This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2019/06/18/.

பிச்சை - ப.மதியழகன்

மணி ஒன்பது. அழகேசன் சட்டையை மாட்டிக் கொண்டு வேலைக்குக் கிளம்பினான். தொட்டிலில் படுத்திருந்த குழந்தை அழும் சத்தத்தைக் கேட்டு தண்ணீர் பிடிக்கச் சென்ற சுசீலா குடத்துடன் ஓடி வந்தாள். குழந்தையின் நெற்றியைத் தொட்டுப் பார்த்துவிட்டு அழகேசனிடம் “ஏங்க குழந்தைக்கு இன்னும் ஜூரம் குறையல. கைவைத்தியமும் செஞ்சு பார்த்தாச்சி. நேரத்தோட யார்கிட்டயாவது ஐநூறு ரூபாய் வாங்கிட்டு வந்தீங்கன்னா டாக்டர்கிட்ட கொண்டு போய் காட்டிடலாம்” என்று சொல்லிவிட்டு அழகேசன் முகத்தையே பார்த்தபடி நின்றாய் சுசீலா. அழகேசன் சட்டைப் பையை தொட்டுப்


Read More


மாக்கிழவன் கோவில் - முனைவர் க.லெனின்

உடுக்கைச் சத்தம் அங்கிருப்பவர்களை ஆட செய்தது. மேளமும் உறுமியும் மாக்கிழவன் கோவில் உற்வசத்தை பறைச்சாற்றியது. கோடிமலையைச் சுற்றி இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மக்கள் வந்து கொண்டே இருந்தனர். மாட்டு வண்டியில் வந்தனர். சிலர் சைக்கிளில் வந்தனர். இன்னும் சிலர் இரண்டு நாட்களுக்கு முன்னரே நடந்து இன்று கோடிமலை வந்து சேர்ந்தனர். மாக்கிழவன் கோயில் அறுபது ஏக்கரில் பரந்து இருந்தது. ஒன்பது நாள் திருவிழா. கோயிலுக்குச் சொந்தமான ஒன்பது பட்டத்தார்களும் அவர்களின் வாரிசுகளும் முன்னே நின்று பூஜையினை


Read More


சேற்றில் மலர்ந்த செந்தாமரை - ஜெ.சங்கரன்

அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 “சா¢,நீங்க உங்க பொண்ணைப் பத்தி ஒரு புகார் குடுத்துட்டுப் போங்க.அவ குடிசையை விட்டு ஓடிப் போகும் போது அவ என்ன கலர் ‘டிரஸ்’ போட்டுக் கிட்டு இருந்தா.அவ பாக்க எப்படி இருப்பா, அவ உடம்பு கலர் என்ன,என்கிற எல்லா விவரத்தையும் விவரமா எழுதுக் குடுங்க.சமீபத்திலே எடுத்த அவ போட்டோ ஒன்னையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு குடுங்க.நாங்க அவளைத் தேடி பாக்க சௌக ரியமா இருக்கும்” என்று சொல்லி அங்கு உட்கார்ந்துக் கொண்டு இருந்த ஏட்டைப்


Read More


வதம் - இந்திரா செளந்தர்ராஜன்

வழக்கம்போல பத்து மணிக்கே பரபரப்பாக தொடங்கி விட்டது. அந்த அலுவலகத்தின் செயல்பாடுகள். ஜெர்மானிய ரோஸ்ட் பலகைகளை கொண்டு உருவாக்கப்பட்டிருந்த குட்டி குட்டி அறைகளில் இருக்கும் கம்ப்யூட்டர்களில் எல்லாம் மெயில்கள் பிரிக்கப்பட்டு பார்க்கப்படவும் தொடங்கின. அங்கே ஒரு சராசரி பட்டதாரி கூட இல்லை. எல்லோருமே போஸ்ட்கிராஜூவேட்கள் படிக்கும்போதே லட்சங்களில் சம்பளக் கனவு கண்டவர்கள். ஒருவர் கூட புடவையில் இல்லை. அனேகர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தனர். கர்ப்பப்பை சூடேறி பிள்ளை பேற்றின் போது அது சவலைப்பிள்ளையாக உருவாகி பிறக்கும் ஆபத்து


Read More


எம்ஜியார் - கோ.புண்ணியவான்

திரையை விலக்கி எட்டிப்பார்த்தார் எம்ஜியார். பாதி மண்டபம் நிறைந்து விட்டிருந்தது. எம்ஜியாருக்கு இப்போதே கைதட்டும் ஓசையும் ஆரவாரமும் செவிமடல்களைச் சிலிர்க்கச் செய்தது. முன் வரிசை நாற்காலிகள் இன்னும் காலியாகவே கிடந்தன. சிறப்பு விருந்தினருக்கானது. மண்டபத்தை நாற்காலிகளை நிறைத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் உண்டாக்கும் உற்சாகத்துக்கு முரணான சுபாவம் கொண்டது இந்த முன் வரிசை நாற்காலிகள். இன்னும் சற்று நேரத்தில் நிகழ்ச்சி துவங்கிவிடலாம். அல்லது நாற்காலிகள் நிறைய காத்திருந்து தாமதித்தும் தொடங்கலாம். சிரம்பான் போவதற்கும் டிக்கட் எடுத்தாயிற்று. நள்ளிரவு 12.00க்குத்


Read More


எப்படி கேட்பது? - யுவகிருஷ்ணா

அவளிடம் இதை எப்படி சொல்வது.. எப்படி கேட்பது என்பதில் அவனுக்கு நிறைய தயக்கம் இருந்தது. பிரம்மன் ஓவர்டைம் செய்து அவளை உருவாக்கியிருப்பான் போலிருக்கிறது. கயல்விழி என்ற பெயரைவிட அவளுக்கு பொருத்தமான ஒரு பெயரை அவளது அப்பனால் தேர்வு செய்திருக்கவே முடியாது. அவளது விழிகள் அலெக்சாண்டரின் போர்வாள் போல கூர்மையானது. பார்வையால் ஒரு வெட்டு வெட்டினாள் என்றால் எப்படிப்பட்ட ஆணும் இதயம் அறுந்து உயிரிழந்துவிடுவான். அவள் வேலை பார்த்த கவுண்டரில் இருந்த எல்லாப் பெண்களுமே கொள்ளை அழகு தான்.


Read More


நேற்று அவள் இருந்தாள் - ஜே.கே

பாக்கியம் செத்து போனாள். மீண்டும் ஒரு முறை சாமி நெஞ்சில் காது வைத்துப்பார்த்தார். அசுமாத்தம் இல்லை. மூச்சுக்கான எந்த சிலமனும் இல்லை. உடல் ஏற்கனவே சில்லிட ஆரம்பித்துவிட்டிருந்தது. பின்னந்தலையில் இருந்து இரத்தம் திட்டு திட்டாக இன்னமும் வழிந்து ஓடியபடியே. தரையில் சுளகு, கொஞ்சம் தாறுமாறாக கிடந்த முருங்கை இலைகள். நிச்சயமாக பாக்கியம் செத்துதான் போனாள். பக்கத்திலேயே ஒரு ஸ்பானர். ஸ்பானரின் முனையில் மாத்திரம் கொஞ்சம் இரத்தம் ஒட்டியிருந்தாற்போல; சாமி அதை எடுத்துப்பார்த்தார். பாக்கியத்தை பார்த்தார். பற்கள் கொஞ்சம்


Read More


அம்மா…! – ஒரு பக்க கதை - காரை ஆடலரசன்

செய்தியைக் கேள்விப் பட்டதுமே சித்ராவிற்குக் கண் மண் தெரியாத ஆத்திரம். புறப்பட்டு வந்து ஆளை அந்த கோலத்தில் பார்த்ததும் அது இன்னும் அதிகரித்தது. வீட்டிற்குள் நுழைந்த அடுத்த விநாடி, ”அம்மா !” அதிரடியாய்க் கத்தினாள். ”என்ன ? ” அலமேலு அமைதியாய்த் திரும்பினாள். ”உனக்கு இது வெட்கமாய் இல்லே ? ” சீறினாள். ”இல்லே.” ”அப்பா செத்து முழுசாய் மூணு வருசம் ஆகலை. இந்த கோலம். நாக்கைப் படுங்கிக்கிட்டு சாகலாம் போலிருக்கு.” ”சாவு !” ”அம்மா !”


Read More


சுமைத் தாங்கி - பா.அய்யாசாமி

துரையும்,மணியும் ஒன்றாக தனியார் பேரூந்தில் வேலைபார்க்கும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர், நண்பர்கள் இருவரும் ஒரே பகுதியில் வசித்தும் வருகின்றனர். இதில் மணி துரையை விட 5 வயது மூத்தவர், இருவரும் ஒன்றாக தினமும் வேலைக்குச் சென்று திரும்புவர், இவர்களுக்குள் நேற்று வரை ஒரு பிரச்சனையும் இல்லை, துரைக்கு கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் ஒரே மகள், மணிக்கு ஒரே மகன், இன்ஜி. முடித்து ஒரு வருடமாக வேலை பார்த்து வருகிறான். பேரூந்து நிலையம். மணி, ரிவர்ஸ் பாரு!


Read More


காதல் ஓய்வதில்லை - எஸ்.கண்ணன்

முதலிரவு. பவதாரிணி சோகமாக கண்ணீருடன் அந்த அறையில் காத்திருந்தாள். கதவு திறக்கப்பட சட்டென்று கண்களைத் துடைத்துக்கொண்டாள். அவளுடைய கணவன் கதிரேசன் அருகில் வந்து அமர்ந்தான். “முதல்ல அழுகையை நிறுத்து பவம்… என்மேல் உனக்கு இன்னமும் நம்பிக்கை வரல, அப்படித்தானே?” “அப்படி ஒன்றுமில்லை கதிர்…” கதிரேசன் அவள் கண்ணீரைத் துடைத்தான். பின்பு ஆதரவாய் அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். “இங்க இருக்கிற யாருக்குமே என்னைய பிடிக்கலை கதிர். அப்புறம் எதுக்காக எல்லாரையும் எதுத்துக்கிட்டு என்னைக் கல்யாணம் பண்ணீங்க?” அவள்


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.