சொல்லூக்கி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 10, 2015
பார்வையிட்டோர்: 7,095 
 

வணக்கம் நண்பரே இறந்து இரண்டு தினங்களாகிப்போன தங்களுடன் பேசலாமா கூடாதா எனத் தெரியவில்லை. சரியாக/ ஆனாலும் பேசிப்பார்க்கலாம் அல்லது இப்படியாய் எழுதியும் வணக்கம் சொல்லியுமாய் மகிழலாம் என்றிருந்த நீண்டு போன பொழுதுகளின் மதியம் ஒன்றில் தோன்றி மறைந்த யோசனையின் படி யாய் தங்களுக்கு எழுதுகிறேன். அல்லது எழுத்து மூலமாய் பேசுகிறேன்.

நண்பர் முத்தமிழன்தான் தகவல் சொல்கிறார் தாங்கள் இறந்து போனதாக. சரியான நபர் சரியான நேரம் பார்த்து சொன்ன தகவலாகவே பதிவாகிறது என்னுள்.

காலையின் 8.45ற்கு அவசரமான அலுவலகப் புறப்பாடு இருந்து கொண்டிருக்கிறதுதான்.

பையனை ஸ்கூலுக்குக் கொண்டுவிட்டு வந்தது, பாத்ரூம், குளியல், சாப்பாடு, மனைவியுடனானபேச்சு,,,,எனஇன்னும் இன்னு மாய்நீண்டு கொண்டிருந்த பொழுதில் தான் அவரிட மிருந்து வருகிறது தகவல் தொலைபேசி மூலமாக/

எந்நேரம் உடல் அடக்கம் என்ன, ஏதென்ற தகவலை மட்டுமாய் சேகரித்துக் கொண்டு வருகிறேன் சாயும்காலமாய் அலுவலகம் முடித்து என அவரிடமாய்ச் சொல்லி விட்டு வழக்கம் போல் சாப்பாடு சுமந்த பையை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு படியிறங்குகையில் தென்படுகிற வீட்டுற்கு எதிரான வெட்டவெளிப் பரப்பின் பச்சைபசும் வெளி தவிர்க்க முடியாததாய்.

இரண்டுமழைபெய்தால் போதும் அடர்ந்துகொண்டு முளைத்து விடுகிறது புற்களும்இன்னபிறசெடிகளுமாக, சீமைக்கரு வேலைச் செடிகள் அடர்ந்து கிடக் கிற வெளியில் சிறிது நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் முளைத் துத் தெரிந்த செடிகள் முழங்கால்உயரத்திற்கு வளர்ந்து காட்சிப்படுவதாக/

இங்கென இல்லை பொதுவாகவே கண்படுகிற வெளிகள் யாவிலும் இப்படி யாய் செடிகளும்பச்சைகளுமாய் முளைத்து அடர்ந்து தெரிவதாக/

போனவாரம்பாலவனத்தம்ரோட்டில்போய்கொண்டிருந்தபோதுவிரிந்துகிடந்த தார்ரோட்டுக்குமட்டுமாய் வழிவிட்டு ரோட்டின்இருபக்கமுமாய்பச்சை முளைத்துவிரிந்துகிடந்தது.முளைத்துக்கிடந்தபச்சைபெரியமனதுபண்ணிரோட்டுக்கு வழி விட்டது போல இருந்தது பார்ப்பதற்கு/

அதேபார்வையுடன்இப்பொழுதுவிரிந்தவெளியைக்கடந்துசென்றுகொண்டிருந்த பொழுதுகடந்து போனநாய்க்குட்டி பார்க்க அழகாகவே இருந்தது, எத்தனைதான்பச்சைமுளைத்துஅடர்த்தியாய்த்தெரிந்தபோதும்கூடஅதனுள்ளாய்கிடந்தஉழப் பித்திரிகிற பன்றிகளும், கழுதைகளும் இன்னபிறவை களுமாய் வழக்கம் போல்வந்துபோய்க்கொண்டுதான்இருந்தன, ஆனால் பச்சைகளைச் சாப்பிடஎந்தஆடுகளும் இதுவரைவந்து போனதாய் எந்தத் தகவலும் இல்லை எனக்குத்தெரிந்து/

இது நாள்வரை தங்களின் நினைவு எனக்கு வரவில்லையா,அல்லது நீங்கள் வெளியூர்ஏதேனும் போய்விட்டதாய் நினைத் து இருந்துவிட்டேனாதெரியவில்லை.இரண்டும்கலந்துதங்களைகிட்டத்தட்ட மறந்து போய் விட்ட ஒரு நாளன்றில் தான் நண்பர் முத்தமிழன் சொன்னார் தங்களைப்பற்றி/

அடசண்டாளத்தனமே,அவர்சொல்கிறநாள்வரைஇல்லைஇந்தஊரில் தாங்கள்,எனநினைத்துக் கொண்டிருந்தமுட்டாள்த் தனத்தைஎண்ணிநொந்துபோகிறேன் கிட்டத்தட்ட./

நொந்துஎன்னசெய்யலாம்.நடந்துவிட்டஒன்றுக்காவும்தவறாய்தோணிப்பதிந்த நினைவுக்காவும் மனம் சுருண்டுநொந்து கிடப்பது பரிகாரமாகிப் போகாதுதான்.

நான்தான்கேட்டேன்.முத்தமிழனிடம்.அவரைப்பார்க்கவேண்டும்எங்கிருக்கிறார், எப்பொழுது போகலாம் என/கேட்டநாளன் றிலிருந்து இரண்டு நாட்கள் கழித்து தங்களைப்பார்க்க வருகிறோம்.

நீண்ட நாட்கள் கழித்துப்பார்க்க வருவதாலும் மறந்து போன ஒருவரை பார்க்கப் போவதாலும் ஏதாவது வாங்கிப்போகலாம் என்கிற நினைவை தடுத் தாண்டவராய் அப்பொழுது முத்தமிழன் காண்கிறார், சாப்பிடுவத ற்கும் செலவழிப்பதற்குமாய் அவருக்கு ஒன்றும் பஞ்சமில்லை தட்டுப் பாடும் இல்லைபேசுவதற்கும்அரவணைப்பதற்கும் தான்மனிதரும் உள்ள மும் இல்லை இப்பொ ழுது அதுதான் தேவையாயும் ஆகிப்போகிறது இந்தநிமிடம் அவருக்கு. ஆகவே கடும்மனம் படைத்தோர் களே,,,,,,, நீங்கள் நலமாய்உள்ளதுபோல்எல்லோரும்இருக்கவிரும்புங்கள் எனஒரு சின்ன உரைதாங்கியும் எண்ணம் சுமந்துமாய்வந்த வேளை ஒருவேலைநாளின் சாயும் காலமாய் இருக்கிறதுதான்.

அண்ணாநகர்க்காரர்அவர்என்கிறதனித்தஅடையாளத்துடன்இருந்தஉங்களைப் பாக்கவந்த சமயம் காற்றைக்கிழித்து வந்த பறவைகள் இரண்டு சிறகு விரித் தும், இறகுதிர்த்துமாய் வருவது போல தங்களைப்பார்க்க வருகிறோம்.

பத்துக்குப்பத்து இருக்கலாம் என்கிறதான நினைவு தாங்கள் இருந்த அறை, உள்ளே நுழைந்தபின்தான் தெரிந்தது,அது அறைஅல்ல.ஒட்டு மொத்த வீடே அதுதான் என.ஓடு வேயப்பட்ட வீட்டில் சமையலறையும்,இன்னபிற பொருட் களும் வைத்திருந்த இடம் போக மிச்சமிருந்த இடத்தில் போடப் பட்டிருந்தவயர்க்கட்டிலில்கருப்புஜமுக்காளம் விரித்துப்படுத் திருந்தீர்கள்.நாங்கள் இருவருமாய் வீட்டிற்குள் நுழைந்ததுகூடத்தெரியாத அளவிற்கு தூக்கத்தின் நீட்சி தங்களுக்குள்ளாய் குடிகொண்டிருந்தது போலும் அந்நேரம்.என்ன செய்வது இப்போது தெரியவில்லை.நான் முத்தமிழன் அவர்களைப் பார்க்க, முத்தமிழன் அவர்கள் என்னைப்பார்க்க என இரண்டு ஜோடிக்கண்களும் இரண்டு கோடிகேள்விகள்தேக்கிப்பார்த்துக் கொண்டிரு ந்த போதுஎழுப்பிவிடலாம்இப்பொழுதே ,இனியொருநாள்வந்து பார்க்க வாய்க்காது தங்களை என்கிற முனைப்புடனும், எண்ணத்துடனுமாய் தங்களை எழுப்புகிறோம்/

பச்சை,மஞ்சள்,சிவப்பு கலர் காம்பினேஷன் காண்பித்த வயர்க் கட்டில் வலது பக்கமாய் செயலிழந்து போன தங்களது கையையும் காலையும் கொண்ட முழுஉடலையும்தாங்கிஉருக்கொண்டதாய்/ அப்படியாய் உருக் கொண்டு காட்சி பட்டகட்டிலில் இருந்து வலது பக்கக்கைக்கு முழு பலத்தையும் கொடுத்து கையைஊன்றிஎழுந்தமர்ந்துவிடுகிறீர்கள்.

உடலின்முழுக்கனத்தையும்தாங்காதகைலேசாய்தடுமாற்றம்காண்பிக்கிறதாய், கண் முன்னாய் காண்பிக்கப் பட்ட உடலின்தடுமாற்றம் மிகவும் கனம் கொண்டு தெரிய பதறிப்பாய்ந்து பிடிக்க வந்த என்னை கையமர்த்தி இருக்க ச் சொல்லி விட்டு உதட்டோரமாய் கசிந்த புன்னகையுடன் எழுந்தமர்வர்கிறவராக/

நண்பரே,,,,,,,அப்படியாய்தங்களைஅழைக்கலாமாஎனத்தெரியவில்லை.எனக்கு வயது35,தங்களுக்கோ வயது70 ஐ எட்டித்தொடப்போவதாய்அறிந்தேன்/ இப்படி யாய் நம் இருவருக்கும் இடையிலாய் நீண்டு தெரிந்த கால இடை வெளியை இட்டு நிரப்ப முடியாத வயதுடைய நான் எப்படி தங்களை அப்படி அழைப்பது இருந்தாலும் கூட அப்படியே அழைத்துக் கொள்கிறேனே, அனுமதியுங்களேன் சற்றே,,,/

நண்பரேதங்களைஅந்தநாளின் முந்தைய கணம் வரை பார்த்ததாகவோ பேசியதாகவோஎந்தநினைவும் எந்த சரித்திரப் பதிவும் இல்லை என்னு ளாய்,,,,,எங்களது தொழிற்ச்சங்க ஐம்பது ஆண்டு விழாவை ஒட்டி பழைய பேருந்து நிலையத்தி லிருந்து கல்லூரிச்சாலைவரை ஒட்டுவதற்காய் அச்சடிக்கப்பட்டு சைக்கிள் கேரியரில்உருண்டையாய் சுருட்டிவைக்கப் பட்டிருந்தபோஸ்டர்கள்நூறையும் ஒட்டி விட வேண்டும் என நான் உட்பட நான்கு பேர் பஸ்கி தண்டாலெல்லாம் எடுக்கா மல்கிளம்பினோம். நேரமென்னஇரவுஒன்பதுமணிஇருக்கலாம்அல்லது கூட ஒரு அரை மணிசேர்த்துக்கொள்ளுங்களேன் நாங்கள் கிளம்பியநேரமென/

பொட்டலில்இருக்கிறதேர்முட்டிக்கடையில்சாப்பிட்டுவிட்டுத்தான்கிளம்பினோம் இரவு பணிரெண்டு மணிக்கு சூடான பூரியும் மசால் மொச்சையும் கிடைக்கும் கடை அது ஒன்றாகத்தான் இருக்கிறது நகரில்/

ஆளுக்குஇரண்டு செட்பூரி ஒருமொச்சை என சூடாக ஒருடீஎனவரைய றுத்து ச் சாப்பிட்டு விட்டு கிளம்புகிறோம். கிளம்புகிற நேரம் டீ ருசியாக இருந்ததால் சிறப்பு அனுமதி வாங்கிக்கொண்டு இன்னொரு டீ சேர்த்து குடித்துக் கொண்டி ருக்கும் வேளையில் கடைக்காரர் சொன்னதை கவனிக்கவில்லை. கடைக் காரர் சொல்லவருகிறார்ஏதோ,, என்றதும் காதைக் கழட்டிஅவர்அமர்ந்திருந்த கல்லாவின் மீதுவைத்துவிட்டு வாங்கிய டீயைவிட்டஇடத்திலிருந்துதிரும்பக் குடிப்பவனாகிப் போகிறேன்.நாவின் சுவையறும்புகளில் பட்டுப்படர/

தோளைச்சுரண்டியவன்தான்முதலாவதாககுடித்துமுடித்துகிளாஸைவைக்கிறான்.அவன்எப்பொழுதுமேஅப்படித்தான்.சூடானதை சீக்கிரமாகவும்,குளிர்ச்சியானதை மணிக்கணக்காவும் குடிக்க பழகிக் கொண்டவன். அவனது குணத்திற்கும் செய்கையின்வெளிபாட்டிற்கும்சம்பந்தம் இருக்காது. மென் மையாய் இருக்கிற நேரம் முரட்டுத்தனமான சொற்களைப் பயன்படுத் தியும் முரட்டுத் தனமாய் இருக்கிறநேரம்மென்மைகாத்த சொற்களைப் பயன் படுத்தியுமாய் பழகிப் போனவன். இது அவனதுஎல்லாநடவடிக்கை யிலுமாய் வெளிப்படும். சாப்பிடுவ தில், உடுத்துவதில்,சைக்கிள் ஓட்டுவ தில் மற்ற மற்ற எல்லாவ ற்றி லு மாயும்,,,,/ அப்படியான அவனது குணம் அவனை உற்றுநோக்குகிறவர்களுக்கே தெரியும் அல்லது அவனுடனாய் நெருங்கிப் பழகுகிறவர்களுக்கு மட்டுமே புரியும். ஏனோ எனக்குத்தெரிந்திருந்தது அது.

சாப்பிட்ட பூரிக்கும் குடித்த டீக்குமாய் காசு கொடுத்து விட்டு நகரும் போது அவரது கடை வாசலில் வால்போஸ்டர் ஒன்றை ஒட்டிவிட்டு நகர்கிறோம். கடைக்காரரும் ஒன்றும் சொல்லவில்லை பெரிதாக,போஸ்டர் ஒட்டியதும் கடைக்காரர் வந்து பார்ப்பார்.அது சினிமா போஸ்டராக இருந்தால் கிழித்து எரிந்து விடுவார் உடனடியாக/ .போஸ்டரில் இருக்கிற வாசகங்களின் ஞாயம் அவர் மனம் தொட்டால் கிழிக்க மாட்டார் போஸ்டரை.தவிர அதன் மேல் யாரையும் போஸ்டர் ஒட்ட அனுமதிக்க மாட்டார்.ஆகா இவ்வளவு பெரிய நல்ல உள்ளம் படைத்தவர் வாழ்க என வாழ்த்தி விட்டுத்தொடங்கினோம் போஸ்டர் ஒட்டும் பணியை.

பழைய பஸ்டாண்ட்தான் ஆரம்பக்குறி,அப்படியே அங்கிருந்து ஆரம்பித்து பஜார் வழியாக வந்து பின் மார்க்கெட் சந்தில் தென்பட்ட இடங்களிலெல்லாம் ஒட்டிக்கொண்டிருக்கையில்கூர்காசிரித்தார்ஸ்நேகமாய்.அவரதுஸ்நேகத்திற்கு பத்து ரூபாயை பதில் ஸ்நேகமாய்க்கொடுத்துவிட்டு தொடர்கிறவர்களாய் பணியை.

மில்லில்இரவுசிபட்முடிந்துபோகிறவர்கள் லேட்டாய் வீட்டுக்குப் போகிறவர்க ளில்சிலர் அந்த வழியாய் போய்க் கொண்டிருந்தார்கள்.செகண்ட் ஷோ சினிமா பார்த்துவிட்டுப்போகிறவர்களும் இதில் சேர்த்தி/

வானம்அடர்த்தியாய்இருண்டுபோய்/அதில்மின்னித்தெரிந்தநட்சத்திரங்களில் ஒன்றுஎனது காதலியை ஞாபகபடுத்திச் சென்றதாயும்,லேசாக கண் சிமிட்டி கண் சிமிட்டி காணப்பட்டதாயும்/

ஒன்று இரண்டு மூன்று என ஒட்டிய போஸ்டர்கள் காலியாகிக் கொண்டிருக்க ஒட்டப்பட்ட இடங்கள் கடந்து நாங்கள் கடைசியாய் வந்து சேர்ந்த இடம் காலேஜிற்கு அருகிலாய் இருந்தது.

நன்றாகஇருந்தால் இன்னும் பத்து அல்லது பதினைந்தே போஸ்டர் இருக்கும் நேரமும் நள்ளிரவைத்தாண்டிசிறிது மணிகளாகிப்போகிறது.ப்ளாஸ்டிக் வாளி யில்இருந்தபசையும்காலியாகப்போகிறது. கூடவே உடல் தெம்பும். மெதுவாக பசைதடவிஒட்டப்போகிறபோஸ்டரைகையிலெடுத்துசுவற்றுக்குமுகம்காட்டி யும்ரோட்டுக்குமுதுகு காட்டியும் ஒட்டிக் கொண்டிருக்கும் பொழுது பின்னாலி ருந்து முதுகைத் தொட்டகரத்தின்வாஞ்சை மேனி படர திரும்பிப் பார்க்கிறேன். மெதுமெதுவாக.

ஆகா யாரிவர்முன் பின்பார்த்தறியாத மனிதராய்த்தெரிகிறாரே/என்கிறகேள்வி க் குறிதாங்கி பார்த்த பொழுது பசை தாங்கிய கரம் எனது கரம் எனத்தெரிந்தெ ரிந்திருந்தும்வேகமாய்கைநீட்டுகிறீர்கள்என்னைநோக்கிபார்வையில்நட்பு

படர்ந்திருக்க/

நண்பரேஎன்னைஉங்களுக்குத் தெரியாது,ஆனால் உங்களை எனக்குத்தெரியும் நன்றாக இல்லாவிட்டாலும் கூடஓரளவிற் காவதுஎன்கிறீர்கள்.

கொண்டகொள்கையில்உறுதியும்இருக்கிறதொழிற்சங்கத்திற்க்காய்இரவுபகல் பாராது உழைக்கிற அர்ப்பணிப்பும் மிகப் பெரியதுஎன்கிறவார்த்தையை தங்க ளின் கைகுலுக்கலின் போது சேர்த்து கோர்த்து விடுகிறீர்கள் ஸ்னேகத் துட னாய் சிரித்துக் கொண்டு/

அப்பொழுதுதான்கவனிக்கிறேன்தங்களை. வெள்ளை வேஷ்டியும் வெள்ளைச் சட்டையும் தாங்கி இருந்த நீங்கள் கைகுலுக்கிவிட்டு சிறிது நேரம் நின்று பேசிவிட்டு நகரும் போது தங்களது இடுப்பிலிருந்த கத்தி கழன்று கீழே விழுகிறதுவேஷ்டியைஇறுக்கிக்கட்டும்போது,என்னடாஇதுஎன உற்று நோக்கி தரைதொட்ட கத்தியை எடுத்துக்கொடுத்த நான் இது எதற்கு எனக் கேட்ட போதுஇப்படித்தான்இருக்கமுடிந்ததுஎங்களால்முன்னொரு நேரத்தில் இப்பொ ழுதும் கூடசிற்சில சமயங்களிலுமாய்.அதனால்தான் இந்த,,,,,,,, எனச் சொன்ன நீங்கள் அந்த இடத்தில் நிற்காமல் வேகமாய் போய்விடுகிறீர்கள் அங்கிருந்து.

போகட்டும்சரி என தாங்கள் போன காலடித்தடத்தையேஉற்றுப்பார்த்தவனாய் சிறிது நேரம் இருந்து விட்டு ஒட்டிமுடித்த போஸ்டரின் வண்ணம் பார்த்த வாறும்,அதைப் பற்றி பேசியவாறுமாய் கலைகிறோம்.திரும்பவும் தேர் முட்டி டீக்கடை க்குப் போய்விட்டுபோகவேண்டும்வீட்டிற்கு என்கிற எண்ணம் தாங்கி/

அன்றிலிருந்து சரியாக ஒரு வாரம் கழித்து தங்களை அதே பஜாரில் வைத்து பார்த்தபொழுது இப்பொழுதெல்லாம் நான் கத்தி வைத்துக்கொள்வதில்லை. என்கிறீர்கள், மற்ற மற்றவான விஷயங்களைபேசிக்கொண்டிருக்கும் போது,/

ஆமாம் கத்தி வைத்துக் கொண்டிருந்த பொழுதுகளில் என்னைசுற்றி நான் மட்டுமே இருந்த மாதிரி இருந்தது,இப்பொழுது கத்தி இல்லாத சமயங்களில் என்னைச்சுற்றி பத்து பேர் இருக்கும் ஆச்சரியம் நிகழ்ந்து போனது,அந்த ரசாயன மாற்றம் என்னுள்ளாய் ஏற்படகாரணமாய்இருந்த முக்கியக் காரணி யாய் நீங்கள் இருந்தீர்கள் என்பதை நினைக்கும்போதுமிகவும் பெருமிதமாய் இருக்கிறது நண்பரே, நீங்கள் வெறும் தொழிற்சங்கவாதியாய் மட்டுமல்ல, தங்களது விசாலப்பார்வைக்கு நிச்சயம் நிச்சயம் ஒரு பொது நலவாதியாய் பரிணமிப்பீர்கள்,வாருங்கள்இன்னுமொருடீசாப்பிடுவோம்என ஏற்கனவே டீக்குடித்துவிட்டுகாய்கறிக்கடையில்நின்றுகொண்டிருந்தஎன்னைகூப்பிட்டுப்போகிறீர்கள், மதியநேரத்தில் எதற்கு டீ என்கிற சொல்லையும்தாண்டி./

அதற்கப்புறமாய்எத்தனையோமுறைநிகழந்ததற்செயல்சந்திப்புகளில்எத்தனை யோ பேசியிருக்கிறோம் என்பதாகவே நினைவு.அந்த அத்தனை பேச்சுகளிலும் ஒரு நிமிடம் ஒரு முறை கூட தாங்கள் ஆகவே நண்பரே,,,,,,,என ஆரம்பிக்கிற கடினப்பேச்சு பேசியதில்லை, இல்லைநாங்களெல்லாம் அந்தக்காலத்திலே,,,,,,, என்பது மாதிரியுமாய்சொல்லிக் கொண்டதில்லை.எல்லாம்யதார்த்தப் பேச்சு கள் யதார்த்தகண்ணோட்டங்கள், யதார்த்த அனுகல்கள்,,,,எனஇன்னும் இன்னு மான தனங்களுடன் இருந்த தாங்கள் ஒன்றை மட்டுமாய் திரும்பத்திரும்ப என்னிடம் சொன்னதாய் நினைவெனக்கு. விடாதீர்கள் ஓட்டத்தை ஓடிக்கொண் டே இருங்கள்,ஓட்டம் உங்களை செம்மைப்படுத்தும் என/

அதன்படிஓடிக்கொண்டேஇருக்கிறேன்,அந்த ஓட்டம்தான்என்னைமுனைப்புப் படுத்தி பொது நலவாதியாய் ஆகியிருக் கிறதோ இல்லையோநான் அப்படியாய் காட்சிபட்டுத் தெரிவதாய்ச் சொல்கிறார்கள். அதுதங்களின்சொல்ஊக்கம் தந்த பலனானக்கூடஇருக்கலாம்.இருக்கட்டும்எதுவானபோதிலும்அந்தப்பேச்சுமண் ணில் விதைக்கத் தூண்டுகிறவனின் முனைப்பையும்,விதை போடுகிறவனின் வேகத்தையும் கூட்டிக்கட்டிக்கொண்டிருந்ததாய்/

அதுஅந்த முனைப்பையும் வேகத்தையும்பிடித்து அப்படியாய்காட்சிப்பட்டு நிற் கிற நான் அன்று தங்களது சவ ஊர்வலத் தில் கலந்து கொண்ட இரண்டு தினங் களாகிப்போனபின்னாய்இறந்துபோனதங்களுடன்பேசலாமாகூடாதாஎனசரியாக பட்டுத்தெரியாததனத்துடன்பேசிப்பார்க்கலாம்அல்லதுஇப்படியாய் எழுதியும்வணக்கம் சொல்லியுமாய்மகிழலாம்எனஒரு நாளின் நீண்டு போன மதியம் ஒன்றில் தோன்றி மறைந்த யோசனையின்படிதங்களுக்கு எழுதுகிறேன்.

பாகம் 2

தங்களின் இறுதியடக்கம் மாலை எனச்சொன்ன முத்தமிழன் அவர்கள் எந்நேரம் எனச் சொல்ல மறந்து விட்டார் என நினைக்கிறேன்.

அவர் மறந்து போனாரா அல்லது அவர் சொன்னதை நான் மறந்து விட்டேனா தெரியவில்லை. அதனால் என்ன இப்பொழுது அவரால் மட்டுமில்லை யாராலுமே இது போலான நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட சரியான நேரம் குறிப்பிட்டுச் சொல்லி விடமுடியாதுதான். ஆகவே அவருக்கு போன் பண்ணிக் கேட்கிற போது சொல்கிறார். ஆறு மணி சுமாருக்கு இருக்கலாம் வாருங்கள் என/

அவரது பேச்சை ஏற்று அலுவலகம் விட்டு வெளியில் பார்த்தபோது மெலிதாக பெய்துகொண்டிருந்த தூறலுடன் கை கோர்த்து சில்லிட்ட காற்று மென்நடனம் ஆடியதாய் பட்டுத்தெரிகிறது.

மணி ஐந்து பத்து ஆகிறது, இந்நேரம் கிளம்பினால் சரியாக இருக்கும். அங்கு போய்ச் சேர/

நான்வேலைசெய்தஅலுவலகம்இருந்தரயில்வேபீடர்ரோட்டிலிருந்துதங்களின் வீடு இருந்த பைபாஸ் சாலைவரைக்குமாய் எப்படியும் இரண்டு கிலோ மீட்டர் தூரமாவது இருக்கலாம்.சரி இருசக்கரவாகனம்தானே சென்று விடலாம் சடுதி யான நேரத்தில் என்கிற முடிவுடனாய் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த நேரம் தூறல் கொஞ்சம் குறைந்திருந்ததாய்/

இன்று காலையில் தான்நல்லவெயில் அடித்தது.காலையில் அலுவலகத்தி ற்கு சைக்கிளில் வருவதற்கு முன்பாக வேர்த்துவிட்டது. (தஸ்புஸென மூச்சு வாங்கியது கிளைக்கதை.பதவி உயர்வான நாளிலிருந்து இன்றுவரை கூடிக் கொண்டேவந்து விட்டதுதான் உடல்.குறிப்பாகதொந்தி போட்டு விட்டது. உடல் எடையும் கூடிப் போய் விட்டது.வீட்டில்மனைவிகூடகேலி பண்ணுவாள். என்னது முன்பெல்லாம் என்னை கேலி பேசுவீர்கள்.இப்பொ ழுது உங்களது உட லை நீங்களேகவனிக்காமல் விட்டுவிட்டு விட்டது ஆச்சரியமாயும் கேள்விக் குறியாயும் சங்கடம் சுமந்துமாய் தெரிகிறதே/ இத்தனைக்கும் நீங்கள்உடற் பயிற்சி, யோகா, வாக்கிங்,,,,,,எனக் கற்றுத்தெரிந்தவர். அப்படி இருந்த போதும் கூட ஏன் இப்படி வம்பாக்கிக் கொள்கிறீர்கள் உடலை?முன்பை விட சோம்பலாகித் தெரிகிறநீங்கள்அதை உதறிவிட்டு மீண்டு வரவேண்டும்.பழைய மாதிரி ஒல்லி யாகவும் சற்றே அழகாகவுமாய்/ என்கிற மனைவியின்பேச்சை ஏற்று இப்பொ ழுதுஎன்னவந்துவிட்டால்போகிறது பழைய மாதிரியாய் என மனம் எடுக்கிற முடிவைஉடல் செயல் படுத்திப் பார்க்கமறுக்கிறது..அல்லதுதள்ளிப்போடுகிறது.)

அலுவலகத்திற்குள்போய்பேன்காற்றில்அமர்ந்தநேரம்வியர்த்த வியர்வையும் வாங்கிய மூச்சும் கொஞ்சமாய்ஆசுவாசம் கொள்கிறதுதான்,

ஒருவாரத்திற்குசற்றுமுன்புவரைஇப்படியாய்வேர்க்கவில்லை.இன்னும்இருக் கிறது குளிர் மாதங்கள்இரண்டு.”தைமாசம்தரையெல்லாம் குளிரும் மாசி மாசம் மச்சு வீடும்குளிரும்”என்கிற சொல் தாங்கிய மாதங்களான இரண்டில் இன்னும்தைமாதம் பிள்ளையார் சுழிகூடப்போடவில்லை. அதற்குள்ளாக பெய் த மழையும்பெருமழையாகஅல்லாமல்தூறலாகவும் பெரும் தூறலாகவும் பெய்து தன் கடமையைமுடித்துகண்ணைஇறுக்க மூடிக்கொண்டது தான்.

நீர் நிலைகளில் தண்ணீர் இல்லை ஆனால் பயிர் பச்சை விளைந்து போனது. விளைந்துகிடக்கிறஅரிசியையும்காய்த்துக்கிடக்கிறகாய்கறிகளையும் சமைத் துச் சாப்பிடவும் குடிக்கவுமாய் தண்ணீர் வேண்டுமே,அதற்கு இப்பொழுது பங்க ம் வந்துவிடும்போலிருக்கிறதே எதிர்வரும்வெயில் காலத்தில்/ எனநினைத்த வாறே மெலிதாய் பெய்து கொண்டிருந்ததூறலைகீறிக்கொண்டு கிளம்புவனா கிறேன். தங்களின்வீடுநோக்கி.

மாலை நேரம் என்பதால் நான் வந்து கொண்டிருந்தநேரத்திற்குபோக்குவரத்து சற்றேஜாஸ்திதான்.பொதுவாக இம்மாதிரியாய்வெளியில் போகிற போதுபஜார்ப் போகும் சந்தர்ப்பம் வாய்க்கப்பெறுகிற சமயங்களில் நான் போகிற பள்ளிப் பக்கமாய்போவதுவழக்கமாயிருந்தது.

சென்றவாரம்கடைக்குடீக்குடிக்கப்போயிருந்தபோதுடீக்கடைபாய்தனதுமகளுக்குதிருமணம்எனபத்திரிக்கைக்கொடுத்தார்.திருமணம் நடக்கவிருக்கிற இடம் பற்றிக்கேட்டபோது பள்ளியின் அருகில் இருக்கிற பள்ளிவாசலில் என அம்புக் குறியிட்டார்.இடம்தெரியுமாசார். அந்தசாலையில் வந்து அப்படியே நேராகத் திரும்பினால் என மேப்ப் போட்டுக் காண்பித்தவரை இடை மறித்துத் தெரியும் பாய் நான்படித்தபள்ளிஅருகே இருக்கிற பள்ளி வாசல்தானே தினமும் காலை யிலும் மாலையிலுமாய் கேட்டபாங்கு ஒலி காதிலும்,பண்டிகைக்காலங்களில் வாங்கிகுடித்த நோன்புக் கஞ்சியின் ருசிநாவின்சுவையறும்புகளிலுமாய்ஒட்டிக் கிடக்கிறது தானே இன்னும்/ அப்புறம்எப்படிபள்ளிவாசல்மறக்கும் பாய்?

ஒருசமயம்பள்ளிவாசலின்வலதுபுறம்ரோட்டைவிட்டுசற்றுத்தள்ளிகீழேயிருக் கிறகிணற்றில் தூர்வாருகிறார்கள் எனசிறுவர்கள் சொன்ன பேச்சைக் கேட்டு கிணற்றினுள்ளே எட்டிப்பார்த்த பொழுது ஆட்கள் வேலை செய்யாத தண்ணீர் அற்ற வெற்றுக் கிணறுதான் கண்ணுக்குத்தட்டுப்பட்டதாக/

எட்டிப்பார்த்துரோட்டில் போன மனிதர்களின் சப்தத்தால்விரட்டுப்பெற்று வந்த துவேமிச்சமாகிப்போனது.அன்று/அந்தநாட்களின் ஞாபங்களும் ஊரின்அடையாளமானஅந்தப்பள்ளியும்அதில்படிக்கிறசமயங்களில்தலைமைஆசிரியரிலிருந்து என்சிசிமாஸ்டர்வரை நன்றாக அமைந்து போன ஆசிரியர்க்குழுவும் அங்கு படித்தமாணவ,மாணவிகள்பலபேரைசெப்பனிட்டு சரிசெய்தது. போல் என்னை யும் சரி செய்தது எனச்சொன்னபோது டீக்கடை பாய் சார் நான் படித்ததும் அதே பள்ளி,அதே தலைமையாசிரியர்,அதே ஆசிரியர்க்குழுதான் என்ன நான் உங்களுக்கும்ஒருவருடம் சீனியர்என்றார்,அப்புறமாய்குடித்தகிளாஸைகீழேவைக்க மறந்து பள்ளியையும் பள்ளியின் பெருமைகள் பற்றியுமாய் பேசிக் கொண்டிரு ந்தோம்.

அவருடன்படித்தமகேஸ்பெயிலாகிஎட்டாம் வகுப்பிலேயே தங்கிவிட்ட போது நான் எட்டாம் வகுப்பிற்குள் நுழைபவனாகிப்போகிறேன்/

அந்த வகுப்பில் ஒரு சிலருக்கு இருந்தது போலவே மகேஷின் மேல் எனக்கும் ஒருஈர்ப்புஇருந்தது,அதுஎப்படி காதலாகிவிடமுடியும் எனத் தெரிய வில்லை. இன்னும்சொல்லப்போனால்அப்படியானஒருவார்த்தைக்குஅர்த்தமேதெரியாது என இருந்திருந்தகாலம்,தெருவில் ஒட்டப்படிருக்கிற சினிமாப் போஸ்டரில் நெருக்கமாய்இருக்கும்நாயகன்,நாயகியின்படங்களைக்கூட வெகு ரகசியமாய் பார்த்துமகிழ்ந்தகாலம்/ அப்படியான நேரங்களில் அடுத்தபெஞ்சில்முதுகைக்காட்டிஅமர்ந்திருந்தமகேஷைநான்அவ்வளவுநெருக் கத்தில்பார்த்துவியந்ததில் ஆச்சரியம்ஏதும்இல்லைதான்,எனது பக்கத்தில் அமர்ந்திருந்தரமேஷ்தான்சொன் னான்,இந்த ஐடியாவை.

அவள் பெரும்பாலுமாய் பேனா,பென்சில்,ரப்பர் என ஏதாவது ஒன்று கொண்டு வரமாட்டாள்.அப்படிகொண்டுவராத நேரங்களில் நீ ஆபத்பாந்தவனாக மாறி விடு என்றான்.அப்படியாய் மாறிப்போய் கையில் புல்லாங்குழல் இல்லாத கிருஷ்ணனாக,ஊர் மெச்சுகிற நல்லவனாக என நம்பி உருமாறி நின்ற போது அவள் என்னை திரும்பிக்கூடப்பார்க்கவில்லை,இத்தனைக்கும் நான் அவசரத் திற்குக்கொடுத்த பேனா,பென்சில் ரப்பர் மற்றும் சேப்ட்டிப் பின்னின் உரு அர்த்த மற்றதாகிப்போனது,சரி விட்டுவிடுவோம்.

அவளுக்குகண்பூராவும்P.T பீரியடில் புல்லப்பஸ் எடுக்கப்பயப்படும்கோபால் மீது இருந்தது,P.Tமாஸ்டர் ஆறுமுகக்கண்ணனின்கண்டிப்புஸ்கூல் காம்பவுண் டைத் தாண்டியும்பிரபலம்.

ஒருசமயம்ஹெட் மாஸ்டர்அவரைஅழைத்துகொஞ்சம் கண்டிப்பைக் குறைத் துக் கொள்ளுங்கள்.இல்லையென்றால் விரண்டுவிடுவார்கள் பிள்ளை கள். நம் மைப்பார்த்துஎனச்சொன்னஹெட்மாஸ்டரையேமுறைத்துப்பார்த்துபயமுறுத்தி யவர்ஆறுமுகக்கண்ணன். அவரின்பீரியடில் அவர் சொன்ன தை அடிதப்பாமல்செய்கிற மாணவர்களில்நானும்ஒருவனாய்/

ஆனால்அவரைப்பார்த்ததுமாய்ஒண்ணுக்குப் போய் விடுகிற அளவிற்கு பயப்ப டுகிற கோபால் அன்று புல்லப்ஸ் எடுக்க வேண்டும். P.T பீரியடில், அவனுக்கு முன்னதாகநான்தான் எடுத்துக் கொண்டிருந்தேன் புல்லப்பஸ்,எடுத்து முடித்து கீழே இறங்கியதும் அடுத்ததாய் நின்ற கோபால் புல்லப்ஸ்க் கம்பத்தை எட்டிப் பிடிக்க முடியவில்லை,எல்லோரையும் போல் அவனால் தாவிப்பிடிக்க முடிய வில்லை,தரையிலிருந்து. இரண்டுமூன்றுமுறை அவன்தாவிப்பார்த்துதோற்றதைப்பார்த்தP.Tவாத்தியார்ஸ்போர்ட்ஸ்ரூமிலிருந்துஒருஸ்டூலைஎடுத்துக்கொண்டு வரச்சொன்னார்,

இன்னொருP.Tமாஸ்டர்உண்டு.அவர் இப்படியெல்லாம் செய்ய மாட்டார், கம்பத் தைஎட்டிப்பிடிக்கத்தவ்விக்கொண்டிருப்பவனைப் பார்த்துதலையிலடி த்துக்கொ ண்டுவிட்டுவிடுவார்,அதற்குகோபால்மட்டுமில்லைமகேஷீம்சேர்த்துசந்தோஷப் பட்டுக்கொள்வாள்.கோபால் விளையாடப்போகும் போது அவள் ம னம் பூராம் விளையாட்டு மைதானத்தில்மட்டுமே இருக்கும் ,அந்நேரம் நடக்கும் வகுப்பு அவளுக்கு எட்டிக்காய் க்கசப்பாய் மாறிப்போகும்.P T முடிந்து அவன் வந்தால் தான் அவளுக்கு உயிரே/

கரெக்டாகஅவளதுகிளாஸ்ஜன்னலிலிருந்துபார்த்தால்பிளேகிரவுண்ட்தெரியும். அந்த கிரவுண்டில்தான் அவளது உயிர் இருக்கும்,கோபால் விளையாடி விட்டு வரும்வரை,வாரம்இருமுறைநடக்கும்P.Tபிரியடில்கோபாலுக்குவாய்ப்பதும் பிடித்ததும் லேசான விளையாட்டுக்களே/மனம் போல் மாங்கல் யம் என்கிற சித்தெல்லாம் ஆறுமுகக்கண்ணனிடம் செல்லவில்லை,கிரவுண்டுக்கு வந்து விட்டால்அவர்சொல்லும்விளையாட்டுக்களை விளையாடி யே ஆகவேண்டும். இல்லையென்றால்கிரவுண்டுக்கு வரவில்லை என குறித்து வைத்து விடுவார்,

அதற்குப்பயந்தே பெரும்பாலுமாய் P.T பீரியடுக்கு வந்து விடுகிற கோபாலனை அன்று ஸ்டூலில் ஏற்றிவிட்டு விட்டார் ஆறுமுகக்கண்ணன். ஸ்டூலில் இருந்து புல்லப்பஸ்கம்பத்தை எட்டிப்பிடித்தவன் கால்கள்இரண்டையும்மடக்கிதொங்க ஆரம்பித்துவிட்டான்,ஸ்டூலைஅவன் காலடியிலிருந்து எடுக்கச்சொன்ன மாஸ் டர் டேய் காலைத்தொங்கப்போட்டுட்டு புல்லப்ஸ எடுடா ஒழுக்கமா என அரட்டஆரம்பிக்கவும்கீழேதரைப்பார்த்தவாறே கால்கள் இரண்டையும் தொங்கப் போடாமல்மடக்கியவாறேஅழுதுகொண்டிருந்தான். கம்பத்தில் தொங்கியவாறே/ P.Tமாஸ்டரும்கோபம் பொறுக்க மாட்டாமல் பிரம்பைக் கொ ண்டு இரண்டுஅடிகூட அடித்துப்பார்த்துவிட்டார், ஆனாலும்அழுகையும் நிப்பா ட்டாமல் கீழே தரையைப் பார்ப்பதையும் விடாமல் ஒரு சேர செய்து கொண் டிருந்தான்,

என்ன நினைத்தாரோ P.Tமாஸ்டர், ஸ்டூலைக் கொண்டுவரச் சொல்லி அவனை இறக்கிவிட்டுவிட்டார். ஒருவேளைகீழேவிழுந்துகை, காலில்ஏதேனும் அடிபட்டு விட்டால்யார்பதில்சொல்வதுஹெட்மாஸ்டருக்கு.என்கிறஅவரதுநினைப்பின் மூலமாய் தப்பித்தான் அன்று தப்பித்தான் கோபால்.

அன்றுமகேஷ்P.T மாஸ்டரை வைத வசவிற்கும்,கருவிய கருவிற்கும் அளவில் லை.அப்படியெல்லாம்கோபால் மீது அபிமானமாய் இருந்தவள் தீடீரென பள்ளி யைவிட்டுநிற்கும்போதுகோபாலிடம்சொல்லிக்கொள்ளாமலேயே போய் விட் டாள்.

அவள்பள்ளியைவிட்டுநின்றஅன்றிலிருந்து நான்படித்து வெளியேறுகிற வரை என்னுடனேயேபயணித்துப்படித்தகோபால்இப்பொழுது எங்கிருக்கிறா ன்,மகேஷ் எங்கிருக்கிறாள் எனத்தெரியவில்லை என பாயுடன் பேசிய நினைவு சுமந்த பேச்சுகள்தாங்கியும்,இப்படியான நினைவுகளை அசை போட்டவனாத்தான்வந்து கொண்டிருந்தேன்தங்களது வீடு நோக்கி/

தங்களதுவீடிருக்கும்ஏரியாவைநெருங்கிவிட்டேன்கிட்டத்தட்ட.ஆனால்தங்களது வீடுதான்தெரியாது.ஒரு முறைநண்பருடன் வந்து போனது மறந்து விட்டது, சரி கேட்போம்சிறிதுதூரம்போய்யாரிடமாவது.என சிறிது நகன்ற வேளையில் தென்படுகிறது தங்களது வீடு,வீடு கூட அல்ல வீடு இருக்கும் சந்து.சந்தின் முனையில் அதன் எதிர்ப்புறம் என தெருவை மறைக்காமல் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக்ச்சேர்களில் அமர்ந்தும் நின்றுமாய் பேசிக்கொண்டிருந்தார்கள் 100 க்கும் மேற்பட்டவார்கள்.

அவர்கள்யாரும்தங்களின்உறவினர்களாய்த்தெரியவில்லை,எல்லாம் நண்பர் கள் தோழர்கள்மற்றும்அக்கம்பக்கத்தவர்களே,இருபக்கமுமாய் அடுக்கப்பட்டி ருந்த வீடுகளைவகிந்து போன நான் வண்டியை நிறுத்துவது எங்கு எனதேடிக் கண்டு பிடித்துஒருவீட்டின்முன்பாய் நிறுத்திவிட்டு அங்கு நின்றிருந்த ஓரிண் டு பேர்களுக்குவணக்கம்சொல்லிவிட்டுகைகட்டிநின்றுகொண்டிருப்பவனாய்,

நான்நின்றுகொண்டிருந்ததிசைக்குஎதிர்த்தாற்ப்போல்இருக்கிறசுவற்றில்தங்க ளுக்கு ஒட்டப்பட்டிருந்த கண்ணீர்அஞ்சலி போஸ்டர்கள் இரண்டு ஒன்றின் மீது ஒன்று உரசிக்கொண்டு ஒட்டப்பட்டிருந்ததாய் ,ஒன்று ரசிகர்மன்றத்தினரால் அடித்துஒட்டப்பட்டிருந்தது,இன்னொன்று நட்புவட்டாரத் திலிருந்துஒட்டப் பட்டிருந்ததாய்/ஒருபோஸ்டரின்ஓரத்தின் மீது இன்னொரு போஸ்டர் ஒட்டப் பட்டிருந்ததாய், இப்படியெல்லாம் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்தாரா னால் கோபம் வந்து விடுகிறது அவருக்கு/,

அவர்தொழில் முறையில்போஸ்டர்ஒட்டுபவர்,ஒரு போஸ்டருக்குஇவ்வளவு ரூபாய்என்பதுஅவரதுகூலி.ஆனால் அப்படி அவர் தொழில் முறையாய் ஏனோ தானோஎன ஒட்டிக் கொண்டு போக மாட்டார்,போஸ்டர் ஒட்டுவது ஒரு கலை என்பார்.சினிமாப்போஸ்டர்,ஒருகல்யாண நிகழ்ச்சிபோஸ்டர், ஜவுளிக்கடைவிளம் பரப்போஸ்டர் எனமூன்றுவகையான போஸ்டர்களைஒரேநேரத்தில் ஒட்டு வார்,ஜவுளிக்கடைக்கு எங்கிருந்து எந்தஏரியா வரைஎனவும், கல்யாணப் போஸ்டர் எதுவரை ஒட்ட வேண்டும் எனவும்,சினிமா போஸ்டரின் ஆதிக்கம் எதுவரை இருந்தால் நல்லது முடிவு செய்பவராக அவர் இருந்தார்.அவரது முடி வையும்கடைக்கார்களும்,போஸ்டர்ஒட்டக்கொடுத்தவர்களுமாய்ஏற்றுக்கொண் டவர்களாக இருந்தார்கள்.

அவர்சொல்வார்,போஸ்டர்ஒட்டிஒட்டிஒருதெருவிலிருக்கிறவீட்டின்சுவரிலிருக் கிற மாடக்குழிமூடிதொப்,தொப்எனசப்தம் கேட்கும்.ஒரு இடத்திலா னால் சுவற்றிலிருந்துஒன்றின்மேல் ஒன்றாக ஒட்டப்பட்ட போஸ்டர்களை பிய்த்தெடுத் தப் போது கிட்டத்தட்ட நான்கு இஞ்ச் கனத்திற்கு இருந்தது என்றார்.

அப்பொழுது அப்படியாய் இருந்திருக்கிறது போஸ்டர்களின்தேவை என்கிறார், பிளக்ஸ்போர்டுவந்திராத காலமாய்அது.இப்பொழுதுபோல் அப்பொழுதெல்லாம் காசுக்கு போஸ்டர் ஒட்டுபவர்கள் மிகவும் கம்மியே அவரவர்கள் கட்சியின் போஸ்டர்களை அவரவர்களே ஒட்டிகொள்வார்கள்/ சினிமா போஸ்டர்களை தியேட்டரில்வேலைசெய்பவர்கள்ஒட்டுவார்கள்.இப்படிஅவரவர்வேலைகளை அவரவரேசெய்து கொண்டிருந்த காலங்களை விடுத்து இப்பொழுது எங்களைப் போலானவர்கள் தேவைப்படுகிற நேரமாய் இருக்கிறது இன்று/அதனால்தான் நாங்கள் தேவைப்படுகிறோம்.இது போலான வேலைகளுக்கு என அன்று ஒரு நாள் அவர் சொன்னது தங்களதுகண்ணீர் அஞ்சலிப்போஸ்டரைப் பார்த்தது மாய் ஞாபகம்வருகிறது,

அந்த ஞாபகத்துடனும் மிதமிஞ்சிய நினைவுகளுடனுமாய் தங்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்கிறவனாகிறேன்/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *