This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2019/06/03/.

சேகு மாமாவின் அம்பாஷ்ட்டர் - எஸ்.எஜ்.எம்.ரபிதீன்

பூஞ்சோலை எனும் பெயர் கொண்ட அழகியதொரு கிராமம்தான் எனது கிராமம். இயற்கை கொஞ்சும் பச்சை புல்பூண்டுகளும் மஞ்சல் மணல் தெருக்களும். கிராமத்தின் ஒவ்வொரு மண் குடிசைகளிலின் முற்றத்திலும் வாகை, புங்கான், மாமரம் முந்திரிகை தேக்கு என அக்கிராமே மரங்களால் சூழ்ந்தே செடிகொடிகளோடும், பற்றை காடும் பள்ளிவாயல், சர்ஜ் மற்றும் காளியம்மன் கோவிலும் அதன் அருகே ஒற்றையடி பாதைகளும் வயல் வரம்புகளுமாய் இயற்கையால் இறைவன் நிறைத்து வைத்திருந்தான். வசந்தகாலங்களில் அங்கு இருக்கும் வாகை மரங்கள் தொடக்கம் ஏனைய மரங்களும்

.


Read More


மொட்டு - பொன் குலேந்திரன்

முன்னுரை ஒரு சிறுமி 10 and 14 வயதுக்கு முன் மொட்டாக இருந்து பின் மலர்ந்து பல வாலிபர்களின் மனதைக் கவரும் பூத்த மலராகிறாள். இது இயற்கை. சில ஆபிரிக்கநாட்டுசிறுமிகள் 10 வயதுக்கு முன்பே பூத்து விடுவார்கள். இந்த சிறு கதை பல காலம் பூக்காத ஒரு சிறுமி பற்றிய யாதார்த்தமான கதை *** அன்று வந்த பத்திரிகையில் ராஜலிங்கத்தின் மூத்த மகள் கமலாதேவி ஜகர்த்தாவில் நடக்க இருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில்பங்கு கொள்ள இலங்கையில் இருந்து

.


Read More


சேற்றில் மலர்ந்த செந்தாமரை - ஜெ.சங்கரன்

அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 செந்தாமரை தன் படிப்பைப் பத்தி தன் குடிசையில் பேச சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டு இருந்தாள்.அன்று அவருக்கு வேலை கொடுக்கவில்லை அந்த ‘கன்டாராகர்’.ராஜ் வீட்டிலே யே இருந்தான்.நாம் இப்போது நம்ம படிப்பைப் பத்தி பேச ஆரம்பிச்சா, பாட்டியும் அப்பாவும் ‘நீ மேலே எல்லாம் படிக்க வேணாம், எட்டாவது படிச்சதே போதும்’ என்று சொல்லி நம்மை மேலே படிக்க அனு மதி தர மாட்டாங்க.அம்மா சாயங்காலமா குடிசைக்கு வரட்டும் அவங்களை வச்சு நாம் இந்த

.


Read More


களவாணி மழை - தமிழச்சி தங்கபாண்டியன்

முன்நெத்திச் சுருக்கங்களில் வழிந்தோடும் வியர்வையைக் கூடத் துடைக்காமல் வேகு வேகென்று வந்து நின்றவனைப் பார்த்து, “ந்தா… சோத்தண்ணி குடிக்கிறியா?” என்ற பாண்டியம்மாளின் குரலைச் சட்டை செய்யாமல் தொழுவத்துக்குள் நுழைந்தான் பெரியாம்பிளை. மாடு, கன்னுகளுக்குத் தண்ணி ரொப்பும் சிமென்டுத் தொட்டி கால்வாசிக்குத்தான் இருந்தது. “சவக் கழுதை, சப்பணங்கொட்டி ஒக்காந்துகிட்டுக் கிடக்கா, தண்ணி ரொப்பாம” என்று முனகிக்கொண்டே தண்ணியை அள்ளி எடுத்து முகம், கை, காலில் சோமாறிக்கொண்டான். மூக்கு விடைக்கத் திரும்பிய நெற மாசச் சிங்கி, அவனது அருகாமையை உணர்ந்தாற்போல்

.


Read More


தற்செயல் - சுஜாதா தேசிகன்

என் நண்பருடைய கதையைக் கேட்டபோது, ‘‘வாட் எ கோயின்சிடன்ஸ்!’’ என்றேன். கோயின்சிடன்ஸ் என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை. தற்செயல், யதேச்சை… இதெல்லாம் எதற்கு? விஷயத்துக்கு வருகிறேன். ‘எல்லோரிடமும் ஒரு நல்ல கதை இருக்கு’ என்று எழுத்தாளர்கள் அடிக்கடி சொல்லுவார்களே… அது போல் இருந்தது இந்தக் கதை. எழுதினால் ‘சும்மா கதை விடாதே’ என்று விமர்சிப்பீர்கள். இந்தக் கதையும் அப்படித்தான்! இருந்தாலும் சொல்லி விடுகிறேன். ‘‘தம்பி, அம்மாக்கு உடம்பு சுகமில்லை… நீ வெள்ளனே கிளம்பி வா

.


Read More


விசையறு பந்து! - ஜே.கே

“இப் யூ டோண்ட் மைண்ட் .. உங்களிடம் ஒரு பெர்சனல் கேள்வி கேட்கலாமா?” ருச்சிர அமரசிங்க தயங்கி தயங்கி கேட்க, மதுவந்திகா சற்றே குழம்பினாள். இன்டர்வியூ சக்ஸஸ் ஆகும் என்று நினைத்தாளே. இன்னமும் முடியவில்லையா? இலேசாக கொஞ்சம் பயம் பிடித்துக்கொண்டது. எல்லாமே திருப்தி என்றானே? அத்தனை கேள்விகளுக்கும் ஜாம் ஜாம் என்று பதில் சொன்னாளே? இப்போது என்ன திடீரென்று. நான்கு வருஷங்கள். பல்லைக்கடித்து, சரவச்சட்டிக்குள் தண்ணி ஊத்தி கால்கள் நனைத்து, விடிய விடிய .. எப்பிடிப்பட்ட படிப்பு

.


Read More


வேலை..! – ஒரு பக்க கதை - காரை ஆடலரசன்

இந்த பத்தாவது நேர்முகத்தேர்வு கலாட்டாதான். கேட்கிற கேள்விக்கெல்லாம் ஏட்டிக்குப் போட்டி பதில்தான். உறவு, சிபாரிசு, பெரிய இடம்ன்னு ஆட்களைப் பொறுக்கி வைச்சுக்கிட்டு தேர்வை அரசாங்கத்தை ஏமாத்தற கண்துடைப்பு நாடகமாய் நடத்துறதுக்கு எதுக்குச் சரியான பதில்,பொறுப்பான பேச்சு ?! இப்போ கல்லூரி வளாகத் தேர்வும் கழிசடையாய்ப் போச்சு.! கம்பெனிக்காரங்க….மொதல்ல நல்ல கல்லூரிகளாய்ப் பார்த்து திறமையானவர்களைப் பொறுக்கி எடுத்துப் போனாங்க. அதை விளம்பரம் செய்து அந்த கல்லூரி காசு பார்த்தைப் பார்த்ததும்…அடுத்து உள்ள கல்லூரிகளெல்லாம் பசங்ககிட்ட வேலைக்குப் பணம் வாங்கி

.


Read More


ஆபீஸ் பாய் - பா.அய்யாசாமி

கமல் வீடு ,காலை அலுவலகம் கிளம்பும் பரபரப்பு, இருவரிடமும், கமல் தனியார் பேங்க் வேலை. ப்ரியாவும் பெரிய எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை, திருமணமாகி 9 மதங்கள் ஆகிறது, ப்ரியா என்னோட ஷர்ட் அயர்ன் பண்ணினியா?, என்னத்தான் பண்ற வீட்லே, எனக் கூறிக்கொண்டே எடுத்து அயர்ன் பண்ண ஆரம்பித்தான். நானே எல்லாமும், செய்யனுமா? கூட மாட ஏதாவது செஞ்சாதானே. வர வேண்டியது செல்ல நோன்ட வேன்டியது, டிவி பார்க்க வேண்டியது அதுவும் பதினொன்று மணி வரை, காலையில என்

.


Read More


கி.பி.3000 ம் வருடத்தின் ஒரு சில நாள் - ஸ்ரீ.தாமோதரன்

குளிரூட்டப்பட்ட ஒரு அறையில் அரை நிரவாணமாய் படுத்துறங்கிய கதிர் சட்டென சத்தம் கேட்டு கண் விழித்தவன், எதிரில் நாகரிகமாய் உடையணிந்து ஒருவன் நின்று கொண்டிருப்பதை கண்டவுடன் சட்டென எழுந்து தன் அரை குறை ஆடைகளை சரியாக அணிந்து கொண்டு, “ஏய் ஹூ ஆர் யூ ? இங்கே எப்படி உள்ளே வந்தே? கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம அடுத்தவன் அறையிலே வந்து அரை குறையா படுத்திருக்கறவனை வேடிக்கை பார்த்திட்டு? மூச்சு விடாமல் ஆங்கிலத்தில் பேசினான். வணக்கம் என்

.


Read More


ஜெயித்த நரி - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘கோமதியிடம் சத்தியம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) “மாரியாத்தா கோயிலுக்கு போயே சத்தியம் செய்யட்டுமா?” “என்கிட்ட மட்டும் சத்தியம் பண்ணுங்க, போதும்.” இசக்கி சத்தியம் செய்து கொடுத்தார். “நீ போட்ட கோட்டை என்னிக்காவது தாண்டியிருக்கேனா. இதுல மட்டும் தாண்டறதுக்கு?” இதெல்லாம் கூட ஆம்பளைகளின் ‘கடுசு’த்தனம் தானே! தான் போடுகிற ஒரு கோட்டுக்குள் பொம்பளையை மடக்கிப் போடுகிற நரித்தனம்தானே! நண்டு வளைக்குள் நரி தன் வாலைப்போட்டு வைப்பது, நண்டு நல்லா வாலைச் சாப்பிட்டு

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.