எல்லாம் நடந்த பிறகு…

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 4,896 
 

போலீஸ் நிலையத்தில் ஒவ்வொரு காவலாளிகளும் மௌனமாக இருந்தனர். அங்கு நின்று கொண்டு இருந்த ஆண்களும் சரி, அரையாடையில் பெண்களும் சரி காவல் நிலையத்தில் நிற்பதை தங்கள் கௌரவத்திற்கு கேடாக நினைக்கவில்லை. தாங்கள் செய்தது நியாயம் என்ற நினைத்துக் கொண்டு இருந்தார்கள். மனதில் துளிக் கூட குற்ற உணர்வு இல்லை. இன்ஸ்பெக்டர் சுந்தரம் கமிஷ்னர் கார்மேகம் வந்து விசாரிப்பதற்காக காத்துக் கொண்டு இருந்தான். பிடிப்பட்ட எல்லோரும் பெரிய இடத்தில் சேர்ந்தவர்கள். கார்மேகம் உத்தரவுப்படி தான் அந்த ஆண்களையும், பெண்களையும் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தான். அதனால், அவர் வந்துப் பார்த்துக் கொள்ளட்டும் நமக்கு ஏன் பெரிய இடத்து வம்பு என்று இருந்தான்.

“அரையாடையில் இருந்த பெண் ஒருத்தி … நாங்க என்ன பெருசா தப்பு பண்ணிட்டோம். எல்லோரும் செய்றத தான் நாங்களும் செஞ்சோம்.. இது என்ன பெரிய தப்பா…. ராத்திரி வேளையில போலீஸ் ஸ்டேஷன்ல இருந்தா… எங்கள பத்தி என்ன நினைப்பாங்க…”

“எம்மா ராத்திரி வேளையில இந்த மாதிரி தப்பு எல்லாம் பண்ணலாம்…. போலீஸ் ஸ்டேஷன்ல நிக்கிறது கௌரவக் குறைச்சால தெரியுதா உங்களுக்கு..” என்றான் சுந்தரம்.

அந்த காவல்நிலையத்தில் டெலிபோன் மணி ஓயாமால் அடித்துக் கொண்டே இருந்தது. சுந்தரம் அமைதியாக இருந்தான்.

“சார்… போன் எடுக்கவா..” என்றான் கான்ஸ்டேபில்.

“வேண்டாம்… யார் போன் பண்றாங்க நமக்கு எப்படி தெரியும்… இவங்கள விட சொன்னா அப்புறம் அந்த கமிஷ்னர் கிட்ட யார் பதில் சொல்றது…”

சுந்தரம் பேசிக் கொண்டு இருக்கும் போது கார்மேகம் அந்த காவல் நிலைத்திற்கு நுழைந்தான். கமிஷ்னர் வருவதை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. அங்கு இருக்கும் எல்லா காவலளர்களும் கார்மேகத்திற்கு சலுயூட் அடித்தார்கள்.

“இந்த மரியாதைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல… கொடுக்குற வேளைய கடமையா நினைச்சு செய்யுங்க.. பயந்துக்கிட்டு செய்யாதிங்க…”

கார்மேகம் நல்ல கட்டுமஸ்தான உடம்பு.போலீஸ்குரிய கம்பீரம். நேர்மை இவன் இரத்தமென்றால், கடமை இவனுடைய நாடி துடிப்பு.

“சார்… நாங்க என்ன தப்பு பண்ணோம் நினைச்சு இங்க வந்து கூட்டிட்டு வந்திங்க…” பிடிப்பட்ட பெண்கள் கூட்டத்தில் இருந்த விமலா கார்மேகத்திடம் கோபமாக கேட்டாள்.

“நீ என்ன தப்பு பண்ணேணு உனக்கே தெரியாத அளவுல நீ இருக்க…. அரைகுறையா டிரஸ் பண்ணி ஆடுற… அப்போ உன் மானத்தை பத்தி கவலப்படாதவ … இப்போ மட்டும் உன் மானத்தை பத்தி நீ யோசிக்கிறாயா ?”

“நாங்க மாசம் இருபது ஆயிரம் சம்பாதிக்கிறோம்…எங்க சம்பாதியத்துல ஆடுறோம். அது எங்க இஷ்டம். உங்களுக்கு என்ன வந்தது… நாங்க நடு ரோட்டுல ஆடலைய… ஸ்டார் ஒட்டல…தான் டான்ஸ் பண்ரோம்… அதுல என்ன தப்பு..”

“நீ தண்ணி அடிச்சு… அரைகுறையா டிரஸ் பண்ணி டான்ஸ் ஆடும் போது மத்தவங்க உன் உடம்பை பார்க்கும் போது உனக்கு கூச்சமா இல்ல….”

“அத பத்தி கவல பட வேண்டியது நான்… என்ன கல்யாணம் பண்ணிக்க போறவன்… நீங்க இல்ல..”

இதற்கும் மேல் விமலாவிடம் பேசினால் தனக்கு தான் மரியாதை கேடும் என்பதால்… மற்றவர்களை விசாரித்தான். விமலாவின் தோழி ஸ்வேதாவை விசாரித்தான். அவள் வட இந்திய பெண் என்பதால் தமிழ் தெரியவில்லை. அரை அடையில் நின்ற பாதி பெண்களுக்கு தமிழ் தெரியவில்லை. ஒரு சிலர் ஆந்திரம், பெங்களூர் போன்ற இடங்களில் இருந்து இங்குள்ள கணினித்துறையில் வேலை செய்கிறவர்கள்.

கார்மேகம் சென்னையில் இருக்கும் ஆண்கள், பெண்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து காவல் நிலையத்திற்கு வர சொல்கிறான்.
விமலாவின் ஆண் நண்பனான சுரேஷ் என்பவனை கார்மேகம் விசாரிக்கும் போது “நாங்க படிச்சவங்க… நல்லது எது ? கெட்டது எது ? எங்களுக்கு தெரியும். நாங்க யாரும் எந்த பொண்ணுங்க கிட்டடையும் தப்ப நடந்துக்கல… நீங்க வேணும் எல்லா பொண்ணுங்க கிட்டயும் கேட்டு பாருங்க…”
எந்த பெண்ணும் யாரும் தங்களிடம் தவறாக நடந்துக் கொண்டதாக சொல்லவில்லை.

“நாங்க எப்படி போனா உங்களுக்கு என்ன…. ராத்திரி ஸ்டார் ஒட்டல டான்ஸ் அடக் கூடாதுனு சட்டம் எதாவாச்சி இருக்கா என்ன ? எங்கள பெத்தவங்ககளே இதப்பத்தி எங்ககிட்ட கேக்கிறது கிடையாது… நீங்க யாரு இதை பத்தி கேக்க….” என்றாள் விமலா.

தமிழ் பண்பாடை மறந்து போனவர்களுக்கு நினைவுட்டலாம்… ஆனால், விரும்பாதவர்களுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது.

விமலாவின் பெற்றோர்கள், சுரேஷ்யின் பெற்றோர்கள் மற்றும் அந்த நட்சத்திர ஒட்டலில் ஆடும் போது பிடிக்கப்பட்ட மற்றவர்களின் பெற்றோர்களும் காவல்நிலையத்திற்கு வந்திருந்தார்கள்.

கார்மேகம் அவர்கள் பெற்றோர்களிடம் சொல்லி அவர்களை திருத்த நினைத்தான்.

“எங்க பசங்க என்ன தப்பு பண்ணாங்க….”

“ராத்திரி ஸ்டார் ஒட்டல்ல … பீர் கூச்சிக்கிட்டு…டான்ஸ் ஆடுனாங்க….. அதுவும் அரைகுAயா டிரஸ் வேற…. அதுக்கு தான் போலிஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வர சொன்னேன்…”

“அவங்க என்ன குடிச்சு … நடு ரோட்டுலயா அடுறாங்க…. கவர்மென்ட் பர்மிஷன் கொடுத்த ஒட்டல்ல தான் ஆடுறாங்க… அதுல என்ன பெரிய தப்பா… நீங்க எப்படி ராத்திரி வேளையில போலீஸ் ஸ்டேஷன்ல கூட்டுக்கிட்டு வரலாம்….”

கார்மேகத்திற்கு தூக்கிவாரிப் போட்டது. நாம் தமிழ் நாட்டில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகமே வந்துவிட்டது.

“எங்க பெத்தவங்க நீங்களே உங்க பசங்கலுக்கு நல்ல புத்திமதி சொல்லறத விட்டு இப்படி பொறுப்பில்லாம பேசுறிங்க…”

“என் பொண்ணு பீர் அடிச்சு சுத்துறது எங்க வீட்டு விஷயம்…. நாங்க தான் அவங்க கண்டிக்கனும்…. நீங்க யாரு… ராத்திரி வேளையில என் பொண்ண ஸ்டேஷனுக்கு கொண்டுவந்ததுக்கு மேல் இடத்துல கம்ப்ளைண்ட் பண்ணா என்னாகும் தெரியுமா…”

“இதோ பாருங்க ரொம்ப பேசுரீங்க….. தப்பு நடந்தது அப்புறம் வரது விட முன்னாடியே தடுக்கலாம் நினைச்சேன்… அது தப்புனு புரியுது… சட்டப்படி ஒரு ஒட்டல்ல டான்ஸ் அடுறது தப்பில்ல தான்… ஆனா ஒரு பொண்ணு குடிச்சிட்டு ஆடுறது வீட்டுக்கு மட்டுமில்ல நாட்டுக்கும் நல்லது இல்ல… சொன்ன உங்களுக்கு புரியாது…. பட்டாதான் உங்களுக்கு புரியும்”

விமலா சம்பளத்தால் தான் நடுத்தரமாக இருந்த அவர்கள் குடும்பம் சற்று வசதியான நிலைக்கு வந்தது. அதனால், அவள் என்ன செய்தாலும் அவர்கள் பெற்றோர்கள் எதுவும் கேட்க மாட்டார்கள். மற்றவர்களின் பெற்றோர்கள் சமானாமாக பேசி சென்றார்கள். இந்திய பொருளாதாரத்தில் வளர உதவுவதும் கணினித்துறை. இந்தியாவின் பண்பாட்டை மாற்றிக் கொண்டு இருப்பதும் கணினித்துறை. பெற்றோர்களே கேட்காத போது நாம் சொன்னால் யார் மதிப்பார்கள் என்று கார்மேகமும் அமைதியாக இருந்தான்.

இந்த நிகழ்ச்சி அடுத்த வாரத்தில் சனிக்கிழமை இரவு இரண்டு பெண்கள் நட்சத்திர ஒட்டல் அறையில் கற்பழிக்கப்பட்டதாக செய்தி சுந்தரத்திற்கு செய்தி வருகிறது. ஒருத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். மற்றொருத்தி கற்பழிக்கும் போது இறந்துவிட்டாள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் வேறு யாரில்லை… சென்ற வாரம் காவல் நிலையத்தில் இருந்த வட இந்திய பெண் ஸ்வேதா. கற்பழிக்கும் போது இறந்த பெண் … விமலா. அவர்களை கற்பழித்தவர்கள் சுரேஷ் மற்றும் அவனுடைய நான்கு நண்பர்களும்.

விமலா மரணச் செய்தி கேட்டவுடன் அவள் தந்தை மயங்கி விழுந்துவிட்டார். விமலாவின் உடலை வாங்க அவர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள். விமலாவின் உடலை வாங்க வந்த உறவினர் ஒருவர் போலீஸ் காகிதங்களில் கையேழுத்துயிட்டு வாங்கினார். அந்த உறவினர்..

“எல்லா நடந்தது அப்புறம் தான் போலீஸ் என்போதும் வரும்…. இவங்க நினைச்சா இந்த மாதிரி நடக்கிறத தடுக்க முடியும்…. எப்போ யார் கிட்ட லஞ்சம் வாங்கலாம் தான் இவங்க இருக்காங்க..” என்று மற்றவனிடம் புலம்பிக் கொண்டு இருந்தான். எல்லா புலம்பல் வார்த்தைகளையும் காதில் வாங்கிக் கொண்டு சுந்தரம் அமைதியாக இருந்தான்.

– குகன் [tmguhan@yahoo.co.in] (ஜூன் 2007)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *