Title சிறுகதைகள் செய்திமடல்
  மே 2014 / மடல் #7
இந்த வாரம்:

வணக்கம்

சிறுகதைகள் - இது உங்களுக்கான தளம். சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.

சிறுகதைகள் செய்தி மடல் ஒவ்வொரு மாதமும் உங்களை தேடி வரும். மறக்காமல் உங்கள் நண்பர்/நண்பிகளுக்கு தெரிவியுங்கள்.

ஆசிரியர் பகுதி

இந்த மாதம் ஆசிரியர் பகுதியில், முனைவர் மா.தாமோதரகண்ணன் அவர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

வாஞ்சிமணியாச்சி-சிறுகதைத்தொகுதியில் உள்ள ‘‘அழகி” என்னும் சிறுகதை அழ.வள்ளியப்பா இலக்கிய அறக்கட்டளையினர் நடத்திய சிறுவர் இலக்கியச் சிறுகதைப்போட்டியில் இலக்கிய அறக்கட்டளையின் அறதல் பரிசினைப் பெற்று பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட ‘‘ தேன்கூடு ’’ தொகுப்புநூலிலும் இடம் பெற்றுள்ளது.பல்வேறு சிற்றிதழ்களில் இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இத்தொகுப்பிலுள்ள ‘‘அதிகபடசத் தண்டனை ” என்னும் சிறுகதை குறும்படமாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..

சிறப்பு கதைகள்

ஏப்ரல் 2014 சிறப்பு கதைகள் பகுதியில்:

  • கூட்டணிக் கட்சி - எஸ்.செல்வசுந்தரி(2662)
  • வேலை - முனிஸ்வரன் குமார்(1645)
  • பரிணாமம் - நந்தன்(1687)
  • சாமியாடி - சரவணன் குமரேசன்(1653)
  • கைக்கிளைப்பதுமை…! - வசந்தகிருஷ்ணன்.ஆ.(2825)
  • தமிழீழம் 2030 - முனிஸ்வரன் குமார்(1194)
  • தெருவிளக்கு - ஆர்.பாரதிராஜா(5594)
  • குருதியில் பூத்த மலர் - வெ.ராம்குமார்(2391)
  • பார்வைகள் புதிது - எஸ்.வெங்கட்ராமன்(2523)
  • அஸ்மியாவின் பயணம் - இளைய அப்துல்லாஹ்(2754)
  • சிலந்திக்கூடுகள் - மூதூர் மொகமட் ராபி(5394)
  • சித்ராக்குட்டி - எஸ்.ஸ்ரீதுரை(1325)
  • வெண் மழை - ஸ்ரீதேவி(1371)
  • சைக்கிள் டாக்டர் - எஸ்கேபி.கருணா(2671)

மேலும் படிக்க...

கதைகளில் ஒன்று
       
கொக்கரகோ
கதையாசிரியர்: அறிஞர் அண்ணாதுரை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை 
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 2,233

ஒரு நாள் மாலை, நான் கடற்கரை முன்பு கண் மூடி மௌனியாக உட்கார்ந்து கொண்டு இருந்தேன். கண் மூடுவதும், மௌனியாவதும், கனவு காண்பதும் சகஜந்தானே!

“வைஸராயைப் பார்த்தாயோ, இல்லையோ?” என்று கேட்டுக் கொண்டே யாரோ என் முதுகில் ஒரு தட்டுத் தட்டவே, கண் விழித்துத் திரும்பிப் பார்த்தேன். பல மாதங்களாக என் கண்களில் தென்படாதிருந்த என் நண்பன் சுந்தரம் சிரித்துக் கொண்டே நின்றான்.

மேலும் படிக்க...
 
அறிந்துகொள்ளுங்கள்
 

எழுத்துக்கலைபற்றி இவர்கள்…அகஸ்தியன்

1. நகைச்சுவை எழுதுவதும் ஜோக் எழுதுவதும் வெவ்வேறு. நகைச்சுவை கதை, கட்டுரையில் தனியாக ஜோக் என்று இருக்காது; இருக்க வேண்டிய அவசிய மில்லை. கட்டுரையில் வரும் கதாபாத்திரங்கள், அவர்கள் குணபேதங்கள், பெயர்கள், சம்பாஷணைகள், நிகழ்ச்சிகள் இவைகளில் நகைச்சுவை இழையோட வேண்டும். ஒட்டு மொத்தமாக நகைச்சுவை உணர்வைப் படிப்போர் மனத்தில் எழுப்ப இவை உதவும்.

2. பெரும்பாலான நகைச்சுவைக் கதைகள் நடுத்தர வர்க்கத்தைச் சுற்றி அமைவதைக் கவனியுங்கள். அப்படி இருந்தால்தான் வாசகரும் ஏதோ தங்கள் குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சியாகக் கருதுவார்கள். இதன் காரணமாகக் கதையை அவர்கள் ஒருபடி அதிகமாகவே ரசிக்க முடியும்.

மேலும் படிக்க...

உங்களுக்கு மேலும் கேள்விகள் இருந்தால், எங்களை தொடர்ப்பு கொள்ளுங்கள்.

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.

உங்கள் கருத்து

வணக்கம்.  நம்முடைய சிறுகதை இணையதளத்தில் பிரிசுரிக்கப்படும்போது  உலகிலுள்ள எத்தனையோ நாடுகளிலுள்ள எண்ணற்ற வாசகர்களால் வாசிக்கப்படுகிறது என்பதை நினைக்கும்போது  ஒரு படைப்பாளியின் மனம் எவ்வாறு பரவசமடையும் என்பதை ஒரு சக படைப்பாளியால் தான் உணர முடியும்.   நீங்கள் செய்து வரும் மகத்தான பணிக்கு எல்லா எழுத்தாளர்களின் சார்பிலும் என் மனமார்ந்த பாராட்டுகள்!-ரேவதி பாலு.

உங்களது இந்த இணையத்தளம் மிகவும் பயனுள்ளது. ஒரே பக்கத்தில் பலரின் கதைகளையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. மேலும் பல படைப்பாளிகளினது படைப்புகள் பிரசுரிக்கப்பட்டால் இன்னும் நல்லாயிருக்கும். தங்கள் பணி சிறக்கட்டும்.நன்றி. - சந்திரா இரவீந்திரன்

சிறுகதை பற்றி

சில குறிப்புகள்:

ஏப்ரல் மாதம் பார்வையிட்டோர்:26,740

மொத்தம் பார்வையிட்டோர்:
415,836

மார்ச் மாதம் படிக்கப்பட்ட கதைகள்:104,683

மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:1,947,348

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.
Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2014]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content

To unsubscribe click here, to edit your profile click here.