சிறுகதைகள் (Short Stories in Tamil)
10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2019/06/21/.
அப்பாவின் துணை - மீ.மணிகண்டன்
எதையோ மறந்து விட்டேனே… என்ற சிந்தனையிலேயே நடந்து சென்றுகொண்டிருந்தார் சிவநேசன். கையில் ராஜன் மளிகைக் கடையில் வாங்கிய பொருட்கள் இட்டு வைத்த பை… அப்படி என்ன மறந்திருப்பேன்… வழியில் பேருந்து நிழற்குடையின் நிழலில் நின்று அங்கிருக்கும் சிமெண்ட் இருக்கையில் பையினை வைத்து எழுதி வந்த பொருட்கள் அனைத்தையும் வாங்கிவிட்டோமா என்று சரி பார்த்துவிட எண்ணினார்… இப்படித்தான் ஒருமுறை வெற்றிலை வாங்க மறந்து விட்டார் வீட்டிற்கு சென்றபின் மனைவியின் முதல் கேள்வி வெற்றிலை எங்கே? கமலம் ஒரு வேளை
|
Read More
|
இலக்கியரைக்காண்டலும் இனிது - பொ.கருணாகரமூர்த்தி
மார்கழி சங்கீதசீஸனையிட்டும், புத்தகக்கண்காட்சியையிட்டும் சென்னைக்குச் செல்வது என்வழக்கம். அவ்வாறான ஒரு விஜயத்தின்போது அந்த ஆண்டு நான் பெருமதிப்பு வைத்திருப்பவரும் , தனித்துவமான ஒரு எழுத்தின் சொந்தக்காரருமான ஒரு எழுத்தாளரைப் போய்ப்பார்ப்பதுவும் என் திட்டங்களில் ஒன்றாக இருந்தது. பெருந்தமிழ்நிலத்துக்கப்பால் ஒவ்வோராண்டும் சர்ச்சைக்குள்ளாகும் ஒரு விருதுக்காகக்கூட அவர் பெயரை நான் உரத்துச் சிபாரிசுபண்ணியிருக்கிறேன் என்றால் பாருங்களேன். (அதொன்றும் அவருக்குத் தெரியவே வந்திருக்காது). ஆக அவரை இங்கே கிண்டல் பண்ணுவது என் நோக்கமல்ல என்பதையும், ஆனால் பெரிய மனுஷன் ,எழுத்தாளன் எல்லாங்கூட
|
Read More
|
சேற்றில் மலர்ந்த செந்தாமரை - ஜெ.சங்கரன்
அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 சரளாவின் அப்பா வரதன் வேளியே போய் இருந்தார்.அம்மா வசந்தா மட்டும் டீ.வீயிலே சினிமா பார்த்துக் கொண்டு இருந்தாள்.தம்பி துரை கிரிக்கெட் விளையாடப் போய் இருந்தான். சரளா மெல்ல தன் அம்மாவிடம் ”அம்மா நான் கொஞ்ச நேரம் என்னோடு படிச்ச பொண்ணு ஒத்தி வூட்டுக்குப் போய் பேசிகிட்டு இருந்து விட்டு சீக்கிரமா வந்து விடறேம்மா” என்று கொஞ்சலாகக் கேட்டாள். டீ.வீ.யிலே ஓடிக் கொண்டு இருந்த சினிமாவில் தன்னை மூழ்கடித்துக் கொண்டு இருந்த வசந்தா ”சீக்கிரமா
|
Read More
|
பசி - ஜே.வி.நாதன்
எப்போதாவது அத்தி பூத்தாற்போன்று சொர்ணபுரி என்ற பெயர் கொண்ட அந்தக் கிராமத்துக்குக் கார்கள் வருவதுண்டு. சின்னக் கிராமம் என்றாலும் கிழக்கே சிவன் கோயில், மேற்கே பெருமாள் கோயில் ஊர் எல்லையில் அன்ன பூர்ணேஸ்வரி என்று ஒருகாலத்தில் பிரசித்திபெற்ற மூன்று கோயில்கள் அங்கு உண்டு. இந்தக் கோயில்களுக்கு விவரம் தெரிந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வெளியூர்களிலிருந்து வருவார்கள். அந்த மாதிரி வந்த வெள்ளைக் கார் ஒன்று சிவன் கோயில் கோபுரம் முன் நின்றது. சிவனுக்கு கால பூஜை,
|
Read More
|
வழித்தடம் - கோ.புண்ணியவான்
இரும்புக் கம்பிக் கதவுக்குள்ளே தள்ளப்பட்டதும் கதிர் வெடவெடத்துப் போனான். பீதி மெல்ல மேல்ல ஊடுறுத்து மனம் முழுவதும் விஷச் செடிபோல பரவித் தைத்தது. அவர்கள் அடுத்து தன்னை என்னவோ செய்யப் போகிறார்கள் என்பதை நினைக்கும்போதே உடலுக்குள் பீதி இழை இழையாய்ச் சரிந்து இறங்கியது. உடலின் நடுக்கம் குரல்வலையை அடைத்து வார்த்தைகளை பிசிறச் செய்தன. பல சமயங்களில் அவன் சொல்ல நினைப்பவை சிதறி உதிர்ந்தன. சிலுவாரையும் சட்டையையும் கழட்டச் சொல்லிக் கட்டளை பிறப்பித்தான் ஒரு போலிஸ். முதலில் சிலுவாரைக்
|
Read More
|
முதல் பாவம்! - யுவகிருஷ்ணா
ஏவாளுக்கு சஸ்பென்ஸ் தாங்கமுடியவில்லை. அந்த மரத்திலிருந்து மட்டும் ஏன் கனிகளை பறித்து சாப்பிடக்கூடாது என்று கடவுள் சொல்லி இருக்கிறார். மற்ற மரங்களை ஒப்பிடும்போது அந்த மரத்தில் தானே கனிகள் அதிகமாக காய்க்கின்றன. நல்ல சிகப்பில் பெரிய பெரிய கனிகளை கண்டதுமே சாப்பிட அவளுக்கு நாவூறுகிறது. ஆனாலும் கடவுளின் எச்சரிக்கை காதில் ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது. “உங்களுக்காக நான் படைத்த இந்த உலகில் நீங்கள் எங்கும் போகலாம், எதையும் சாப்பிடலாம். ஆனால் அதோ அந்த ஆப்பிள் மரத்தின் கனிகளை
|
Read More
|
நான்…வருவேன். - ஜே.கே
“சம்வன் இஸ் நோட் இன் திஸ் வோர்ல்ட்…” “சொறி .. நிரஞ்சனா.. ஐ ஜஸ்ட் …” “நிரு” “ஆ?” “கோல் மீ .. நிரு .. அப்பிடித்தான் எல்லாரையும் கூப்பிடச்சொல்லுவன் .. நிரஞ்சனா இஸ் டூ லோங்” “ஓ … அப்ப சுரேன் ஓகேயா?” “பெயரை கேட்கிறீங்களா? இல்ல .. ஆளையே ..” கண்ணை சிமிட்டியபடி ஹாண்ட்பாக்கை வைத்துவிட்டு அப்படியே கதிரையில் சாய்ந்து கையிரண்டையும் உயர்த்தி …ஜீன்ஸ், கையில்லாத கொட்டன் டாப் சிம்பிளாக தான் போட்டிருந்தாள். ஆனால்
|
Read More
|
கண்டிப்பு..!! – ஒரு பக்க கதை - காரை ஆடலரசன்
கைபேசி அலறியது. எடுத்துப் பார்த்த சேகர் முகத்தில் பிரகாசம். மாலதி.! தலைப் பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்குச் சென்றவள். வீட்டை விட்டு வெளியே வந்து…. ”சொல்லு மாலதி ? ” குசுகுசுத்தான். ”உன் பிள்ளை வயித்தை விட்டு சீக்கிரம் வெளியே வர பாடாய்ப் படுத்துது.” ”சந்தோசம். உன் புருசன் வந்து பார்த்தாரா ? ” ”அவருக்கென்ன…அஞ்சு வருசமா தவமாய் தவமிருந்து கண்ட சொத்து. கட்டின பெண்டாட்டி நல்லவிதமா பெத்து எடுக்கனும்ன்னு கவலை. வாராவாரம் வந்து பார்த்துப் போறார். அப்புறம்
|
Read More
|
நட்பதிகாரம் - பா.அய்யாசாமி
ரங்கா! இங்கே வாங்க! நாம நம்ம கம்பெனிக்கு வாங்குகிற மெட்டிரியல் எல்லாம் இன்னிலேயிருந்து பெரியக் கடைத்தெருவிலே உள்ள கிருஷ்ணா டிரேடிங்லதான் வாங்கனும் என உத்திரவிட்டார். நகரத்தின் முக்கிய பிரமூகர், நவீன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், உரிமையாளர். பிரபல சிவில் இன்ஜீனியர் ராமன். சரி சார் அப்படியே செய்திடலாம்,என்றுக் கூறி வெளியே வந்தார் ரங்கா. அட என்னாச்சு தெரியலையே? எவ்வுளவு நாளா வரவு செலவு வச்சு இருக்கோம்,இப்ப திடீர்னு ஏன் மாற்றச் சொல்கிறார் ஒன்றும் புரியலையே எனப் புலம்பிக்கொண்டே வந்தார் இருக்கைக்கு.
|
Read More
|
மனச்சிதைவு மனிதர்கள் - எஸ்.கண்ணன்
அவன் இருப்பது சைதாப்பேட்டையில். அவன் இந்தத் தெரு வழியாக அடிக்கடி போகிறவன்தான். வயது இருபத்திநான்கு. சிறிய வயதிலிருந்தே அவன் வளர்ப்பு சரியில்லை. சாலை ஓரங்களில் படுத்துத் தூங்குபவன். பல நாட்கள் மேலே சட்டை இல்லாமல் வெறும் உடம்போடு தெருக்களில் டிரவுசர் மட்டும் அணிந்து போவான். பெண்களை வெறித்துப் பார்ப்பான். வாயில் எப்போதும் பீடி புகைந்து கொண்டிருக்கும். எப்போதுமே கொஞ்சம் வேகமாகத்தான் நடந்து செல்வான். தெருவில் நின்று யாரோடும் பேசுவதில்லை. அவன் பாட்டுக்கு இயல்பாகப் போவான் வருவான். யாரிடமும்
|
Read More
|
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.
Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.
|