நாடு அதை நாடு – ஒரு பக்க கதை

0
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 10,429 
 

ராதா அப்பாவை எங்கே காணோம்?

அவர் காலையிலேயே வோட்டு போட கிளம்பிவிட்டார்.

ராகவன் கோபமானான். உடம்புல சுகர், பிரஷர் வச்சுக்கிட்டு இப்போ வோட்டு போடலைன்னா என்ன குடியா முழுகிடும்?

சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் அப்பா பலராமன் உள்ளே நுழைந்தார். ஏம்பா காந்திஜியோட ஜெயில்ல ஒண்ணாயிருந்தேன். பாத யாத்திரை போனேன்னு சொல்வீங்களே ஆனா உங்க தியாகி பென்ஷன் வாங்க உங்களை நாயா இந்த அரசாங்கம் அலைய வைக்கிறதே இதுக்கு வோட்டு போடலைன்னா என்ன?

டேய் நீங்களெல்லாம் எங்களுக்கு என்ன செய்வீங்கன்னு எதிர்பார்த்தா நாங்க அன்னைக்கு சுதந்திர போராட்டத்தில ஈடுபட்டோம். அன்னியரை விரட்டணும்னு தான்

அதே மாதிரி, நாடு உனக்கு என்ன செய்ததுன்னு கேட்காதே, நீ நாட்டுக்கு இது வரை என்ன செய்தேன்னு யோசிக்க ஆரம்பி… என்று சொன்ன அப்பாவை, ராகவன் வியப்போடு பார்த்தான்.

-எஸ்.ஜெயலெட்சுமி, ஸ்ரீரங்கம் (நவம்பர் 2011)

Print Friendly, PDF & Email

நிழல் பேசுகிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

பர்ஸனல் ஸ்பேஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)