி விட்டு கையில் மூன்று அடி உயர இரும்புராடுடன் வந்துவிட்டார். அவர் வந்ததும் ஒருவனை சட்டையைப் பிடித்து அடித்து விட்டார், ஏண்டா சொன்னா கேக்க மாட்ட ஒழுக்கமா, தண்ணி போட்ட திமிருல பேசச்சொல்லுதா,,,,தராதரம் கெட்ட நாயி, ஒழுக்கமா யெறங்கி ஓடிப்போயிருங்க ரெண்டு பேரும், இல்ல வண்டிய நேரா போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு போயிருவேன், அப்புறம் உள்ளதான் இருக்கணும் அவுங்க சொல்றவரைக்கும் என சப்தம் போட்டதும் அவர்களது போதை போன வழி தெரியவில்லை. கம்மென முனகியவாறு போய் ஓரமாய் நின்று கொண்டார்கள்,

மறு நாள் அதே இடத்தில் பஸ்ஸேறிய இருவரும் டிரைவர் கண்டக்டரிம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள். அண்ணே நேத்து தண்ணி மப்புல ஏதோ பேசிப் புட்டேன்னே, மன்னிச்சிக்ககங்கண்ணே, நீங்க சொன்ன மாதிரி போலீஸ் ஸ்டேசனுக்கு வண்டிய விட்டிருந்த எங்க பொழப்பு நாறி போயிருக்கும்ண்ணே, நாறி நல்லவேளை அப்பிடி எதுவும் நடக்கல,,,,நாங்க வரத்தாட்டுக்காரங்கண்ணே, கெடைய இங்க அமத்தீட்டு டவுன் வரைக்கும் போயிட்டு வரலாம்னு வந்தோம், வர்ற வழியில ருசிகண்ட நாக்கு பாத்தீங்களா, கடையப்பாத்த ஒடனே நின்னு ருச்சி,,,,சரக்கு உள்ளபோன ஒடனே புத்தியும் தடுமாறிருச்சி,அதான் நிதானமில்லாம இப்பிடி யெசக்கேடா நடக்க வச்சிருச்சி, ,இனிம அப்பிடி ஆகுதுண்ணே,என கும்பிடு போட்டவாறு இறங்கிப் போனார்கள், இடம் வந்ததும்.

அவர்கள் இறங்கியதும் பஸ்ஸிலிருந்த ஒருவர் சொன்னார்,ஆமாம் இவிங்க ளுக்கு வேற வேலையில்ல,இதே பொழப்பாப்போச்சி, ஏதாவது பஸ்சீல ஏற வேண்டியது,தகறாறு பண்ண வேண்டியது, அப்புறமா மன்னிப்பு கேக்க வேண் டியது,,,,,,,,பொழப்பத்த பலுக என்றார்,

விடுங்கண்ணே நாளெல்லாம் காட்டுலயும் மேட்டுலையும் சுத்தித் திரியிறவுங்க, இப்பிடித்தான் என்னைக்காவது வயிறு முட்ட குடிச்சிப்புட்டு புத்தி கெட்டு பேசிக்கிட்டும் வம்பு இழுத்துக் கிட்டும் திரியிறவிங்கதான். இதேது வசதி படைச்ச வீட்டு ஆளுக கண்ணு மண்ணு தெரியாம குடிச்சிப்புட்டு ஏதாவது யெசக்கெடா நடந்துக்கிட்டாக் கூட நம்ம பெரிசா ஒண்ணும் பேசப்போறதில்ல.

நமக்கு கோபமெல்லாம் இவுங்க மாதிரி ஆளுக கூடவும்,இவனுக்கும் கீழ இருக்குற சாமான்யன் கூடவும்தான என அன்று டிரைவர் பேசிய பஸ்ஸை விடுத்து பள்ளியில் கொஞ்சம் கூடுதல் நேரம் ஆகிப்போகிறா போது பையன் ஏறி வருகிற ஆறு மணி டவுன் பஸ் பக்கத்தில் இருக்கிற ஊர் வரை போய் வரும்,கூடுதலாய் கால் மணி நேரம் வரை ஆகும்.

எது எப்படி ஆன போதும் அவன் வந்து இறங்கியவுடன் முக்கு ரோட்டிலிருந்து ஒரு போன் பண்ணிவிடுவான், அங்கிருக்கிற கடையில் உள்ள காய்ன் போனிலிருந்து,கரெக்டாக அவன் போன் பண்ணுகிற நேரமாய் இவனும் போய் விடுவான்.

சிலசமயங்களில்.அழைப்பொலி இவனது செல்லில் கேட்டுக் கொண்டே இருக்க இவனும் தம்பி இதோ வந்துவிட்டேன் என போய் விடுவான், பையனும் உடனே கொடுத்த காய்னை கடைக்காரரிடமிருந்து வாங்கிகொண்டு வந்து விடுவான்,

இவனுக்குக்கூட சற்று சங்கடமாய் இருக்கும்,சொல்வான் பையனிடம், குடுத்த காசவாங்கவேணாம், ஏதாவதுஅந்தகாசுக்குவாங்கித் திண்ணுக்க என்பான்.ஆனா ல் அவன்வேண்டாம் அதெல்லாம் என்று விடுவான், அவனுக்கு இப்படியாய் தெருக் களில் நின்று தின்பதில் கூச்சம்.இதேது வாங்கிக் கொண்டுபோய் வீட்டில் கொடுத்தால் சாப்பிடுவான்.

சிலபிள்ளைகளைப் பார்க்கும்போது இவனுக்கு சற்று பொறாமையாக கூட இருந்திருக்கிறது.ரோட்டோர டீக்கடைகள் மற்றும் பெட்டிக் கடைகளில் அவர்கள் வாங்கிச் சாப்புடுகிற வேகம் நம்மை அசத்தி விடுகிறதுண்டுதான். அந்த வயதிற்குரிய வேகம் சாப்புடுகிற விஷயத்திலும் இருக்கும் போலும். அவனிடம் அதைச் சொன்னால் என்னால் முடியாது அப்படியெல்லாம் சாப்பிட என்பான்,

இத்தனைக்கும் அவன் போன் பண்ணுகிற கடையில் வாழைப் பழங்கள், கடலை மிட்டாய்மற்றும்பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற வித விதமான மிட்டாய் மற்றும் முறுக்குகள் காணக்கிடைக்கும்,அதையெல்லாம் ஒன்றையும் தொட்டுக்கூடப்பார்க்காதவனாக ஆகிப்போவான்,அவனை முக்கு ரோட்டிற்கு போய் கூப்பிடப்போகிற மாலை வேளைகளிலெல்லாம் தவறாமல் இதை அவனிடம் சொல்வதுண்டு,அவனும் தவறாமல் அதை மறுப்பதுண்டு.

மூடித்திறக்கிற கண்களின் விழித்திரை இரண்டிற்கும் மேலொன்றிற்கும் கீழொன்றிற்குமாய் இழுத்துக்கட்டப்பட்ட கயிறுகள் அறுந்து விழாதபடி பார்த்துக் கொள்ளவும்,கண்களின் கருவிழிகள் இடம் பெயர்ந்து விடாமலும், அசையாமலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவுமாய் சாரம் கட்டி ஒரு ஆளை நிறுத்த வேண்டி இருக்கிறது.

ஆனால் பையனுக்கானால் அப்படியெல்லாம் இருப்பதில் பிடித்தம் இல்லை. உடல் ஒத்துக்கொள்ளவும்இல்லை.அதிக நேரம் படிப்பதும் கண் விழிப்பதும் அவன் உடலுக்குச் சேரவில்லை.

முதலில் உடல்சூடுஏறிக்கொண்டது,பின் சாப்பிட்ட சாப்பாடு உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஒருநாளைக்கு நான்கைந்து தடவை பாத்ரூம் போனான். இவன் எப்பொழுதும் நம்பிக்கை வைத்து இயங்கிக் கொண்டிருக்கும் ஹோமியோபதி வைத்தியரிடம்தான் கூட்டிப் போனான் பையனை, அவர் பெரிதாக ஒன்றுமில்லை, மனஅழுத்தம்தான் என்றார்.

ஆனால் அவரிடம் போய் வைத்தியம் பார்த்துக் கொண்டபின்னும் அதே போல் தான் இருந்தது. பள்ளிக்கி அடிக்கடி லீவு எடுக்க வேண்டி வந்தது.அது அவனு க்கே ஒரு மாதிரி தர்ம சங்கடமாயும் குற்ற உணர்வாயும் இருந்தது. அதற்கு அவன் சொன்ன ஒரே காரணம் வேறு ஏதாவது உடல் கோளாறு என்றால் சமாளித்துக்கொள்ளலாம். பாத்ரூம் பிரச்சனையை எப்படி,,,?அதுவும் ஸ்கூலில் பாத்ரூம் இருந்தால் தைரியமாகப் போய்விடுவேன். அது இல்லாததால் தயக்கமாக இருக்கிறது எனவும் பள்ளியில் போய் பாத்ரூம் வந்தால் நான் எங்கு போவேன் என்றும் கேட்கிறான். அவனுக்கு சரியான பதில் சொல்வது விடுத்து இப்படியேஇருந்தால் படிப்புக் கெட்டுவிடும் எனத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

கணக்கு,தமிழ்,இங்கிலீஸ்,,,,,,,,எனஅடுக்கப்பட்டிருக்கிற வரிசையில் ஒன்றைக் குறைத்தால் நன்றாக இருக்கும் என யோசித்துக்கொண்டிருக்கிற வேளையில் ஐய்யையோ இன்னும் ஒன்று அல்லது இரண்டு பாடம் கூட்டலாமா என்பது பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறோம் என பதில் வருகிறது கற்பிக்கிற தரப்பி லிருந்து.

ஆனால் அவர்களைச்சொல்லியும்,ஆனால் அவர்களைச்சொல்லியும் குற்றம் இல்லை,சனி ஞாயிறுகளின் விடுமுறை தினங்களில் கூட வகுப்பு எடுக்க வந்து விடுகிறார்கள் பள்ளிக்கு/

இதில் பையனின் பயாலஜி டீச்சர் படுகிற சிரமம்தான் சற்று கடினமானதுதான். மதுரையிலிருந்து தினசரி போய் வருகிற அவளுக்கு இது போலான சனி ஞாயிறுகளின் லீவுதினங்கள்தான் சொர்க்கம் அல்லது பிரீ/எங்காவது சொந்த பந்தம்வெளியூர், விசேச நிகழ்ச்சிகள், கோயில்குளம் எனபோய் வரலாம். ஆனால் அதை சனி ஞாயிறு கிளாஸ்கள் கெடுத்து விடுகிறது. கைக்குழந்தைக்கு வைத்தியம் பார்க்க டாக்டரிடம் கூட போக முடிவதில்லை. டாக்டர் கூட சப்தம் போடுகிறார். சம்பாதியத்தப் பாக்க ஓடுற சாக்குல கொழந்தைய மறந்துறாதீங்க என்றார்,

“என்ன செய்ய சார்,பாத்துக்கிட்டு இருக்கூற வேலைய திடீர்ன்னு கொழந் தைக்காக விட்டுட மனசு இல்ல சார்,தவிர இதயும் விட்டுட்டா எங்களுக்கு ன்னு இருக்குற பெரிய பிடிமானம் போயிருமுன்னு நம்புறோம், இதுலதான் எங்க தன்மானமும் அடங்கிக் கெடக்குன்னு நெனைக்க வேண்டியதிருக்கு/ எங்க சாருக்கும் வீட்ல உக்கார நேரமில்ல,ஓடிக்கிட்டே இருக்காரு,அவரு பொழப்பு அப்பிடி என்ன செய்ய,ஏதோ வேலைக்காரம்மா தயவுல குடும்பம் ஓடிக்கிட்டு இருக்கு சார், ஏங் வயசுல இந்த மாதிரி நல்ல வேலைக்காரம்மாவ பாத்த தில்ல.அவுங்கமட்டும் இல்லைன்னா ஏங் நெலமைய நெனைச்சிப் பாக்கவே தர்ம சங்கடமா இருக்கு சார், அந்த அம்மாவுக்கெல்லாம் கோயில் கட்டி கும்புடணும் சார். அவுங்களுக்கு மட்டும் இல்ல சார், ஏங் வீட்டுக்காரருக்கு, கூட வேலை பாக்குற டீச்சர் வாத்தியார்களுக்கு,சமயத்துல ஏங்கிட்ட படிக்கிற பசங்களுக்குன்னு,,,,,, நெறையப் பேருக்குநான் கடமைப் பட்டிருக்கதா நெனைச்சிருக்கேன், அன்னைக்கி ஒரு நா இப்பிடித்தான் லீவு நாளைனக்கி கிளாஸ் எடுத்துக்கிட்டு இருந்தப்ப ஒரு மத்தியான நேரம் மயங்கி விழுந்துட்டேன்.பதறிப் போச்சி புள்ளைங்க,,, அதுலஉள்ளூர்ல இருக்குற ஒரு பொம்பளப்புள்ளதான் தண்ணி எடுத்து தெளிச்சி எழுப்பி உக்கார வச்சிட்டு ஓடிப்போயி அம்மாவையும் பக்கத்துவீட்டுக்காரங்கலயும்கூட்டிக்கிட்டு வந்துட்டா,எனக்கு ஒண்ணும் இல்ல, சும்மா சாதாரண மயக்கம்தான்னு சொன்னாலும் கூட போக மாட்டேங் கிறாங்க,நான் கிளாஸ் நடத்தி முடியிற வரைக்கும் பள்ளிக்கூட வாசல்லயே ரெண்டு பேர் இருந்து கிளாஸ் முடிஞ் சதும்என்னையக்கொண்டு வந்து பஸ் ஏத்தி விட்டிட்டுத்தான் போனாங்க/

சமயங்கள்ல ஸ்கூல்ல அஜெஸ்மெண்ட் பண்ணிக்கிருவாங்க, இல்லைன்னா லீவு கிடைக்கும் .சமயங்கள ஒங்க வேலைய நீங்கதான் சரியா பாத்துக்கிற ணுன்னுஉத்தரவுவரும்பள்ளிநிர்வாகத்தரப்பிலிருந்துஅதுக்கும்அடிபணிஞ்சிதான் ஆகணும்,என்ன செய்ய சார் எங்க நெலமஅப்பிடி,/ இந்தமாதிரியான நேரங்க ள்லஎங்ககோபமும் ஆதங்கமும் பசங்க மேலதான் திரும்பும்,ஊருக்கு யெளச்ச வன் கதையா அவுங்க ஆகிப்போவாங்க,,,,,/

அப்படித்தான் பள்ளி விடுமுறை தினத்தின்று ஒரு சனிக்கிழமை கிளாஸ் வைத்திருந்த போது ஆற்றாமையில் இரண்டு பசங்களை அடித்து விட்டாள். அதில் இவனது பையனுக்கு கூடுதல் அடி. அடியின் வேகம் தாங்காமல் காய்ச்சல் வந்துவிட்டது. இவனுக்கானால் சரியான கோவம். என்ன இது இப்படியா பிள்ளையைப் போட்டுஅடிப்பது? என ஆசிரிய நண்பர் ஒருவரிடம் குறை பட்டுக் கொண்டிருந்த போது அவர் சொன்னார், புள்ளைகள அடிக்கக்கூடாது வைக்கக் கூடாதுன்னு சொன்னாலும் என்ன செய்ய சார், ஏதோ ஒரு மன வருத்ததுல, ஆத்தமாட்டாமலேசா பெரம்பெடுத்துற வேண்டியதுதான் இருக்கு, ஆனாஅதுக்காக நாங்க மனசளவுல வருத்தப்பட்ட நாட்க நெறைய இருக்கு சார், பெரம் பெடுத்து புள்ளைகள அடிக்கப்போறதுக்கு முன்னடியோ இல்ல அடிச்சி முடிச்ச பின்னா டியோ வருத்தப்படாம இருந்ததில்ல. என்னையப் பொறுத்த அளவுக்கு இங்லீஸ் மீடியத்துல படிச்சிட்டு இருக்குற ஏங் பையன் ஞாபகம்தான் வரும். அந்த மாதிரியான நேரத்துல அது போலத்தான் எல்லா டீச்சர் வாத்தியார்களுக்கும் வருத்தம் இருக்கும். தவிர விடுங்கள் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்., அப்படித்தான் இருக்கும் இந்த ஒரு வருடம், இது அவன் தலை விதியை நிர்ணயிக்கிற வருடம்,அதனால் பசி தூக்கம், சாப்பிட்டான், சாப்பிடவில்லை, உடல் நோவு டீச்சர் அடிக்கிறாள் என்பதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பிள்ளைகள் நன்றாகப்படித்து நல்ல மார்க வாங்கி சந்தோஷமாக வந்து நிற்கிற போது பட்ட கஷ்டமெல்லாம் மறந்து போகும் என்றவர் பையனை சரியாக இருக்கச்சொல்லுங்கள் பள்ளியில் ஏனென்றால் இந்தக்காலத்தில் இந்த வயதில் பிள்ளைகளை நம்ப முடிவதில்லை என்றார். நான் சொல்கிற இந்த வார்த்தை என் பிள்ளைகளுக்கும் பொருந்தும் என்றார்.

அவர் என்ன சொன்ன போதும் கூட மறுநாள் பையனை ஸ்கூலில் போய் விட்டுவிட்டு டீச்சரிடம் சொல்லி விட்டு வந்தான். இவனைப் பார்த்ததும் சிறிது நேரம் நன்றாக பேசிக் கொண்டிருந்தவள் அழுதுவிட்டாள் இவனுக்கே கொஞ்சம் பாவமாகக்கூடப் போயிற்று. அப்படியே வாசலோடு போயிருக்கலாமோ பள்ளிக்குள் வந்திருக்கக்கூடாதோ, என்கிற நினைப்பில் டீச்சர் அழுது முடித்ததும் வருத்தம் தெரிவித்து விட்டு வந்து கொண்டிருக்கையில் ரயில்வே கேட் அடைப்பிற்காய் நின்றிருந்த போது நண்பர் ஒருவர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

சார் ஏம் பொண்ணு பத்தாம் வகுப்புப் படிக்கிறா, கணக்குல 50மார்க்கு வாங்குனா, போன தடவ, டீச்சர் கூப்புட்டு விட்டாங்க போனேன், ரொம்பக் கொறபட்டுச் சொன்னாங்க, சரிதான் டீச்சர் இவ்வளவு குறை பாடுகள சொல்ற அதே வேளையில பிள்ளைகளுக்கு கணக்குன்ன என்ன அதப்படிச்சா வாழ்க்கைக்கு எவ்வளவு தூரம் பயன்படுமத எவ்வலவு தூரம் நடை முறை வாழ்க்கையில எவ்வளவு தூரம் பிராக்டிகலா அப்ளைப் பண்ணி பாக்கமுடியும்ன்னு சொல்லிக்குடுங்க, சரியா வருவாங்கன்னு சொல்லீட்டு வந்த கொஞ்ச நாளையில இப்ப டீச்சர் எங்க கூட நல்லா பேசுறாங்க சார். எல்லாரும் கொஞ்சம் நல்லாப்படிக்கிறோம்ன்னு சொன்னா சார், இதுதான் வேணும் பள்ளிக்கூடங்களுக்கு என்றார்.

அது போல் இவன் பள்ளிக்குப்போன போது டீச்சரிடம் ஏதாவது சொல்லலாம் என நினைத்த போது அவளது அழுகை இவனை ஒன்றும் பேச விடாமல் செய்து விட்டது.வந்து விடுகிறான் ஏதும் சொல்லாமல்/

அதற்கப்புறமாய் பள்ளியையும் பார்க்கவில்லை. டீச்சரையும் பார்க்கவில்லை.

அவனும் என்னதான் செய்வான்பாவம்.தினசரிகளில் இரவு பணிரெண்டு மணி வரைக்கும் படிக்கிறான்.பாடங்கள் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் ஒரு மணியைக்கூட எட்டித்தொட்டு விடுகிறது .

Print Friendly, PDF & Email

1 thought on “கொட்டாவி,,,

  1. தங்கள் கருத்துகளுக்கு நன்றி. பெண் மனது ஆழம் என்பதாக கதையை முடித்திருக்கிறேன்.
    G.ஆனந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *