“மகேஷ்… தாத்தா உன்கிட்டே பேசணுமாம்…” – செல் போனை ஊஞ்சலில் வைத்துவிட்டு மீண்டும் சுந்தரகாண்டம் பாராயணத்தைத் தொடர்ந்தாள் பாட்டி.
“சொல்லுங்க தாத்தா…” என்றான் மகேஷ். அடுத்த நொடி “ சரி தாத்தா…” என்றான்.
வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஜெனரல் மெர்ச்சன்ட்டில் தாத்தாவுக்கு ‘அதை’யும், கடை வாசலில் இருந்த பூக்காரியிடம் பூஜைக்காக பாட்டி வாங்கும் பூவையும் வாங்கி வந்தான் மகேஷ்.
“பாட்டி…பூ…” பூவை ஊஞ்சலில் வைத்துவிட்டு வேகமாக மாடிக்கு ஓடினான் மகேஷ்.
மாடியில் இருந்த தாத்தா ரூமைத் திறந்தான். குபீரென்று அடித்தது ஏ.சி. குளிர்.
‘ஃபுல் ஏசியோடு ஃபேனையும் போட்டுக்கொண்டு எப்படி இருக்க முடிகிறது இந்த தாத்தாவால்?…’ என்று நினைத்தபடியே “இந்தாங்க தாத்தா…” என்று தன் சட்டைக்குள் மறைத்து வித்திருந்த முனைகள் மிருதுவான நான்கு விரல்கள் விரிந்து வளைந்தாற்போல் வடிவமைக்கப்பட்ட ‘முதுகு சொறியும் கோலை தாத்தாவிடம் நீட்டினான் மகேஷ்.
பனை ஓலை விசிறியை கீழிருந்து தேடி எடுத்து வரச் சொன்னது, முதுகு சொறிவதற்குத்தான் என்பதைப் புரிந்து கொண்டு தன் பாக்கெட் மணி செலவு செய்து வாங்கி வந்த மகேஷின் மதி நுட்பத்தையும் வியந்து பேரனை கட்டி அணைத்து உச்சி முகர்ந்தார் தாத்தா.
- கதிர்ஸ் ஜனவரி 1–15–2021
தொடர்புடைய சிறுகதைகள்
பதினாலு வருடங்கள் என்பது ஒரு ஜெனரேஷன் என்று கணக்கு வைத்தால் சிவ முதலியார் ஐந்து ஜெனரேஷன்களைக் கடந்தவர். நல்லது கெட்டது எதுவாயிருந்தாலும் பத்திரிகையோ அழைப்போ வந்துவிட்டால் மட்டுமில்லை... தகவல் காதில் விழுந்துவிட்டால் கூடப் போதும், “பல வேலைகள்’ல நம்மை மறந்திருப்பாங்க …!” ...
மேலும் கதையை படிக்க...
ஆறு வயது மதிக்கத் தக்க ஒரு சிறுமியை ஒருவன் கையில் ஏந்தியிருக்க சுற்றிலும் ஆணும் பெண்ணுமாய்ப் பரபரப்போடு கூட்டம் தொடர அந்தச் சிறுமியின் வலது கண்ணில் குத்திநிற்கும் மரச்சிராய். ரத்தக் குழியில் முளை அடிதத்தைப் போல பார்க்கவே படு பயங்கரமாக.
டாக்டர் தாமஸ் ...
மேலும் கதையை படிக்க...
“சாயாவனம்...சாயாவனம்..., உன்னை அய்யா கையோட இட்டாரச் சொன்னாரு...”
ஓட்டமும் நடையுமாக வந்த செங்கரும்பின் அழைப்பில் அவசரம் தெரிந்தது. இன்றைக்கு மூன்றாம் நாள் சாயாவனத்தின் திருமணம். நாளை மறுநாள் அந்தியில் மணப்பெண்ணுக்கு பரிசம் போட்டுவிடுவார்கள். சாயாவனத்தின் கையில் காப்பு கட்டிவிடுவார்கள்.
வாடகைப் பந்தல் முனுசாமி, “நாளை ...
மேலும் கதையை படிக்க...
“ஹலோ...”
“சொல்லுங்க.., நான் எழுத்தாளர் நவீனன் பேசுறேன்...”
“கதிர்’ஸ் நிருபர் தேன்மொழி பேசுறேன். காதலர் தின ஸ்பெஷலுக்கு ஒரு பேட்டி எடுக்கணும்...”
“ஓ... தாராளமா...!”
“எப்ப கூப்பிடலாம்...?”
“இப்பவே நான் ஃப்ரீ தான்... காரை ஓரம் கட்டி நிறுத்திக்கறேன். நீங்க கேள்விகளைக் கேளுங்க...”
“காதலர் தினத்தைப் பற்றி உங்கள் கருத்து?”
“காதல் ...
மேலும் கதையை படிக்க...
பட்டங்கள் பல பெற்ற அறிவு ஜீவி சுந்தரலிங்கத்தின் கையைத் துண்டாக வெட்டும் நோக்கத்தோடு கபாலி அரிவாளை வீசவில்லை.
‘சும்மா மிரட்டி வைப்போம்,’ என்ற எண்ணத்தில் கபாலி அரிவாளைச் சுழற்ற; தற்காத்துக் கொள்ள கையை நீட்டிய சுந்தரலிங்கத்தின் கை துண்டாகி விட்டது.
ஓரிரு வருடங்கள் எங்கெங்கோ ...
மேலும் கதையை படிக்க...
தொழிலதிபர் சோப்ரா இந்த சமயத்தில் இப்படி ஒரு சிக்கலை எதிர்பார்க்கவில்லை.
அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சாயத் தொழிற்சாலை தொடங்க ‘லொகேஷன்’ தேடிய சோப்ராவுக்கு அந்தக் கிராமம் மிகவும் பிடித்துப் போயிற்று.
கிராம முக்கயஸ்தர்களை அணுகி நோக்கம் விளக்க நிலம் கேட்டபோது, ஊர் ...
மேலும் கதையை படிக்க...
‘கதவே உடையற மாதிரி இப்படிக் காட்டுத் தனமா யாரு கதவிடிக்கறாங்க?’ என்று யோசித்தபடியே விரைந்து வந்து கதவுத் தாழ் நீக்கினார் சுந்தரபாண்டி.
ஆசிரியர் கதவைத் திறந்து வெளியில் பார்த்தபோது செல்லதுரை தன் மகன் ராசப்பனோடு நின்றிருந்தார். ராசப்பனின் வலது கன்னம் வீங்கியிருக்க அவன் ...
மேலும் கதையை படிக்க...
ராமநாத கனபாடிகளின் பேரன் மகேஷ்க்கு தீராத குழப்பம்.
மகேஷின் அப்பா சோஷாத்ரி அரசு மருத்துவ மனையில் ‘டி எம் ஓ’. அம்மா லெக்ஷ்மி மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர்.
மகேஷுக்கு இரண்டு மூத்த சகோதரிகள். பெரிய சகோதரி ஊர்மிளா. இளைய அக்காள் மிருதுளா.
ஊர்மிளாவும் மிருதுளாவும் கூட ...
மேலும் கதையை படிக்க...
பிரமிளா, அவள் மகன், மகள் உட்படி பேருந்து நிலையத்தில் காத்திருந்த கல்லூரி மாணவர்கள் பலரும் கையில் செல்போனை நோண்டிக் கொண்டிருந்தார்கள்.
ஒரே ஒரு மாணவன் மட்டும் புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். அவன் சட்டைப் பையில் ஆண்ட்ராய்டு கைப்பேசி இருந்தது. ஆச்சர்யத்தை அடக்க முடியவில்லை ...
மேலும் கதையை படிக்க...
ரெங்கநாயகி சமையல்கட்டில் பரபரத்துக்கொண்டிருந்தாள்.
சமையல்கட்டு வாசல்படியில் வந்து நின்ற ஷோபனாவிற்கு ரங்கநாயகி தன்னை கவனிக்காமல் சமையல் வேலையிலேயே மூழ்கியிருப்பது பாசாங்கு செய்வதாகப் பட்டது.
‘ஒரு வேளை உண்மையிலேயே தன்னை கவனிக்கவில்லையோ?’ என்ற சந்தேகமும் வர, ‘சித்தி குட்மார்னிங்,’என்று ஆரம்பிக்கலாமா..? அது ஏன், ‘குட்மார்னிங் அம்மா’ ...
மேலும் கதையை படிக்க...
காதல் கத்தரிக்காய் – ஒரு பக்க கதை