கதையாசிரியர் தொகுப்பு: வாசுகி நடேசன்
பாப்பாவுக்கு ஒரு நாள் கழிகிறது
மகிழ்ச்சியான கனவில் திளைத்திருந்த பாப்பாவுக்கு அம்மாவின் அதட்டலான அழைப்புக் குரல் நாராசமாய் விழுந்தது. அவளின் இனிய கனவினை அது கலைத்து நினைவுக்கு இழுத்து வந்தது. “பாப்பா …பாப்பா எழும்பு. எழும்படி நேரம் ஐஞ்சாச்சு…” பாப்பா சோம்பல் முறித்தபடி படுக்கையில் இருந்து எழுந்தாள். அவள் எழும்புவதற்கே காத்திருந்தது போல சுவர்க்கடிகாரத்திலிருந்து வெளிப்பட்ட சின்னக்குருவி ஐந்து தடவை கடிகாரத்தைக் கொத்தி ஒலி எழுப்பிவிட்டு மறைந்து போகிறது. லண்டனில் இருந்து மாமா அனுப்பிவைத்த கடிகாரம் அது.வந்த நாளிலிருந்து நாள் தவறாது தனது
கொட்டில்
அப்புவின் கண்கள் அந்தக் கொட்டில் இருந்த இடத்தில் நிலைத்திருந்தன. முன்பு அது இருந்த இடத்தில் மண்மேடு. சுடலைப் பிட்டி போல…… அப்பு என அழைக்கப்படும் அப்புத்துரை அறுபத்தைந்து வயதைதக் கடந்தவர். தமக்குச் சீதனமாக வந்த வீட்டின் முன்னால் தமது இருபத்தைந்தாவது வயதில் அந்தக் கொட்டிலைச் சிற்றாள் ஒருவரின் உதவியுடன் தமது கையாலேயே போட்டவர் அவர். இயல்பாகவே வலுவான உடல்…. தோட்டத்தைக் கொத்திக் கொத்தி வைரம் பாய்ந்த கைகள் . எதையும் சாதிக்கத்துடிக்கும் இளமை வேகம். அப்பு தாமே
போர்முகம்
அடிக்கடி வேரோடு பிடுங்கப்பட்டு மீண்டும் மீண்டும் வெவ்வேறு இடங்களில் நடப்படும் பயிர்கள் எல்லம் பிழைத்துக் கொள்வதில்லை. சில செத்துமடிந்துவிடுகின்றன. சில உயிருக்காய் ஊசலாடுகின்றன. ஒரு சில மட்டுமே மீண்டும் தளிர்த்துத் துளிர்விடுகின்றன.இப்படித்தான் யாழ்ப்பணத்து மக்களும் அடிக்கடி வேரோடு பிடுங்கப்படுகிறார்கள்.அவர்களது ஆணிவேர்கள் அறுந்துபோகின்றன. எனது சிந்தனையை பஸ்சின் இரைச்சல் துண்டிக்கிறது. ஆர்வமாய்த் தெருவை நோக்குகிறேன். மூளாய் வீதியிலிருந்து நெல்லியான் சந்தி முடக்கில் திரும்பி, சுழிபுர வீதியால் இராணுவ வாகனம் ஒன்று மிகவேகமாகச் செல்கிறது. ஏமாற்றத்துடனும் சலிப்புடனும் நேரத்தைப் பார்க்கிறேன்.
முரண்கள்
யமதர்மராஜாவின் இராச்சியம் தர்ப்பார் நடந்து கொண்டிருக்கிறது,,, சித்திரபுத்த்திரன் பாவ புன்னியக் கணக்கை படித்துக் கொண்டிருக்கிறான். தேவ கணங்கள இறந்த ஆன்மாக்களை அவர்களது கணக்குப் பிரகாரம் நரகத்துக்கும் சொர்க்கத்துக்கும் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். சிம்மாசனத்தில் வீற்றிருந்த யமனாரின் நெற்றிப்பொட்டு சுருங்குவது அவர் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. அவர் மனக் கண்ணின் முன் தராசு….அதில் உள்ள முள்ளு பாவக் கணக்கின் பக்கம் மிகவும் சாய்ந்து கிடக்கிறது… கலி முற்றிவிட்டதா….என்னதான் பூவுலகில் நடக்கிறது ….?ஓருமுறை அங்குசென்று பார்த்துவர அவர் விரும்பினார்… உருவமா
இந்திரலோகத்தில் மாவீரர்கள்!
இந்திரபுரி. வசந்த காலம். இனிய பொன்மாலைப் பொழுது. மேற்கு வானில் தினகரன் தகதக எனத் தங்கத் தாம்பாளமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தான். தன் இரு கரம் நீட்டி அவனைக் கலவி மயக்கத்தால் தழுவிட வேண்டும் என்று வெள்ளாடை கட்டிய மேகப் பெண் ஓடித் திரையிட்டு அழகு முகம் காட்டுகிறாள். தென்றலோ மழலையின் தளிர் நடை நடந்து காண்பவரை எல்லாம் காண்பவற்றை எல்லாம் தன் ஸ்பரிசதால் கிலுகிலுப்பூட்டிக் கொண்டிருந்தது. பச்சைப் புல்வெளிகளும் வானுயர்ந்த சோலைகளும் மலர்க் கூட்டங்களும் சற்று முன்