ரெண்டாவது ஷுவை எப்போ…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2020
பார்வையிட்டோர்: 4,000 
 

லண்டனில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது அந்த கவுண்டி. அந்த கவுண்டியிலே ஒரு தச்சராக வேலை செய்து வந்தார். அவர் ஒரு வாடகை வீட்டிலெ ஜான் தன் மனைவி மேரியுட னும்,ஒரு பையன்,பெண்ணுடன் வசித்து வந்தார்.

ஜான் நிறைய தச்சு வேலை செய்து பணம் சம்பாதித்து, ஒரு வீட்டு கட்ட நல்ல பலகைகளை வாங்கி வைத்துக் கொண்டு இருந்தார்.

அவர் பையனுக்கு பத்தொண்பது வயது ஆனவுடனே,அவன் லண்டனில் ஒரு வேலை கிடைத்து அவன் லண்டனுக்குப் போய் விட்டான்.

அவர் பெண்ணும் பதினெட்டு வயது ஆனவுடன் அந்த கவுண்டியிலே இருந்த ஒரு பையனைக் காதலித்து, ஒரு வருஷம் கழித்து, அந்தப் பையனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு வேரே ஒரு ஊருக்குப் போய் விட்டாள்.

பையனும் தங்களை விட்டுப் போய் விட்ட பிறகு, ஜான் தான் சேர்த்து வைத்து இருந்த கட்டைகளை எல்லாம் வைத்துக் கொண்டு ஒரு சின்ன மர வீடு கட்டிக் கொண்டான்.அந்த வீட்டில் ஜான் தன் மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.

அவன் கட்டின வீட்டில் தரை மட்டத்தில் ஜான் எல்லா வசதிகளையும் பண்ணி விட்டு, ஒரு மர மாடிப் படி போட்டு மாடியிலெ ஒரு சின்ன ‘ரூமை’ப் போட்டு, அந்த ‘ரூம்’லே ஒரு ‘பாச்சலர்’ இருந்து வர எல்லா வசதிகளியும் பண்ணினார்.

ஞாயிற்றுக் கிழமைகளில் ஜான் தன் மனைவியுடன் ‘சர்ச்சு’க்குப் போய் விட்டு,திரும்பி வந்து சாப்பிட்டு விட்டு, கொஞ்ச நேரம் அந்த மாடி ‘ரூம்’லே தன் மனைவி மேரியுடன் இருந்து இயற்க்கை யை ரசித்து வந்தார்.

ஜானுக்கு எழுபது வயது ஆனவுடனே,கஷ்டமான தச்சு வேலைக்குப் போய் வர முடியவில்லை. அவன் தான் வேலை செய்த போது வந்த பணத்தில் சேமிப்பில் வாழ்க்கை நடத்தி வந்தான்.

ஜானுக்கு எழுபத்தி ஐஞ்சு ஆகி விட்டதாலும்,மேரிக்கு எழுபத்து மூனு வயசு ஆனதாலும், இரு வரும்,ராத்திரி ஏழு மணிக்கு எல்லாம் சாப்பிட்டு விட்டு படுக்கப் போய் விடுவார்கள். இருவரும் ஒரு ரெண்டு மணி நேரம்தான் தூங்குவார்கள். அப்புறம் இருவருக்கும் தூக்கமே வராது. அப்புறம் இருவரும் வெறுமனே மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு படுத்துக் கொண்டு இருப்பார்கள்.

தங்கள் ‘தூக்கமின்மையை’ சொல்லி வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம் என்று ஜான் ஆசைப்பட்டு, தன் மனைவி மேரியை அழைத்துக் கொண்டு அந்த கவுண்டியில் இருந்த ஒரு டாக்டரிடம் போய் காட்டினார்.அந்த டாக்டர் ஜானைப் பார்த்து “உங்க ரெண்டு பேருக்கும் எல்லா ‘டெஸ்ட்டுகளு ம்’ எடுத்து வைத்திடம் பண்ண 200 பவுண்ட் ஆகும்” என்று சொன்னவுடனே, ஜான் “டாக்டர் என் கிட்டே அவ்வளவு பணம் இல்லே” என்று சொல்லி மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டான்.

ஜானும்,மேரியும் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு பணம் தேவைப்பட்டதால் ஜான் தன் மாடியை வாடகைக்கு விட நினைத்து, அவன் வீட்டு வாசலில் ஒரு ‘To Let’ போர்ட்டை மாட்டினான்,

போலீஸ்லே வேலை செய்து வந்த ஒருவர் அந்த மாடி போர்ஷனில் குடி வந்தார்.அவர் தினமும் எட்டு மணி நேரம் நின்றுக் கொண்டு வேலை செய்து வந்தாதால்,இரவு வேலை முடிந்து தன் ‘போர்ஷ ணுக்கு’ வந்ததும்,அவன் கட்டிலில் உட்கார்ந்துக் கொண்டு,அவன் அணிந்து இருந்த கனமான ‘ஷு’ வை கழட்டி வேகமாக கிழே எறிந்தார்.

அந்த போலீஸ்காரர் ‘ஷு’வின் மேல் பாகத்தில் கனமான இரும்புத் தகடுடன்,கனமான தோலினால் செய்யப் பட்டு இருந்ததால் எறிந்த ஷு,மரத் தரையில் விழுந்ததும்,கீழே படுத்துக் கொண்டு இருந்த ஜான் மேரி தலையிலே ஒரு இடி விழுந்த சத்தம் போல கேட்டது.

சத்தம் கேட்டு பாதி தூக்கத்திலே இருந்து எழுந்துக் கொண்ட ஜான்,மெல்ல மாடிப் படி ஏறி அந்த போலீஸ்காரர் இடம் “தம்பி,உன் போலீஸ் ஷுவை கொஞ்ச மெல்லமாக தரையிலே வைப்பா ப்ளீஸ்.நீ வேகமாக உன் ஷுவை கழட்டி எறிவதாலே,கீழே படுத்து இருக்கும் எங்க தலைலே இடி விழுந்தா மாதிரி சத்தம் வருது.அதனாலே எங்க ரெண்டு பேர் தூக்கமும் கலைஞ்சு விடுது.அப்புறமா எங்க ரெண்டு பேருக்கும் தூக்கமே வறதில்லே” என்று சொன்னதும் அந்த போலீஸ்காரர் ஒத்துக் கொண்டார்.

அடுத்த நாளும் அந்த போலீஸ்காரர் வேலை அசதியாலே முதல் நாள் செய்தது போலவே தன் முதல் ஷுவையும்,வேகமாக கழட்டி எறிந்தார்.

கீழே படுத்துக் கொண்டு இருந்த ஜானுக்கு ரொம்ப கோவம் வந்தது.போலீஸ்காரர் ஏறிந்த ‘ஷுவின்’ சத்தத்தை பொறுத்துக் கொண்டு இருந்தார்.ரெண்டு நிமிஷம் கழித்து அந்த போலீஸ்காரர், தன் காலில் இருந்து ரெண்டவது ஷுவை கழட்டி எறிந்த பிறகு,அந்த ‘ஷு’ போட்ட சத்தத்தை பொறு த்துக் கொண்டு தூங்கப் போனார்.

அடுத்த நாளும் அந்த போலீஸ்காரர் ஜான் வந்து சொன்னதை மறந்து விட்டு வேலை செய்து விட்டு வந்த அசதியாயால் முதலில் ஒரு ஷுவையும் கழட்டி எறிந்து விட்டு,அடுத்த ஷுவை ரெண்டு நிமிஷம் கழித்து கழட்டி எறிந்தார்.

ஜானும் மேரியும் அந்த ரெண்டு ஷு போடும் ‘சத்தத்தையும்’ பொறுத்துக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தார்கள்.

‘சரி, இவர் கிட்டே சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லே.நாம ரெண்டு சத்தத்தையும் பொறுத்து கிட்டு தான் ஆகணும்’ என்று நினைத்து பொறுத்துக் கொண்டு வந்தார்கள்.

மூன்றாவது நாள் அந்த போலீஸ்காரருக்கு வேலை கொஞ்சமாக குறைவாக இருந்தததால், அவர் தன் ‘போர்ஷனுக்கு’ வந்து முதல் ஷுவைக் கழட்டி,வேகமாகப் போட்ட பிறகு, வீட்டுக்காரர் சொன்னது ஞாபகத்துக்கு வரவே,தன்னுடைய ரெண்டாவது ஷுவை மெதுவாக கழட்டி ஓசைப் படாமல் வைத்தார்.

வழக்கமாக தினமும் ரெண்டு ‘இடி’ சத்தம் கேட்டு வந்த ஜானுக்கும் மேரியுக்கும், எப்போது ரெண்டாவது ‘இடி’ சத்தம் கேட்கும் என்று காத்து கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் பொறுமை எல்லை மீறி போய் விட்டது.

ஒரு அரை மணி நேரம் பொறுத்துப் பார்த்த ஜானுக்கு,அந்த ரெண்டாவது ‘இடி’சத்தம் வராம இருக்கவே, கோவம் வந்து,தன் அசதியையும் பார்க்காமல்,மெல்ல மாடிப் படி ஏறிப் போய் அந்த போலீஸ்காரரைப் பார்த்து “ உன் ரெண்டாவது ஷுவை எப்போ கழட்டப் போறே” என்று கத்தினார்.

வீட்டுக்காரைப் பார்த்ததும் அந்த போலீஸ்காரர் பவ்யமாக, “நீங்க சொன்னது எனக்கு ஞாபகம் வரவே நான் என் ரெண்டாவது ‘ஷுவை’ முதல் ‘ஷு ‘கழட்டின அடுத்த நிமிஷமே,மெதுவா ஓசைப் படாம கழட்டி வச்சுட்டேன்” என்று சொன்னதும் ஜான் அந்த போலீஸ்காரரைப் பார்த்து, “இன்னிக்கு பண்ணது போலவே தினமும் தயவு செஞ்சி பண்ணுப்பா” என்று தன் கோவத்தை அடக்கிக் கொண்டு, மெல்ல படிக்கட்டில் இறங்கி வந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *