பதறாமல் செய்யும் காரியம் சிதறாது!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2022
பார்வையிட்டோர்: 8,149 
 

“குருவே நான் அடிக்கடி பதட்டமாகிவிடுகிறேன். அதனால் நிறைய பிரச்னைகள் வருகின்றன” என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. அப்படியா?”

ஆமாம் குருவே பதட்டத்தில் நான் செய்யும் காரியங்கள் எல்லாம் தப்பாக முடிகிறது” என்று சொன்னம் அவனுடைய பிரச்னை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

“இது புத்தர் வாழ்க்கையியில் நடந்தது. ஒரு முறை புத்தரும் அவரது சீடர்களும் ஒரு கிராமத்தைக் கடந்து கொண்டிருந்தார்கள். அப்போது புத்தருக்கு தண்ணீர் தாகம்.
ஒரு சீடனிடம் தண்ணீர் கேட்டார்.

அவன் தண்ணீர் எடுத்து வர அருகிலுள்ள குளத்துக்கு ஓடினான். அங்கே குளக்கரையில் கிரமாத்துவாசிகள் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள். அதனால் குளம் கலங்கி இருந்தது. அதிலிருந்து தண்ணீர் எடுத்துப் போய் கொடுக்க சீடனுக்கு மனமில்லை. ஓடி வந்து புத்தரிடம் பார்த்ததைச் சொன்னான்.

உடனே புத்தர், பராவயில்லை சிறிது நேரம் கழித்துப்போய் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி அங்கிருந்த மர நிழலில் அமர்ந்து கொண்டார்.

ஒரு மணி நேரம் கடந்திருக்கும். புத்தர் சீடனை அழைத்து மீண்டும் குளத்துச் சென்று தண்ணீர் எடுத்துவரச் சொன்னார்.

சீடனும் குளத்துக்குச் சென்றான்.

குளக்கரை காலியாக இருந்தது. கிரமாத்துவாசிகள் துவைத்து முடித்து சென்றியிருந்தார்கள். குளத்தின் காலங்கலும் அடங்கி தண்ணீர் தெளிந்து இருந்தது. சீடன் தெளிந்த தண்ணீரை எடுத்துக் கொண்டு புத்தரிடம் சென்றான்.

ஒரு மணிநேரம் முன்பு பார்த்த குளம் போலவே இல்லை, மிகவும் தெளிந்து இருந்தது என்றான் குருவிடம்.

அதற்கு புத்தர் அவனிடம் மனித மனமும் இப்படித்தான். பதட்டத்தில் இருக்கும்போது கலங்கியிருக்கும். அந்த நேரம் நாம் எந்தக் காரியும் செய்யக் கூடாது. சிறிது நேரம் அமைதியாக இருந்தால் மனம் தெளிவடையும். அப்போதுதான் நம் பணிகளைச் செய்ய வேண்டும்’ என்றார்.

இந்த சம்பவத்தை குரு சொன்னதும் வந்தவனுக்கு தன்னுடைய பிரச்னை என்னவென்று புரிந்து.

அப்போது குரு அவனுக்கு சொன்ன WIN மொழி:

பதறாமல் செய்யும் காரியம் சிதறாது!

– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *