மாமியார் மெச்சிய மருமகள் – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 27, 2022
பார்வையிட்டோர்: 7,360 
 

“லதா மாதிரி மருமகளை பெற நான் கொடுத்து வச்சிருக்கணும் வேணி .” என்றாள் அகிலாண்டம்.

“அப்படியா! அவ்வளவு உயர்ந்த குணமா ஆன்ட்டி அவளுக்கு?” – போனில் வியந்தாள் வேணி

“சொன்னா நம்ப மாட்டே! அவள் வந்ததிலிருந்து என் துணிகளைக்கூட என்னை துவைக்க விடாம, அவளேதான் துவைக்கறான்னா பாரேன். ஆனால் துவைத்த துணியை நான்தான் காயப் போடுவேன்.”

“பரவாயில்லையே! இந்த காலத்திலும் இப்படி ஒரு மருமகளா!” என்று ஆச்சரியப்பட்டாள் வேணி.

அந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்தாள் வேணி. ஆபிஸ் லீவு என்பதால் லதா மட்டுமே வீட்டில் இருந்தாள்.

“வாங்க… வாங்க… உட்காருங்க…” என்ற வரவேற்ற லதா தொடர்ந்து அத்தை கோவிலுக்கு போய் இருக்காங்க…. என்றாள்.

“பரவாயில்லம்மா… நான் உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். மாமியார் துணிகளையெல்லாம் நீ துவைத்துப்போட்டு, மாமியார் மெச்சும் மருமகளா நீ இருக்கறதைக் கேள்விப்பட்டதும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு!” என்றாள் வேணி

எங்க அத்தை துணி துவைச்சா ஏகப்பட்ட சோப்பு, சர்ஃப் வேஸ்ட் பண்ணிடறாங்க. தேவைக்கதிகமா தண்ணி யூஸ் பண்ணி காலிப் பண்ணிடறாங்க. அதான் வேற வழியில்லாம நானே துவைச்சித் தொலைக்கலாமேன்னு…”

கோயிலில் இருந்து திரும்பிய அகிலாண்டத்தின் காதுகளில் மருமகளின் பேச்சு விழ உறைந்து நின்றாள்.

– ஆதிரை – 12 – 18 – 2021

Print Friendly, PDF & Email

ஆதர்ச மனைவி(?)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

அச்சமில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *